குறிப்பிட்ட சூழ்நிலையில் அருளப்பட்டவை பொதுவானதாக ஆகுமா?

ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் இறங்கிய குர்ஆன் வசனத்தை வேறு சந்தர்ப்பத்தில் ஆதாரமாக எடுக்கலாமா?

சமீர் அஹ்மது

பதில்:

திருக்குர்ஆனின் பல வசனங்களுக்கு அவை இறங்கிய பின்னணியும், வரலாறும் இருக்கின்றன. இவையனைத்தும் குறிப்பிட்ட சூழ்நிலையில் தான் இறங்கின. ஆனால் அந்த வசனத்தில் கூறப்படும் சட்டத்தை இன்றும் நாம் கடைப்பிடித்து வருகின்றோம்.

அப்படி கடைப்பிடிப்பதற்குத் தான் குர்ஆன் அருளப்பட்டது. ஒவ்வொரு வசனத்தையும் இது குறிப்பிட்ட சூழ்நிலையில் இறங்கியது என்று கூறி அதன் பொதுவான கருத்தை மறுத்தால் குர்ஆன் முழுவதையும் இவ்வாறு கூறி மறுத்துவிட முடியும். இதனால் குர்ஆனையே புறக்கணித்து வாழ்கின்ற நிலையே ஏற்படும்.

அவதூறு சொன்னவர்களுக்கு கசையடி கொடுக்க வேண்டும் என்ற சட்டம் ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறு சொன்னவர்கள் விஷயத்தில் தான் இறங்கியது. இதனால் இன்றைக்கு இஸ்லாமிய நாட்டில் வசிக்கும் ஒருவர் ஒரு பெண் மீது அபாண்டமாக அவதூறு சொன்னால் அவருக்கு இந்தத் தண்டனையை நிறைவேற்றுவது கூடாது என்று கூறுவது சரியாகுமா?

ஒருவர் மீது விபச்சாரக் குற்றத்தைச் சுமத்துவதாக இருந்தால் அதற்கு நான்கு சாட்சிகள் அவசியம். ஆனால் தம் மனைவி வேறு ஒருவனுடன் விபச்சாரம் செய்வதை கணவன் மட்டுமே காணுகிறான் என்றால் அவன் ஒருவன் மட்டுமே அவள் மீது குற்றம் சாட்ட முடியும். நான்கு சாட்சி இருக்க வேண்டிய அவசியமில்லை. இந்தச் சட்டம் ஷரீக் பின் சஹ்மா என்ற நபித்தோழர் விஷயத்தில் குறிப்பிட்ட சூழ்நிலையில் தான் இறங்கியது (புகாரி : 4747). எனவே தற்போது இந்தச் சட்டம் (லிஆன்) இல்லை என்று கூற முடியுமா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிறிய தந்தை அபூதாலிப் இஸ்லாத்தை ஏற்காமலேயே மரணிக்கின்றார். அவருக்காக பாவமன்னிப்புத் தேடப் போவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது இறைவன் இஸ்லாத்தை ஏற்காமல் மரணித்தவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடக் கூடாது என்ற தடை விதிக்கின்றான் (புகாரி : 4675).

எனவே இந்தச் சட்டம் குறிப்பிட்ட சூழ்நிலையில் இறங்கியதால் இஸ்லாத்தை ஏற்காமல் மரணிப்பவர்களுக்கு இன்றைக்கு பாவமன்னிப்புத் தேடலாம் என்று கூறலாமா? இது போன்று ஏராளமான கேள்விகளைக் கேட்க முடியும்.

ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் இறங்கிய வசனத்தில் கூறப்படும் சட்டத்தை வேறு இடங்களில் பொறுத்தவே கூடாது என முழுவதுமாக மறுத்துவிடக் கூடாது.

குறிப்பிட்ட சூழ்நிலையில் அருளப்பட்ட வசனம் அந்தச் சூழ்நிலைக்கு மட்டுமே உரியது என்பது உறுதியானால் அதை பொதுவானதாக ஆக்கக் கூடாது.

அப்படி இல்லாமல் இருந்தால் அந்த வசனத்தின் கருத்து எங்கெல்லாம் பொருந்துமோ அங்கெல்லாம் பயன்படுத்தலாம்.

முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்.

திருக்குர்ஆன் 3:144

மேற்கண்ட வசனம் உஹதுப் போரில் நபியவர்கள் கொல்லப்பட்டதாக வதந்தி கிளம்பிய போது இறங்கியது. முஹம்மது நபி இறந்து விட்டாலும் நீங்கள் இஸ்லாத்தில் தான் இருக்க வேண்டும் என்று இவ்வசனம் கூறுகின்றது.

முஹம்மது (ஸல்) அவர்கள் மரணிப்பவர் தான் என்ற கருத்தையும் இவ்வசனம் உள்ளடக்கியுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தவுடன் அவர்கள் மரணிக்கவில்லை என உமர் (ரலி) அவர்கள் உட்பட பலர் தவறாக நினைத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் மேற்கண்ட வசனத்தை எடுத்துக் காட்டி நபியவர்கள் இறந்து விட்டார்கள் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்துகிறார்கள் (புகாரி : 1242)

அபூபக்ர் (ரலி) அவர்கள் ஒரு சூழ்நிலையில் இறங்கிய வசனத்தை அதற்குப் பொருத்தமான வேறு ஒரு இடம் வரும் போது அங்கே பயன்படுத்தியதால் மக்களைச் சரியான நம்பிக்கையின் பக்கம் கொண்டுவர முடிந்தது. இதைப் போன்று நாமும் நபியவர்கள் காலத்தில் இறங்கிய குர்ஆன் வசனங்களை இன்றைய பிரச்சனைகளுக்கு தீர்வாகச் சுட்டிக் காட்டினால் தான் மக்கள் சரியான பாதைக்கு வர முடியும்.

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...