மோடிக்கு ஆதரவாக மகுடி ஊதும் ஜால்ராக்கள்!

மோடிதான் அடுத்த பிரதமர்; இந்தியா முழுவதும் மோடி அலை வீசுகின்றது. மோடிக்கு ஆதரவு ஊற்றெடுத்து பெருகி ஓடிக்கொண்டிருக்கின்றது என்று அநேக பில்டப்புகளை கொடுத்து ஊடகங்கள் செய்யும் அட்டூழியங்கள்தான் தற்போது அதிக பக்கங்களை ஆக்கிரமிக்கும் செய்தியாக உள்ளது.

கருத்துக் கணிப்பில் மோடிதான் முன்னணியில் உள்ளார் என்று கூறி கருத்து திணிப்பை இப்போதிருந்தே மீடியாக்கள் செய்ய ஆரம்பித்து விட்டனர். மோடி என்ற நரமாமிசப் பிரியரை பிரதமராக்காமல் ஓயமாட்டோம் என்று மீடியாக்கள் உறுதிமொழி ஏற்றதுபோல அவைகளின் செயல்பாடுகள் அமைந்து வருகின்றன.

அரியானாவில் மோடி உரையாற்றக்கூடிய நிகழ்ச்சியை தமிழ்நாட்டிலுள்ள தந்தி டிவி நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடிய அளவிற்கு மோடிக்கு ஆதரவாக மகுடி ஊதி வருகின்றனர் நமது மீடியாக்கள்.

திருச்சியில் பா.ஜ.க. சார்பாக நடைபெறவுள்ள மாநாட்டில் மோடி உரை நிகழ்த்த உள்ளார். அந்த மாநாட்டில் லட்சக்கணக்கான மக்கள் குவிய உள்ளார்கள் என்று இவர்கள் காட்டும் பில்டப்புகள் எல்லை கடந்து செல்கின்றன.

மோடிக்கு மிரட்டல் உள்ளதால் அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு தேவை; அவர் குண்டு துளைக்காத மேடையில் நின்று உரையாற்றப் போகின்றார். அவருக்கு ரஜினி ஆதரவு தரப்போகின்றார்; இதற்கென தனியாக பாடல் ரிங்டோன்களை பா.ஜ.க. அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து தனியாக பிரச்சார சிடிக்கள் வெளியிடப்பட்டுள்ளன; சாமானியர்கள்; தொழிலாளர்கள்; தொழில் அதிபர்கள் என அனைத்து தரப்பு மக்களுடைய ஆதரவும் மோடிக்குத்தான் என்று இவர்கள் மோடியை புகழ்ந்து தள்ளி எழுதுவதைக் காணும் போது தமிழகத்தையும் குஜராத்தாக மாற்றாமல் ஓய மாட்டார்கள் போலும் என்ற சந்தேகம் நமக்கு எழும்புகின்றது.

குஜராத் போன்று ஒட்டுமொத்த இந்தியாவையும் மாற்றுவதுதான் இவர்களுக்கு விருப்பமாம். ஆம்! குஜராத்தில் எப்படி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களை மோடி கருவறுத்து இரத்த ஆறு ஓட்டினாரோ அதுபோல இந்தியா முழுவதும் இரத்த ஆறு ஓடவிடவேண்டும் என காவிக்கரை படிந்த மீடியாக்கள் எதிர்பார்க்கின்றனர் போலும்.

மோடி கலந்து கொண்டு உரையாற்றவுள்ள திருச்சி மாநாட்டிற்கு வருகை தருவதற்காக ஒரு லட்சம் பார்வையாளர்கள் ஆனலைன் வாயிலாக தங்களது பெயர்களை 10ரூபாய் பணம் கட்டி பதிவு செய்துள்ளனர் என்று கதையளந்தது தான் இதில் உச்சகட்ட ஜால்ராவாக இருந்தது.

