ஹிஜ்ரி ஆண்டு ஆங்கில ஆண்டு இவற்றில் எதை நாம் பயன்படுத்த வேண்டும்?

(வீடியோவை எழுத்து வடிவில் தயாரித்தவர் கோவை இம்ரான்)

விஞ்ஞான அடிப்படையில் ஒரு வருடத்திற்கு 365 நாட்கள் வருகின்றது. ஆனால் நம் இஸ்லாமிய அடிப்படையில் மாதத்திற்கு 29 அல்லது 30 நாட்கள் என்ற கணக்கில் 12 மாதங்களுக்கு 360 அல்லது 355 நாட்கள் மட்டுமே வருகின்றது. இந்தக் கணக்கீடுகளில் எது சரியானது? இதற்கு விஞ்ஞான மற்றும் மார்க்க அடிப்படையில் பதில் அளிக்கவும்!

முஹம்மது நூஹு,  எலந்தங்குடி, மயிலாடுதுறை.

பதில்:

சந்திரனின் சுழற்சியின் அடிப்படையில் ஒரு மாதம் என்பது 29 ½ நாட்கள் ஆகும். அரை நாள் என்பதைக் கணக்கில் எடுக்க முடியாததால் ஒரு மாதத்திற்கு 30 அல்லது 29 நாட்கள் என்று மாறி மாறி வருகின்றது. இந்தச் சந்திரக் கணக்கின் படி பார்த்தால் ஒரு வருடத்திற்கு 355 நாட்கள் எடுக்கின்றன. இது ஒரு வகை.

சூரியக் கணக்கின் அடிப்படையில் பார்த்தால் பூமி, சூரியனைச் சுற்றி வருவதற்கு 365 ¼ நாட்கள் எடுத்துக்கொள்கின்றது. இந்த 365 நாட்களுடன் ஒரு நாளின் கால்பகுதியைச் சேர்க்க முடியாது என்பதால் தான் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பிப்ரவரி மாதத்திற்கு வழமையான 28 நாட்களுடன், ஒரு நாள் கூடுதலாகச் சேர்த்து 29 நாட்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆக, சூரியக் கணக்கின் அடிப்படையில் ஒரு வருடத்திற்கு தோராயமாக 365 நாட்கள் என்று கணக்கிடுகின்றோம்.

இந்தச் சூரியன் மற்றும் சந்திரக் கணக்கை ஒப்பிடும்போது வருடத்திற்கு 10 நாட்கள் வித்தியாசப்படுகின்றது. இது பலருக்கும் குழப்பமாகத் தோன்றலாம். ஆனால் இதில் எந்தக் குழப்பமும் இல்லை.

ஏனென்றால் மாதத்தைக் கணக்கிடுவதற்கு அல்லாஹ் நமக்கு பிறையைக் காலம் காட்டியாக ஆக்கியுள்ளான். பிறையில் தான் நாட்களைக் கணக்கிடக்கூடிய அம்சம் இருக்கின்றது. ஒவ்வொரு நாளும் பிறையின் அளவு பார்வைக்கு வித்தியாசப்படும். முதல் பிறையைப் போன்று இரண்டாம் பிறை இருக்காது. இரண்டாம் பிறையைப் போன்று ஐந்தாம் பிறை இருக்காது. ஒவ்வொரு நாளும் அது வளர்ந்து கொண்டே இருக்கும். இதனைத் தான் ‘வளர்பிறை’ என்று சொல்கின்றோம். 14 ஆம் நாளில் பிறை முழு தோற்றத்துடன் காணப்படும்.

அதற்குப் பிறகு ஒவ்வொரு நாளும் அப்படியே அளவில் குறைந்து கொண்டே வரும். இதனை ‘தேய்பிறை’ என்று சொல்கின்றோம்.

ஆனால் சூரியனில் இந்த நிலை இல்லை. எல்லா நாட்களிலும் சூரியன் ஒரே மாதிரியாகத் தான் காணப்படும். அது நாளுக்கு நாள் வித்தியாசப்படாது.

பிறையில் இந்த மாறுதல் வருவதால் தான் அது நாட்களை எண்ணுவதற்கு ஏதுவாக இருக்கின்றது. எனவே தான், பிறையின் தோற்றத்தை வைத்து அது எந்த நாளுக்குரியது என்பதைக் கணிக்க முடிகின்றது. ஆனால் சூரியனை அது எந்த நாளுக்குரியது என்பதைக் கணிக்க முடியாது.

