தினமணியின் திமிர் வாதம்

தினமணி நாளிதழ் முஸ்லிம்களுக்கு எதிராக விஷம் கக்கும் விதமாக கடந்த மாதம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி ஒரு தலையங்கத்தை எழுதியிருந்தது.

அந்தத் தலையங்கத்தில்,

முஸ்லிம்கள் பெருகிக்கொண்டே போகின்றார்கள்.

பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் இந்துக்கள் மிரட்டப்பட்டு மதமாற்றம்செய்யப்படுகின்றார்கள்.

இந்துக்கள் அங்கு சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகின்றார்கள்.

அதே நேரத்தில் முஸ்லிம்கள் இந்தியாவில் சுகபோகமாக இருக்கின்றார்கள்.

இந்துக்களை விட முஸ்லிம் களுக்கு கூடுதலான சலுகைகள் இங்கு வழங்கப்படுகின்றன.

என்று இஸ்லாமியர்களுக்கு எதிராக பொய்யையும், புரட்டையும் அவிழ்த்துவிட்டிருந்தது.

தினமணியின் அந்த கேடுகெட்ட தலையங்கத்திற்கு, தினத்தந்தியின் காவி வழியில் கால்பதிக்கும் தினமணி என்ற தலைப்பில் உணர்வு 17:01 இதழில் பதிலடி கொடுக்கப்பட்டது.

முஸ்லிம்கள் மீது கொண்ட காழ்ப்புணர்வின் காரணமாகத்தான் அந்த தலையங்கம் எழுதப்பட்டது என்பதனை ஆதரங்களுடன் நாம் விளக்கியிருந்தோம்.

மேற்கண்டவாறு இஸ்லாமியர்களுக்கு எதிராக பொய்யையும், புரட்டையும் தினமணி அவிழ்த்துவிட்டு ஒரு மாதம் கூட ஆகவில்லை; அதற்குள் மறுபடியும் முஸ்லிம்களை வம்புக்கிழுத்து தனது அரிப்பைத் தீர்த்துக் கொண்டுள்ளது தினமணி.

கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி, தவறு… தவறு… தவறு என்ற தலைப்பில் தினமணி ஒரு தலையங்கத்தை எழுதியுள்ளது.

முஸ்லிம்கள் தங்களது உயிரைவிட மேலாக மதிக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கொச்சைப்படுத்தி படம் எடுத்தவர்களுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் தனது தலையங்கத்தை எழுதி தான் ஒரு சங்பரிவார ஏஜெண்டு என்பதையும், அமெரிக்காவின் அடிவருடி என்பதையும் நிரூபித்துள்ளது தினமணி நாளிதழ்.

நபிகளாரை இழிவுபடுத்தி படம் எடுத்த அயோக்கிய யூதனுக்கும், அடாவடி பாதிரியாருக்கும், அதற்குத் துணை போகும் அயோக்கிய அமெரிக்காவுக்கும் எதிராக உலக முஸ்லிம்கள் கொந்தளித்துப் போய் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு கொடுக்காவிட்டால் தொலைந்து போகட்டும்; குறைந்தபட்சம் எதிர்ப்பு தெரிவிக்காமலாவது இருக்கலாமல்லவா?

ஆனால், சங்பரிவார ஏஜெண்டான தினமணிக்கு அவ்வாறு வாய்மூடி மௌனமாக இருக்க இயலவில்லை. உலக நாடுகளே பற்றியெரியும் இவ்வேளையில் இந்தியா மட்டும் ஏன் அமைதிப் பூங்காவாக இருக்க வேண்டும் என்று இந்த அயோக்கிய தினமணி நினைக்கிறதா? என்று நமக்கு விளங்கவில்லை. அதனால் தான் இது தொடர்ந்து முஸ்லிம்களை புண்படுத்தும் விதமாகவும், இஸ்லாமியர்களையும், இஸ்லாத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாகவும் விஷமக் கருத்துக்களை வெளியிட்டு வருகிறது.

இனி இந்த அயோக்கிய தினமணி எழுதியவை சரியானது தானா? என்பதை இப்போது அலசுவோம்.

