மீலாதும் மவ்லூதும் கூடாது – தேவ் பந்த் மதரஸா ஃபத்வாவின் தமிழாக்கம்:

உலக அளவில் ஹனபி மத்ஹபை பின்பற்றும் மக்களின் தலைமைக் கல்விக்கூடமாக தாருல் உலூம் தேவ்பந்த் மதரஸா அமைந்துள்ளது. பல்லாயிரம் மாணவர்கள் ஒரே நேரத்தில் படித்து வரும் இம்மாபெரும் ஹனபி மத்ஹபின் பல்கலைக் கழக்மான இம்மதரஸா மீலாதும் மவ்லூதும் மார்க்கத்தில் கிடையாது அவ்லியாக்கலள் அதை ஓதச் சொல்லவில்லை என்று தேவ்பந்த் மதரஸா ஃபத்வா கொடுத்துள்ளது. நாங்கள் ஹனபிகள் என்று கூறிக் கொண்டு மேற்கண்ட செயல்களைச் செய்து வருவோர் இனியாவது இதில் இருந்து திருந்திக் கொள்வார்களா?

உருது ஃபத்வாவின் தமிழாக்கம் இதோ:

கண்ணியத்திற்குரிய தலைமை முப்தி அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ

நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். கீழ்கண்ட இரு விஷயங்களைப் பற்றி தயவு செய்து தெளிவை தந்து நன்றி நவில வாய்ப்பை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

1) சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ரப்பியுல் அவ்வல் 12 ஆம் தேதி அன்று வழக்கமாக மவ்லூத் ஓதப்படுகிறது. இதைப்போல குறிப்பிட்ட நாளில் மவ்லூத் ஓதுவது மார்க்க அடிப்படையில் கூடுமா அல்லது கூடாதா ?

2) ரமலானுடைய மாதத்தில் தராவீஹ் தொழுகையின் ஒவ்வொரு நான்கு ரக்அத்திற்கு பிறகு கலிமா ஷஹாதத், கலிமா தம்ஜீத், கலீமா தவ்ஹீதுடன் நான்கு கலீபாக்களின் பெயரில், அதாவது முதல் நான்கு ரக்அத்திற்கு பிறகு முதல் கலீபா அபூபக்கர் (ரலி) அவர்களின் பெயராலும், இரண்டாம் நான்கு ரக்அத்திற்கு பிறகு இரண்டாம் கலீபா உமர் (ரலி) அவர்களின் பெயராலும், மூன்றாம் நான்கு ரக்அத்திற்கு பிறகு மூன்றாம் கலீபா உஸ்மான் கனி (ரலி) அவர்களின் பெயராலும், நான்காம் நான்கு ரக்அத்திற்கு பிறகு அலி ஹைதர் (ரலி) அவர்களின் பெயராலும் தஸ்பீஹ் படிக்கப்படுகிறது. மார்க்கத்தில் இதைப்போல தஸ்பீஹ் படிப்பது கூடுமா அல்லது கூடாதா ? தெளிவு படுத்தவும்.

அல்லாஹ் தங்களின் ஆயுளில் பரக்கத்தை கொடுத்து தங்களுடைய பணியை எல்லா இடங்களிலும் பரவ செய்யட்டும்.

வஸ்ஸலாம்

ஷம்சுத்தீன்

சென்னை

2 முஹர்ரம் 1426

பதில் :

