ஜமாஅதுல் உலமா தலைவருக்கு பகிரங்கக் கடிதம்

காலம் சென்ற ரஹ்மத் எனும் மாத இதழின் ஆசிரியரும் அன்றைய தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் மாநிலத்தலைவருமான கலீல் ரஹ்மான் ரியாஜி அவர்களுடன் நாம் நடத்திய எழுத்துப் போரை ஆரம்ப கால கொள்கைவாதிகள் மறந்திருக்க மாட்டார்கள். அவரது கடுமையான எதிர்ப்பின் காரணமாகவே தவ்ஹீத் இயக்கம் இருப்பது அனைத்து முஸ்லிம்களுக்கும் தெரியக் காரணமாக இருந்தது.

மத்ஹபை எதிர்த்து நாம் பிரச்சாரம் செய்வதைக் கண்டு கொந்தளித்த கலீல் ரஹ்மான் ரியாஜி அவர்கள் தமது ரஹ்மத் இதழில் நமக்கு அளித்த பதில் தான் மக்களை விழிப்படையச் செய்தது. உதாரணமாக அபூ ஹனீபா இமாமின் பெயரால் உருவாக்கப்பட்டது ஹனபி மத்ஹப். ஆனால் அவர் எழுதிய எந்த நூலும் உலகில் இல்லை. அப்படியானால் ஹனபி மத்ஹபுக்கும் அபூஹனீபா இமாமுக்கும் என்ன சம்மந்தம் என்று நாம் கேட்ட போது கலீல் ரஹ்மான் ரியாஜி அவர்கள் அளித்த பதில் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அபூஹனீபா அவர்கள் ஏராளமான நூல்கள் எழுதினார்கள். ஆனால் அவற்றை எதிரிகள் எரித்து விட்டனர். ஆகவே இப்போது அபூ ஹனீபா இமாமின் நூல் உலகில் இல்லை என்று அவர் பதில் அளித்த போது தான் அபூஹனீபாவுக்கும் ஹனபி மத்ஹபுக்கும் சம்மந்தம் இல்லை என்பதை மக்கள் விளங்கிக் கொண்டனர்.

ஆதம் அலை அவர்கள் முதன் முதலில் ஜவ்வரிசி பயிரிட்டார்கள் என்று அவர் எழுதிய போது ஜவ்வரிசி பயிரிடும் பொருளா? தயாரிக்கப்படும் பொருளா என்று நாம் எழுப்பிய கேள்வி மக்களைச் சிந்திக்க வைத்தது. அது போல் அவரை நோக்கி நேயர் ஒருவர் எழுதிய கடிதத்தை அல்ஜன்னத் இதழில் நாம் வெளியிடோம். அதில் தவ்ஹீத் பிரச்சாரம் ஆரம்பக் கட்டத்தில் எவ்வாறு வீரியமாக இருந்தது என்ப்தை அறிந்து கொள்ள உதவும் என்பதால அதை இப்போது வெளியிடுகிறோம்.

பெருமதிப்பிற்குரிய ஜமாஅத்துல் உலமா தலைவர் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் .

ஒரு மாத இதழ் உங்ளுக்கு எழுதிய பகிரங்கக் கடிதத்தையும் அதற்கு தாங்கள் அளித்துள்ள பதிலையும் கண்டேன்.

எனக்குள்ள சில சந்தேகங்கள் பற்றியும் பகிரங்கமாக உங்களுக்குக் கடிதம் எழுதினால் முறையான விளக்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த மடல் வரைகிறேன். நான் இஸ்லாமிய மாத இதழ்கள் அனைத்தையும் படித்து அவற்றில் நல்லதை மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன்.

நீங்கள் அளித்துள்ள பதிலில் எனக்குப் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. அவற்றை நீஙகள் பகிரங்கமாகவே தீர்த்து வைத்தால் சமுதாயத்தில் நல்ல பயன் ஏற்படும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. ஜமாஅத்துல் உலமா சபையினரின் கருத்துக்கு எதிராகப் பிரச்சாரம் செய்பவர்களுக்கு நீஙகள் அளித்துள்ள பதிலையும் அதில் எனக்கு எழும் ஐயங்களையும் இந்தக் கடிதத்தில் நான் வரிசைப்படுத்தி உள்ளேன்.

