எழுத்துப் பிழைகள்

திருக்குர்ஆனைப் பற்றி இன்னொரு செய்தியையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

உஸ்மான் (ரலி) அவர்களால் திருக்குர்ஆனுக்குப் பல பிரதிகள் எடுக்கப்பட்டபோது எழுத்தர்கள் கவனக் குறைவாக சில இடங்களில் பிழையாக எழுதியுள்ளனர்.

இவ்வாறு பிழையாக எழுதப்பட்டாலும் மனனம் செய்தவர்களின் உள்ளங்களில் அது பாதுகாக்கப்பட்டு இருப்பதால் அதை அளவுகோலாகக் கொண்டு எழுத்தில் ஏற்பட்ட பிழைகளை உலக முஸ்லிம் சமுதாயம் அப்படியே தக்கவைத்து வருகின்றது.

ஏனெனில் பிழையாக எழுதப்பட்ட பிரதிகள் ஒருவரிடம் இருந்து, சரி செய்யப்பட்ட பிரதிகள் வேறொருவரிடம் இருந்தால் திருக்குர்ஆனில் முரண்பாடு இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை அது ஏற்படுத்திவிடும்.

இது போன்ற சில எழுத்துப் பிழைகளை இங்கே நாம் எடுத்துக் காட்டுகிறோம்.

எ “லில்லதீன’ என்பது திருக்குர்ஆன் முழுவதும் சரியாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் 70:36 வசனத்தில் மட்டும் பிழையாக அலிப் அதிகமாக எழுதப்பட்டுள்ளது.

21:88 வசனத்தில் “நுன்ஜி’ எனும் சொல் “நுஜி’ என்று எழுதப்பட்டுள்ளது. இதை மக்கள் அப்படியே வாசித்து விடக் கூடாது என்பதற்காக மேலே சிறிய “நூன்’ என்ற எழுத்து பிற்காலத்தில் எழுதப்பட்டது.

எ “அஃபஇன்’ என்ற சொல் 3:144, 21:34 ஆகிய வசனங்களில் “அஃபா இன்’ என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் இதை “அஃபஇன்’ என்று தான் எழுதவும், வாசிக்கவும் வேண்டும்.

3:158 வசனத்தில் “லா இலல்லாஹி என்று நெடிலாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் “ல இலல்லாஹி’ என்று குறிலாகத் தான் இதை வாசிக்கவும், எழுதவும் வேண்டும்.

37:68 வசனத்தில் “லா இலல் ஜஹீம்’ என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் இதை “ல இலல் ஜஹீம்’ என்று தான் வாசிக்கவும், எழுதவும் வேண்டும்.

5:29 வசனத்தில் “தபூஆ’ என்று நெடிலாக எழுதப்பட்டுள்ளது பிழையாகும். இதை “தபூஅ’ என்று தான் வாசிக்கவும், எழுதவும் வேண்டும்.

7:103, 10:75, 11:97, 23:46, 28:32, 43:46 ஆகிய வசனங்களில் “மலாயிஹி’ என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் இதை “மலயிஹி’ என்று தான் வாசிக்கவும், எழுதவும் வேண்டும்.

9:47 வசனத்தில் “வலா அவ்லவூ’ என்று பிழையாக எழுதியுள்ளனர். ஆனால் “வல அவ்லவூ’ என்று தான் எழுதவும், வாசிக்கவும் வேண்டும்.

எ “ஸமூத’ என்ற சொல் 7:73, 11:61, 17:59, 27:45, 51:43 ஆகிய வசனங்களில் ஸமூத என்று சரியாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் 11:68 வசனத்தில் இச்சொல் இரு இடங்களில் உள்ளது. இதில் ஒரு இடத்தில் மட்டும் “ஸமூதா’ என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் “ஸமூத’ என்று தான் இதை எழுதவும், வாசிக்கவும் வேண்டும்.

எ “ஷைஇன்’ என்ற சொல் எல்லா இடங்களிலும் சரியாக எழுதப்பட்டுள்ள போதும் 18:23 வசனத்தில் மட்டும் “ஷா இன்’ என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. இதை “ஷைஇன்’ என்று தான் வாசிக்கவும், எழுதவும் வேண்டும்.

18:14 வசனத்தில் “நத்வுவ’ என்று எழுதுவதற்குப் பதிலாக “நத்வுவா’ என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. இதை “நத்வுவ’ என்று தான் வாசிக்கவும், எழுதவும் வேண்டும்.

எ “லாகின்ன’ என்ற சொல்லை 18:38 வசனத்தில் “லாகின்னா’ என்று பிழையாக எழுதியுள்ளனர். இதை “லாகின்ன’ என்று தான் எழுதவும், வாசிக்கவும் வேண்டும்.

