ஜாக்குக்கு பகிரங்க அறைகூவல்

மரியாதைக்குரிய ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் இயக்கத்தின் தலைவருக்கும், உலமாக்களுக்கும் பீ.ஜைனுல் ஆபிதீன் எழுதிக் கொள்வது அஸ்ஸலாமு அலைக்கும்.

சமீப காலமாக உங்கள் இயக்கம் மூலம் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் ஜைனுல் ஆபிதீனாகிய நான் எனது கொள்கையில் இருந்து விலகி விடுமாறு அழைப்பு விட்டு வருவது என் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

நீங்கள் நேர்வழி என்று நினைக்கும் பாதைக்கு மற்றவர்களை அழைக்க உங்களுக்கு உரிமை உள்ளது.

நமக்கிடையே நீண்ட நெடுங்காலமாக அடிப்படைக் கொள்கைகளில் கருத்து வேறுபாடு இருந்து வருவது முஸ்லிம் சமுதாயம் அறிந்து வைத்துள்ள உண்மையாகும்.

இரு வேறு கருத்துக் கொண்டவர்களில் ஒரு தரப்பினர் மற்ற தரப்பினரை தமது வழியின் பால் எப்போது அழைக்கலாம்? இரு தரப்பும் கருத்து வேறுபாடுள்ள விஷயங்களைக் குறித்து விவாதம் செய்து ஒரு தரப்பின் கருத்து தான் சரியானது என்பது தெளிவானால் தான் வென்ற தரப்பு தோற்ற தரப்பை தனது கொள்கையின் பால் அழைக்க நியாயம் உள்ளது.

அப்படி எதுவும் நிகழவில்லை. நான் நீண்ட காலமாக விவாதிக்க அழைப்பு விட்டும் அதை ஏற்க மறுக்கும் நீங்கள் என்னை உங்கள் வழிகெட்ட கொள்கையின் பால் அழைப்பது வேடிக்கையாக உள்ளது.

எனவே நேர்வழியில் இருக்கின்ற நான் தான் உங்களைச் சரியான வழியின்பால் அழைக்க நியாயம் உண்டு என்பதை முதலில் சொல்லிக் கொள்கிறேன்.

உங்களிடம் நான் வேறுபடும் கொள்கைகளில் நான் நேர்வழியில் இருப்பதாக நன்கு ஆராய்ந்து உறுதியான முடிவில் இருக்கிறேன்.

வஹீ மட்டும் தான் இஸ்லாத்தின் மூல ஆதாரம். நபித்தோழர்கள் உள்ளிட்ட எவரது கருத்தும், செயலும் மார்க்க ஆதாரமாகாது என்பது எனது கொள்கை.

நபித்தோழர்கள் இந்த உம்மத்தில் சிறந்தவர்கள் என்பதில் நானும், நீங்களும் ஒத்த கருத்தில் இருந்தாலும் நபித்தோழர்களும் பாவத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர். இஸ்லாத்தை ஏற்ற பின்பும் அவர்களிடம் பாவங்கள் நிகழ்ந்துள்ளன. அதில் சிலர் நீடித்தும் உள்ளனர். மார்க்கம் என்று கருதி மார்க்கத்தில் இல்லாததை உருவாக்கியவர்களும் நபித்தோழர்களில் இருந்துள்ளனர். இதைக் கூறுவது அவர்களை அவமதிப்பதாக ஆகாது என்று நான் கருதுகிறேன். இதில் நீங்கள் மாறுபடுகிறீர்கள்.

சூனியத்துக்கு எந்தத் தாக்கமும் இல்லை என்றும், அதை நம்புவது அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதாகவும் ஆகும் என்றும் நான் கூறுவதில் நீங்கள் மாறுபடுகிறீர்கள்.

அறிவிப்பாளர் தொடர் சரியானது என்று கருதப்படும் ஹதீஸ்கள் திருக்குர்ஆன் கூறும் அறிவுக்கு முரணில்லா விட்டால் அவற்றை ஏற்றுச் செயல்பட வேண்டும்; திருக்குர்ஆன் கூறும் அறிவுக்கு முரணாக அமைந்த ஹதீஸ்களின் அறிவிப்பாளர் தொடர் சரியானதாகக் கருதப்பட்டாலும் அவை ஹதீஸ்கள் அல்ல என்று நான் கூறுவதில் நீங்கள் முரண்படுகிறீர்கள்.

மேலும் திருக்குர்ஆன் விளக்கத்தில் நான் தவறான நச்சுக்கருத்துக்களைப் புகுத்தி உள்ளதாக பகிரங்கமாக கூறி அழைப்பு விட்டுள்ளீர்கள்.  அவை என்ன என்பதையும் பட்டியலிட்டு அவை குறித்தும் விவாதம் நடத்தப்பட வேண்டும்.

இவை குறித்து நாம் ஒத்த கருத்துக்கு வந்து விட்டால் நாம் ஒத்த கொள்கையில் பயணிக்கலாம்.

எனவே நான் குறிப்பிட்ட இந்த விஷயங்களில் நீங்கள் வழிகேட்டில் இருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன்.

இது குறித்து கன்னியமான முறையில் நட்பு அடிப்படையிலான விவாதத்துக்கு அழைப்பு விடுக்கிறேன்.