சந்தேகம்-1

அரபு மொழியில் இலக்கணம், இலக்கியம், அணி இலக்கணம், கவியாக்கும் முறை இவையெல்லாம் தெரியாத காரணத்தால் அவர்கள் (தவ்ஹீத்வாதிகள்) புர்தா ஷரீப் மவ்லிது கிதாபுகளிலும் கூறப்பட்டுள்ள கவிதைகளுக்கு அர்த்தம் செய்யத் தெரியாது அனர்த்தப்படுத்திக் கொண்டிக்கின்றார்கள்.

என்று நீங்கள் உங்கள் எதிராளிகளைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளீர்கள். உங்கள் இரு சாராரில் யாருடைய அரபு மொழி அறிவு அதிகம் என்ற பிரச்சனை பற்றி நான் ஆராய விரும்பவில்லை . வருமானத்தைத் தருகின்ற துறையாக மவ்லிது இருப்பதால் தான் அதற்கு முதலிடம் தந்து வக்காலத்து வாங்கியிருக்கிறீர்கள் என்று உங்கள் எதிராளிரகள் கூறுவதைப் பற்றியும் நான் அலச விரும்பவில்லை.

நான் கேட்க விரும்புவது என்னவென்றால் உங்கள் எதிராளிகள் மவ்லிதுக்குத் தப்பான அர்த்தத்தைச் செய்து கொண்டு மவ்லிதை மறுப்பதாக நீங்கள் சுமத்திய குற்றச்சாட்டுக்கு ஏன் ஒரு ஆதாரத்தையும் காட்டாமல் விட்டுவிட்டீர்கள்? எந்தெந்த வரிகளுக்கு அவர்கள் தப்பர்த்தம் செய்து விட்டார்கள்? அதன் உண்மை அர்த்தம் என்ன? என்ற விபரங்களைத் தந்திருந்தால் என் போன்றவர்கள் தெளிவடையலாமே?

ஒரு ஆதாரமும் காட்டாமல் உங்கள் எதிராளிகள் தப்பர்த்தம் செய்து விட்டார்கள் என்பதை நம்புவது சிரமமாக இருக்கிறதே? விரிவாக அவர்கள் செய்துள்ள தப்பர்த்தங்களைப் பட்டியல் போட்டு அடையாளம் காட்டுவது உங்கள் கடமை அல்லவா? அதைச் செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

சந்தேகம்-2

அரபு நாடுகளில் ஊதியம் பெற்று அந்த ஊதியத்திற்குத் தன் கடமை நிறைவேற்றுவதற்காக அவர்களில் சிலர் கூறும் தப்பர்த்தங்களை இவர்கள் தமிழகத்திலும் பரப்ப முயலுகிறார்கள் என்று உங்கள் எதிராளிகள் மீது இரண்டாம் குற்றச் சாட்டைச் சுமத்தியுள்ளீர்கள்.

அரபு நாடுகளில் ஊதியம் பெறுகிறார்களா? இல்லையா என்ற சர்ச்சைக்கு நான் வரவில்லை. அரபு நாடுகளில் ஊதியம் வாங்குவதாக வைத்துக் கொண்டாலும் நீங்கள் தமிழ் நாட்டில் ஊதியம் பெறாமலா சேவை செய்கிறீர்கள் என்றும் நான் கேட்க மாட்டேன். கூட்டங்களில் பேசுவதற்கு 100, 500 என்று கட்டணம் பேசாமலா மார்க்கத்தைச் சொல்கிறீர்கள் என்றெல்லாம் கேட்க நான் விரும்பவில்லை.

நான் கேட்க விரும்புவது என்னவென்றால் உங்கள் எதிராளிகள் சொந்தமாக மவ்லிதுக்குத் தப்பர்த்தம் செய்யவில்லை. அரபு நாட்டு அறிஞர்கள் சிலர் கூறும் அர்த்தத்தையே கூறுகிறார்கள் என்று இதன் மூலம் ஒப்புக் கொள்கிறீர்கள்.

