கம்யூனிஸ்டுகளுக்கு தக்க பதில் அளிக்கலாமே?

கேள்வி : கள்ளக் கிறிஸ்துவர்களும், கம்யூனிஸ்டுகளும் தங்கள் இணையத்தில் இஸ்லாத்தைப் பற்றி பித்னாகளை கிளப்பி வருகிறார்கள். அவர்கள் நேரடி விவாதத்திற்கு வராத பட்சத்தில் நாம் எழுத்து வடிவில் அவர்களுக்கு பதில் அளிக்கலாமே.

ஸியாத் ரஹ்மான்

பதில் : சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காக இஸ்லாம் குறித்து யார் கேள்வி கேட்டாலும் அதற்கு நாம் தக்க விளக்கம் அளித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

ஆனால் சந்தேகத்தைத் தெளிவுபடுத்தும் நோக்கம் இல்லாமல் இஸ்லாம் தாழ்ந்தது என்றும், தங்களின் கிறித்தவம் மேலானது என்றும் திமிர்வாதம் பேசுவோரையும்,

இஸ்லாம் மட்டமானது என்றும் தங்களின் கழிபட்ட கம்யூனிசம் தான் சிறந்தது என்றும் களமிறங்குவோரையும் தான் நாம் விவாதத்துக்கு அழைக்கிறோம்.

எழுத்து வடிவில் நாம் எவ்வளவு தெளிவாகப் பதிலளித்தாலும் அதற்கு மறுப்பு என்ற பெயரில் ஏதாவது உளறிக் கொட்டுவார்கள். அதற்கு நாம் தக்க மறுப்பு எழுதினாலும் மறுப்புக்கு மறுப்பு என்று ஏதாவது உளறிக் கொட்டுவார்கள். அதை எழுத்து வடிவிலான விவாதத்தில் உடனே சுட்டிக்காட்ட முடியாது.

இவ்வாறு சென்றால் வருடக் கணக்கில் இழுத்தடித்துக் கொண்டே செல்லும். அதிக இடைவெளி இருப்பதால் மக்களால் உண்மையை எளிதில் புரிய முடியாது.

ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு குரங்கு போல் தாவி தப்பித்துக் கொண்டு இருப்பார்கள். நாம் பத்து விஷயங்களுக்குப் பதில் சொன்னால் அதில் சமாளிக்கத் தகுந்த ஓரிரு விஷயங்கள் குறித்து மட்டும் பதில் போடுவார்கள். எத்தனை முறை சுட்டிக்காட்டினாலும் ஒவ்வொன்றாகச் சொல்வோம் என்று கூறி பல வருடங்களை ஓட்டி விடுவார்கள்.

மேலும் ஒன்றை உயர்த்தி மற்றொன்றைத் தாழ்த்தி வாதிக்கும் குருட்டுக் கும்பலுக்கு நம் தரப்பு விளக்கம் மட்டும் போதுமான பதிலடியாகாது. நீ தூக்கிப் பிடிக்கும் கம்யூனிசம் உலகிலேயே மூட நம்பிக்கையும், கிறுக்குத் தனமும் அதிகமாக உள்ளதாகும் என்று கிடுக்கிப்பிடியும் போட வேண்டிய அவசியமும் உள்ளது.

வெறும் கேள்விகள் மட்டும் கேட்டுவிட்டு ஓட இடமளிக்காமல் நமது கேள்விகளையும் அவர்களைச் சந்திக்க வைத்து அவர்கள் தூக்கிப் பிடிக்கும் கம்யூனிசம் தான் உலகில் உள்ள சித்தாந்தங்களில் கழிபட்டது என்பதையும் நாம் நிறுவ வேண்டும்.

சில விஷயங்களுக்குப் பதில் கூற முடியாத போது அதை ஒப்புக் கொள்ளாமல் சம்மந்தமில்லாதவைகளை எழுதுவதும், கடைசியில் அதற்குப் பதில் கூறுவதாகக் கூறிக் கொண்டு நாட்களைக் கடத்துவதும் எழுத்து விவாதத்தில் உண்டு என்பதை அனுபவப்பூர்வமாக நாம் அறிகிறோம்.

ஒருவர் தவறான வாதத்தை எடுத்து வைத்தால் அவர் வாயாலேயே அதை ஒப்புக் கொள்ள வைத்து உண்மை எது பொய் எது என்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கும் வாய்ப்பு நேரடி விவாதத்தில் தான் உண்டு.

எந்த மனிதரும் பொதுமக்கள் மத்தியில் பேசுவது போல் எதிரியின் முன்னிலையில் பேச மாட்டார். மிகச் சரியான தகவலையே பேசுவார். எழுத்து விவாதம் என்பது எதிரியின் முன்னிலையில் தெரிவிக்கும் கருத்து அல்ல. பொதுமக்களை வசீகரப்படுத்தும் தந்திரம் தான் அதில் மிகைத்திருக்கும்.

நேரடி விவாதம் என்பது எதிரியின் முன்னிலையில் கருத்தைத் தெரிவிப்பது என்பதால் அது தான் ஆழமானதாகவும், அறிவுப்பூர்வமானதாகவும் இருக்கும்,

இஸ்லாத்தின் அடிப்படைகள் திருமறைக் குர்ஆனும், குர்ஆனிற்கு முரண்படாத ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் ஆகிய இரண்டும்தான்.

