நர்தஷேர் என்பது தாயம் என்று நபித்தோழர்கள் விளக்கம் கொடுத்துள்ளார்களா?

நர்தஷேர் எனும் விளையாட்டைத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்ததாக ஹதீஸ் உள்ளது.

صحيح مسلم

10 – (2260) حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ سُفْيَانَ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ لَعِبَ بِالنَّرْدَشِيرِ، فَكَأَنَّمَا صَبَغَ يَدَهُ فِي لَحْمِ خِنْزِيرٍ وَدَمِهِ»

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பகடைக்காய் ஆட்டம் (நர்தஷீர்)  விளையாடியவர், தமது கையைப் பன்றி இறைச்சியிலும், இரத்தத்திலும் தோய்த்தவரைப் போன்றவர் ஆவார்.

இதை புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் : 4549.

இந்த ஹதீஸ் அடிப்படையில் நர்தஷேர் எனும் விளையாட்டு ஹராம் என்பதில் சந்தேகம் இல்லை. நர்தஷேர் என்பது நபிகள் காலத்தில் இருந்து பின்னர் இல்லாமல் போய்விட்ட ஒரு விளயாட்டாகும். அது தற்காலத்தில் உள்ள எந்த விளையாட்டையும் குறிக்காது என்று நாம் விளக்கி இருந்தோம்.

நர்தஷேர் என்பது தாயத்தைக் குறிக்கும் என்று பலர் மொழி பெயர்த்துள்ளனர். அதற்கு ஆதாரம் இல்லை என்றும் நாம் குறிப்பிட்டு இருந்தோம்.

அந்த ஆக்கத்தைக் காண

https://onlinepj.in/index.php/usual-habit-cultures/usual-habits/entertainment/thayam-pakadai-vilayadalama

மேலே உள்ள ஆக்கத்தை வாசித்து விட்டு இந்த மறுப்பை வாசிக்கவும்

நர்தஷேர் என்பது தாயம் விளையாட்டைத்தான் குறிக்கும் என்று நபித்தோழர்களே விளக்கம் அளித்துள்ளதாக சில செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.

حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ‏:‏ حَدَّثَنَا مُعْتَمِرٌ قَالَ‏:‏ سَمِعْتُ عَبْدَ الْمَلِكِ، عَنْ أَبِي الأَحْوَصِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ قَالَ‏:‏ إِيَّاكُمْ وَهَاتَيْنِ الْكَعْبَتَيْنِ الْمَوْسُومَتَيْنِ اللَّتَيْنِ يُزْجَرَانِ زَجْرًا، فَإِنَّهُمَا مِنَ الْمَيْسِرِ‏.‏

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) கூறுகிறார்கள்:

(புள்ளிகளால்) அடையாளம் இடப்பட்ட இரண்டு சதுரங்கத்தை (Dice, Cube) (الْكَعْبَتَيْنِ)  குறித்து எச்சரிக்கை செய்கிறேன். அது சூதட்டாத்தின் ஒரு பகுதியாகும்.

(அல்-அதாப் அல்-முப்ராத் 1270)

நர்தஷேர் என்பது தாயத்தைக் குறிக்கும் என்று நபித்தோழர்கள் விளக்கம் கொடுத்துள்ளதாக இதை எடுத்துக் காட்டுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன நர்தஷேர் என்பதற்கு தாயம் என்பது தான் விளக்கம் என இப்னு மஸ்வூத் (ரலி) கூறவில்லை. தாயம் விளயாடக் கூடாது என்று தான் இதில் கூறுகிறார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன ஒரு விளயாட்டு இது தான் என்று நபித்தோழர் விளக்கம் கொடுத்தால் அப்போது அது ஹதீஸ் தரத்துக்கு வந்து விடும்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றுக்கு விளக்கமாக இல்லாமல் சொந்தமாக நபித்தோழர் ஒரு சட்டம் சொன்னால் அது ஆதாரமாக ஆகாது.

இந்தச் செய்தியில் தாயம் விளையாடக் கூடாது என்று இப்னு மஸ்வூத் (ரலி) சொந்தக் கருத்தைக் கூறியுள்ளார். இது மார்க்க ஆதாரமாக ஆகாது.

