கம்யூனிஸ்டுகளுக்கு தக்க பதில் அளிக்கலாமே?

கேள்வி : கள்ளக் கிறிஸ்துவர்களும், கம்யூனிஸ்டுகளும் தங்கள் இணையத்தில் இஸ்லாத்தைப் பற்றி பித்னாகளை கிளப்பி வருகிறார்கள். அவர்கள் நேரடி விவாதத்திற்கு வராத பட்சத்தில் நாம் எழுத்து வடிவில் அவர்களுக்கு பதில் அளிக்கலாமே.

ஸியாத் ரஹ்மான்

பதில் : சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காக இஸ்லாம் குறித்து யார் கேள்வி கேட்டாலும் அதற்கு நாம் தக்க விளக்கம் அளித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

ஆனால் சந்தேகத்தைத் தெளிவுபடுத்தும் நோக்கம் இல்லாமல் இஸ்லாம் தாழ்ந்தது என்றும், தங்களின் கிறித்தவம் மேலானது என்றும் திமிர்வாதம் பேசுவோரையும்,

இஸ்லாம் மட்டமானது என்றும் தங்களின் கழிபட்ட கம்யூனிசம் தான் சிறந்தது என்றும் களமிறங்குவோரையும் தான் நாம் விவாதத்துக்கு அழைக்கிறோம்.

எழுத்து வடிவில் நாம் எவ்வளவு தெளிவாகப் பதிலளித்தாலும் அதற்கு மறுப்பு என்ற பெயரில் ஏதாவது உளறிக் கொட்டுவார்கள். அதற்கு நாம் தக்க மறுப்பு எழுதினாலும் மறுப்புக்கு மறுப்பு என்று ஏதாவது உளறிக் கொட்டுவார்கள். அதை எழுத்து வடிவிலான விவாதத்தில் உடனே சுட்டிக்காட்ட முடியாது.

இவ்வாறு சென்றால் வருடக் கணக்கில் இழுத்தடித்துக் கொண்டே செல்லும். அதிக இடைவெளி இருப்பதால் மக்களால் உண்மையை எளிதில் புரிய முடியாது.

ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு குரங்கு போல் தாவி தப்பித்துக் கொண்டு இருப்பார்கள். நாம் பத்து விஷயங்களுக்குப் பதில் சொன்னால் அதில் சமாளிக்கத் தகுந்த ஓரிரு விஷயங்கள் குறித்து மட்டும் பதில் போடுவார்கள். எத்தனை முறை சுட்டிக்காட்டினாலும் ஒவ்வொன்றாகச் சொல்வோம் என்று கூறி பல வருடங்களை ஓட்டி விடுவார்கள்.

மேலும் ஒன்றை உயர்த்தி மற்றொன்றைத் தாழ்த்தி வாதிக்கும் குருட்டுக் கும்பலுக்கு நம் தரப்பு விளக்கம் மட்டும் போதுமான பதிலடியாகாது. நீ தூக்கிப் பிடிக்கும் கம்யூனிசம் உலகிலேயே மூட நம்பிக்கையும், கிறுக்குத் தனமும் அதிகமாக உள்ளதாகும் என்று கிடுக்கிப்பிடியும் போட வேண்டிய அவசியமும் உள்ளது.

வெறும் கேள்விகள் மட்டும் கேட்டுவிட்டு ஓட இடமளிக்காமல் நமது கேள்விகளையும் அவர்களைச் சந்திக்க வைத்து அவர்கள் தூக்கிப் பிடிக்கும் கம்யூனிசம் தான் உலகில் உள்ள சித்தாந்தங்களில் கழிபட்டது என்பதையும் நாம் நிறுவ வேண்டும்.

சில விஷயங்களுக்குப் பதில் கூற முடியாத போது அதை ஒப்புக் கொள்ளாமல் சம்மந்தமில்லாதவைகளை எழுதுவதும், கடைசியில் அதற்குப் பதில் கூறுவதாகக் கூறிக் கொண்டு நாட்களைக் கடத்துவதும் எழுத்து விவாதத்தில் உண்டு என்பதை அனுபவப்பூர்வமாக நாம் அறிகிறோம்.

ஒருவர் தவறான வாதத்தை எடுத்து வைத்தால் அவர் வாயாலேயே அதை ஒப்புக் கொள்ள வைத்து உண்மை எது பொய் எது என்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கும் வாய்ப்பு நேரடி விவாதத்தில் தான் உண்டு.

எந்த மனிதரும் பொதுமக்கள் மத்தியில் பேசுவது போல் எதிரியின் முன்னிலையில் பேச மாட்டார். மிகச் சரியான தகவலையே பேசுவார். எழுத்து விவாதம் என்பது எதிரியின் முன்னிலையில் தெரிவிக்கும் கருத்து அல்ல. பொதுமக்களை வசீகரப்படுத்தும் தந்திரம் தான் அதில் மிகைத்திருக்கும்.

நேரடி விவாதம் என்பது எதிரியின் முன்னிலையில் கருத்தைத் தெரிவிப்பது என்பதால் அது தான் ஆழமானதாகவும், அறிவுப்பூர்வமானதாகவும் இருக்கும்,

இஸ்லாத்தின் அடிப்படைகள் திருமறைக் குர்ஆனும், குர்ஆனிற்கு முரண்படாத ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் ஆகிய இரண்டும்தான்.