இந்தச் சூரியன் மற்றும் சந்திரனைப் பற்றி இறைவன் கூறுகின்றான் :

هُوَ الَّذِي جَعَلَ الشَّمْسَ ضِيَاءً وَالْقَمَرَ نُورًا وَقَدَّرَهُ مَنَازِلَ لِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ وَالْحِسَابَ ۚ مَا خَلَقَ اللَّهُ ذَ‌ٰلِكَ إِلَّا بِالْحَقِّ ۚ يُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ

ஆண்டுகளின் எண்ணிக்கையையும், (காலக்) கணக்கையும் நீங்கள் அறிந்துக் கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும், சந்திரனை ஒளியாகவும் அமைத்தான். சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தினான். தக்க காரணத்துடன் தான் அல்லாஹ் இதைப் படைத்துள்ளான். அறிகின்ற சமுதாயத்திற்கு வசனங்களை அவன் தெளிவாக்குகிறான்.

திருக்குர்ஆன்  10:5

وَجَعَلْنَا اللَّيْلَ وَالنَّهَارَ آيَتَيْنِ ۖ فَمَحَوْنَا آيَةَ اللَّيْلِ وَجَعَلْنَا آيَةَ النَّهَارِ مُبْصِرَةً لِّتَبْتَغُوا فَضْلًا مِّن رَّبِّكُمْ وَلِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ وَالْحِسَابَ ۚ وَكُلَّ شَيْءٍ فَصَّلْنَاهُ تَفْصِيلًا

இரவையும், பகலையும் இரண்டு சான்றுகளாக்கினோம். உங்கள் இறைவனிடமிருந்து அருளைத் தேடவும், ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக் கணக்கையும் நீங்கள் அறிந்துக் கொள்வதற்காகவும் இரவின் சான்றை ஒளியிழக்கச் செய்து, பகலின் சான்றை வெளிச்சமாக்கினோம். ஒவ்வொரு பொருளையும் நன்கு தெளிவுபடுத்தியுள்ளோம்.

திருக்குர்ஆன்  17:12

إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِندَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ

வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும்.

திருக்குர்ஆன்  9:36

இந்த வசனங்களின் அடிப்படையில், இறைவனின் படைப்புகளான சூரியன், சந்திரன் இரண்டுமே கணக்கிடத் தகுந்தவை தாம். எனவே சூரியனை வைத்தும் வருடத்தைக் கணக்கிடலாம்; சந்திரனை வைத்தும் வருடத்தைக் கணக்கிடலாம்.

குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக சூரிய ஆண்டு, சந்திர ஆண்டு என்று வேறுபடுத்தி நாம்  சொல்லிக் கொள்ளலாம்.

வணக்க வழிபாடுகளைப் பொருத்தவரை,  அன்றாடத் தொழுகை நேரங்கள், நோன்புக் காலங்களில் ஸஹ்ருடைய நேரம் ஆகியவற்றை அறிந்து கொள்வதற்கு சூரியனையும், நோன்புக்கான மாதத்தைக் கணக்கிடுவது, இத்தா, போர் செய்ய தடைசெய்யப்பட்ட காலங்கள் ஆகியவற்றைக் கணக்கிடுவதற்கு சந்திரனையும் கணக்கீட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால், உலக நடைமுறையைப் பார்க்கும் போது உலகம் முழுவதும் ஏன் அரபு நாடுகளில் கூட சூரியக் கணக்கை அடிப்படையாக வைத்தே நிறுவனங்களின் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பது, அரசு விடுமுறை நாட்களை அறிவிப்பது, கல்வி நிறுவனங்களில் பாட நாட்களை நிர்ணயிப்பது போன்றவற்றை முடிவு செய்கின்றனர்.

பெரும்பாலும், சூரியனின் அடிப்படையில் கணக்கீடு செய்வதை முஸ்லிம்களாகிய நாம் தவிர்த்துக் கொண்டதால் அது ‘கிறிஸ்தவர்களின் கண்டுபிடிப்பு’ என்று தவறாக விளங்கி வைத்திருக்கின்றோம். ஆனால், சூரியன், சந்திரன் இரண்டுமே இறைவனால் காலம் காட்டுவதற்காக படைக்கப்பட்டவை தாம். அவை இரண்டின்  அடிப்படையில் கணக்கிடப்படுவதும் இஸ்லாமிய ஆண்டுகள் தாம். நம் வசதிக்குத் தகுந்தவாறு இரண்டையுமே காலக்கணக்கீட்டிற்கு நாம் பயன்படுத்தலாம்.

الشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍ

சூரியனும், சந்திரனும் கணக்கின் படி இயங்குகின்றன.