மேலும் இது சூதாட்டம் என்று இறுதியில் சொல்கிறார். சூதாட்டம் என்றால் பணம் வைத்து விளையாடுவது தான்.

பணம் வைத்து விளையாடினால் அந்தக் காரணத்துக்காக அதை நாமும் ஹராம் என்றே நமது ஆய்வில் கூறியுள்ளோம்.

பணம் வைத்து விளையாடும் அம்சம் கொண்ட ஒரு விளையாட்டை சூது என்ற காரணத்தால் ஹராம் என்று சொல்லலாம்.

எனவே நர்தஷேர் என்பதற்கு விளக்கமாக இது சொல்லப்படவில்லை.

இது நமது கட்டுரைக்கு மறுப்பாக ஆகாது.

அடுத்து மற்றொரு செய்தியையும் எடுத்துக் காட்டுகிறார்கள்.

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عُمَرَ، قَالَ‏:‏ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ حَبِيبٍ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ‏:‏ اللاَّعِبُ بِالْفُصَّيْنِ قِمَارًا كَآكِلِ لَحْمِ الْخِنْزِيرِ، وَاللاَّعِبُ بِهِمَا غَيْرَ قِمَارٍ كَالْغَامِسِ يَدَهُ فِي دَمِ خِنْزِيرٍ‏.‏

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்:

யார் பந்தயம் கட்டி தாயம் (بِالْفُصَّيْنِ) விளையாடுகிறாரோ அவர் பன்றியின் இறைச்சியைச் சாப்பிட்டவரை போன்றவராவார்.

யார் பந்தயம் இல்லாமல் தாயம் விளையாடுகிறாரோ அவர் பன்றியின் இரத்தத்தில் கையை நனைத்தவரைப் போன்றவராவார்.

(அல்-அதாப் அல்-முப்ராத் 1277)

மேற்கண்ட இரண்டு செய்தியிலும் பகடைக்காய் தாயம் விளையாட்டை குறிக்க நர்தஷீர் என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. நேரடியாக (சதுரங்கம், Dice, Cube)

(بِالْفُصَّيْنِ – பில்fபுஸ்ஸைனி)

(الْكَعْبَتَيْنِ – அல்கஹ்பதனி)

என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் (بِالْفُصَّيْنِ – பில்fபுஸ்ஸைனி) சதுரங்கம் Dice விளையாடியவர் பன்றியின் இறைச்சியில் கையை நனைத்தவரை போன்றவர் ஆவார் என்று கூறுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் நர்தஷீர் (نَّرْدَشِير) விளையாடியவர் பன்றியின் இரத்தத்தில் கையை நனைத்தவரை போன்றவர் ஆவார் என்று கூறுகிறார்கள்.

இதிலிருந்து நபி (ஸல்) அவர்கள்

நர்தஷீர் (نَّرْدَشِير) என்று கூறியது

பில்fபுஸ்ஸைனி ( بِالْفُصَّيْنِ)

பகடைக்காய் தாயம் விளையாட்டை தான் குறிக்கிறது என்பதை தெளிவாக விளங்க முடிகிறது.

இது அடுத்த ஆதாரமாக வைக்கப்படுகிறது.

அப்துல்லாஹ் பின் அம்ர் அவர்கள் தாயம் விளையாடுவது பற்றிய தனது சொந்தக் கூற்றைத் தான் இங்கே சொல்கிறார். நர்தஷேர் என்பதற்கு விளக்கமாக இதைச் சொல்லவில்லை. மறுப்பு சொன்னவர்களும் மேற்கண்ட இரண்டு செய்தியிலும் பகடைக்காய் தாயம் விளையாட்டை குறிக்க நர்தஷீர் என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை என்று எழுதி இதை ஒப்புக் கொண்டுள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லாத ஒரு விளயாட்டு பற்றித்தான் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) கூறுகிறார். நர்தஷேர் என்பதற்கு தாயம் தான் விளக்கம் என்று அவர் சொல்லவில்லை.

எந்த அடிப்படையில் இதை விளக்கம் என்கிறார்கள் என்று கவனியுங்கள். நர்தஷேர் என்பதற்கும் பன்றி இறைச்சியில் கை வைப்பது என சொல்லப்பட்டுள்ளதாம். தாயம் விளயாட்டுக்கும் பன்றி இறைச்சியில் கை வைப்பது சொல்லப்பட்டுள்ளதாம்  எனவே இது நர்த்ஷேர் என்பதற்கு விளக்கமாக உள்ளதாம்.

