முஸ்லிம்களின் இட ஒதுக்கீடுக்கு நீதிமன்ற வழக்கு தடையாகுமா?

? தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் மசோதாவை நிறைவேற்றி அதை இந்திய அரசியல் சாசனத்தில் 9வது அட்டவணையிலும் சேர்க்கக் காரணமாக இருந்தது அதிமுக அரசு. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதன் மீதான தீர்ப்பு வந்த பிறகு முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்கான வாய்ப்புகள் பரிசீலிக்கப்படும். என முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்கும், அவர் கூறியிருப்பதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. இதற்கு விளக்கம் தேவை.

உ. முகமது அபுதாஹீர், கம்பம்

! முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தருவது கூடாது என்று ஏற்கனவே வெளிப்படையாக அவர் கருத்துத் தெரிவித்தார். இதற்காக நமது ஜமாத் சார்பில் முதல்வரைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் செய்து முஸ்லிம்களின் உணர்வை வெளிப்படுத்தினோம்.

அதன் பிறகு இந்த விஷயத்தில் அவரது கருத்தில் மாற்றம் ஏற்பட்டதாக அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் மூலம் நமக்கு தகவல்கள் கிடைத்தன.

வருகின்ற பொதுத்தேர்தலுக்கு முன்னால் நிச்சயம் இடஒதுக்கீடு வழங்குவார் என்ற நம்பிக்கை இதனால் நமக்கு ஏற்பட்டது.

ஜனவரி-29 பேரணி அநேகமாக ஜெயலலிதா இடஒதுக்கீடு அளித்ததற்கு நன்றி தெரிவிக்கும் பேரணியாக ஆகலாம் என்ற அளவுக்கு நமக்கு நம்பிக்கை ஊட்டினார்கள்.

ஆனால் சென்ற வாரம் ஜெயலலிதா செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி அவரது கருத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றி புரிய வைத்துவிட்டது.

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க மாட்டேன் என்பதை நேரடியாகச் சொல்லாமல் அதை மறைமுகமாகச் சொல்லியிருக்கிறார் என்பதைத் தவிர அவரது கருத்தில் எந்த மாற்றமும் தெரியவில்லை.

உச்சநீதிமன்றத்தில் 69 சதவிகித இடஒதுக்கீடு சம்பந்தமான வழக்கு இருப்பதால் அது குறித்த தீர்ப்பு வந்ததும் பரிசீலிப்பதாக அவர் அந்தப் பேட்டியில் குறிப்பிடுகிறார்.

இதற்கும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. 69 சதவிகிதத்துக்கு அதிகமாக மேலும் இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்காக அதிகப்படுத்தினால் அது உச்சநீதிமன்றத்தை அவமதித்ததாக ஆகும்.

முஸ்லிம் சமுதாயத்தின் கோரிக்கை அதுவல்ல. ஏற்கனவே உள்ள 69 சதவிகித இடஒதுக்கீட்டில் பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோருக்கு என்று இடஒதுக்கீடு உள்ளது. இதில் சுமார் 200-க்கும் அதிகமான சாதிகளைச் சேர்த்து முஸ்லிம்களையும் அதில் ஒரு சாதியாக்கியுள்ளனர். இதனால் பிற்பட்டோர் மற்றும்மிகவும் பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டின் பலன் முஸ்லிம்களுக்குக் கிடைக்கவில்லை.

எனவே பிற்பட்டோருக்காக உள்ள பட்டியலில் முஸ்லிம்களுக்கு உரிய பங்கை தனியாகப் பிரித்து வழங்குங்கள் என்பது தான் சமுதாயத்தின் கோரிக்கை. இடஒதுக்கீட்டின் மொத்த அளவு 69 சதவிகிதத்தை விட இதனால் அதிகரிக்காது. நீதிமன்றத்தில் உள்ள வழக்கை எந்த வகையிலும் இது பாதிக்காது.

அவ்வாறு இருந்தும் அவர் இதைக் காரணமாகக் காட்டியிருப்பது முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தர முடியாது என்ற கருத்தில் சொன்னதாகவே எடுத்துக் கொள்ள முடியும்.

