ஜனாஸாவுக்காக எழுந்து நிற்க வேண்டும்

முஸ்லிமின் உடலோ, முஸ்லிம் அல்லாதவரின் உடலோ ‎நம்மைக் கடந்து சென்றால் உடனே எழுந்து நிற்க வேண்டும். ‎அது நம்மைக் கடந்து சென்ற பின் தான் அமர வேண்டும்.‎

صحيح البخاري

‎1308 – ‎حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنْ عَامِرِ بْنِ رَبِيعَةَ رَضِيَ اللَّهُ ‏عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا رَأَى أَحَدُكُمْ جِنَازَةً، فَإِنْ لَمْ يَكُنْ مَاشِيًا مَعَهَا، فَلْيَقُمْ حَتَّى يَخْلُفَهَا أَوْ تُخَلِّفَهُ ‏أَوْ تُوضَعَ مِنْ قَبْلِ أَنْ تُخَلِّفَهُ‎»‎

உங்களில் ஒருவர் ஜனாஸாவைக் கண்டால் அதனுடன் அவர் ‎நடப்பவராக இல்லையென்றால் அது கடக்கும் வரை எழுந்து ‎நிற்க வேண்டும்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‎கூறினார்கள்.‎

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)‎

நூல்: புகாரி 1308‎

صحيح البخاري

‎1311 – ‎حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ مِقْسَمٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ ‏عَنْهُمَا، قَالَ: مَرَّ بِنَا جَنَازَةٌ، فَقَامَ لَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقُمْنَا بِهِ، فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا جِنَازَةُ يَهُودِيٍّ، قَالَ: ‏‏«إِذَا رَأَيْتُمُ الجِنَازَةَ، فَقُومُوا‎»‎

ஒரு ஜனாஸா எங்களைக் கடந்து சென்றது. இதற்காக நபிகள் ‎நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். நாங்களும் ‎எழுந்தோம்.  அல்லாஹ்வின் தூதரே! இது யூதரின் ஜனாஸா ‎என்று நாங்கள் கூறினோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்கள்  ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நில்லுங்கள்  எனக் ‎கூறினார்கள்.‎

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)‎

நூல்: புகாரி 1311, 1313‎

எழுந்து நிற்கும் சட்டம் மாற்றப்படவில்லை

ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நிற்க வேண்டும் என்ற சட்டம் ‎மாற்றப்பட்டு விட்டது என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். பின் ‎வரும் ஹதீஸ்களை இதற்கு ஆதாரமாக எடுத்துக் ‎காட்டுகின்றனர்.‎

صحيح مسلم

‎2274 – ‎وَحَدَّثَنِى زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِىٍّ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ قَالَ سَمِعْتُ مَسْعُودَ ‏بْنَ الْحَكَمِ يُحَدِّثُ عَنْ عَلِىٍّ قَالَ رَأَيْنَا رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَامَ فَقُمْنَا وَقَعَدَ فَقَعَدْنَا. يَعْنِى فِى الْجَنَازَةِ‎.‎

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸாவில் எழுந்ததைக் ‎கண்டோம். நாங்களும் எழுந்தோம். உட்கார்ந்ததைக் கண்டோம். ‎நாங்களும் உட்கார்ந்தோம்

அறிவிப்பவர் அலீ (ரலி)‎

நூல்: முஸ்லிம் 1599‎

இந்த ஹதீஸை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டதன் ‎அடிப்படையில் இவ்வாறு வாதிடுகின்றனர்.‎

எழுந்து நின்றார்கள்; பின்னர் எழுந்து நிற்கவில்லை  என்பது ‎போன்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தால் முதலில் ‎எழுந்துவிட்டு பின்னர் எழாமல் இருந்துள்ளனர் என்று பொருள் ‎கொள்ள முடியும்.‎

ஆனால் மேற்கண்ட ஹதீஸின் வாசகம் அவ்வாறு இல்லை. ‎எழுந்தார்கள்; நாங்களும் எழுந்தோம். உட்கார்ந்தார்கள்; நாங்களும் ‎உட்கார்ந்தோம் என்று தான் ஹதீஸின் வாசகம் உள்ளது. ‎அதாவது ஜனாஸாவைக் கண்டவுடன் எழுந்தார்கள். பின்னர் ‎உட்கார்ந்தார்கள் என்ற கருத்திலேயே மேற்கண்ட வாசகம் ‎அமைந்துள்ளது.‎