கோள் சொன்னால் நரகம் கிடைக்கும்; புறம் பேசினால் நரகம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டால் இரண்டிலும் நரகம் கிடைக்கும் என்று உள்ளதால் புறம் என்றால் கோள் என்பது விளக்கம் என்று அறிவுடையோ சொல்ல மாட்டார்கள்.

கொலை செய்தால் நிரந்தர நரகம்; வட்டி வாங்கினால் நிரந்தர நரகம் என்று சொன்னால் இரண்டிலும் நிரந்தர நரகம் என்று உள்ளதால் கொலை என்றால் வட்டி என்று அர்த்தம் என்று சொல்வது ஆய்வா?

எனவே இந்த ஆய்வின் அடிப்படையே தவறாக உள்ளது.

அது மட்டுமின்றி நபிகள் நாயகம் சொன்ன அதே வாசகம் இதில் இல்லை.

நர்தஷேர் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னது என்ன?

பன்றி இறைச்சியிலும், இரத்தத்திலும் தோய்த்தவரைப் போன்றவர்- இதுதான் நபிகள் சொன்னது.

நர்தஷேர் என்ற விளையாட்டு குறித்து பேசிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பணம் வைத்து விளையாடினாலும் பணம் வைத்து விளையாடாவிட்டாலும் பன்றியின் இறைச்சியில் கை வைப்பது என்று பொதுவாக சொல்லி உள்ளனர்.

இந்த நபித்தோழர் கூற்றில் இதே போல் தான் உள்ளதா?

யார் பந்தயம் கட்டி தாயம் (بِالْفُصَّيْنِ) விளையாடுகிறாரோ அவர் பன்றியின் இறைச்சியைச் சாப்பிட்டவரை போன்றவராவார்.

யார் பந்தயம் இல்லாமல் தாயம் விளையாடுகிறாரோ அவர் பன்றியின் இரத்தத்தில் கையை நனைத்தவரைப் போன்றவராவார்.

இதுதான் நபித்தோழரின் கூற்று

இந்தச் செய்தியில் பந்தயம் கட்டி விளையாடினால் தான் பன்றியின் இறைச்சியில் கை வைப்பது போல் என்றும் பந்தயம் இல்லாமல் விளையாடினால் பன்றியின் இரத்தத்தில் கை வைப்பது போல் என்றும் வித்தியாசப்படுத்தி சொல்லப்பட்டுள்ளது.

நர்தஷெர் விளையாட்டை பந்தயம் கட்டினாலும் பந்தயம் கட்டாவிட்டாலும் பன்றியின் இறைச்சியிலும் இரத்தத்திலும் கை வைப்பது போல் என்று கூறி சம நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இறைச்சியிலும் இரத்தத்திலும் ஒரு சேர கை வைப்பது என்று நபிகள் கூற்று அமைந்துள்ளது.

எனவே இது அந்த ஹதீஸுக்கு விளக்கமாக ஆகாது.

ஹதீஸில் சொல்லப்படாத தாயம் குறித்து தனது நிலைபாட்டை சொந்தக் கருத்தாகச் சொல்லியுள்ளார்.

பந்தயம் வைத்து விளையாடினால் சூது என்ற அடிப்படையில் அது ஹராம் என்பதால் முற்பகுதியை நாம் ஏற்றுக் கொள்ளலாம்.

பந்தயம் இல்லாமல் பொழுது போக்காக விளையாடினால் அதை பன்றியின் இரத்தத்தில் கை வைப்பது என்பது நபித்தோழரின் சொந்தக் கருத்தாகும். அல்லாஹ்வும் அவனது தூதரும் ஹராமாக ஆக்காத ஒன்றை ஹராமாக ஆக்குவதாகும்.

பந்தயம் இல்லாமல் விளையாடினால் அது சீட்டுக்குலுக்கிப் போடுதல் போன்ற நிலையில் தான் வரும் , அதை ஹராம் என்று சொல்ல எந்த முகாந்திரமுமில்லை.

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...