நர்தஷேர் என்பது தாயம் என்று நபித்தோழர்கள் விளக்கம் கொடுத்துள்ளார்களா?

நர்தஷேர் எனும் விளையாட்டைத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்ததாக ஹதீஸ் உள்ளது.

صحيح مسلم

10 – (2260) حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ سُفْيَانَ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ لَعِبَ بِالنَّرْدَشِيرِ، فَكَأَنَّمَا صَبَغَ يَدَهُ فِي لَحْمِ خِنْزِيرٍ وَدَمِهِ»

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பகடைக்காய் ஆட்டம் (நர்தஷீர்)  விளையாடியவர், தமது கையைப் பன்றி இறைச்சியிலும், இரத்தத்திலும் தோய்த்தவரைப் போன்றவர் ஆவார்.

இதை புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் : 4549.

இந்த ஹதீஸ் அடிப்படையில் நர்தஷேர் எனும் விளையாட்டு ஹராம் என்பதில் சந்தேகம் இல்லை. நர்தஷேர் என்பது நபிகள் காலத்தில் இருந்து பின்னர் இல்லாமல் போய்விட்ட ஒரு விளயாட்டாகும். அது தற்காலத்தில் உள்ள எந்த விளையாட்டையும் குறிக்காது என்று நாம் விளக்கி இருந்தோம்.

நர்தஷேர் என்பது தாயத்தைக் குறிக்கும் என்று பலர் மொழி பெயர்த்துள்ளனர். அதற்கு ஆதாரம் இல்லை என்றும் நாம் குறிப்பிட்டு இருந்தோம்.

அந்த ஆக்கத்தைக் காண

https://onlinepj.in/index.php/usual-habit-cultures/usual-habits/entertainment/thayam-pakadai-vilayadalama

மேலே உள்ள ஆக்கத்தை வாசித்து விட்டு இந்த மறுப்பை வாசிக்கவும்

நர்தஷேர் என்பது தாயம் விளையாட்டைத்தான் குறிக்கும் என்று நபித்தோழர்களே விளக்கம் அளித்துள்ளதாக சில செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.

حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ‏:‏ حَدَّثَنَا مُعْتَمِرٌ قَالَ‏:‏ سَمِعْتُ عَبْدَ الْمَلِكِ، عَنْ أَبِي الأَحْوَصِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ قَالَ‏:‏ إِيَّاكُمْ وَهَاتَيْنِ الْكَعْبَتَيْنِ الْمَوْسُومَتَيْنِ اللَّتَيْنِ يُزْجَرَانِ زَجْرًا، فَإِنَّهُمَا مِنَ الْمَيْسِرِ‏.‏

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) கூறுகிறார்கள்:

(புள்ளிகளால்) அடையாளம் இடப்பட்ட இரண்டு சதுரங்கத்தை (Dice, Cube) (الْكَعْبَتَيْنِ)  குறித்து எச்சரிக்கை செய்கிறேன். அது சூதட்டாத்தின் ஒரு பகுதியாகும்.

(அல்-அதாப் அல்-முப்ராத் 1270)

நர்தஷேர் என்பது தாயத்தைக் குறிக்கும் என்று நபித்தோழர்கள் விளக்கம் கொடுத்துள்ளதாக இதை எடுத்துக் காட்டுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன நர்தஷேர் என்பதற்கு தாயம் என்பது தான் விளக்கம் என இப்னு மஸ்வூத் (ரலி) கூறவில்லை. தாயம் விளயாடக் கூடாது என்று தான் இதில் கூறுகிறார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன ஒரு விளயாட்டு இது தான் என்று நபித்தோழர் விளக்கம் கொடுத்தால் அப்போது அது ஹதீஸ் தரத்துக்கு வந்து விடும்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றுக்கு விளக்கமாக இல்லாமல் சொந்தமாக நபித்தோழர் ஒரு சட்டம் சொன்னால் அது ஆதாரமாக ஆகாது.

இந்தச் செய்தியில் தாயம் விளையாடக் கூடாது என்று இப்னு மஸ்வூத் (ரலி) சொந்தக் கருத்தைக் கூறியுள்ளார். இது மார்க்க ஆதாரமாக ஆகாது.