ஜனாஸாவைக் கண்டவுடன் நின்று கொண்டே இருக்க வேண்டும் ‎என்பதில்லை; எழுந்துவிட்டு உட்கார்ந்து விடலாம் என்ற ‎கருத்தைத் தான் இது தரும்.‎

எழுந்தார்கள்  என்பதை எழவில்லை  அல்லது எழுவதைத் ‎தடுத்தார்கள் என்பன போன்ற சொற்கள் தான் மாற்றும்.‎

எழுந்தார்கள்  என்பதை பின்னர் உட்கார்ந்தார்கள்  என்பது மாற்றாது.‎

இந்தக் கருத்தில் அமைந்த மற்றொரு ஹதீஸையும் ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.‎

صحيح مسلم

‎2271 – ‎وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا لَيْثٌ ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحِ بْنِ الْمُهَاجِرِ – وَاللَّفْظُ لَهُ – حَدَّثَنَا اللَّيْثُ عَنْ يَحْيَى ‏بْنِ سَعِيدٍ عَنْ وَاقِدِ بْنِ عَمْرِو بْنِ سَعْدِ بْنِ مُعَاذٍ أَنَّهُ قَالَ رَآنِى نَافِعُ بْنُ جُبَيْرٍ وَنَحْنُ فِى جَنَازَةٍ قَائِمًا وَقَدْ جَلَسَ يَنْتَظِرُ أَنْ ‏تُوضَعَ الْجَنَازَةُ فَقَالَ لِى مَا يُقِيمُكَ فَقُلْتُ أَنْتَظِرُ أَنْ تُوضَعَ الْجَنَازَةُ لِمَا يُحَدِّثُ أَبُو سَعِيدٍ الْخُدْرِىُّ. فَقَالَ نَافِعٌ فَإِنَّ مَسْعُودَ بْنَ ‏الْحَكَمِ حَدَّثَنِى عَنْ عَلِىِّ بْنِ أَبِى طَالِبٍ أَنَّهُ قَالَ قَامَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- ثُمَّ قَعَدَ‎.‎

நாங்கள் ஒரு ஜனாஸாவில் நின்று கொண்டிருக்கும் போது ‎என்னை நாஃபிவு பின் ஸுபைர் என்பார் பார்த்தார். ஜனாஸா ‎வைக்கப்படுவதை எதிர்பார்த்தவராக அவர் உட்கார்ந்திருந்தார். ‎ஏன் எழுந்து நிற்கிறாய்?  என்று என்னிடம் கேட்டார்.  ஜனாஸா ‎வைக்கப்படுவதற்காகக் காத்திருக்கிறேன்; இவ்வாறு அபூ ஸயீத் ‎அல்குத்ரீ அவர்கள் அறிவித்துள்ளனர்  என்று நான் கூறினேன். ‎நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்துவிட்டு பின்னர் ‎உட்கார்ந்தார்கள்  என்று அலீ (ரலி) அவர்கள் அறிவித்ததாக ‎மஸ்வூத் பின் ஹகம் எனக்குக் கூறினார்  என அவர் ‎பதிலளித்தார்.‎

அறிவிப்பவர்: வாகித் பின் அம்ர்

நூல்: முஸ்லிம் 1597‎

இந்த ஹதீஸும் இவர்கள் கூறுகின்ற கருத்தில் இல்லை. நபிகள் ‎நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்தார்கள்; பின்னர் உட்கார்ந்தார்கள் ‎என்ற சொற்றொடர் ஒன்றன் பின் ஒன்றாக இரண்டையும் ‎செய்தார்கள் என்ற கருத்தைத் தருமே தவிர எழுந்து நிற்பதை ‎விட்டு விட்டார்கள் என்ற கருத்தைத் தராது.‎

ஜனாஸாவைப் பின் தொடர்ந்தவர் அது கீழே இறக்கப்படும் வரை ‎உட்காரக் கூடாது

ஜனாஸாவைப் பின் தொடர்ந்து சென்றவர் ஜனாஸாவை முந்திக் ‎கொண்டு அடக்கத்தலம் சென்றுவிடலாம். அப்படி முந்திச் ‎சென்றவர்கள் உடனே அமர்ந்து விடக் கூடாது. ஜனாஸா வரும் ‎வரை காத்திருக்க வேண்டும். ஜனாஸா கொண்டு வரப்பட்டு ‎தோள்களிலிருந்து கீழே இறக்கப்படும் வரை நின்றுவிட்டு கீழே ‎இறக்கப்பட்ட பின் தான் உட்கார வேண்டும்.‎

