முஸ்லிமல்லாத அரசாங்கத்தில் உரிமை கேட்கலாமா?

? எதன் அடிப்படையில், உரிமை மீட்புப் பேரணி போராட்டம் நடத்துகிறீர்கள். காஃபிர் அரசாங்கத்திடம் பிச்சை கேட்பது நபிகள் வழியா? இதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா? என்று கேட்கிறார்.

எஸ். அப்துல் சுபான், சேலம்.

தான் கூறுவதில் உண்மையாகவே நம்பிக்கை கொண்டு அந்த நண்பர் அப்படிக் கேட்கிறாரா? அல்லது நம்மை எதிர்ப்பதற்காக விதண்டாவாதத்துக்காகக் கேட்கிறரா? என்பதை முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள்!

அந்த நண்பர் மீது காவல்துறை வழக்குப் போட்டால் காஃபிர் அரசாங்க நீதிபதியிடம் நியாயம் கேட்டு வழக்கைச் சந்திப்பாரா? அல்லது காஃபிர் அரசாங்காத்திடம் நீதி கேட்கக் கூடாது என்பதற்காக சிறையிலேயே கிடப்பாரா?

அவரை யாராவது கடுமையாகத் தாக்கினால் அல்லது அவரது குடும்பத்தினரைச் சேர்ந்த ஒருவரைக் கொன்று விட்டால் காஃபிர் அரசாங்கத்திடம் நீதி கேட்கக் கூடாது என்பதற்காக புகார் கொடுக்காமல் இருந்து விடுவாரா? புகார் கொடுப்பாரா?

அவர் சம்பாதித்த பணத்தில் ஒரு சொத்தை வாங்கும் போது அதை அரசாங்க முத்திரைத் தாளில் எழுதி பத்திரப் பதிவு அலுவலகம் சென்று அதற்கான கட்டணத்தைச் செலுத்தி அதைப் பதிவு செய்வாரா? அல்லது காஃபிர் அரசாங்கத்திடம் நான் ஏன் சொத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்று கருதி பதிவு செய்யாமல் விட்டு விடுவாரா?

அல்லது வீட்டில் திருட்டுப் போய் விட்டால் காஃபிர் அரசாங்கத்திடம் நான் ஏன் முறையிட வேண்டும் என்று கருதி புகார் கொடுக்காமல் இருப்பாரா?

ரேஷன் அட்டை வழங்கும் போது காஃபிர் அரசாங்கம் வழங்கும் பிச்சை எனக்கு வேண்டாம் என்று கூறி ரேஷன் அட்டை வாங்காமல் இருப்பாரா?

ரூபாய் நோட்டுக்கள் வெறும் பேப்பர் தான். காஃபிர் அரசாங்கம் அதற்கு உத்தரவாதம் தருவதால்தான் அதற்கு என மதிப்பு உள்ளது. அந்த நோட்டு செல்லாது என்று அரசாங்கம் அறிவித்தால் அந்தக் காகிதம், காகிதக் கப்பல் செய்வதற்குத் தான் உதவும் என்று கருதி ரூபாய்களைப் பயன்படுத்தாமல் இருப்பாரா? பண்டமாற்று முறையில்தான் தனது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வாரா?

பத்திரிகைகளுக்கோ, குடும்ப உறுப்பினர்களுக்கோ தகவல் தெரிவிக்க விரும்பினால் காஃபிர் அரசாங்க முத்திரையுடன் வெளியிடப்படும் தபால் தலையை ஒட்டி தகவல் தெரிவிப்பாரா? சவூதி அரசாங்கம் வெளியிட்ட தபால் தலைகளை ஒட்டுவாரா?

வெளிநாடுகளுக்குச் செல்ல நேர்ந்தால் காஃபிர் அரசாங்கத்தின் அனுமதியை நான் ஏன் பெற வேண்டும் என்று கருதி கள்ளத்தனமாக வெளி நாட்டுக்குச் செல்வாரா? விசா வாங்கிச் செல்வாரா?

அரிசி, பருப்பு உள்ளிட்ட எண்ணற்ற பொருட்களை வாங்கும் போது அதற்கான வரியையும் காஃபிர் அரசாங்கத்துக்குச் செலுத்தியாக வேண்டும். எனவே, காஃபிர் அரசாங்கத்துக்கு வரியைச் செலுத்தக் கூடாது என்பதற்காக இலை தழைகளை உண்டு வாழ்வாரா?

காஃபிர் அரசாங்கம் சலுகை விலையில் வழங்கும் கேஸ், எண்ணெய், மின்சாரம் போன்றவற்றைப் பயன்படுத்தாமல் தனது வாழ்நாளைக் கழிப்பாரா?

இப்படி பல்லாயிரம் பட்டியல்களை வெளியிடலாம். இதையெல்லாம் செய்யாதவராக அவர் இருந்தால் அந்த அதிசயப் படைப்பை வைத்து கண்காட்சியே நடத்தலாம்.

இதையெல்லாம் அவர் செய்வார் என்றால் அவர் கேட்கும் கேள்வி விதண்டாவாதமாகும்.

மேற்கண்ட பல்லாயிரம் செயல்களைச் செய்வதற்கு எது ஆதாரமாக உள்ளதோ அதுவே தான் நமது உரிமைகளைக் கேட்பதற்கும் ஆதாரமாக உள்ளது என்பதை அவருக்குத் தெரிவியுங்கள்.

காஃபிர் ஆட்சியில் உரிமையைக் கேட்கக் கூடாது என்று சொன்ன ஒரு இயக்கம் கூட அந்த நிலையில் உறுதியாக நின்றதில்லை. எதையாவது சொல்லி ஆள் பிடிப்பதற்காக இவ்வாறு கூறுவதுண்டு. அதன் பின்னர் தங்கள் நிலைபாட்டை அறவே மாற்றிக் கொண்டு விட்டதை நாம் கண்ணாரக் கண்டு விட்டோம்.

28.02.2012. 11:51 AM

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...