இந்தக் குற்றச் சாட்டு முதல் குற்றச் சாட்டை முற்றாக மறுக்கிறதே அது ஏன்? இது தான் என் கேள்வி.

உங்கள் எதிராளிக்கு அரபு மொழி ஞானம் இல்லாமல் தப்பர்த்தம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று முதல் சந்தேகத்தில் தெரிவித்துள்ளீர்கள். அவர்களுக்குத் தான் அரபு மொழி ஞானம் இல்லை என்பதை ஒப்புக் கொண்டாலும் அரபு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டு அதில் புலமையும் திறமையும் கொண்ட அரபு நாட்டு அறிஞர்களை விட நீங்களோ உங்கள் எதிராளிகளோ அந்த மொழி பற்றி அதிகம் அறிந்திருக்க முடியாது என்பது என் எண்ணம்.

அரபு நாட்டு அறிஞர்கள் கூறும் அர்த்தத்தை நாலு வார்த்தை அரபியில் பேச முடியாத தமிழ்நாட்டு அறிஞர்கள் தப்பு என்று கூறுவது சரியாகத் தெரியவில்லை. உங்கள் எதிராளிகளோ அரபு நாட்டு அறிஞர்களின் கூற்றைத் தான் எடுத்துச் சொல்வதாக நீங்கள் ஒப்புக் கொண்டு விட்டீர்கள். அப்படியே அரபு நாட்டு அறிஞர் பெருமக்களும் உங்கள் எதிராளியான உலமாக்களும் அரபு மொழிக்குச் சரியான அர்த்தம் தரும் அளவுக்கு ஞானம் இல்லாதவர்கள் என்று உரை கல்லில் உரசிப் பார்த்தால் உங்கள் அர்த்தத்தை விட உங்கள் எதிராளிகள் அர்த்தம் செய்வது தானே சரியாக இருக்க முடியும். இதைக் கொஞ்சம் விளக்குவீர்களா?

சந்தேகம்-3

இதற்குரிய விளக்கங்களை சம்பந்தப்பட்டவர்களிடம் எடுத்துச் சொல்லியும் எடுத்து விளக்கியும் தங்களின் அறியாமைமையை அறியாதிருக்கும் அவர்கள் மீண்டும் மீண்டும் மக்களைக் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று அடுத்தக் குற்றச் சாட்டை எழுதியுள்ளீர்கள்.

சம்பந்தப்பட்டவர்களிடம் அதற்குரிய விளக்கங்களை எடுத்துச் சொன்னதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். சம்பந்தப்பட்டவர்கள் என்றால் யார்? யார்? என்பதை நீங்கள் குறிப்பிட்டிருக்கலாமே? அதைத் தான் குறிப்பிடாவிட்டாலும் அவர்களுக்கு எடுத்து விளக்கிய விளக்கங்கள் எவை? எப்போது விளக்கினீர்கள்? என்ற விபரங்களை என் போன்றவர்கள் அறிந்து கொள்ள பகிரங்கப்படுத்தலாமே? குழம்பி நிற்பவர்கள் தெளிவு அடையலாமே செய்வீர்களா?

சந்தேகம் -4

திருக்குர்ஆன் ஆயத்துக்களுக்கு முன் பின் ஆயத்துக்களின் தொடரை விட்டுத் தனிமைப்படுத்தி திருக்குர்ஆன் விரிவுரையாளர்களான ஸஹாபாக்கள் முன்னோர்களால் அங்கீகரிக்கப்பட்ட விளக்கங்களுக்கு எதிர்மறையான கருத்துக்களை கூறும் இவர்கள் தாங்கள் தான் திருக்குர்ஆனுக்கு வாரிசுகளைப் போன்று பேசியும் எழுதியும் வருகிறார்கள் என்று எழுதியுள்ளீர்கள்.

திருக்குர்ஆனின் பல வசனங்களுக்கு நீங்கள் தான் முன் பின் தொடரை விட்டுவிட்டு அர்த்தம் செய்வதாக உங்கள் எதிராளிகள் கூறுகிறார்கள்.