ஆனால் இஸ்லாத்தை விமர்சிக்கும் கள்ளக் கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகள், நாத்திகர்கள் மற்றும் பலர் இஸ்லாத்தினை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் மனிதர்களின் கருத்துக்களைத் தான் இஸ்லாம் போன்று காட்டி விமர்சிக்கின்றனர். அல்லது குர்ஆன் கூறாத கருத்தை இவர்கள் திணித்துக் கொண்டு விமர்சிக்கின்றனர்.

இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களையும், தப்ஸீரில் உள்ள மனிதக் கருத்துக்களையும் இஸ்லாம் போல் காட்டி விமர்சிக்கின்றனர். இவற்றையெல்லாம் தெளிவாக விளக்க வேண்டும் என்றால் நேரடி விவாதம் தான் சாத்தியமானதாகும்.

மேலும் இஸ்லாம் குறித்து எடுத்து வைக்கும் எந்த வாதத்துக்கும் தக்க ஆதாரத்தை அந்த இடத்திலேயே எடுத்து வைக்க வற்புறுத்தி அவர்களின் அறியாமையை அடையாளம் காட்ட முடியும்.

இதன் காரணமாகத் தான் இஸ்லாத்தை விமர்சிக்கும் யாராக இருந்தாலும் நம்முடன் நேரடியாக விவாதிக்க அறைகூவல் விடுக்கின்றோம்.

அதன் அடிப்படையில் கிறித்தவர்களுடன் நடந்த விவாதத்திலும், நாத்திகர்களுடன் நடந்த விவாதத்திலும் நம் தரப்பை நிலைநாட்டியதுடன் அவர்களின் தரப்பு தவறு என்பதையும் இரண்டே நாட்களில் நிரூபித்து முடித்து விட்டு வேறு வேலைகளைப் பார்க்க ஆரம்பித்து விட்டோம்.

எழுத்து விவாதம் என்று ஜவ்வு மாதிரி எதையாவது பத்து வருடங்களுக்கு உளறிக் கொண்டு காலத்தை ஓட்டலாம் என்று கணக்குப் போடுகின்றனர்.

எழுத்து விவாதம் என்ற பெயரில் எவனோ எழுதியதை வாந்தி எடுக்கும் கூட்டம் ஓட்டம் பிடிப்பது இதற்குத் தான்..

ஒரு காலம் இருந்தது. நாத்திகர்களும், கம்யூனிஸ்டுகளும் மதவாதிகளை விவாதத்துக்கு அழைத்த போது மதத்தைப் பின்பற்றுவோர் ஓட்டம் எடுத்தனர்,.

இன்று கம்யூனிஸ்டுகளும் நவீன கம்யூனிஸ்டுகளும், பகுத்தறிவுவாதிகளும் ஓட்டம் பிடித்துக் கொண்டே உளறிக்கொண்டு திரிகின்றனர். நாம் விரட்டிக் கொண்டு செல்கிறோம். நான் ஓடவில்லை என்று சொல்லிக் கொண்டே ஓடிக் கொண்டு இருக்கிறார்கள்.

சாதாரணக் கம்யூனிஸ்டுகளும், நாங்கள் தான் உண்மை கம்யூனிஸ்டுகள் என்று பீற்றிக் கொள்பவர்களும் மூடர்களே என்பதையும் சிந்தனைக் கோளாறு உள்ளவர்களே என்பதையும் மதவாதிகளை விட பிற்போக்கானவர்களே என்பதையும் அவர்களின் சொற்களையும், எழுத்துக்களையும் வைத்து நாம் நிரூபித்துக் காட்ட தயாராக இருக்கிறோம்.

அத்துடன் அவர்கள் இஸ்லாத்துக்கு எதிராக எந்தக் கேள்வி கேட்டாலும் அவர்களின் முதுகெலும்பை முறிக்கும் வகையில் பதில் அளிக்க காத்துக் கொண்டு இருக்கிறோம்.

இப்படி நெஞ்சுயர்த்திச் சொல்லும் நிலையில் இஸ்லாம் இருப்பதும், அதை எதிர்கொள்ள முடியாமல் இவர்கள் ஓட்டம் எடுப்பதுமே எது உண்மை என்பதைப் புரிந்து கொள்ளப் போதுமானது.

நாம் விடாமல் விரட்டும் நிர்பந்தம் காரணமாக அவர்கள் விவாதக் களத்துக்கு வந்தாக வேண்டும் என்ற நிர்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டே தீரும். ரோசம் வரும் அளவுக்கு நாக்கைப் பிடுங்கும் அளவுக்கு கேள்வி கேட்டு விரட்டிக் கொண்டே இருந்தால் தங்கள் அடிமைக் கூட்டத்தைத் தக்க வைப்பதற்காக விவாதத்துக்குத் தயார் என்று ஒப்புக் கொள்ளும் நிலையை அவர்கள் சந்தித்துத் தான் ஆக வேண்டும். அப்போது சில நாட்கள் விவாதத்துடன் அவர்களின் முதுகெலும்பு முறிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...