மேலும் இது சூதாட்டம் என்று இறுதியில் சொல்கிறார். சூதாட்டம் என்றால் பணம் வைத்து விளையாடுவது தான்.

பணம் வைத்து விளையாடினால் அந்தக் காரணத்துக்காக அதை நாமும் ஹராம் என்றே நமது ஆய்வில் கூறியுள்ளோம்.

பணம் வைத்து விளையாடும் அம்சம் கொண்ட ஒரு விளையாட்டை சூது என்ற காரணத்தால் ஹராம் என்று சொல்லலாம்.

எனவே நர்தஷேர் என்பதற்கு விளக்கமாக இது சொல்லப்படவில்லை.

இது நமது கட்டுரைக்கு மறுப்பாக ஆகாது.

அடுத்து மற்றொரு செய்தியையும் எடுத்துக் காட்டுகிறார்கள்.

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عُمَرَ، قَالَ‏:‏ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ حَبِيبٍ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ‏:‏ اللاَّعِبُ بِالْفُصَّيْنِ قِمَارًا كَآكِلِ لَحْمِ الْخِنْزِيرِ، وَاللاَّعِبُ بِهِمَا غَيْرَ قِمَارٍ كَالْغَامِسِ يَدَهُ فِي دَمِ خِنْزِيرٍ‏.‏

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்:

யார் பந்தயம் கட்டி தாயம் (بِالْفُصَّيْنِ) விளையாடுகிறாரோ அவர் பன்றியின் இறைச்சியைச் சாப்பிட்டவரை போன்றவராவார்.

யார் பந்தயம் இல்லாமல் தாயம் விளையாடுகிறாரோ அவர் பன்றியின் இரத்தத்தில் கையை நனைத்தவரைப் போன்றவராவார்.

(அல்-அதாப் அல்-முப்ராத் 1277)

மேற்கண்ட இரண்டு செய்தியிலும் பகடைக்காய் தாயம் விளையாட்டை குறிக்க நர்தஷீர் என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. நேரடியாக (சதுரங்கம், Dice, Cube)

(بِالْفُصَّيْنِ – பில்fபுஸ்ஸைனி)

(الْكَعْبَتَيْنِ – அல்கஹ்பதனி)

என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் (بِالْفُصَّيْنِ – பில்fபுஸ்ஸைனி) சதுரங்கம் Dice விளையாடியவர் பன்றியின் இறைச்சியில் கையை நனைத்தவரை போன்றவர் ஆவார் என்று கூறுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் நர்தஷீர் (نَّرْدَشِير) விளையாடியவர் பன்றியின் இரத்தத்தில் கையை நனைத்தவரை போன்றவர் ஆவார் என்று கூறுகிறார்கள்.

இதிலிருந்து நபி (ஸல்) அவர்கள்

நர்தஷீர் (نَّرْدَشِير) என்று கூறியது

பில்fபுஸ்ஸைனி ( بِالْفُصَّيْنِ)

பகடைக்காய் தாயம் விளையாட்டை தான் குறிக்கிறது என்பதை தெளிவாக விளங்க முடிகிறது.

இது அடுத்த ஆதாரமாக வைக்கப்படுகிறது.

அப்துல்லாஹ் பின் அம்ர் அவர்கள் தாயம் விளையாடுவது பற்றிய தனது சொந்தக் கூற்றைத் தான் இங்கே சொல்கிறார். நர்தஷேர் என்பதற்கு விளக்கமாக இதைச் சொல்லவில்லை. மறுப்பு சொன்னவர்களும் மேற்கண்ட இரண்டு செய்தியிலும் பகடைக்காய் தாயம் விளையாட்டை குறிக்க நர்தஷீர் என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை என்று எழுதி இதை ஒப்புக் கொண்டுள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லாத ஒரு விளயாட்டு பற்றித்தான் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) கூறுகிறார். நர்தஷேர் என்பதற்கு தாயம் தான் விளக்கம் என்று அவர் சொல்லவில்லை.

எந்த அடிப்படையில் இதை விளக்கம் என்கிறார்கள் என்று கவனியுங்கள். நர்தஷேர் என்பதற்கும் பன்றி இறைச்சியில் கை வைப்பது என சொல்லப்பட்டுள்ளதாம். தாயம் விளயாட்டுக்கும் பன்றி இறைச்சியில் கை வைப்பது சொல்லப்பட்டுள்ளதாம்  எனவே இது நர்த்ஷேர் என்பதற்கு விளக்கமாக உள்ளதாம்.

