கொரோனாவுக்கு அஞ்சி பள்ளிவாசலுக்கு விடுமுறை சரியா?

குவைத் நாட்டின் அனைத்து பள்ளிவாசல்களிலும் ஐங்காலத் தொழுகை நிறுத்தப்பட்டுள்ளது. பாங்கு மட்டும் சொல்லப்படும்; ஜமாஅத் தொழுகை நடக்காது; எல்லோரும் வீட்டில் தொழுது கொள்ளுங்கள் என்று அறிவிப்பு செய்துள்ளது. குவைத் அரசு.

இந்தத் தடை மார்க்க அடிப்படையில் சரியானது தான் என்று சில மவ்லவிமார்கள் தமிழ் கூறும் மவ்லவிமார்கள் நியாயப்படுத்தி பதிவுகள் போட்டு வருகின்றனர்.

«901» حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ: أَخْبَرَنِي عَبْدُ الْحَمِيدِ صَاحِبُ الزِّيَادِيِّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْحَارِثِ ابْنُ عَمِّ مُحَمَّدِ بْنِ سِيرِينَ قَالَ ابْنُ عَبَّاسٍ لِمُؤَذِّنِهِ فِي يَوْمٍ مَطِيرٍ إِذَا قُلْتَ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ. فَلاَ تَقُلْ حَيَّ عَلَى الصَّلاَةِ. قُلْ صَلُّوا فِي بُيُوتِكُمْ. فَكَأَنَّ النَّاسَ اسْتَنْكَرُوا، قَالَ فَعَلَهُ مَنْ هُوَ خَيْرٌ مِنِّي، إِنَّ الْجُمُعَةَ عَزْمَةٌ، وَإِنِّي كَرِهْتُ أَنْ أُخْرِجَكُمْ، فَتَمْشُونَ فِي الطِّينِ وَالدَّحْضِ.

அப்துல்லாஹ் இப்னு அல் ஹாரிஸ் அறிவித்தார்:

‘அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ்’ என்று கூறிய பிறகு ஹய்ய அலஸ் ஸலாஹ் (தொழுகைக்கு வாருங்கள்) என்பதைக் கூறாமல் (ஸல்லூ ஃபீ புயூதிகும்)  உங்கள் வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள் என்று கூறுவீராக என்று பாங்கு சொல்பவரிடம் ஒரு மழை நாளில் இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள். (இவ்வாறு கூறியதை) மக்கள் வெறுப்பது போல் இருந்தபோது ‘என்னை விட மிகவும் சிறந்தவ(ரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர்’ என்று கூறினார்கள். நிச்சயமாக ஜும்ஆ அவசியமானது தான்; எனினும், நீங்கள் சேற்றிலும், சகதியிலும் நடந்து வந்து அதனால் உங்களுக்குச் சிரமம் தருவதை நான் விரும்பவில்லை’ என்றும் குறிப்பிட்டார்கள்.

நூல் : புகாரி 901

மழைக் காலங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளித்த இச்சலுகை வேறு காரணங்களுக்கும் பொருந்தும் என்று வாதிடுவோர் இந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்ட முடியாது.

ஒவ்வொருவரையும் பாதிக்கின்ற பாதிப்பு திட்டவட்டமாகத் தெரிகின்ற காரியங்களுக்குத் தான் இதை ஆதாரமாகக் காட்ட முடியும்.

அதாவது வெளியே வருவதால் ஏற்படும் பாதிப்பு உறுதியானதாக இருக்க வேண்டும்.

மேலும் அனைவரையும் பாதிப்பதாக இருக்க வேண்டும்.

இந்த இரு தன்மைகளும் இருந்தால் தான் மழைக்கான சலுகை பற்றிய ஹதீஸை ஆதாரமாகக் காட்ட வேண்டும்.

மழைக் காலத்தில் வீட்டில் இருந்து பள்ளிவாசலுக்கு வரும் ஒவ்வொருவரும் நனைவார்கள்.

ஒவ்வொருவரும் ஈரத்தில் சேற்றில் சகதியில் நடந்து வருவார்கள்.

