ஜாக்குக்கு பகிரங்க அறைகூவல்

மரியாதைக்குரிய ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் இயக்கத்தின் தலைவருக்கும், உலமாக்களுக்கும் பீ.ஜைனுல் ஆபிதீன் எழுதிக் கொள்வது அஸ்ஸலாமு அலைக்கும்.

சமீப காலமாக உங்கள் இயக்கம் மூலம் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் ஜைனுல் ஆபிதீனாகிய நான் எனது கொள்கையில் இருந்து விலகி விடுமாறு அழைப்பு விட்டு வருவது என் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

நீங்கள் நேர்வழி என்று நினைக்கும் பாதைக்கு மற்றவர்களை அழைக்க உங்களுக்கு உரிமை உள்ளது.

நமக்கிடையே நீண்ட நெடுங்காலமாக அடிப்படைக் கொள்கைகளில் கருத்து வேறுபாடு இருந்து வருவது முஸ்லிம் சமுதாயம் அறிந்து வைத்துள்ள உண்மையாகும்.

இரு வேறு கருத்துக் கொண்டவர்களில் ஒரு தரப்பினர் மற்ற தரப்பினரை தமது வழியின் பால் எப்போது அழைக்கலாம்? இரு தரப்பும் கருத்து வேறுபாடுள்ள விஷயங்களைக் குறித்து விவாதம் செய்து ஒரு தரப்பின் கருத்து தான் சரியானது என்பது தெளிவானால் தான் வென்ற தரப்பு தோற்ற தரப்பை தனது கொள்கையின் பால் அழைக்க நியாயம் உள்ளது.

அப்படி எதுவும் நிகழவில்லை. நான் நீண்ட காலமாக விவாதிக்க அழைப்பு விட்டும் அதை ஏற்க மறுக்கும் நீங்கள் என்னை உங்கள் வழிகெட்ட கொள்கையின் பால் அழைப்பது வேடிக்கையாக உள்ளது.

எனவே நேர்வழியில் இருக்கின்ற நான் தான் உங்களைச் சரியான வழியின்பால் அழைக்க நியாயம் உண்டு என்பதை முதலில் சொல்லிக் கொள்கிறேன்.

உங்களிடம் நான் வேறுபடும் கொள்கைகளில் நான் நேர்வழியில் இருப்பதாக நன்கு ஆராய்ந்து உறுதியான முடிவில் இருக்கிறேன்.

வஹீ மட்டும் தான் இஸ்லாத்தின் மூல ஆதாரம். நபித்தோழர்கள் உள்ளிட்ட எவரது கருத்தும், செயலும் மார்க்க ஆதாரமாகாது என்பது எனது கொள்கை.

நபித்தோழர்கள் இந்த உம்மத்தில் சிறந்தவர்கள் என்பதில் நானும், நீங்களும் ஒத்த கருத்தில் இருந்தாலும் நபித்தோழர்களும் பாவத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர். இஸ்லாத்தை ஏற்ற பின்பும் அவர்களிடம் பாவங்கள் நிகழ்ந்துள்ளன. அதில் சிலர் நீடித்தும் உள்ளனர். மார்க்கம் என்று கருதி மார்க்கத்தில் இல்லாததை உருவாக்கியவர்களும் நபித்தோழர்களில் இருந்துள்ளனர். இதைக் கூறுவது அவர்களை அவமதிப்பதாக ஆகாது என்று நான் கருதுகிறேன். இதில் நீங்கள் மாறுபடுகிறீர்கள்.

சூனியத்துக்கு எந்தத் தாக்கமும் இல்லை என்றும், அதை நம்புவது அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதாகவும் ஆகும் என்றும் நான் கூறுவதில் நீங்கள் மாறுபடுகிறீர்கள்.

அறிவிப்பாளர் தொடர் சரியானது என்று கருதப்படும் ஹதீஸ்கள் திருக்குர்ஆன் கூறும் அறிவுக்கு முரணில்லா விட்டால் அவற்றை ஏற்றுச் செயல்பட வேண்டும்; திருக்குர்ஆன் கூறும் அறிவுக்கு முரணாக அமைந்த ஹதீஸ்களின் அறிவிப்பாளர் தொடர் சரியானதாகக் கருதப்பட்டாலும் அவை ஹதீஸ்கள் அல்ல என்று நான் கூறுவதில் நீங்கள் முரண்படுகிறீர்கள்.

மேலும் திருக்குர்ஆன் விளக்கத்தில் நான் தவறான நச்சுக்கருத்துக்களைப் புகுத்தி உள்ளதாக பகிரங்கமாக கூறி அழைப்பு விட்டுள்ளீர்கள்.  அவை என்ன என்பதையும் பட்டியலிட்டு அவை குறித்தும் விவாதம் நடத்தப்பட வேண்டும்.

இவை குறித்து நாம் ஒத்த கருத்துக்கு வந்து விட்டால் நாம் ஒத்த கொள்கையில் பயணிக்கலாம்.

எனவே நான் குறிப்பிட்ட இந்த விஷயங்களில் நீங்கள் வழிகேட்டில் இருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன்.

இது குறித்து கன்னியமான முறையில் நட்பு அடிப்படையிலான விவாதத்துக்கு அழைப்பு விடுக்கிறேன்.

