கமலஹாசனின் குடும்பத்தை விமர்சிக்கலாமா?

கமலஹாசனின் மகளுடன் இணைத்து நீங்கள் பேசியது சரியல்ல என்ற விமர்சனம் செய்யப்படுகிறது. இதற்கு உங்கள் பதில் என்ன?

அஸ்மா சரஃபுத்தீன், பிரான்ஸ்

கமலஹாசனுக்கும், நமக்கும் எந்த உறவும், பகையும் இல்லை. கமலஹாசனுடன் நமக்கு எந்தக் கொடுக்கல் வாங்கலும் இல்லை. அவரைப் பற்றி பேசவேண்டிய எந்த உள் நோக்கமும் இல்லை.

பிரச்சனை கமலஹாசன் என்ற நடிகர் ஹேராம், உன்னைப் போல் ஒருவன் போன்ற படங்களில் முஸ்லிம் சமுதாயத்தை தீவிரவாதிகளாக சித்தரித்து வரலாற்றுக்கு முரணாக படங்களை எடுத்து வந்தார்.

இதனால் சமுதாயத்தில் சிறிது சிறிதாக அவர் மீது கோபம் அதிகரித்து வந்தது. விஸ்வரூபம் என்ற திரைப்படத்தில் குர்ஆன் வசனங்கள் தான் தீவிரவாதத்தைத் தூண்டுகிறது என்றும், முஸ்லிம்கள் எதற்கெடுத்தாலும் தலாக் சொல்லி பெண்ணை அந்தரத்தில் விட்டு விடுகின்றனர் என்றும், அப்பனால் கைவிடப்பட்டதால் தான் முரடர்களாக உள்ளனர் என்ற கருத்தையும் அப்படத்தில் சொல்லி இருக்கிறார்.

இந்தக் கதையில் முஸ்லிமாக நடிக்கும் கமலஹாசனின் அப்பாவும் கமலஹாசனின் அம்மாவை தலாக் சொல்லி விட்டார் எனக் கூறி முஸ்லிம்கள் அனைவரும் அல்லது பெரும்பாலானவர்கள் அப்பனால் கைவிடப்பட்டவர்கள் என இப்படத்தில் காட்டியுள்ளார்.

உண்மையில் முஸ்லிம் சமுதாயத்தில் தான் மற்ற சமுதாயங்களை விட விவாகரத்து குறைவாக உள்ளது என்பது தனி விஷயம்.

காவல் துறை கொடுத்த நேரம் முடிந்து விட்டதால் அதை விளக்க இயலாமல் போய்விட்டது.

பெண்களை அனுபவித்து விட்டு கழற்றி விடுவார்கள் என்று சொல்கிறாயே அந்த விமர்சனம் உனக்குத் தான் பொருந்தும். சரிகாவை அனுபவித்து கழற்றி விட்டாய். வானியை அனுபவித்து கழற்றி விட்டாய். இப்போது கவுதமியை கல்யாணம் செய்யாமல் அனுபவித்துக் கொண்டிருக்கிறாய் என்றெல்லாம் நேரம் இருந்து நான் விளக்கி இருந்தால் இதன் நியாயம் புரிந்திருக்கும்.

இதைத் தெளிவாக பின்னர் விளக்க வேண்டும்; படத்தில் உள்ளதை விமர்சிக்கும் போது அதை விளக்க நேரம் தடையாகி விட்டது.

திருட்டு விசிடி மூலம் இந்தியாவில் இருந்து தீவிரவாதச் செயல்களுக்கு பணம் போகிறது என்று கமல் பேசியதை நான் குறிப்பிட்டேன். படத்திலும் இதைச் சொல்லி இருக்கிறார். அதைப் பின்னர் விளக்குவேன் என்று கூறினேன். ஆனால் அதை நான் கூறுவதற்கு முன் நேரம் போய்விட்டது.

இந்தியாவில் இருந்து முஸ்லிம்கள் நைஜீரியாவுக்கு பொருளை ஏற்றுமதி செய்வதாகவும், அது பணமாக அல்காயிதாவுக்குப் போவதாகவும் படத்தில் சொல்கிறார். இந்த முக்கியமான விஷயத்தைக் கூட நான் சொல்ல முடியாமல் போய் விட்டது. அது போல் தான் தலாக் மேட்டரும் விடுபட்டு விட்டது.