உதாரணத்திற்கு 4;59 வசனத்தைப் பாதியோடு நிறுத்திக் கொள்வதாக அவர்கள் குறறம் சுமத்துகிறார்கள்.

ஸஹாபாக்களின் விரிவுரைகளை விட்டுவிட்டு பிற்காலத்தில் வந்தவர்களிடன் கருத்துக்களுக்கு நீங்கள் தான் முக்கியத்துவம் அளித்து விட்டீர்கள் என்று உங்கள் எதிராளிகள் குற்றம் சுமத்துகிறார்கள்.

உதாரணமாக நன்டு சாப்பிடலாம் என்ற விஷயத்தில் ஸஹாபாக்களின் கருத்தை விட்டுவிட்டு பின்னால் வந்தவர்களின் கருத்தை ஏற்றுக் கொண்டு விட்டீர்கள் என்று கூறுகிறார்கள். அது பற்றி நான் சந்தேகம் தெரிவிக்க விரும்பவில்லை.

நான் கேட்க விரும்புவது என்னவென்றால் உங்கள் எதிராளிகள் தங்கள் கூற்றுக்கு ஆதாரங்கள் எடுத்து வைத்தது போல் நீங்கள் உதாரணத்திற்கு ஒன்று கூட கூறவில்லையே அது ஏன்? மற்ற குற்றச் சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் கூறாதது போல் இதற்கும் கூறவில்லையே? என் போன்றவர்களுக்கு இதில் சந்தேகம் ஏற்படுகிறதே தீர்த்து வைப்பீர்களா?

சந்தேகம் -5

எனது வழிமுறையையும் எனது குலபாக்களின் வழி முறைகளையும் இறுக்கப் பிடித்துக் கொள்ளுங்கள் என்ற நபிமொழியை மறுத்து வருவதாக உங்கள் எதிராளிகள் மீது குறறம் சுமத்தியுள்ளீர்கள்.

நபிமொழியை மறுக்கக் கூடாது என்று தான் உங்கள் எதிராளிகள் பிரச்சாரம் செய்கின்றனர். இந்த நபிமொழியை எங்கே எப்போது மறுத்தார்கள் என்று விபரம் கூறினால் குழம்பிக் கிடக்கும் மக்கள் தெளிவு அடைவார்கள் அல்லவா? அதைச் செய்வீர்களா?

(இது பற்றி ஆக்கம் பார்க்க)

சந்தேகம் -6

எனது தோழர்கள் விண்மீன்களைப் போன்றவர்கள். அவர்களில் எவரைப் பின்பற்றினாலும் நேர் வழி பெறுவீர்கள் என்று ஹதீஸை இருட்டடிப்புச் செய்து………..

என்று குற்றம் சுமத்தியுள்ளீர்கள் உங்கள் எதிராளிகளோ அந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என்கிறார்களே இதன் உண்மை என்ன என்பதைத் தெளிவாக்கலாம் அல்லவா?

(ஆசிரியர் குறிப்பு: இந்த ஹதீஸ் எவ்வாறு இட்டுக் கட்டப்பட்டது என்பது பற்றி தனிக் கட்டுரை இந்த இதழில் பிரசுரமாகி உள்ளது)

அது இணைய தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது பார்க்க

 சந்தேகம் -7

நபிகள் நாயகம் ஸல் அவர்களின் சரித்திரம் உலக மக்களுக்குத் தெரிந்துவிட்டால் ததங்களின் தகிடு தத்தங்கள் வெளியாகிவிடும் என்பதற்காக மீலாது விழாக்களைப் புறக்கணித்து…………………….