திருக்குர்ஆன்  55:5

صحيح البخاري مشكول (4/ 108)
3202 – حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الشَّمْسَ وَالقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ لاَ يَخْسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلاَ لِحَيَاتِهِ، فَإِذَا رَأَيْتُمْ ذَلِكَ فَاذْكُرُوا اللَّهَ»

“சூரியனும், சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரண்டு சான்றுகளாகும்” என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி)

புகாரி : 3202

எனவே சூரிய ஆண்டிற்கும், சந்திர ஆண்டிற்கும் இடையே வருடத்திற்கு பத்து நாட்கள் வித்தியாசம் இருந்தாலும் எதைப் பயன்படுத்தினாலும் அது அல்லாஹ்வின் பார்வையில் குற்றம் ஆகாது.

சிலர் ஹிஜ்ரி ஆண்டின் அடிப்படையில்  தான் கணக்கிட வேண்டும் என்று தவறாக விளங்கி, அதன் அடிப்படையில் செயல்பட்டும் வருகின்றனர். ஹிஜ்ரி ஆண்டின் அடிப்படையிலான கணக்கீடு என்பதே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு உருவாக்கப்பட்டது தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ‘யானை ஆண்டு’ என்பது தான் மக்களிடையே பயன்படுத்தப்பட்டு வந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின், இஸ்லாமிய ஆண்டாக எதை வைத்துக் கொள்ளலாம் என்று உமர் (ரலி) அவர்களின் காலத்தில் ஆலோசனை செய்யப்பட்டு, ஹிஜ்ரத்தை அடிப்படையாகக் கொண்டு,  முதல் ஆண்டைக் கணக்கிட்டுக் கொள்ளலாம் என்று முடிவு செய்தனர். எனவே, ஹிஜ்ரி ஆண்டு என்பதற்கும், இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

சூரிய ஆண்டையும், சந்திர ஆண்டையும் வித்தியாசப்படுத்தி அறிந்து கொண்டால் அதில் எவ்விதமான குழப்பமும் இல்லை. உதாரணமாக, ஒருவருடைய வயதைக் குறிப்பிடும் போது 60 என்று சொன்னால், உலக நடைமுறைப்படி எல்லோருமே சூரியக் கணக்கின் அடிப்படையில் தான் அதனை எடுத்துக் கொள்வார்கள். நாம் அதனைச் சந்திரக்கணக்கின் அடிப்படையில் சொல்லும்போது வருடத்திற்கு 10 நாட்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இந்த வித்தியாசத்தைப் புரிந்துக் கொண்டால் இதில் குழம்புவதற்கு எதுவும் இல்லை.

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...

நாமே தீர்மானிக்கலாமா?

நாமே தீர்மானிக்கலாமா? பிறை சம்பந்தமான ஆதாரங்களில் நாமே தீர்மானிக்கலாம் என்ற கருத்திலமைந்த ஹதீஸும் முக்கியமான ஆதாரமாக அமைந்துள்ளது. அந்த ஹதீஸ் இது தான். سنن الترمذي 697 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: ...

அரஃபா நோன்பு

அரஃபா நோன்பு சவூதி அரசாங்கம் எப்போது தலைப் பிறை என்று அறிவிக்கிறதோ அது தான் உலகத்துக்கே தலைப் பிறை என்ற கருத்துடையோர் அரஃபா நோன்பை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். ஹஜ்ஜுப் பெருநாளைக்கு முந்திய நாள் அரஃபா ...

கிரகணத் தொழுகை

கிரகணத் தொழுகை தலைப்பிறை பற்றி முடிவு செய்வதற்கான ஆதாரங்களில் சூரிய சந்திர கிரகணங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. صحيح البخاري 1042 – حَدَّثَنَا أَصْبَغُ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرٌو، ...

நீட்டப்படும் மாதங்கள் 

நீட்டப்படும் மாதங்கள் பிறையைக் கண்களால் பார்த்துத் தான் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்பதை மற்றொரு ஹதீசும் கூறுகிறது. அந்த ஹதீஸ் இது தான். صحيح مسلم 2582 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ ...

மேக மூட்டத்தின் போது…

மேக மூட்டத்தின் போது… பிறை பார்த்தல் குறித்த அடிப்படையான ஆதாரங்களாக சில ஹதீஸ்கள் உள்ளன. அந்த ஹதீஸ்கள் ஏறத்தாழ ஒரே மாதிரியான கருத்தில் அமைந்தவை என்றாலும் சின்னச் சின்ன வேறுபாடுகள் அவற்றுக்கிடையே உள்ளதால் அவற்றை ...