(இதெல்லாம் படத்தைப் பார்க்காமல் கேள்விப்பட்டதை வைத்து சொல்லவில்லை. கமல ஹாசன் வீட்டில் அந்தப் படத்தைப் பார்த்து அறிந்து கொண்ட விஷயமாகும்.)

குடும்ப அமைப்பைப் பேணுவதில் முதலிடத்தில் முஸ்லிம் சமுதாயமும் இரண்டாம் இடத்தில் இந்து சமுதாயமும் கடைசி இடத்தில் கிறித்துவ சமுதாயமும் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. உணர்வில் இந்த ஆய்வு முன்னரே வெளியிடப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட சமுதாயத்தில் அப்பனால் கைவிடப்பட்டு தீவிரவாதிகளாக ஆகிறார்கள் என்று கமலஹாசன் காட்சி வைப்பது கதைக்குத் தேவை இல்லாமல் இருந்தும் முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்துவதற்காகவே இதை காட்சிப்படுத்தி இருக்கிறார்.

அப்பனால் கைவிடப்பட்டு வளர்ந்தவர்கள் எல்லாம் சிறந்த ஜிஹாதிகளாக (தீவிரவாதிகளாக) வருகின்றார்கள் என்று கமலஹாசனைப் பார்த்து தாலிபான் தலைவர் முல்லா முஹம்மது உமர் சொல்கின்றார். அப்பன் பேரே தெரியாதவர்கள் இதை விட இன்னும் பெரிய (ஜிஹாதிகளாக) தீவிரவாதிகளாக உள்ளார்கள் என்று முல்லா முஹம்மது உமரைப் பார்த்து கமலஹாசன் சொல்வதாக காட்சி அமைப்பு வருகின்றது.

அப்படியானால் இஸ்லாமியர்கள் பலர் தங்களது மனைவிமார்களைக் கழற்றி விட்டுவிடுவதால் சிறிய தீவிரவாதிகளாக ஆக்கப்படுகின்றார்கள். பலர் அப்பன் யாரென்றே தெரியாமல் பெரிய தீவிரவாதிகளாக மாறுகின்றார்கள் என்று இதன் மூலம் சொல்ல வருகின்றார்.

இதற்குக் கூட எனக்கு கோபம் வரக் கூடாது என்றால் நான் மனிதனாக இருப்பதற்கே தகுதி அற்றவனாகி விடுவேன்.

கமலஹாசனின் குடும்பம் பற்றி நான் பேச அவர் தான் காரணம்.

மேலும் கமலஹாசனின் படத்தை நியாயப்படுத்தும் போது அவரது படத்தைப் பற்றித் தான் பேச வேண்டும். ஆனால் காம்ரேடுகள் அவர் முற்போக்காளர் என்பதால் அவரது படத்தைத் தடுக்கக் கூடாது என்று வாதம் வைக்கின்றனர்.

ஒருவர் முற்போக்கானவர் என்பதால் அவர் செய்யும் பிற்போக்கையும் அனுமதிக்க வேண்டும் என்று அறிவுடையோர் சொல்ல மாட்டார்கள். ஆனால் காம்ரேடுகள் அறிவு மட்டும் இதை ஒரு வாதமாக வைக்கலாம் என்கிறது.

அப்பனும், மகளும் காதல் டூயட் பாடுவோம் என்று சொல்வது தான் முற்போக்கா? என்று கேட்பதற்காக அவரது மகள் சொன்னதை நான் குறிப்பிட்டேன். மகளை விடுங்கள் கமல ஹாசனே என்ன சொன்னார்.

இதோ படியுங்கள்

கமலும், அவரது மகள் ஸ்ருதியும் புதுப்படம் மொன்றில் இணைந்து நடிக்கின்றனர்.

ஏற்கனவே ஸ்ருதி 7ஆம் அறிவு படத்தில் சூர்யா ஜோடியாக நடித்து பிரபலமானார். தனுஷ் ஜோடியாக படத்தில் நடித்தார். தற்போது பலுடி ஏவடு என்ற இரு தெலுங்குப் படங்களிலும், இரண்டு இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார். அடுத்து தந்தை கமல் படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த்த் தகவலை கமல் ஐதராபாத்தில் நிருபர்களிடம் தெரிவித்தார் அவர் கூறியதாவது:-

எனது மகள் ஸ்ருதியும், நானும் புதுப் படமொன்றில் இணைந்து நடிக்கப் போகிறோம். அதற்கான கதை தயாராக உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இப்படம் உருவாகும். ஸ்ருதி தமிழ், தெலுங்கு பட உலகில் பிரபலமாகி விட்டார். ஆனால் இந்தியில் பெயர் வாங்கவில்லை. அங்கு முன்னணி நடிகையாக உயர்ந்ததும் இந்தப் படத்தை எடுப்போம்.