என்று உங்கள் எதிராளிகளின் செயலுக்குக் காரணம் கற்பிக்கிறீர்கள். இந்த விஷயத்தில் நீங்கள் கூறுவதை நம்புவதற்கு எவருக்கும் சிரமமாகவே இருக்கும். மற்ற எந்தக் கூட்டங்களை விடவும் உங்கள் எதிராளிகள் நடத்தும் கூட்டங்களில் தான் நபி (ஸல்) அவர்களின் வரலாறு அதிகமாகக் கூறப்படுகிறது. அவர்களின் பொன் மொழிகள் அதிகமாகக் கூறப்படுவதும் உங்கள் எதிராளிகள் கூட்டங்களில் தான். உங்கள் அணியினரின் கூட்டங்களில் தனி நபர் துதியும் பெரியார்களின் அற்புதங்களும் தானே கூறப்படுகிறது. இப்படி ஒரு அவதூரை உங்களைப் போன்றவர்கள் கூறலாமா?

நபித் தோழர்களான ஸஹாபாக்களோ இமாம்களோ யாருடைய பிறந்தநாள் விழாவையும் கொண்டாடவில்லை என்ற காரணத்தினால் தானே அவர்கள் மீலாதை மறுப்பதாகக் கூறுகிறார்கள். நபித்தோழர்களோ இமாம்களோ மீலாது விழாக் கொண்டாட சொல்லி இருந்தால் அதை நீங்கள் தெளிவுபடுத்தலாம் அல்லவா? அதன் மூலம் உங்கள் எதிராளிகளை அடையாளம் காட்டலாம் அல்லவா?

 சந்தேகம் -8

போலீஸ் பாராவுடன் கொள்கைப் பிரச்சாரம் செய்யும் இவர்கள்………….

என்று அடுத்த குற்றச்சாட்டை எடுத்து வீசி இருக்கிறீர்கள். அந்த நிலையை ஏற்படுத்தியது யார்? கொல்லுங்கள் என்றெல்லாம் வன்முறையைத் தூண்டும் அளவுக்கு உங்கள் அணியினர் ரவுடித்தனமான பிரச்சாரம் செய்வது தானே இதற்குக் காரணம். உங்கள் எதிரணியினரின் பொறுப்பில் உள்ள பள்ளிவாசலையே அடித்து நொறுக்கித் தள்ளுங்கள் என்று கூட மக்கள் மத்தியில் பேசப்பட்டதே? கருத்தை கருத்தால் சந்திப்பதை விடுத்து வன்முறையைத் தூண்டிவிட்டுவிட்டு இந்த நிலையைத் தோற்றுவித்துவிட்டு குற்றம் சுமத்துவது எந்த வகையில் நியாயம்? .

சந்தேகம் -9

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே பேசித் தீர்த்து முடிவாக அறிவிக்கப்பட்ட தராவீஹ் போன்ற பிரச்சனைகளை மீண்டும் கிளப்பி………….

என்கிறீர்கள் பேசித்தீர்த்து முடிவு அறிவித்தவர் யார்? எப்போது எங்கே பேசித் தீர்க்கப்பட்டது? யார் யார் கலந்து கொண்டார்கள் என்ற விபரங்களை எல்லாம் இது வரை நீங்கள் சொல்லியதாகத் தெரியவில்லையே.

பேசித் தீர்க்கப்பட்டது என்பதை வாதத்துக்காக ஒப்புக் கொண்டாலும் அதில் அவர்கள் கிளப்புகின்ற சந்தேகங்களைத் தீர்த்து வைக்கும் கடமை உங்களுக்கு இல்லையா? அவர்கள் தராவீஹ் பற்றி கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லவில்லையே தராவீஹ் 20 ரக்அத்களா? என்று உங்கள் அணியினர் வெளியிட்ட நூலைப் படித்தாலே தராவீஹ் எட்டு ரக்அத்கள் தான் என்று தெளிவாகத் தெரிகின்றதே? அந்த லெட்சணத்தில் தானே உங்கள் மறுப்பு நூல் அமைந்திருக்கிறது.

