கொரோனாவுக்கு அஞ்சி பள்ளிவாசலுக்கு விடுமுறை சரியா?

குவைத் நாட்டின் அனைத்து பள்ளிவாசல்களிலும் ஐங்காலத் தொழுகை நிறுத்தப்பட்டுள்ளது. பாங்கு மட்டும் சொல்லப்படும்; ஜமாஅத் தொழுகை நடக்காது; எல்லோரும் வீட்டில் தொழுது கொள்ளுங்கள் என்று அறிவிப்பு செய்துள்ளது. குவைத் அரசு.

இந்தத் தடை மார்க்க அடிப்படையில் சரியானது தான் என்று சில மவ்லவிமார்கள் தமிழ் கூறும் மவ்லவிமார்கள் நியாயப்படுத்தி பதிவுகள் போட்டு வருகின்றனர்.

«901» حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ: أَخْبَرَنِي عَبْدُ الْحَمِيدِ صَاحِبُ الزِّيَادِيِّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْحَارِثِ ابْنُ عَمِّ مُحَمَّدِ بْنِ سِيرِينَ قَالَ ابْنُ عَبَّاسٍ لِمُؤَذِّنِهِ فِي يَوْمٍ مَطِيرٍ إِذَا قُلْتَ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ. فَلاَ تَقُلْ حَيَّ عَلَى الصَّلاَةِ. قُلْ صَلُّوا فِي بُيُوتِكُمْ. فَكَأَنَّ النَّاسَ اسْتَنْكَرُوا، قَالَ فَعَلَهُ مَنْ هُوَ خَيْرٌ مِنِّي، إِنَّ الْجُمُعَةَ عَزْمَةٌ، وَإِنِّي كَرِهْتُ أَنْ أُخْرِجَكُمْ، فَتَمْشُونَ فِي الطِّينِ وَالدَّحْضِ.

அப்துல்லாஹ் இப்னு அல் ஹாரிஸ் அறிவித்தார்:

‘அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ்’ என்று கூறிய பிறகு ஹய்ய அலஸ் ஸலாஹ் (தொழுகைக்கு வாருங்கள்) என்பதைக் கூறாமல் (ஸல்லூ ஃபீ புயூதிகும்)  உங்கள் வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள் என்று கூறுவீராக என்று பாங்கு சொல்பவரிடம் ஒரு மழை நாளில் இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள். (இவ்வாறு கூறியதை) மக்கள் வெறுப்பது போல் இருந்தபோது ‘என்னை விட மிகவும் சிறந்தவ(ரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர்’ என்று கூறினார்கள். நிச்சயமாக ஜும்ஆ அவசியமானது தான்; எனினும், நீங்கள் சேற்றிலும், சகதியிலும் நடந்து வந்து அதனால் உங்களுக்குச் சிரமம் தருவதை நான் விரும்பவில்லை’ என்றும் குறிப்பிட்டார்கள்.

நூல் : புகாரி 901

மழைக் காலங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளித்த இச்சலுகை வேறு காரணங்களுக்கும் பொருந்தும் என்று வாதிடுவோர் இந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்ட முடியாது.

ஒவ்வொருவரையும் பாதிக்கின்ற பாதிப்பு திட்டவட்டமாகத் தெரிகின்ற காரியங்களுக்குத் தான் இதை ஆதாரமாகக் காட்ட முடியும்.

அதாவது வெளியே வருவதால் ஏற்படும் பாதிப்பு உறுதியானதாக இருக்க வேண்டும்.

மேலும் அனைவரையும் பாதிப்பதாக இருக்க வேண்டும்.

இந்த இரு தன்மைகளும் இருந்தால் தான் மழைக்கான சலுகை பற்றிய ஹதீஸை ஆதாரமாகக் காட்ட வேண்டும்.

மழைக் காலத்தில் வீட்டில் இருந்து பள்ளிவாசலுக்கு வரும் ஒவ்வொருவரும் நனைவார்கள்.

ஒவ்வொருவரும் ஈரத்தில் சேற்றில் சகதியில் நடந்து வருவார்கள்.