கமலஹாசன் பெண்களுடன் எப்படி நடிப்பார் என்பது அவரது ரசிகர்களுக்குத் தெரியும். கட்டிப்பிடிப்பதும், உதட்டில் முத்தம் கொடுப்பதும் ஆபாசமாக அங்க அசைவுகள் செய்வதும் உலகறிந்த ஒன்று.

இப்படி மகளுடன் நடிப்பேன் என்று கூறுவது தான் முற்போக்கா? என்று நான் கேட்பது தவறு அல்ல.

மானமுள்ள தந்தை இப்படிக் கூற முடியுமா? என்று நான் கேட்டது சரியானது தான்.

சினிமாக்காரர்கள் 25 ஆண்டுகளாக என் சமுதாயத்தைக் கேவலப்படுத்தும் போது அதற்கு எதிராக திருமாவளவன் போன்ற ஒரு சிலர் தவிர அத்தனை பேரும் வாய்திறக்க மறுக்கிறார்கள். நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம். எங்களுக்காக நாங்கள் பேசினால் தான் உண்டு என்று தள்ளப்பட்ட நிலையில் கமலின் அநாகரிகத்தை அவர் எங்களைத் தொடர்ந்து வம்புக்கு இழுத்ததால் இதை எடுத்துக் காட்டுகிறோம். அவர்களே வெட்கம் கெட்டுப் போய் சொன்னதைத் தான் எடுத்துக் காட்டினேன். அவதூறாக எதையும் சொல்லவில்லை.

இப்போது கூட கமலஹாசனின் முப்பது கோடி ரூபாய் இழப்பைத் தான் பேசுகிறார்கள். சிறுபான்மை சமுதாயம் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களே? எந்த விஷயத்திலும் ஒன்றுபடாத முஸ்லிம்கள் இந்த விஷயத்தில் ஒன்றுபடுகிறார்களே அதில் நியாயம் இல்லாமல் இருக்காது என்று அறிவு ஜீவிகளுக்கு தோன்றாதது ஏன்?

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...

நாமே தீர்மானிக்கலாமா?

நாமே தீர்மானிக்கலாமா? பிறை சம்பந்தமான ஆதாரங்களில் நாமே தீர்மானிக்கலாம் என்ற கருத்திலமைந்த ஹதீஸும் முக்கியமான ஆதாரமாக அமைந்துள்ளது. அந்த ஹதீஸ் இது தான். سنن الترمذي 697 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: ...

அரஃபா நோன்பு

அரஃபா நோன்பு சவூதி அரசாங்கம் எப்போது தலைப் பிறை என்று அறிவிக்கிறதோ அது தான் உலகத்துக்கே தலைப் பிறை என்ற கருத்துடையோர் அரஃபா நோன்பை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். ஹஜ்ஜுப் பெருநாளைக்கு முந்திய நாள் அரஃபா ...

கிரகணத் தொழுகை

கிரகணத் தொழுகை தலைப்பிறை பற்றி முடிவு செய்வதற்கான ஆதாரங்களில் சூரிய சந்திர கிரகணங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. صحيح البخاري 1042 – حَدَّثَنَا أَصْبَغُ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرٌو، ...

நீட்டப்படும் மாதங்கள் 

நீட்டப்படும் மாதங்கள் பிறையைக் கண்களால் பார்த்துத் தான் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்பதை மற்றொரு ஹதீசும் கூறுகிறது. அந்த ஹதீஸ் இது தான். صحيح مسلم 2582 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ ...

மேக மூட்டத்தின் போது…

மேக மூட்டத்தின் போது… பிறை பார்த்தல் குறித்த அடிப்படையான ஆதாரங்களாக சில ஹதீஸ்கள் உள்ளன. அந்த ஹதீஸ்கள் ஏறத்தாழ ஒரே மாதிரியான கருத்தில் அமைந்தவை என்றாலும் சின்னச் சின்ன வேறுபாடுகள் அவற்றுக்கிடையே உள்ளதால் அவற்றை ...