மழையினால் ஏற்படும் கடுங்குளிர் ஒவ்வொருவரையும் பாதிக்கும்.

மேலும் இது ஏற்படுமா ஏற்படாதா என்று சந்தேகத்துக்கு உரியதல்ல. நிச்சயம் இந்த சிரமம் ஏற்பட்டே தீரும்.

இதனால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சலுகை அளித்தார்கள்.

ஆனால் கொரோனா என்பது பள்ளிக்கு வரும் ஒவ்வொருவரையும் பாதிக்காது. ஓரிருவரைப் பாதிக்கலாம்; அது கூட உறுதியானதல்ல.

யாருக்கும் பாதிப்பு இல்லாமலும் இருக்கலாம்.

இலட்சத்தில் ஒன்று அளவில் கூட வாய்ப்பு இல்லாத கொரோனாவைக் காரணம் காட்டி பள்ளிவாசலை மூடுவது அறிவீனமாகும்.

இவர்களின் இந்த வாதம் சரி என்றால் 365 நாட்களிலும் பள்ளிவாசலைப் பூட்டி வைக்க வேண்டும். சாதாரண நாட்களில் வெளியே வரும் இலட்சத்தில் ஒருவருக்கு ஜலதோசம் பிடிக்கலாம், ஏதாவது தொற்று ஏற்படலாம் என்று ஃபத்வா கொடுத்து விட்டு மழைக்காக சொன்ன ஹதீஸை ஆதாரமாகக் காட்டுவார்களா?.

பள்ளிவாசலைப் பூட்டுவதற்கு கொரோனாவால் பாதிப்பு ஏற்படும் என்று இம்முடிவை எடுக்கும் குவைத் அரசாங்கம் எந்தக் காரணத்துக்காகவும் யாரும் வெளியே வரக் கூடாது என்று சட்டம் போட வேண்டும்.

எல்லா நிறுவனங்களையும் முற்றிலுமாக இழுத்து மூட வேண்டும்.

ஒருவரை ஒருவர் சந்தித்தாலே கொரோனா பிடித்து விடும் என்ற காரணத்துக்காக பள்ளிவாசலைப் பூட்டினால் மேற்கண்ட அனைத்தையும் தடை செய்ய வேண்டும்.

வீட்டில் கூட ஒவ்வொருவரும் தனித்தனி அறையில் பூட்டிக் கொண்டு இருக்க வேண்டும் என்று சட்டம் போட்டிருக்க வேண்டும்.

குடும்ப வாழ்க்கையில் ஈடுபடாதீர்கள்! குழந்தைகளைக் கொஞ்சாதீர்கள் என்று சட்டம் போட வேண்டும்,

இவற்றாலும் கொரோனா தொற்ற வாய்ப்புகள் உண்டு.

அப்படி சட்டம் போடவில்லை. போடவும் மாட்டார்கள்.

கொரோனாவுக்கு எந்த அளவுக்கு அஞ்ச வேண்டும் என்பதை தொழுகை அல்லாத மற்ற விஷயங்களில் தெளிவாக அறிந்து உள்ளார்கள்.

பள்ளிவாசல் தொழுகை விஷயத்தில் மட்டும் இலட்சத்தில் ஒன்று என்ற அளவில் சாத்தியமுள்ள உறுதி செய்யப்படாத ஊகத்துக்காக பள்ளியைப் பூட்டுவது மார்க்கத்தை வளைப்பதில் தான் சேரும்.

இதன் முழுக்குற்றமும் இந்த முடிவை எடுத்த மூடர்களைத் தான் சேரும்.

பூட்டப்பட்ட காரணத்தினால் பள்ளிவாசலுக்குச் செல்ல முடியாத மக்களைச் சேராது.

இது தவறான முடிவு எங்களால் எதிர்த்து நிற்க முடியாது என்ற எண்ணத்துடன் வீட்டில் தொழுதால் அவர்களின் கூலி அல்லாஹ்விடம் கிடைத்து விடும்.

இது மார்க்கத்தில் உள்ளது தான் என்று நம்பி வீட்டில் தொழுபவர்கள் குற்றவாளிகளாவார்கள்.

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...