13:30 வசனத்தில் “லி தத்லுவா’ என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் இதை “லி தத்லுவ’ என்று தான் எழுதவும், வாசிக்கவும் வேண்டும்.

27:21 வசனத்தில் “லா அத் பஹன்னஹு’ என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. இதை “ல அத்பஹன்னஹு’ என்று தான் எழுதவும், வாசிக்கவும் வேண்டும்.

47:4 வசனத்தில் “லியப்லுவா’ என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் இதை “லி யப்லுவ’ என்று தான் வாசிக்கவும் எழுதவும் வேண்டும்.

59:13 வசனத்தில் “லா அன்தும்’ என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் இதை “ல அன்தும்’ என்று தான் எழுதவும், வாசிக்கவும் வேண்டும்.

எ “கவாரீர’ என்ற சொல் 76:16, 27:44 ஆகிய வசனங்களில் சரியாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் 76:15 வசனத்தில் “கவாரீரா’ என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. இதை “கவாரீர’ என்று தான் வாசிக்கவும், எழுதவும் வேண்டும்.

எ “ஸலாஸில’ என்ற சொல் 76:4 வசனத்தில் “ஸலாஸிலா’ என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. இதை “ஸலாஸில’ என்று தான் வாசிக்கவும், எழுதவும் வேண்டும்.

47:31 வசனத்தில் “நப்லுவா’ என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் இதை “நப்லுவ’ என்று தான் வாசிக்கவும், எழுதவும் வேண்டும்.

எ “அல்ஐகத்’ என்ற சொல் 15:78, 50:14 ஆகிய வசனங்களில் முறைப்படி எழுதப்பட்டுள்ளது. ஆனால் 26:176, 38:13 வசனங்களில் அலிபை விட்டு விட்டு பிழையாக எழுதியுள்ளனர்.

எ “ஷுரகாவு’ என்ற சொல் 4:12, 7:190, 39:29 ஆகிய வசனங்களில் சரியாக எழுதப்பட்டுள்ளது. இந்தச் சொல் 6:94, 42:21 ஆகிய வசனங்களில் இறுதியில் ஒரு அலிப் பிழையாக எழுதப்பட்டுள்ளது. மேலும் “வாவ்’ என்ற எழுத்தும் இதில் பிழையாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

எ “லுஅஃபாவு’ என்ற சொல் 2:266 வசனத்தில் சரியாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் 14:21, 40:47 ஆகிய வசனங்களில் இறுதியில் ஒரு அலிப் பிழையாக எழுதப்பட்டுள்ளது. மேலும் “வாவ்’ என்ற எழுத்தும் இதில் பிழையாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

எ “நபயி’ என்ற சொல் 6:67, 28:3, 76:2 ஆகிய வசனங்களில் சரியாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் 6:34 வசனத்தில் இறுதியில் “யா’ எனும் எழுத்து பிழையாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

எ “வராயி’ என்ற சொல் 2:101, 11:71, 33:53 ஆகிய வசனங்களில் சரியாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் 42:51 வசனத்தில் இறுதியில் “யா’ எனும் எழுத்து பிழையாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

எ “நஷாவு’ என்ற சொல் 8:31, 6:83 ஆகிய வசனங்களில் சரியாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் 11:87 வசனத்தில் இறுதியில் “அலிப்’ எனும் எழுத்து பிழையாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

எ என்ற சொல் 13:26, 17:30, 28:82, 29:62, 30:37, 34:36, 34:39, 39:52, 42:12, ஆகிய வசனங்களில் என்று சரியாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் 2:245வது வசனத்தில் மட்டும் இச்சொல் என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. ஸீன்’ என்ற எழுத்தை எழுதுவதற்குப் பதிலாக ‘ஸாத்’ என்ற எழுத்தை எழுதியுள்ளனர். ஸாத் என்ற எழுத்தின் மீது ஒரு சிறிய அளவில் ஸீனை எழுதி அடையாளம் காட்டியுள்ளனர்.

எ என்ற சொல்லை 2:247 வசனத்தில் சரியாக எழுதியுள்ளனர். ஆனால் 7:69 வசனத்தில் என்று பிழையாக எழுதியுள்ளனர். என்று ‘ஸீன்’ எழுதுவதற்குப் பதிலாக என்று ‘ஸாத்’ எழுதியுள்ளனர். இரண்டும் ஏறக்குறைய நெருக்கமான உச்சரிப்பைக் கொண்ட எழுத்துக்களாக இருப்பதால் இந்தத் தவறு நேர்ந்திருக்கலாம்.