மழையினால் ஏற்படும் கடுங்குளிர் ஒவ்வொருவரையும் பாதிக்கும்.

மேலும் இது ஏற்படுமா ஏற்படாதா என்று சந்தேகத்துக்கு உரியதல்ல. நிச்சயம் இந்த சிரமம் ஏற்பட்டே தீரும்.

இதனால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சலுகை அளித்தார்கள்.

ஆனால் கொரோனா என்பது பள்ளிக்கு வரும் ஒவ்வொருவரையும் பாதிக்காது. ஓரிருவரைப் பாதிக்கலாம்; அது கூட உறுதியானதல்ல.

யாருக்கும் பாதிப்பு இல்லாமலும் இருக்கலாம்.

இலட்சத்தில் ஒன்று அளவில் கூட வாய்ப்பு இல்லாத கொரோனாவைக் காரணம் காட்டி பள்ளிவாசலை மூடுவது அறிவீனமாகும்.

இவர்களின் இந்த வாதம் சரி என்றால் 365 நாட்களிலும் பள்ளிவாசலைப் பூட்டி வைக்க வேண்டும். சாதாரண நாட்களில் வெளியே வரும் இலட்சத்தில் ஒருவருக்கு ஜலதோசம் பிடிக்கலாம், ஏதாவது தொற்று ஏற்படலாம் என்று ஃபத்வா கொடுத்து விட்டு மழைக்காக சொன்ன ஹதீஸை ஆதாரமாகக் காட்டுவார்களா?.

பள்ளிவாசலைப் பூட்டுவதற்கு கொரோனாவால் பாதிப்பு ஏற்படும் என்று இம்முடிவை எடுக்கும் குவைத் அரசாங்கம் எந்தக் காரணத்துக்காகவும் யாரும் வெளியே வரக் கூடாது என்று சட்டம் போட வேண்டும்.

எல்லா நிறுவனங்களையும் முற்றிலுமாக இழுத்து மூட வேண்டும்.

ஒருவரை ஒருவர் சந்தித்தாலே கொரோனா பிடித்து விடும் என்ற காரணத்துக்காக பள்ளிவாசலைப் பூட்டினால் மேற்கண்ட அனைத்தையும் தடை செய்ய வேண்டும்.

வீட்டில் கூட ஒவ்வொருவரும் தனித்தனி அறையில் பூட்டிக் கொண்டு இருக்க வேண்டும் என்று சட்டம் போட்டிருக்க வேண்டும்.

குடும்ப வாழ்க்கையில் ஈடுபடாதீர்கள்! குழந்தைகளைக் கொஞ்சாதீர்கள் என்று சட்டம் போட வேண்டும்,

இவற்றாலும் கொரோனா தொற்ற வாய்ப்புகள் உண்டு.

அப்படி சட்டம் போடவில்லை. போடவும் மாட்டார்கள்.

கொரோனாவுக்கு எந்த அளவுக்கு அஞ்ச வேண்டும் என்பதை தொழுகை அல்லாத மற்ற விஷயங்களில் தெளிவாக அறிந்து உள்ளார்கள்.

பள்ளிவாசல் தொழுகை விஷயத்தில் மட்டும் இலட்சத்தில் ஒன்று என்ற அளவில் சாத்தியமுள்ள உறுதி செய்யப்படாத ஊகத்துக்காக பள்ளியைப் பூட்டுவது மார்க்கத்தை வளைப்பதில் தான் சேரும்.

இதன் முழுக்குற்றமும் இந்த முடிவை எடுத்த மூடர்களைத் தான் சேரும்.

பூட்டப்பட்ட காரணத்தினால் பள்ளிவாசலுக்குச் செல்ல முடியாத மக்களைச் சேராது.

இது தவறான முடிவு எங்களால் எதிர்த்து நிற்க முடியாது என்ற எண்ணத்துடன் வீட்டில் தொழுதால் அவர்களின் கூலி அல்லாஹ்விடம் கிடைத்து விடும்.

இது மார்க்கத்தில் உள்ளது தான் என்று நம்பி வீட்டில் தொழுபவர்கள் குற்றவாளிகளாவார்கள்.

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...