صحيح البخاري

‎1307 – ‎حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَامِرِ بْنِ رَبِيعَةَ، عَنِ النَّبِيِّ ‏صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا رَأَيْتُمُ الجَنَازَةَ، فَقُومُوا حَتَّى تُخَلِّفَكُمْ» قَالَ سُفْيَانُ: قَالَ الزُّهْرِيُّ: أَخْبَرَنِي سَالِمٌ، عَنْ أَبِيهِ، ‏قَالَ: أَخْبَرَنَا عَامِرُ بْنُ رَبِيعَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَادَ الحُمَيْدِيُّ: «حَتَّى تُخَلِّفَكُمْ أَوْ تُوضَعَ‎»‎

அது உங்களைக் கடக்கும் வரை அல்லது கீழே வைக்கப்படும் ‎வரை நில்லுங்கள்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‎கூறியுள்ளனர்.‎

நூல்: புகாரி 1307, 1308, 1310‎

கடக்கும் வரை என்பது ஜனாஸாவுடன் தொடர்ந்து ‎செல்லாதவருக்காகச் சொல்லப்பட்டது. கீழே வைக்கப்படும் வரை ‎என்பது பின் தொடர்ந்து அடக்கத்தலம் வரை செல்பவருக்காகக் ‎கூறப்பட்டது.‎

صحيح البخاري

‎1309 – ‎حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ: كُنَّا فِي جَنَازَةٍ، فَأَخَذَ أَبُو ‏هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ بِيَدِ مَرْوَانَ فَجَلَسَا قَبْلَ أَنْ تُوضَعَ، فَجَاءَ أَبُو سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ فَأَخَذَ بِيَدِ مَرْوَانَ، فَقَالَ: قُمْ فَوَاللَّهِ ‏لَقَدْ عَلِمَ هَذَا «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَانَا عَنْ ذَلِكَ» فَقَالَ أَبُو هُرَيْرَةَ صَدَقَ

நாங்கள் ஒரு ஜனாஸாவில் கலந்து கொண்டோம். அப்போது அபூ ‎ஹுரைரா (ரலி) அவர்கள் (அன்றைய ஆட்சியாளரான) ‎மர்வானின் கையைப் பிடித்து ஜனாஸா கீழே வைக்கப்படுவதற்கு ‎முன்னர் உட்கார வைத்து, தானும் உட்கார்ந்தார். அப்போது அபூ ‎ஸயீத் (ரலி) அவர்கள் வந்து மர்வானின் கையைப் பிடித்து ‎‎ எழுங்கள்  என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைத் ‎தடுத்தார்கள் என்பதை இவர் (அபூ ஹுரைரா) அல்லாஹ்வின் ‎மீது ஆணையாக நிச்சயமாக அறிந்து வைத்துள்ளார்  என்றும் ‎கூறினார். அப்போது அபூ ஹுரைரா (ரலி) அவர்கள்,  இவர் ‎சொல்வது உண்மை தான்  என்றார்கள்.‎

அறிவிப்பவர்: ஸயீத் அல் மக்புரி

நூல்: புகாரி 1309‎

صحيح البخاري

‎1310 – ‎حَدَّثَنَا مُسْلِمٌ يَعْنِي ابْنَ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ ‏عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا رَأَيْتُمُ الجَنَازَةَ، فَقُومُوا، فَمَنْ تَبِعَهَا فَلاَ يَقْعُدْ حَتَّى تُوضَعَ‎»‎

ஜனாஸாவை நீங்கள் கண்டால் எழுங்கள்! யார் அதைப் பின் ‎தொடர்ந்து செல்கிறாரோ அவர் ஜனாஸா (கீழே) வைக்கப்படும் ‎வரை உட்கார வேண்டாம்  என்று நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்கள் கூறினார்கள்.‎

அறிவிப்பவர்: அபூ ஸலமா (ரலி)‎

நூல்: புகாரி 1310‎