கோள் சொன்னால் நரகம் கிடைக்கும்; புறம் பேசினால் நரகம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டால் இரண்டிலும் நரகம் கிடைக்கும் என்று உள்ளதால் புறம் என்றால் கோள் என்பது விளக்கம் என்று அறிவுடையோ சொல்ல மாட்டார்கள்.

கொலை செய்தால் நிரந்தர நரகம்; வட்டி வாங்கினால் நிரந்தர நரகம் என்று சொன்னால் இரண்டிலும் நிரந்தர நரகம் என்று உள்ளதால் கொலை என்றால் வட்டி என்று அர்த்தம் என்று சொல்வது ஆய்வா?

எனவே இந்த ஆய்வின் அடிப்படையே தவறாக உள்ளது.

அது மட்டுமின்றி நபிகள் நாயகம் சொன்ன அதே வாசகம் இதில் இல்லை.

நர்தஷேர் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னது என்ன?

பன்றி இறைச்சியிலும், இரத்தத்திலும் தோய்த்தவரைப் போன்றவர்- இதுதான் நபிகள் சொன்னது.

நர்தஷேர் என்ற விளையாட்டு குறித்து பேசிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பணம் வைத்து விளையாடினாலும் பணம் வைத்து விளையாடாவிட்டாலும் பன்றியின் இறைச்சியில் கை வைப்பது என்று பொதுவாக சொல்லி உள்ளனர்.

இந்த நபித்தோழர் கூற்றில் இதே போல் தான் உள்ளதா?

யார் பந்தயம் கட்டி தாயம் (بِالْفُصَّيْنِ) விளையாடுகிறாரோ அவர் பன்றியின் இறைச்சியைச் சாப்பிட்டவரை போன்றவராவார்.

யார் பந்தயம் இல்லாமல் தாயம் விளையாடுகிறாரோ அவர் பன்றியின் இரத்தத்தில் கையை நனைத்தவரைப் போன்றவராவார்.

இதுதான் நபித்தோழரின் கூற்று

இந்தச் செய்தியில் பந்தயம் கட்டி விளையாடினால் தான் பன்றியின் இறைச்சியில் கை வைப்பது போல் என்றும் பந்தயம் இல்லாமல் விளையாடினால் பன்றியின் இரத்தத்தில் கை வைப்பது போல் என்றும் வித்தியாசப்படுத்தி சொல்லப்பட்டுள்ளது.

நர்தஷெர் விளையாட்டை பந்தயம் கட்டினாலும் பந்தயம் கட்டாவிட்டாலும் பன்றியின் இறைச்சியிலும் இரத்தத்திலும் கை வைப்பது போல் என்று கூறி சம நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இறைச்சியிலும் இரத்தத்திலும் ஒரு சேர கை வைப்பது என்று நபிகள் கூற்று அமைந்துள்ளது.

எனவே இது அந்த ஹதீஸுக்கு விளக்கமாக ஆகாது.

ஹதீஸில் சொல்லப்படாத தாயம் குறித்து தனது நிலைபாட்டை சொந்தக் கருத்தாகச் சொல்லியுள்ளார்.

பந்தயம் வைத்து விளையாடினால் சூது என்ற அடிப்படையில் அது ஹராம் என்பதால் முற்பகுதியை நாம் ஏற்றுக் கொள்ளலாம்.

பந்தயம் இல்லாமல் பொழுது போக்காக விளையாடினால் அதை பன்றியின் இரத்தத்தில் கை வைப்பது என்பது நபித்தோழரின் சொந்தக் கருத்தாகும். அல்லாஹ்வும் அவனது தூதரும் ஹராமாக ஆக்காத ஒன்றை ஹராமாக ஆக்குவதாகும்.

பந்தயம் இல்லாமல் விளையாடினால் அது சீட்டுக்குலுக்கிப் போடுதல் போன்ற நிலையில் தான் வரும் , அதை ஹராம் என்று சொல்ல எந்த முகாந்திரமுமில்லை.

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...