Category: கொள்கை

கப்ரைக் கண்டு கொள்ள அடையாளம் வைத்தல்

கப்ரைக் கண்டு கொள்ள அடையாளம் வைத்தல் ஒருவரை அடக்கம் செய்த பின் அந்த இடத்துக்குப் போய் ஸியாரத் செய்து துஆ செய்ய வேண்டும் என்று விரும்புவது முஸ்லிம்களின் இயல்பாக உள்ளது. அடக்கம் செய்து சில நாட்கள் இவ்வாறு விரும்புவார்கள். காலாகாலத்துக்கும் அவ்வாறு…

கப்ருகள் மீது கட்டடம் எழுப்பக் கூடாது

கப்ருகள் மீது கட்டடம் எழுப்பக் கூடாது ஒருவரை அடக்கம் செய்த இடத்தை சிமெண்ட் போன்ற பொருட்களால் கட்டக் கூடாது என்றால் அவரை அடக்கம் செய்த இடத்தைச் சுற்றி சுவர் எழுப்பி தர்கா எனும் கட்டடம் கட்டுவது கூடவே கூடாது என்பது உறுதியாகிறது.…

கட்டப்பட்ட சமாதிகளை இடிக்க வேண்டும்

கட்டப்பட்ட சமாதிகளை இடிக்க வேண்டும் மேலும் நமது முன்னோர்கள் அவ்வாறு கட்டிச் சென்றிருப்பார்களானால் நமக்குச் சக்தியும், அதிகாரமும் இருந்தால் அவற்றை இடித்துத் தள்ளுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுள்ளனர். حدثنا يحيى بن يحيى وأبو بكر بن أبى…

குகைவாசிகள் மீது கட்டப்பட்ட தர்கா ஆதாரமாகுமா?

குகைவாசிகள் மீது கட்டப்பட்ட தர்கா ஆதாரமாகுமா? தெளிவான வார்த்தைகளால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தர்கா கட்டுவதைத் தடுத்த பின்பும் பொருத்தமில்லாத வாதங்களை வைத்து தர்கா கட்டலாம் என்று சிலர் வாதிடுகின்றனர். குகைவாசிகள் பற்றிய பின்வரும் வசனத்தை தர்கா கட்டலாம் என்பதற்கு…

சமாதியில் சாயக் கூடாது என்பது தர்காவுக்கு ஆதாரமாகுமா?

சமாதியில் சாயக் கூடாது என்பது தர்காவுக்கு ஆதாரமாகுமா? சமாதிகளைக் கட்டக் கூடாது; உயர்த்தக் கூடாது; பூசக்கூடாது என்று தெளிவான தடை இருந்தும் எப்படியாவது சமாதி கட்டுவதற்கு ஆதாரத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று முயற்சித்து பின்வரும் ஹதீஸைக் கண்டுபிடித்துள்ளார்கள். حَدَّثَنَا حَسَنٌ حَدَّثَنَا…

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ர் உயரமாக இல்லையா

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ரும், சில நபித்தோழர்களின் கப்ருகளும் உயரமாக இருந்ததாகக் கூறப்படும் அறிவிப்புகளையும் தர்கா கட்டுவதற்கு ஆதாரமாக சிலர் எடுத்து வைக்கின்றனர். இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை பற்றிய அறிவு இல்லாதவர்கள் தான் இதுபோன்ற வாதங்களை எடுத்து வைக்க முடியும்.…

நபிகள் நாயகத்தின் அடக்கத்தலம் பள்ளிவாசலில் சேருமா?

நபிகள் நாயகத்தின் அடக்கத்தலம் பள்ளிவாசலில் சேருமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலம் தற்போது பள்ளிவாசலுக்குள் அமைந்திருப்பதையும், அடக்கத்தலத்தின் மேல் குப்பா எனும் குவிமாடம் அமைக்கப்பட்டு உள்ளதையும் தர்காக்கள் கட்டலாம் என்பதற்கு ஆதாரமாகச் சிலர் காட்டுகிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்…

ரவ்ளா ஷரீப் வேறு! அடக்கத்தலம் வேறு!

ரவ்ளா ஷரீப் வேறு! அடக்கத்தலம் வேறு! ரவ்ளா என்ற வார்த்தைக்கு பூங்கா என்று பொருளாகும். ஆனால் மார்க்க அறிவு இல்லாத சிலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தை ரவ்ளா ஷரீப் என்று குறிப்பிட்டு வருகின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்…

தர்காக்கள் சமுதாயத்தில் நுழைந்தது எப்படி?

அடக்கத்தலங்களில் தர்காக்கள் கட்டியது எப்படி இந்தச் சமுதாயத்தில் புனிதமாக ஆக்கப்பட்டது என்று நாம் ஆச்சரியப்படலாம். ஆனால் இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. திருக்குர்ஆன் போதனையையும், நபிகள் நாயகத்தில் அறிவுரைகளையும் புறக்கணித்து முந்தைய வேதக்காரர்களின் வழியில் சென்றால் இப்படித்தான் நடக்கும் என்று நபிகள்…

தர்கா ஜியாரத்

மரணத்தை நினைவுபடுத்தும் என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கப்ரு ஜியாரத்தை அனுமதித்தனர். இந்த அடிப்படையில் கப்ருகளை ஸியாரத் செய்யலாம். (நூல்: முஸ்லிம் 1777) அவ்லியாக்கள் எனப்படுவோரின் கப்ருகளை ஸியாரத் செய்யக் கூடாது. புவானா என்ற இடத்தில் அறுத்துப் பலியிடுவதாக நான்…