ஈஸா நபி கியாமத் நாளின் அடயாளம் என்பது சரியா?

கேள்வி

43:61 வசனத்தில் ஈஸா நபி மறுமை நாளின் அடையாளம் என்று மொழி பெயர்ப்பு மிக பெரும் மோசடியாக தெரிகிறது. இல்முல் சா அத்தி என்பது மறுமை நாளின் அடையாளம் என்று மொழி பெயர்த்துள்ளீர்கள். இல்ம் என்பது அறிவு என்று இருக்க அது மறுமை குறித்து பேசும் போது ஈஸா நபியை அங்கே தினிப்பதற்காக அறிவை அடையாளமாக மாற்றலாமா? அந்த வசனம் குர்ஆனையே குறிக்கிறது. அதுவே எந்த மாற்றமும் இல்லாமல் நேரடியாக பொருள்படுகிறது. மேலும் அந்த வசனத்தின் முடிவில் ஈஸா நபி மறுமை நாளின் அடையாளம்; எனவே என்னைப் பின்பற்றுங்கள் என்று ரசூல் சல் அவர்களை சொல்லச் சொல்வது கேலியாக முடியும். அவர் மறுமை நாளின் அடையாளம் என்று தான் கிருத்துவர்கள் நம்புகிறார்கள். அதையே ரசூல் சல் அவர்கள் கூறி அதனால் தன்னைப் பின்பற்றச் சொல்வார்களா? அல்லது குர்ஆன் மறுமை நாளின் குறித்த இல்மை தருகிறது என்று சொல்லி தன்னைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்வார்கள்?

நௌசாத், சுவீடன்

பதில்

நமது இந்த மொழி பெயர்ப்பு கவனமில்லாமல் செய்யப்பட்டதல்ல. மிகுந்த கவனத்துடன் தான் செய்யப்பட்டுள்ளது. மறு ஆய்வுக்கு இடமில்லாத வகையில் தான் கவனமாகச் செயல்பட்டுள்ளோம்.

அடையாளம் என்ற மொழிபெயர்ப்பு சரியா என்பதை முதலில் பார்ப்போம். பின்னர் உங்கள் வாதம் சரியா எனப் பார்ப்போம்.

43:61 வசனத்தில் இல்மு (عِلْمٌ) என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் பொருள் அறிவு என்று இருக்க அடையாளம் என்று மொழி பெயர்க்கலாமா என்று கேட்டுள்ளீர்கள்.

இல்மு என்பதற்கு ஒரே ஒரு அர்த்தம் தான் உள்ளது என்று கருதி இக்கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். இச்சொல்லுக்கு கல்வி என்ற பொருளும் உண்டு. அடையாளம் என்ற பொருளும் உண்டு.

علم என்ற சொல்லில் இருந்து தான் علامة (அலாமத்) என்ற சொல் பிறக்கிறது. அடையாளம் என்பது இதன் பொருள். இதன் பன்மைச் சொல்லான علامات (அலாமாத்) என்ற சொல் அடையாளங்கள் என்ற பொருளில் திருக்குர்ஆனிலும் (16:16) பயன்படுத்தப்பட்டுள்ளது.

16{وَعَلَامَاتٍ وَبِالنَّجْمِ هُمْ يَهْتَدُونَ  [النحل: 16

கடல் பயணிகளுக்கு மலைகள் அடையாளமாக உள்ளதால் மலைகளைக் குறிக்க اعلام  என்ற சொல் 42:32, 55:24 ஆகிய வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

42{وَمِنْ آيَاتِهِ الْجَوَارِ فِي الْبَحْرِ كَالْأَعْلَامِ [الشورى: 32]

55{ وَلَهُ الْجَوَارِ الْمُنْشَآتُ فِي الْبَحْرِ كَالْأَعْلَامِ} [الرحمن: 24]

இச்சொற்கள் அனைத்தும் இல்ம் என்ற அதே வேர்ச் சொற்களைக் கொண்டவையாகும்.

குறிப்பிட்ட துறையைக் குறிப்பதற்கும் இல்ம் என்ற சொல் பயன்படுத்தப்படும்.

இல்ம் எனும் சொல் மற்றொரு சொல்லுடன் இணைத்துச் சொல்வதாக இருந்தால் இடைச் சொல் உதவியில்லாமல் நேரடியாக சேர்த்துச் சொல்லப்படும்.

அறிவு என்ற சொல்லை குர்ஆன் பற்றிய அறிவு என்று சொல்ல வேண்டுமானால் இரு சொற்களையும் இடைச் சொல் உதவியில்லாமல் علم القران (இல்முல் குர்ஆன்) என இணைக்க வேண்டும்.

இடைச் சொல் உதவியுடன் இணைத்தால் அடையாளம் என்ற அர்த்தம் வரும்.