கடந்த 5 நாள்களாக சென்னை அண்ணா சாலையில், ஒரு சில இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. தங்களது மத உணர்வைப் புண்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. ஆனால்,அமெரிக்காவுக்கு எதிராக சென்னையில் நடத்தும் இந்தப் போராட்டத்தின் மூலம் அவர்கள் என்ன சாதித்துவிடப் போகிறார்கள் என்பது புரியவில்லை

என்று முதல் கேள்வியை எழுப்பியுள்ளது இந்த அயோக்கிய தினமணி.

அமெரிக்காவுக்கு எதிராகச் சென்னையில் நடத்தும் இந்தப் போராட்டத்தின் மூலம் அவர்கள் என்ன சாதித்துவிடப் போகிறார்கள் என்பது புரியவில்லை என்று கேள்வி கேட்கும் அயோக்கிய தினமணியே! இதற்கு முன்பு தமிழகத்தில் பல பிரச்சனைகளில் பலர் இது போன்று பல நாடுகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார்களே! அப்போதெல்லாம் இந்தக் கேள்வியைக் கேட்டாயா?

இலங்கையைக் கண்டித்து இங்கு போராட்டம் நடத்துபவர்களைப் பார்த்து இந்தக் கேள்வியை கேட்பாயா? இதுவரை கேட்டாயா?

என்ன சாதித்துவிடப் போகிறார்கள் என்று கேட்கிறாயே? கூறுகெட்ட முண்டமே! கூடங்குளத்தில் எல்லா பணிகளும் முடிந்து மின் உற்பத்தி துவங்க உள்ள நிலையில் மூளை வெந்து போய் அதை நிறுத்தச் சொல்லி அமெரிக்காவின் ஏஜெண்டுகள் இங்கு போராட்டம் நடத்துகின்றார்களே! இந்த போராட்டத்தின் மூலம் அவர்கள் என்ன சாதித்துவிடப் போகிறார்கள்? என்று கேட்டாயா?

முஸ்லிம்கள் என்றால் மட்டுமென்ன உனக்கு கிள்ளுக்கீரையா?

இந்தப் போராட்டம் அமெரிக்காவுக்கு எதிரானதா? அந்தப் படத்தை தயாரித்த சாம் பாஸில் என்ற நபருக்கு எதிரானதா? இதுவரை எங்குமே வெளியாகாத திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட யு ட்யூப்-க்கு எதிரானதா? யாரை எதிர்க்கிறார்கள் நமது தமிழக இஸ்லாமியச் சகோதரர்கள்? என்று ஒன்றுமே அறியாத பச்சைப் பாலகனைப் போல கேள்வியெழுப்பியுள்ளது இந்த தினமணி.

உலகமறிந்த ஒரு விஷயத்தை ஒன்றும் அறியாதது போல கேள்வியெழுப்பியதிலிருந்தே வெட்ட வெளிச்சமாகின்றது தினமணியின் அயோக்கியத்தனம்.

படம் எடுத்தவன் ஒரு யூத இனத்தைச் சேர்ந்த அமெரிக்கன். அந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் பொறுப்பை ஏற்றவன் டெர்ரி ஜோன்ஸ் என்ற கிறித்தவ பாதிரியாரான ஒரு அயோக்கியன். அந்தப் படம் அமெரிக்காவின் ஆசியோடும், ஆதரவோடும்தான் யூடியூபில் இன்று வரை உள்ளது.

ஒபாமாவும், ஹிலாரி கிளிண்டனும் இது அமெரிக்காவின் கருத்து சுதந்திரம். இதற்கு எதிராக நாங்கள் ஒன்றும் நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறி இந்த அயோக்கியத்தனத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். இதுவெல்லாம் தெரியாதது போல நடித்துக் கொண்டு, யாரை எதிர்க்கிறார்கள் நமது தமிழக இஸ்லாமியச் சகோதரர்கள்? என்று கேள்வியெழுப்பி தனது சங்பரிவார புத்தியை வெளிக்காட்டியுள்ளது தினமணி.

யூடியூப்புக்கு எதிரானதா? இந்தப் போராட்டம் என்றும் இவன் கேள்வி எழுப்புகின்றான். உலக மகா அயோக்கியத்தனத்தைச் செய்துவரும் யூடியூப்புக்கு எதிராக யுத்தம் தொடுக்கவும் முஸ்லிம்கள் களம் காணத் தயாராகி விட்டார்கள் என்பதை அயோக்கிய தினமணிக்கு சொல்லிக் கொள்கின்றோம்.

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...