இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

மாடுகளைத் துன்புறுத்துதல்:

ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும்.

வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும். ஆண் குத்துச் சண்டை வீரரை பெண் வீரருடன் மோத விடுவதில்லை. குறிப்பிட்டை எடை கொண்டவரை அவரை விட குறைந்த எடை உள்ளவருடன் மோத விடுவதில்லை. போட்டியிடும் இருவரும் சமநிலையில் இருந்தால் தான் அது வீர விளையாட்டு

ஒரு மாட்டை மனிதனையும் மோதவிடுவது கூட சமநிலை இல்லை எனும் போது ஒரு மாட்டை நூற்றுக்கணக்கானோர் பாய்ந்து தாக்குவது எப்படி சமநிலையாகும்? இது எப்படி வீரமாகும்? இது மிருகவதையாகத் தான் பார்க்கப்பாட் வேண்டும்.

மேலும் ஜல்லிக்க்கட்டுக்காக மேலும் பல கொடுமைகளும் நிகழ்த்தப்படுகின்றன.  மாடுகளின் வாலை வாயால் கடித்து அதற்கு வெறியேற்றிவிடுதல், வெறியை அதிகப்படுத்த மாடுகளின் வாயில் சாராயத்தை ஊற்றுதல் போன்ற செயல்களும் அதில் கலந்துள்ளதால் இத்தகைய கொடுமைகளை இஸ்லாம் ஒரு போதும் அங்கீகரிக்கவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகங்களுக்கு மத்தியில் ஓட்டப் பந்தயம் வைத்துள்ளார்கள்; குதிரையேற்றத்தைக் கற்றுக் கொடுக்கச் சொல்லியுள்ளார்கள்; அம்பெறிந்து விளையாடும் போட்டிகளை ஊக்கப்படுத்தியுள்ளார்கள்; மல்யுத்தப் போட்டிகளை ஆதரித்துள்ளார்கள்; இவை எல்லாம் சமநிலையில் அமைந்த வீர விளையாட்டுக்களாகும்

நபிகள் நாயகம் நடத்தியது ஒட்டகங்களுக்கும் ஒட்டகங்களுக்கும் இடையே வைக்கப்பட்ட போட்டி. மாடுகளை ஓடவிட்டு அதை 100 பேர் சேர்ந்து அடக்குவது வேறாகும். விலங்குகளைத் துன்புறுத்துவதை நபிகளார் தடுத்துள்ளார்கள். அந்த விலங்கை அறுக்கும் போது கூட கூர்மையான ஆயுதங்களால் தான் அதை அறுக்க வேண்டும்.

குட்டிக்கு பால் கொடுக்கும் நிலையில் உள்ள விலங்குகளை அறுக்கக் கூடாது; பூனையை பட்டினி போட்ட பெண்ணுக்கு நரக தண்டனை வழங்கப்படும்; பறவைக் குஞ்சுளை அதன் தாயிடத்தில் இருந்து பிரிக்கக்கூடாது; மிருகங்களை பட்டினி போட்டு வதைக்கக் கூடாது என்றெல்லாம் நபிகளார் எச்சரித்துள்ள நிலையில் மாடுகளின் வாலைக் கடித்து குதறுவதையும், மாடுகளை துன்புறுத்துவதையும், அவைகளைப் பாடாய்ப்படுத்துவதையும் இஸ்லாம் எப்படி அங்கீகரிக்கும்?

மேலும் அம்பெறிந்து பயிற்சி எடுப்பதில் நாம் குறிபார்க்கும் போது கூட உயிருள்ள பிராணிகளைக் குறிபார்த்து அம்பெறிந்து பயிற்சி எடுப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்துள்ளார்கள். நாம் அந்த விலங்குகளின் மீது ஏறிப் பயணிப்பது என்பது நமக்குத் தேவையான ஒன்று; அவசியத்தின் காரணமாக அதை நாம் செய்கிறோம்.

தேவையில்லாமல் அதைக் குறிவைத்து அம்பெறிந்து அந்த அம்பு அந்த விலங்குமேல் பட்டு அவை துன்புறுவதை அல்லாஹ்வுடைய தூதர் ஏற்றுக் கொள்ளவில்லை.

மாடுகளை துன்புறுத்துபவர்கள் உழவுத்தொழிலுக்கு அதைப் பயன்படுத்தத்தானே செய்கின்றோம்; அப்போது அதைத் துன்புறுத்துவது மட்டும் நியாயமா எனக் கேள்வி எழுப்புகின்றனர். நாம் அதற்கு ஒரு வேலை கொடுப்பது என்பது வேறு; அதை தேவையில்லாமல் துன்புறுத்துவது என்பது வேறு.

ஒரு தொழிலாளியிடம் ஒரு மாதம் முழுவதும் வேலை வாங்குகின்றோம்; அது மனித உரிமை மீறலாக யாரும் சொல்ல மாட்டார்கள்; அதே நேரத்தில் தேவையில்லாமல் அவரை நூறுபேர் கூட்டமாக அடித்து உதைத்தால் அதை மனித உரிமை மீறல் என்போம்; அதுபோலத் தான் இதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிருகங்களை எப்படி நாம் கையாள வேண்டும் என்று காட்டித்தந்துள்ளார்களோ, அந்த வழிமுறைகளுக்கு முற்றிலும் மாற்றமாக நடைபெறும் ஜல்லிக்கட்டை மேற்கண்ட காரணங்களால் முஸ்லிம்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும்.

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...