இது போல் இன்னும் சில சிறிய அளவிலான எழுத்துப் பிழைகளைத் தவிர மற்ற அனைத்தும் மூலப் பிரதியில் சரியாகவே எழுதப்பட்டுள்ளன. இந்தப் பிழைகளும் கூட பாரதூரமான பிழைகள் இல்லை; சாதாரணமாக மனிதர்களுக்கு ஏற்படும் பிழைகள் தான்.

எழுத்தர்கள் பிழை விட்டிருப்பது திருக்குர்ஆனின் பாதுகாப்புத் தன்மையைச் சிறிதும் பாதிக்காது. ஏனெனில் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து எழுத்து வடிவில் அருளப்படவில்லை. ஒலி வடிவமாகத்தான் அருளப்பட்டது. ஒலி வடிவமாக அருளப்பட்டதை எழுத்து வடிவமாக ஆக்கியது மனிதர்கள் தான். எனவே எழுத்துக்களில் ஒன்றிரண்டு பிழைகள் இருப்பதற்கு, மனிதர்களின் செயல் என்பது தான் காரணம். இறைவனே எழுதித் தந்திருந்தால் எழுத்திலும் பிழை ஏற்பட்டிருக்காது.

எழுத்தர்கள் இவ்வாறு பிழையாக எழுதியுள்ளனர் என்ற கருத்தை 1200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மொழியியல் வல்லுனரும், மார்க்க மேதையுமான இப்னு குதைபா, இப்னு கல்தூன், பாகில்லானி, உஸ்புஹானி உள்ளிட்ட பல அறிஞர்கள் கூறியுள்ளனர். மேலும் எழுத்தர்கள் பிழையாக எழுதியுள்ளதால் திருக்குர்ஆனுடைய பாதுகாப்புத் தன்மைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஏனெனில் திருக்குர்ஆன் ஒலி வடிவமாகத் தான் அருளப்பட்டது. எழுத்து வடிவில் அல்ல எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

எனவே மனிதர்களால் ஏற்பட்ட இந்தத் தவறுகளை நாம் சுட்டிக் காட்டுவதால், திருக்குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்று ஆகிவிடாது. திருக்குர்ஆன் அதன் ஒலி வடிவத்தில் பாதுகாக்கப்பட்டே இருக்கின்றது. அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

இதனால் தான் திருக்குர்ஆன் பாதுகாக்கப்படுவதைப் பற்றிப் பேசும் போது “கல்வியாளரின் உள்ளங்களில் இது பாதுகாக்கப்படுகிறது” என்று 29:49 வசனம் குறிப்பிடுகிறது.

தவறாக எழுதப்பட்ட இந்த வசனங்களை மனனம் செய்தவர்கள் சரியாகத் தான் மனனம் செய்தார்கள். மனனம் செய்வதிலே எந்தக் குழப்பமும் வரவில்லை. தவறாக எழுதப்பட்ட பிறகும் கூட உலக முஸ்லிம்கள் அனைவரும் வாசிக்கும்போது சரியாகவே வாசிக்கிறார்கள்.

இந்தச் சிறிய எழுத்துப் பிழைகளை அப்படியே தக்க வைத்திருப்பது திருக்குர்ஆனை அல்லாஹ் பாதுகாக்கிறான் என்பதற்கான ஆதாரமாக அமைந்துள்ளது.

எப்படி எழுதப்பட்டுள்ளதோ அப்படி வாசிப்பதும், அப்படி மனப்பாடம் செய்வதும் தான் மனிதர்களின் இயல்பாகும். திருக்குர்ஆனை எழுதியவர்கள் சில வார்த்தைகளைப் பிழையாக எழுதியுள்ளதால் எழுதியபடி தான் வாசித்துக் கொண்டு இருக்க வேன்டும். பிழையாக எழுதியதை அலட்சியம் செய்து விட்டு எந்த ஒலி வடிவில் அருளப்பட்டதோ அந்த ஒலி வடிவில் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும், திருக்குர்ஆனை வாசித்து வருவது மிகப்பெரும் அற்புதம் என்றே கூறலாம்.

இதனால் தான் ஊருக்கு ஒரு திருக்குர்ஆன், காலத்திற்கு ஏற்ப ஒரு திருக்குர்ஆன் என்று திருக்குர்ஆனில் எந்த வேறுபாடும் இல்லாமல் உலகம் முழுவதும் ஒரே குர்ஆனாக, எந்தவித மாறுதலும் இல்லாமல் 14 நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு ஓதப்பட்டு வருவதைப் பார்க்கிறோம்.

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...