ஒருவேளை 69 சதவிகித்துக்கு மேல் நாம் அதிகம் கேட்டதாக அவர் நினைத்துக் கொண்டு இவ்வாறு கூறியிருக்கலாமோ என்றும் நினைக்க முடியாது. ஏனெனில், ஏற்கனவே இதை சமுதாயத் தலைவர்களிடமும் அவர் கூறினார். நாங்கள் கேட்பது அதுவல்ல என்பது அவருக்கு மிகத் தெளிவாக விளக்கப்பட்டது. எனவே, சமுதாயத்தின் கோரிக்கை என்னவென்பது அவருக்கு நன்றாகத் தெரியும். தெரிந்து கொண்டே தான் அவர் இவ்வாறு சம்பந்தமில்லாத காரணத்தைக் கூறுகிறார்.

நீதிமன்றத்தில் அந்த வழக்கு பத்து வருடங்களாவது நடக்கும். அதைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு அளிக்காமலேயே, அளிக்க எனக்கு விருப்பம் உள்ளது என்று சொல்லி அப்பாவி முஸ்லிம்களை ஏமாற்றலாம் என்று அவர் நினைக்கிறாரா? அல்லது அப்படி யாராவது அவருக்கு ஆலோசனை சொல்லியிருக்கிறார்களா என்பது தெரியவில்லை.

முஸ்லிம்களே! உங்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க எனக்கு ஆசைதான்! என்ன செய்ய நீதிமன்றம் குறுக்கே நிற்கிறதே?” என்று கூறி முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுவிட முடியும் என்று அவர் நினைத்தால் அவர் நிச்சயம் ஏமாந்து போவார். எம்.ஜி.ஆர் காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்களைப் போல் இன்றைய முஸ்லிம்கள் இல்லை. இப்போது முஸ்லிம்கள் விழிப்புணர்வுடன் உள்ளனர்.

தாங்கள் கேட்கும் இடஒதுக்கீடு என்ன என்பதன் பொருள் முஸ்லிம்களுக்கு நன்றாகவே தெரியும். மேலும், அவர் கூறுவது பொருந்தாத- ஏற்க முடியாத காரணம் என்பதை தவ்ஹீத் ஜமாஅத் போன்ற இயக்கங்கள் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும்.

எனவே, இடஒதுக்கீடு அளிக்காமல் முஸ்லிம்கள் ஓட்டை அள்ளலாம் என்று அவர் நினைத்தால், அல்லது முஸ்லிம் தலைவர்கள் சிலரைச் சரிக்கட்டிவிட்டால் முஸ்லிம்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் நினைத்தால் – அவரையும், அந்தத் தலைவர்களையும் முஸ்லிம்கள் அறவே நிராகரிப்பார்கள் என்பதை ஜெயலலிதாவுக்குச் சொல்லி வைக்கிறோம்.

முஸ்லிம்கள் ஓட்டு எனக்குத் தேவையில்லை என்று அவர் நினைத்தால் இதுபோல் பொருந்தாத காரணத்தைக் கூறிக் கொள்ளட்டும்.

முஸ்லிம்கள் ஓட்டு வேண்டும் என்றால் இடஒதுக்கீடு அளிப்பதைத் தவிர வேறு எதன் மூலமும் அதைப் பெற முடியாது என்பதையும் அவருக்கு நினைவூட்டுகிறோம்.

இந்த நேரத்தில் இன்னொன்றையும் நாம் நினைவுபடுத்துகிறோம். ஜனவரி-29 பேரணியை இன்னும் வீரியத்துடன் முழுமூச்சாக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற நிர்ப்பந்தம் சமுதாயத்துக்கு ஏற்பட்டுள்ளது.

இது ஒட்டுமொத்த முஸ்லிம்களின் கருத்து என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்தால் தான் இந்தக் கோரிக்கையை வென்றெடுக்க முடியும். அதன் மூலம் தான் முஸ்லிம்கள் விழிப்போடு இருப்பதை ஆள்வோருக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் உணர்த்த முடியும்.

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...