இல்மு عِلْمٌ என்ற சொல்லுடன் அஸ்ஸாஅத் السَّاعَةِ எனும் சொல் இணைக்கப்பட்ட நான்கு சொற்கள் குர்ஆனில் உள்ளன. அவற்றில் மூன்று சொற்கள் லி لِ என்னும் இடைச் சொல் துணையில்லாமல் இணைக்கப்பட்டுள்ளது. ஈஸா நபி குறித்த சொல் அப்படி இணைக்கப்படாமல் லி لِ என்ற இடைச் சொல்லின் துணையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இடைச்சொல் துணையில்லாமல் இணைக்கப்பட்ட சொற்களுக்கு கியாமத் நாள் பற்றிய அறிவு என்று பொருள் கொள்ள வேண்டும்.

ஈஸா நபி பற்றி பேசும் வசனத்தில் லி لِ எனும் இடைச் சொல்லின் துணையுடன் இணைக்கப்பட்டுள்ளதால் அடையாளம் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். அறிவு என்று பொருள் கொள்வதாக இருந்தால் மற்ற மூன்று இடங்களில் பயன்படுத்தப்பட்டது போல் தான் பயன்படுத்தப்பட்டு இருக்கும்

அந்த நான்கு வசனங்களையும் காண்க

31{إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ  السَّاعَةِ} [لقمان: 34

41{إِلَيْهِ يُرَدُّ عِلْمُ السَّاعَةِ } [فصلت: 47

43{وَعِنْدَهُ عِلْمُ السَّاعَةِ وَإِلَيْهِ تُرْجَعُونَ} [الزخرف: 85

இம்மூன்று வசனங்களிலும் இல்மு என்ற சொல் அஸ்ஸாஅத் எனும் சொல்லுடன் நேரடியாக இணைந்துள்ளதால் இம்முன்று சொற்களுக்கும் கியாமத் நாள் பற்றிய அறிவு என்று நாம் மொழி பெயர்த்துள்ளோம்.

ஆனால் 43:61 வசனத்தில் இல்முஸ்ஸாஅத் என கூறாமல் இல்முன் லிஸ் ஸாஅதி என்று கூறப்பட்டுள்ளது. லி என்ற இடைச் சொல்லால் இணைக்கப்பட்டுள்ளதால் கியாமத் நாளின் அடையாளம் என்பதே சரியான மொழி பெயர்ப்பாகும்.

43{وَإِنَّهُ لَعِلْمٌ لِلسَّاعَةِ فَلَا تَمْتَرُنَّ بِهَا وَاتَّبِعُونِ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ  [الزخرف: 61

அடுத்து ஹு என்ற சொல் அவர் என்ற பொருளிலும், அது என்ற பொருளிலும் பயன்படுத்தப்படும். நீங்கள் அது என்று பொருள் கொண்டு குர்ஆனைக் குறிக்கும் என்று கேட்டுள்ளீர்கள்.

நாம் அவர் என்று பொருள் கொண்டு ஈஸா நபி என  பொருள் கொண்டுள்ளோம்.

ஹு என்ற சொல்லுக்கு பொருள் கொள்\ளும் போது அதற்கு முன் எது பற்றி பேசப்படுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். ஈஸா நபி பற்றித் தான் பேசப்பட்டுள்ளது என்பதால் இவ்விடத்தில் குர்ஆன் என்று கருத முடியாது.

மேலும் இல்ம் என்பதற்கு அடையாளம் என்பது தான் பொருள் என நிருபணமாகி விட்டதால் குர்ஆன் என்ற அர்த்தம் பொருந்தாது. குர்ஆன் கியாமத் நாளின் அடையாளமாக இல்லை. கியாமத் நாளின் நெருக்கத்தில் குர்ஆன் அருளப்படும் என்று இருந்தால் தான் குர்ஆன் கியாமத் நாளின் அடையாளம் என்று சொல்ல முடியும்.

ஈஸா நபி கியாமத் நாளின் அடையாளம் என்று நாம் சொல்வது போல் கிறித்தவர்களும் நம்புகிறார்கள் என்ற அடிப்படையில் பின்வரும் கருத்தைக் கூறியுள்ளீர்கள்..

அந்த வசனத்தின் முடிவில் ஈஸா நபி மறுமை நாளின் அடையாளம்; எனவே என்னைப் பின்பற்றுங்கள் என்று ரசூல் சல் அவர்களை சொல்லச் சொல்வது கேலியாக முடியும் என்று கேட்டுள்ளீர்கள்.

நீங்கள் இந்த வசனத்தை மட்டும் வைத்து இப்படி வாதிடுகிறீர்கள். இது குறித்து பேசும் 57 வது வசனம் முதல் 61 வசனம் வரை சேர்த்துப் பார்த்தால் இந்தக் கேள்விக்கு இடமில்லை.