ஆனால் இஸ்லாத்தை விமர்சிக்கும் கள்ளக் கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகள், நாத்திகர்கள் மற்றும் பலர் இஸ்லாத்தினை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் மனிதர்களின் கருத்துக்களைத் தான் இஸ்லாம் போன்று காட்டி விமர்சிக்கின்றனர். அல்லது குர்ஆன் கூறாத கருத்தை இவர்கள் திணித்துக் கொண்டு விமர்சிக்கின்றனர்.

இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களையும், தப்ஸீரில் உள்ள மனிதக் கருத்துக்களையும் இஸ்லாம் போல் காட்டி விமர்சிக்கின்றனர். இவற்றையெல்லாம் தெளிவாக விளக்க வேண்டும் என்றால் நேரடி விவாதம் தான் சாத்தியமானதாகும்.

மேலும் இஸ்லாம் குறித்து எடுத்து வைக்கும் எந்த வாதத்துக்கும் தக்க ஆதாரத்தை அந்த இடத்திலேயே எடுத்து வைக்க வற்புறுத்தி அவர்களின் அறியாமையை அடையாளம் காட்ட முடியும்.

இதன் காரணமாகத் தான் இஸ்லாத்தை விமர்சிக்கும் யாராக இருந்தாலும் நம்முடன் நேரடியாக விவாதிக்க அறைகூவல் விடுக்கின்றோம்.

அதன் அடிப்படையில் கிறித்தவர்களுடன் நடந்த விவாதத்திலும், நாத்திகர்களுடன் நடந்த விவாதத்திலும் நம் தரப்பை நிலைநாட்டியதுடன் அவர்களின் தரப்பு தவறு என்பதையும் இரண்டே நாட்களில் நிரூபித்து முடித்து விட்டு வேறு வேலைகளைப் பார்க்க ஆரம்பித்து விட்டோம்.

எழுத்து விவாதம் என்று ஜவ்வு மாதிரி எதையாவது பத்து வருடங்களுக்கு உளறிக் கொண்டு காலத்தை ஓட்டலாம் என்று கணக்குப் போடுகின்றனர்.

எழுத்து விவாதம் என்ற பெயரில் எவனோ எழுதியதை வாந்தி எடுக்கும் கூட்டம் ஓட்டம் பிடிப்பது இதற்குத் தான்..

ஒரு காலம் இருந்தது. நாத்திகர்களும், கம்யூனிஸ்டுகளும் மதவாதிகளை விவாதத்துக்கு அழைத்த போது மதத்தைப் பின்பற்றுவோர் ஓட்டம் எடுத்தனர்,.

இன்று கம்யூனிஸ்டுகளும் நவீன கம்யூனிஸ்டுகளும், பகுத்தறிவுவாதிகளும் ஓட்டம் பிடித்துக் கொண்டே உளறிக்கொண்டு திரிகின்றனர். நாம் விரட்டிக் கொண்டு செல்கிறோம். நான் ஓடவில்லை என்று சொல்லிக் கொண்டே ஓடிக் கொண்டு இருக்கிறார்கள்.

சாதாரணக் கம்யூனிஸ்டுகளும், நாங்கள் தான் உண்மை கம்யூனிஸ்டுகள் என்று பீற்றிக் கொள்பவர்களும் மூடர்களே என்பதையும் சிந்தனைக் கோளாறு உள்ளவர்களே என்பதையும் மதவாதிகளை விட பிற்போக்கானவர்களே என்பதையும் அவர்களின் சொற்களையும், எழுத்துக்களையும் வைத்து நாம் நிரூபித்துக் காட்ட தயாராக இருக்கிறோம்.

அத்துடன் அவர்கள் இஸ்லாத்துக்கு எதிராக எந்தக் கேள்வி கேட்டாலும் அவர்களின் முதுகெலும்பை முறிக்கும் வகையில் பதில் அளிக்க காத்துக் கொண்டு இருக்கிறோம்.

இப்படி நெஞ்சுயர்த்திச் சொல்லும் நிலையில் இஸ்லாம் இருப்பதும், அதை எதிர்கொள்ள முடியாமல் இவர்கள் ஓட்டம் எடுப்பதுமே எது உண்மை என்பதைப் புரிந்து கொள்ளப் போதுமானது.

நாம் விடாமல் விரட்டும் நிர்பந்தம் காரணமாக அவர்கள் விவாதக் களத்துக்கு வந்தாக வேண்டும் என்ற நிர்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டே தீரும். ரோசம் வரும் அளவுக்கு நாக்கைப் பிடுங்கும் அளவுக்கு கேள்வி கேட்டு விரட்டிக் கொண்டே இருந்தால் தங்கள் அடிமைக் கூட்டத்தைத் தக்க வைப்பதற்காக விவாதத்துக்குத் தயார் என்று ஒப்புக் கொள்ளும் நிலையை அவர்கள் சந்தித்துத் தான் ஆக வேண்டும். அப்போது சில நாட்கள் விவாதத்துடன் அவர்களின் முதுகெலும்பு முறிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...