அந்த விவாதத்தில் நீங்கள் கொண்ட கொள்கை தான் சரியானது என்று நிரூபித்தால் அதை ஏற்று பகிரங்கமாக அறிவிக்க நான் தயாராக உள்ளேன். நீங்கள் கொண்ட கொள்கை தவறானது என்று நான் நிரூபித்தால் நீங்கள் உங்கள் நிலையை மாற்றிக் கொள்ளுங்கள்.

அப்படி நிகழ்ந்தால் ஒரே கொள்கையில் நாம் பயணிக்கும் நிலை ஏற்படும்.

பொது மேடைகளில் நீங்கள் விடுக்கும் அழைப்புக்கு எனது பதில் இதுதான்.

இதற்கான பதிலை எதிர்வரும் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் எதிர்பார்க்கிறேன்.

விவாதம் நடத்த ஒப்புக் கொண்டு நீங்கள் பதில் தந்த பின் நம் இரு தரப்புக்கும் வசதியான ஒரு நாளில் விவாதம் செய்வதற்கான ஒழுங்குகள், விதிகள்,  விவாதம்  நடக்கும் காலம் ஆகியவற்றைப் பேசி முடிவு செய்து கொள்ளலாம்.

அன்புடன்

பீ.ஜைனுல் ஆபிதீன்

குறிப்பு: சென்னை மண்ணடியில் அன்பான அழைப்பு விடுக்கும் மேடையில் உங்களிடமிருந்து வெளிப்பட்ட கர்வத்தையும், ஆணவத்தையும் நான் அலட்சியம் செய்கிறேன்.

பெரிய மேடையில் பேசிய பீஜே இன்று அறைக்குள் லைவ் போடுவது பரிதாபமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இயக்க பலம் இல்லாமல் போய்விட்டான் என்பதால் தான் நீங்கள் எனக்கு அழைப்பு விடுகிறீர்கள் என்றால் இதை விட அறிவீனம் எதுவுமில்லை.

எனக்கு இயக்க பலம் இல்லை என்பது தான் இந்த அழைப்புக்குக் காரணம் என்று கருதும் அளவுக்கு உங்கள் நிலை அமைந்துள்ளதை எண்ணி பரிதாபப்படுகிறேன்.

நான் தனி ஒருவனாக இருந்தாலும் கொள்கையை எடை போட அது அளவு கோல் அல்ல என்பதை முதலில் உணருங்கள்.

ஆனால் அது கூட உண்மை இல்லை. நீங்கள் பெரிய முயற்சி எடுத்து தலை நகரில் கூட்டிய கூட்டத்தை விட அதிகமான மக்கள் முன்னிலையில் அதிராம்பட்டிணத்தில் பொது நிகழ்வில் நான் சில நாட்களுக்கு முன்னர் தான் உரையாற்றியுள்ளேன். உங்கள் இந்தப் பரிதாபம் முற்றிலும் தவறானது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் மட்டுமே தனித்து விடப்பட்டாலும் கொள்கை தவறு என்பதை உரிய முறையில் நிரூபித்தால் மட்டுமே நான் மாற்றிக் கொள்வேன்.

பீஜே என்று மக்கள் அழைத்த போது நான் சரியாக இருந்ததாகவும் அண்ணன் என்று அழைக்கப்பட்ட பின் நான் மாறிவிட்டதாகவும் நீங்கள் பொதுமேடையில் பேசியதைக் காணும் போது இந்த அளவுக்கு உங்கள் சிந்தனை வரண்டு விட்டதா என்று நான் பரிதாபப்படுகிறேன்.

ஒவ்வொரு முஸ்லிமும் சகோதரன் என்ற குர்ஆன் வசனத்தையே நீங்கள் மறுப்பதாக இது அமைந்துள்ளது. என்னை விட குறைந்த வயதுள்ளவர்கள் அண்ணன் என்று என்னை அழைப்பது மார்க்கத்தில் தவறா?

மவ்லானா மவ்லவி பட்டம் போட்டு நீங்கள் ஒருவருக்கொருவர் அழைத்துக் கொள்கிறீர்களே அது போன்ற மமதை அண்ணன் என்று அழைப்பதில் இல்லை.

உங்களைத் தமிழகத்துக்கு அறிமுகம் செய்த கமாலுத்தீன் மதனி அவர்கள் எப்படி அறிமுகம் செய்தார்களோ அந்த நிலைக்கு மாறி எங்களுடன் சேருங்கள் என்றும் ஆணவமாக பொது மேடையில் பேசி தரம் தாழ்ந்துள்ளீர்கள்.

நாகர்கோவிலில் முடங்கிக் கிடந்த கமாலுத்தீன் மதனியை நாடு முழுவதும் நான் தான் அறிமுகம் செய்தேன். அவருக்கு முன்னர் நான் தான் அஹ்லுல் குர்ஆன் ஹதீஸ் இயக்கத் தலைவனாக இருந்தேன்; நான் அடியோடு மறுத்து கமாலுத்தீன் மதனியைத் தலைவராக்கினேன் என்று உங்களைப் போல் நான் சொன்னால் அது உண்மையாக இருந்தாலும் நாகரிகமுள்ள மக்கள் கர்வமாகத் தான் அதைக் கருதுவார்கள்.

இது போல் கீழ்த்தரமான விமர்சனங்கள் வேண்டாம். நாம் கண்ணியமான முறையில் விவாதம் செய்வோம். எது நேர்வழி என்பதும் யார் திருந்த வேண்டும் என்பதும் அப்போது முடிவாகும். இன்ஷா அல்லாஹ்

“பி.ஜைனுல் ஆபிதீன்”

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...