சந்தேகம் -10

பித்அத்களை உலமாக்கள் கண்டிப்பதாகவும் முறையான பதில்கள் அளித்துள்ளதாகவும் பெருமைப்பட்டுக் கொள்கிறீர்கள்

பித்அத் ஒருபுறம் இருக்கட்டும். பச்சை ஷிர்க் என்று உங்கள் அணி உலாமாக்களில் பலர் உங்கள் அணிச் செயலாளர் ஆகியோர் தீர்ப்பளித்த குத்பிய்யத் என்ற இருட்டு திக்ரை நீங்களே சாட்சாத் நீங்களே தான் ஷிர்க் அல்ல என்று தீர்ப்பு வழங்கினீர்கள். உங்கள் பத்வாவின் ஜெராக்ஸ் காப்பியை நானும் பார்த்திருக்கிறேன். பச்சை ஷிர்க் என்று உங்கள் உலமாக்களில் பலர் தீர்ப்பளித்ததையே நியாயப்படுத்தும் நீங்களா பித்அத்தை எதிர்ப்பதாகக் கூறுகிறீர்கள்.?

மவ்லிது பற்றி பல மதரஸாக்கள் கூடாது என்று தீர்ப்பு அளித்தது உங்கள் கைக்குக் கிடைத்த பின்பும் அதையும் நியாயப்படுத்ததும் நீங்களா பித்அத்தை எதிர்ப்பதாகக் கூறுகிறீர்கள்?

(குறிப்பு: ஜ,உ,தலைவரின் முறையற்ற பதில்களை நாம் விரைவில் வெளியிடுகிறோம்.. ஆசிரியர்)

சந்தேகம் -10

மஸ்ஜிதுன் நபியில் தொழக் கூடாது என்று உங்கள் எதிரணியினர் கூறுவதாகக் குற்றம் சுமத்துகிறீர்கள்.

இது அபாண்டம் இல்லையா? வீண் அவதூறு இல்லையா? இதை உங்களால் நிரூபிக்க முடியுமா?

சந்தேகம் -11

பிக்ஹ் என்று இன்றைக்குக் கூறப்படுவது குர்ஆனுக்கும் ஹதீஸுக்கு முரணானவைகளே என் ஏற்படுத்தி வருவதாக உங்கள் எதிராளிகள் மீது சாடி இருக்கிறீர்கள்.

அவர்கள் பல பிக்ஹ் சட்டங்களை எடுத்துக்காட்டி அவை குர்ஆன் ஹதீஸுடன் எப்படி முரண்படுகின்றன என்று பட்டியல் போட்டார்களே? நேரடியாக இது பற்றி விவாதம் செய்யத் தயாரா? என்று சவால் விட்டார்களே இன்று வரை அதை நீங்கள் ஏற்காததன் காரணம் என்ன?

குறைந்த பட்சம் அவர்கள் காட்டிய உங்கள் மஸாலாக்களுக்கு குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களை எழுதியிருக்கலாம் அல்லவா? அதையாவது செய்தீர்களா? இனியாவது செய்வீர்களா?

சந்தேகம் -11

அவர்கள் எழுப்பும் சந்தேகங்கள் அனைத்துக்கும் நேரடியாகவும் பத்திரிக்கையின் மூலமாகவும் பதில் தரப்பட்டன என்கிறீர்கள்.

இது உண்மைதானா? நேரடியாக யாரிடம் பதில் கூறினீர்கள்? என்ன பதில் கூறினீர்கள்? பத்திரிக்கையில் அவர்களுடைய எல்லா சந்தேகங்களுக்கும் உண்மையிலேயே பதில் கூறி விட்டீர்களா? எந்தப் பத்திரிக்கையில் ? சொல்வீர்களா? நாங்களும் வாங்கிப் படித்து உண்மையை விளங்கலாம் அல்லவா? ஒரு வேளை வேறு மொழிப் பத்திரிக்கையில் பதில் இருக்கிறீர்களோ என்னவோ?

மொத்தத்தில் உங்கள் பதிலைப் படிக்கும் சாதாரண அறிவு படைத்தவனும் அர்த்தமும் ஆதாரமும் இல்லாத வெற்றுக் குற்றச் சாட்டுகள் என்று புரிந்து கொள்வான் . அந்த நிலையிலேயே உங்கள் பதில் அமைந்துள்ளது.

அன்புடன்

அப்துல் அஸீஸ் நாகர் கோவில்

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...