அந்த விவாதத்தில் நீங்கள் கொண்ட கொள்கை தான் சரியானது என்று நிரூபித்தால் அதை ஏற்று பகிரங்கமாக அறிவிக்க நான் தயாராக உள்ளேன். நீங்கள் கொண்ட கொள்கை தவறானது என்று நான் நிரூபித்தால் நீங்கள் உங்கள் நிலையை மாற்றிக் கொள்ளுங்கள்.

அப்படி நிகழ்ந்தால் ஒரே கொள்கையில் நாம் பயணிக்கும் நிலை ஏற்படும்.

பொது மேடைகளில் நீங்கள் விடுக்கும் அழைப்புக்கு எனது பதில் இதுதான்.

இதற்கான பதிலை எதிர்வரும் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் எதிர்பார்க்கிறேன்.

விவாதம் நடத்த ஒப்புக் கொண்டு நீங்கள் பதில் தந்த பின் நம் இரு தரப்புக்கும் வசதியான ஒரு நாளில் விவாதம் செய்வதற்கான ஒழுங்குகள், விதிகள்,  விவாதம்  நடக்கும் காலம் ஆகியவற்றைப் பேசி முடிவு செய்து கொள்ளலாம்.

அன்புடன்

பீ.ஜைனுல் ஆபிதீன்

குறிப்பு: சென்னை மண்ணடியில் அன்பான அழைப்பு விடுக்கும் மேடையில் உங்களிடமிருந்து வெளிப்பட்ட கர்வத்தையும், ஆணவத்தையும் நான் அலட்சியம் செய்கிறேன்.

பெரிய மேடையில் பேசிய பீஜே இன்று அறைக்குள் லைவ் போடுவது பரிதாபமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இயக்க பலம் இல்லாமல் போய்விட்டான் என்பதால் தான் நீங்கள் எனக்கு அழைப்பு விடுகிறீர்கள் என்றால் இதை விட அறிவீனம் எதுவுமில்லை.

எனக்கு இயக்க பலம் இல்லை என்பது தான் இந்த அழைப்புக்குக் காரணம் என்று கருதும் அளவுக்கு உங்கள் நிலை அமைந்துள்ளதை எண்ணி பரிதாபப்படுகிறேன்.

நான் தனி ஒருவனாக இருந்தாலும் கொள்கையை எடை போட அது அளவு கோல் அல்ல என்பதை முதலில் உணருங்கள்.

ஆனால் அது கூட உண்மை இல்லை. நீங்கள் பெரிய முயற்சி எடுத்து தலை நகரில் கூட்டிய கூட்டத்தை விட அதிகமான மக்கள் முன்னிலையில் அதிராம்பட்டிணத்தில் பொது நிகழ்வில் நான் சில நாட்களுக்கு முன்னர் தான் உரையாற்றியுள்ளேன். உங்கள் இந்தப் பரிதாபம் முற்றிலும் தவறானது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் மட்டுமே தனித்து விடப்பட்டாலும் கொள்கை தவறு என்பதை உரிய முறையில் நிரூபித்தால் மட்டுமே நான் மாற்றிக் கொள்வேன்.

பீஜே என்று மக்கள் அழைத்த போது நான் சரியாக இருந்ததாகவும் அண்ணன் என்று அழைக்கப்பட்ட பின் நான் மாறிவிட்டதாகவும் நீங்கள் பொதுமேடையில் பேசியதைக் காணும் போது இந்த அளவுக்கு உங்கள் சிந்தனை வரண்டு விட்டதா என்று நான் பரிதாபப்படுகிறேன்.

ஒவ்வொரு முஸ்லிமும் சகோதரன் என்ற குர்ஆன் வசனத்தையே நீங்கள் மறுப்பதாக இது அமைந்துள்ளது. என்னை விட குறைந்த வயதுள்ளவர்கள் அண்ணன் என்று என்னை அழைப்பது மார்க்கத்தில் தவறா?

மவ்லானா மவ்லவி பட்டம் போட்டு நீங்கள் ஒருவருக்கொருவர் அழைத்துக் கொள்கிறீர்களே அது போன்ற மமதை அண்ணன் என்று அழைப்பதில் இல்லை.

உங்களைத் தமிழகத்துக்கு அறிமுகம் செய்த கமாலுத்தீன் மதனி அவர்கள் எப்படி அறிமுகம் செய்தார்களோ அந்த நிலைக்கு மாறி எங்களுடன் சேருங்கள் என்றும் ஆணவமாக பொது மேடையில் பேசி தரம் தாழ்ந்துள்ளீர்கள்.

நாகர்கோவிலில் முடங்கிக் கிடந்த கமாலுத்தீன் மதனியை நாடு முழுவதும் நான் தான் அறிமுகம் செய்தேன். அவருக்கு முன்னர் நான் தான் அஹ்லுல் குர்ஆன் ஹதீஸ் இயக்கத் தலைவனாக இருந்தேன்; நான் அடியோடு மறுத்து கமாலுத்தீன் மதனியைத் தலைவராக்கினேன் என்று உங்களைப் போல் நான் சொன்னால் அது உண்மையாக இருந்தாலும் நாகரிகமுள்ள மக்கள் கர்வமாகத் தான் அதைக் கருதுவார்கள்.

இது போல் கீழ்த்தரமான விமர்சனங்கள் வேண்டாம். நாம் கண்ணியமான முறையில் விவாதம் செய்வோம். எது நேர்வழி என்பதும் யார் திருந்த வேண்டும் என்பதும் அப்போது முடிவாகும். இன்ஷா அல்லாஹ்

“பி.ஜைனுல் ஆபிதீன்”

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...