1லட்சம பேர் அளவிற்கு ஆனலைன் வாயிலாக இவர்களது மாநாட்டிற்கு வருகை தர பதிவு செய்யக்கூடிய அளவிற்கா இவர்களது தொண்டர்கள் கணினியுடனும், இணையதளத்துடனும் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். அந்த அளவிற்கா அனைத்து விஷயங்களையும் இணையதளத்தில் அப்டேட்டாக இவர்கள் வைத்துள்ளார்கள் என்று ஆச்சர்யப்பட்டுப்போய் அவர்களது இணையதளத்தை விசிட் செய்தோம்.

பிஜேபியின் தமிழக இணையதளத்தில் நிகழ்ச்சிகள் என்ற பகுதியில் அவர்களது அன்றாட நிகழ்ச்சிகள் அப்டேட் செய்யப்பட்டு வருகின்றன. அதில் கடைசியாக அப்டேட் செய்யப்பட்ட நிகழ்ச்சியை பார்த்தால் காரித்துப்பி விடுவீர்கள்.

ஆம்! கடந்த 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி மின்வெட்டைக் கண்டித்து மாணவர்களிடம் கையெழுத்து வாங்கிய செய்திதான் கடைசியாக அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

அதாவது கிட்டத்தட்ட ஒன்னே முக்கால் ஆண்டுகளுக்கு முன்பாக அப்டேட் செய்யப்பட்டதுதான் இவர்களது லேட்டஸ்ட் செய்தியாம்.

இந்த லட்சணத்தில் தான் இவர்களது இணையதள அப்டேட் இருக்கின்றது என்றால் இத்தகைய சூரப்புலிகள் தான் ஆன்லைன் வாயிலாக ஒரு லட்சம் பேர்களை பதிவு செய்துள்ளார்களாம். கேட்பதற்கே மிகவும் வேடிக்கையாக இருக்கின்றது.

இப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்களைத் தான் ஒன்றுமில்லாத விஷயங்களைக் கூறி, பொய் செய்திகளைப் புனைந்து மிகப்பெரிய சாதனை மன்னர்களைப் போல காட்ட முயல்கின்றனர். இதிலிருந்த இந்த மீடியாக்களின் கோர புத்தி தெளிவாகின்றது.

மோடியை கதாநாயகனாகச் சித்தரிக்கும் இதே வேலையில் அந்த நரபலி நாயகன் செய்த மிருக வெறிச்செயல்களை, இரத்தம் குடித்த கொடூரத்தை வசதியாக மறைத்து இந்த காட்டுமிராண்டியை மனித நேய விரும்பியைப்போல காட்டி மனித நேயத்தை குழிதோண்டி புதைக்கும் வேலையையும் இந்த மீடியாக்கள் செய்து வருகின்றனர்.

இவற்றையெல்லாம் காணும்போது இதற்கு முன்பு வாஜ்பேய் ஆட்சிக்காலத்தில் இந்தியா ஒளிர்கின்றது என்று சொல்லி காட்டப்பட்ட பில்டப்புகள் தான் நமக்கு ஞாபகத்திற்கு வருகின்றன.

இந்தியா ஒளிர்கின்றது; நாடு முழுவதும் வாஜ்பேயி அலை வீசுகின்றது. வாஜ்பேயிதான் அடுத்த பிரதமர். இவரைப் போல ஒரு சாது கிடையாது; இவர்தான் உலக அளவில் இந்தியாவைத் தூக்கி நிறுத்தினார் என்றெல்லாம் சொல்லி தேர்தல் பிரச்சாரம் செய்தனர். கடைசியில் வாஜ்பேயி மண்ணைக் கவ்வினார். பா.ஜ.க. படுதோல்வி அடைந்தது. அது போலத்தான் இவர்கள் மோடிக்கு கொடுக்கும் பில்டப்புகளும் இறைவனின் அருளால் புஷ்வாணமாகிப் போகவுள்ளது என்பதை தற்போதைக்கு சொல்லி வைக்கின்றோம்.

23.09.2013. 2:44 AM

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...