இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

மாடுகளைத் துன்புறுத்துதல்:

ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும்.

வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும். ஆண் குத்துச் சண்டை வீரரை பெண் வீரருடன் மோத விடுவதில்லை. குறிப்பிட்டை எடை கொண்டவரை அவரை விட குறைந்த எடை உள்ளவருடன் மோத விடுவதில்லை. போட்டியிடும் இருவரும் சமநிலையில் இருந்தால் தான் அது வீர விளையாட்டு

ஒரு மாட்டை மனிதனையும் மோதவிடுவது கூட சமநிலை இல்லை எனும் போது ஒரு மாட்டை நூற்றுக்கணக்கானோர் பாய்ந்து தாக்குவது எப்படி சமநிலையாகும்? இது எப்படி வீரமாகும்? இது மிருகவதையாகத் தான் பார்க்கப்பாட் வேண்டும்.

மேலும் ஜல்லிக்க்கட்டுக்காக மேலும் பல கொடுமைகளும் நிகழ்த்தப்படுகின்றன.  மாடுகளின் வாலை வாயால் கடித்து அதற்கு வெறியேற்றிவிடுதல், வெறியை அதிகப்படுத்த மாடுகளின் வாயில் சாராயத்தை ஊற்றுதல் போன்ற செயல்களும் அதில் கலந்துள்ளதால் இத்தகைய கொடுமைகளை இஸ்லாம் ஒரு போதும் அங்கீகரிக்கவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகங்களுக்கு மத்தியில் ஓட்டப் பந்தயம் வைத்துள்ளார்கள்; குதிரையேற்றத்தைக் கற்றுக் கொடுக்கச் சொல்லியுள்ளார்கள்; அம்பெறிந்து விளையாடும் போட்டிகளை ஊக்கப்படுத்தியுள்ளார்கள்; மல்யுத்தப் போட்டிகளை ஆதரித்துள்ளார்கள்; இவை எல்லாம் சமநிலையில் அமைந்த வீர விளையாட்டுக்களாகும்

நபிகள் நாயகம் நடத்தியது ஒட்டகங்களுக்கும் ஒட்டகங்களுக்கும் இடையே வைக்கப்பட்ட போட்டி. மாடுகளை ஓடவிட்டு அதை 100 பேர் சேர்ந்து அடக்குவது வேறாகும். விலங்குகளைத் துன்புறுத்துவதை நபிகளார் தடுத்துள்ளார்கள். அந்த விலங்கை அறுக்கும் போது கூட கூர்மையான ஆயுதங்களால் தான் அதை அறுக்க வேண்டும்.

குட்டிக்கு பால் கொடுக்கும் நிலையில் உள்ள விலங்குகளை அறுக்கக் கூடாது; பூனையை பட்டினி போட்ட பெண்ணுக்கு நரக தண்டனை வழங்கப்படும்; பறவைக் குஞ்சுளை அதன் தாயிடத்தில் இருந்து பிரிக்கக்கூடாது; மிருகங்களை பட்டினி போட்டு வதைக்கக் கூடாது என்றெல்லாம் நபிகளார் எச்சரித்துள்ள நிலையில் மாடுகளின் வாலைக் கடித்து குதறுவதையும், மாடுகளை துன்புறுத்துவதையும், அவைகளைப் பாடாய்ப்படுத்துவதையும் இஸ்லாம் எப்படி அங்கீகரிக்கும்?

மேலும் அம்பெறிந்து பயிற்சி எடுப்பதில் நாம் குறிபார்க்கும் போது கூட உயிருள்ள பிராணிகளைக் குறிபார்த்து அம்பெறிந்து பயிற்சி எடுப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்துள்ளார்கள். நாம் அந்த விலங்குகளின் மீது ஏறிப் பயணிப்பது என்பது நமக்குத் தேவையான ஒன்று; அவசியத்தின் காரணமாக அதை நாம் செய்கிறோம்.

தேவையில்லாமல் அதைக் குறிவைத்து அம்பெறிந்து அந்த அம்பு அந்த விலங்குமேல் பட்டு அவை துன்புறுவதை அல்லாஹ்வுடைய தூதர் ஏற்றுக் கொள்ளவில்லை.

மாடுகளை துன்புறுத்துபவர்கள் உழவுத்தொழிலுக்கு அதைப் பயன்படுத்தத்தானே செய்கின்றோம்; அப்போது அதைத் துன்புறுத்துவது மட்டும் நியாயமா எனக் கேள்வி எழுப்புகின்றனர். நாம் அதற்கு ஒரு வேலை கொடுப்பது என்பது வேறு; அதை தேவையில்லாமல் துன்புறுத்துவது என்பது வேறு.

ஒரு தொழிலாளியிடம் ஒரு மாதம் முழுவதும் வேலை வாங்குகின்றோம்; அது மனித உரிமை மீறலாக யாரும் சொல்ல மாட்டார்கள்; அதே நேரத்தில் தேவையில்லாமல் அவரை நூறுபேர் கூட்டமாக அடித்து உதைத்தால் அதை மனித உரிமை மீறல் என்போம்; அதுபோலத் தான் இதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிருகங்களை எப்படி நாம் கையாள வேண்டும் என்று காட்டித்தந்துள்ளார்களோ, அந்த வழிமுறைகளுக்கு முற்றிலும் மாற்றமாக நடைபெறும் ஜல்லிக்கட்டை மேற்கண்ட காரணங்களால் முஸ்லிம்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும்.

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...