{وَلَمَّا ضُرِبَ ابْنُ مَرْيَمَ مَثَلًا إِذَا قَوْمُكَ مِنْهُ يَصِدُّونَ (57) وَقَالُوا أَآلِهَتُنَا خَيْرٌ أَمْ هُوَ مَا ضَرَبُوهُ لَكَ إِلَّا جَدَلًا بَلْ هُمْ قَوْمٌ خَصِمُونَ (58) إِنْ هُوَ إِلَّا عَبْدٌ أَنْعَمْنَا عَلَيْهِ وَجَعَلْنَاهُ مَثَلًا لِبَنِي إِسْرَائِيلَ (59) وَلَوْ نَشَاءُ لَجَعَلْنَا مِنْكُمْ مَلَائِكَةً فِي الْأَرْضِ يَخْلُفُونَ (60) {وَإِنَّهُ لَعِلْمٌ لِلسَّاعَةِ فَلَا تَمْتَرُنَّ بِهَا وَاتَّبِعُونِ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ (61)} [الزخرف: 61]

57. மர்யமின் மகன் உதாரணமாகக் கூறப்பட்டபோது அதைக் கேட்டு உமது சமுதாயத்தினர் (ஏளனமாகக்) கூச்சலிட்டனர்.

58. “எங்கள் கடவுள்கள் சிறந்தவர்களா? அல்லது அவரா?” என்று கேட்டனர். விதண்டாவாதம் செய்வதற்காகவே தவிர அவரைப் பற்றி அவர்கள் கூறவில்லை. இல்லை! அவர்கள் வீண் தர்க்கம் செய்வோரே!

59. நாம் அருள் புரிந்த அடியாரைத் தவிர அவர் வேறில்லை.459 இஸ்ராயீலின் மக்களுக்கு அவரை முன்னுதாரணமாக ஆக்கினோம்.

60. நாம் நினைத்திருந்தால் உங்களுக்குப் பகரமாக வானவர்களை இப்பூமியில் வழித்தோன்றல்களாக46 ஆக்கியிருப்போம்.

61. “அவர் (ஈஸா) அந்த நேரத்தின்1 அடையாளமாவார்.342 அதில் நீர் சந்தேகப்படாதீர்! என்னையே பின்பற்றுங்கள்! இதுவே நேர்வழி” (எனக் கூறுவீராக.)

இதில் 57வது வசனம் கிறித்தவர்கள் பற்றிப் பேசவில்லை. ஈஸா நபியை ஏற்காத மக்கத்து காஃபிர்களைப் பற்றி பேசுகிறது. ஈஸா நபி தந்தையில்லாமல் பிறந்ததைக் கேட்டு அவர்கள் எள்ளி நகையாடினார்கள்.

ஈஸா நபி சம்மந்தமாக நபிகள் நாயகம் கொண்ட கருத்தில் மக்காவின் காஃபிர்கள் இருக்கவில்லை. அதற்கு மாற்றமான கருத்தில் தான் இருந்தனர். எனவே என்னைப் பின்பற்றுங்கள் என அவர்களுக்குக் கூறுவது கேலிக்குரியதாக ஆகாது.

அவர் எப்படி உயர்த்தப்பட்டு இருக்க முடியும்? இது சாத்தியமற்றதல்லவா என்ற எண்ணம் ஆழ்மனதில் இருப்பதால் அதைப் பொய்யாக்க இயன்ற வரை மனித மனம் நினைக்கிறது.

ஆனால் அவரது பிறப்பு இதை விட அற்புதமானது சாத்தியமற்றது என்பதை நம்புவோருக்கு இது பிரச்சனை இல்லை.

மிஃராஜில் நபியை அழைத்துப் போனதில் நபியின் திறமை  ஒன்றும் இல்லை. வல்லமை மிக்க அல்லாஹ்வின் வல்லமையைக் காட்டும் நிகழ்வு என்று புரிந்து கொள்கிறோம்.

அது போல் தான் ஈஸா நபி உயத்தப்பட்டதில் அவரது ஆற்றலோ வல்லமையோ வெளிப்படவில்லை. அல்லாஹ் தான் நினைத்த்தைச் செய்யும் வல்லமை உள்ளவன் என்று புரிந்து கொண்டால் இதில் எந்த மனக்குழப்பமும் ஏற்படாது.

ஈஸா நபி குறித்து கீழ்க்கண்ட ஆக்கங்களையும் பார்க்கவும்

ஈஸா நபி உயிருடன் உயர்த்தப்பட்டார்களா

ஈஸா நபி சிலுவையில் அறையப்பட்டாரா

ஈஸா நபி மரணிப்பதற்கு முன் அவரை ஏற்பார்கள்

ஈஸா நபி உயர்த்தப்பட்டதை உறுதி செய்யும் மறுமை விசாரணை

உயிருடன் உள்ள ஈஸா நபி யாருக்கு ஜகாத் கொடுப்பார்

இறுதிக்காலத்தில் ஈஸா வருவார்

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...