1) இறுதித்தூதர் அஹ்மதே முஜ்தபா முஹம்மதே முஸ்தபா (ஸல்) அவர்களுடைய திருப்பெயர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வணக்கங்களான தொழுகை, நோன்பு, ஹஜ், ஜிஹாத் போன்றவைகளை பற்றி குறிப்பிடப்படுவதாக இருந்தாலும், அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொடர்புகள் உதாரணத்திற்கு கொடுக்கல் வாங்கல், கடன் மற்றும் அடமானம் போன்றவைகளை பற்றி குறிப்பிடப்படுவதாக இருந்தாலும், அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூக்கம் மற்றும் விழிப்பு, உட்காருதல் எழுதல் போன்றவைகளை பற்றி குறிப்பிடப்படுவதாக இருந்தாலும், அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆடைகளைப்பற்றி குறிப்பிடப்படுவதாக இருந்தாலும், அல்லது கால்நடைகளான ஒட்டகம், ஆடு, குதிரை போன்றவைகளைப்பற்றி குறிப்பிடப்படுவதாக இருந்தாலும் அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குழந்தை பருவம் மற்றும் பிறப்பை பற்றி குறிப்பிடப்படுவதாக இருந்தாலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப்பற்றி எதை குறிப்பிடுவதாக இருந்தாலும், அதிலிருந்து பாடம் மற்றும் படிப்பினை பெறுவது, சந்தேகத்திற்கு இடமின்றி பரக்கத்தும் கட்டாயமும் ஆகும். அதிகமான நன்மைகளைப் பெற்றுத் தருவதாகும்.

ஆனால் இச்செய்திகள் ஆதாரப்பூர்வமற்ற செய்திகளாகவும், நம்ப முடியாத செய்திகளாகவும், இட்டுகட்டப்பட்ட செய்திகளாவும் இருக்கக் கூடாது. இதைப் போன்ற செய்திகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எனவே, வழக்கத்தில் இருக்கும் மீலாதைக் கொண்டாடுவது தெளிவான தீய நூதனப் பழக்கமாகும் (பித்அத் சய்யிஆ), பழக்கத்தில் இருக்கும் இந்த மீலாதிற்கு திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளில் ஆதாரம் இல்லை, சஹாபாக்கள், தாபியீன்கள், தப்அ தாபியீன்கள் மற்றும் முழுமையான அவ்லியாக்களிடமிருந்தும் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. மாறாக இந்த உம்மத்தின் 600 ஆண்டு காலங்கள் வழக்கத்தில் இருக்கும் மீலாது இல்லாமல் தான் கடந்தது. மீலாது உருவாக்கப்பட்ட போது அல்லாமா இப்னு அமீர் அல்ஹாஜ் மக்கீ (ரஹ்) அவர்கள் தன்னுடைய நூலான அல்மத்கலில் விரிவான ஆதாரங்களை கொண்டு இதை தடுத்துள்ளார்கள். இதுவரைக்கும் சத்தியத்தில் இருக்கும் உலமாக்கள் இதை தடுத்து கொண்டு தான் வருகிறார்கள்.

2) தராவீஹ் உடைய ஒவ்வொரு நான்கு ரக்அத்திற்கு பிறகு உட்கார வேண்டும். உட்காரும் எவருக்கும் துஆ செய்வதற்கோ அல்லது தரூத் (ஸலவாத்) ஒதுவதற்கோ, அல்லது மஸ்ஜிதுல் ஹராமாக இருந்தால் தவாப் செய்வதற்கோ அதிகாரம் உள்ளது. தங்களுடைய பகுதியில் வழக்கத்தில் இருக்கும் கலீமா ஷஹாதத் போன்றவற்றை ஓதுதல் என்பது பிக்ஹ் நூல்களிலோ, பத்வா நூற்களிலோ அல்லது ஹதீஸ்களிலோ அல்லது ஹதீஸ்களின் விரிவுரைகளிலோ, இந்த திக்ருகள் தராவீஹ்வுடைய சுன்னத்களில் இடம் பெறவில்லை. அதைப் போல இந்த திக்ருகள் ஒழுக்கம் மற்றும் விரும்பத் தக்கவைகளிலும் இடம்பெறவில்லை. ஆக இவை எல்லாம் விடுவதற்கு தகுதியானவைகள். தூர பார்வையுடனும், ஹிக்மத்துடனும் இவைகளை விட்டு மக்களை தூரமாக்க முயற்சி செய்யப்பட வேண்டும்.

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...