நதிநீர் இணைப்பு சாத்தியமா?

நதிநீர் இணைப்பு சாத்தியமா? அப்படி இணைத்தால் அது மக்களுக்கு பயன்படுமா? ஏழைகளுக்கு ஒரு ரூபாய் கூட செலவு செய்யாத சினிமா கூத்தாடிகள் எல்லாம் நதிநீர் இணைப்பிற்கு ஒரு கோடி ரூபாய் தருவதாகச் சொல்கின்றார்களே! இதன் உண்மை நிலை என்ன?

– ஆரிஃப் ராஜா, மங்கலம்பேட்டை.

நதிநீர் இணைப்பு சாத்தியமா என்றால் கொள்கை அளவில் அது சாத்தியம் தான் என்றாலும், இந்தியாவில் அது சாத்தியப்படாது. பெரிய அளவில் பொருளதாராத்தைச் செலவிட்டு தண்ணீர் பாய்ந்து செல்லும் வழிகளை ஏற்படுத்தினால் நதிகள் இணைந்துவிடும். ஆனால் நமது நாட்டு மக்கள் மொழி உணர்வின் அடிப்படையிலும், மாநில உணர்வின் அடிப்படையிலும் வெறியூட்டப்பட்டு உள்ளதால், நமது நாட்டுக்கு இது சாத்தியமாகாது. மேலும் உலகில் உள்ள நாடுகளில் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடிக்க திராணியில்லாத நாடுகளில் நமது நாடு முதலிடம் பிடித்துள்ளதாலும், இது சாத்தியமாகாது.

கர்நாடகாவின் நதியை அன்றைய மன்னர்கள் இங்குள்ள காவிரியுடன் இணைத்தார்கள். அதுபோல் கேரளாவின் முல்லைப் பெரியாறு மற்றும் ஆந்திராவின் பாலாறு உள்ளிட்ட நதிகள் தமிழகத்துடன் அன்றைக்கு இணைக்கப்பட்டன. ஆனால் இன்று நிலைமை என்னவென்பதை தமிழக மக்கள் அனுபவித்து வருகிறார்கள். வெள்ளம் பெருக்கெடுத்து கர்நாடக மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்னும் போது தான் தண்ணீரைத் திறந்துவிட்டு தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள். மற்ற நேரங்களில் அணைக்கு மேல் அணை கட்டி தமக்கே சொந்தம் கொண்டாடுகின்றனர். முல்லைப் பெரியாறு, பாலாறு ஆகியவற்றின் கதையும் இப்படித்தான் உள்ளது.

உறுதிமிக்க சட்டத்தினை தாட்சண்யம் இல்லாமல் கடைப்பிடிக்கும் ஒரு ஆட்சி இருந்தால், இந்தப் பிரச்சினைக்கு எப்போதோ முடிவு கட்டப்பட்டிருக்கும். அத்தகைய திராணி ஆள்கின்ற எந்தக் கட்சிக்கும் இல்லை. கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ்காரன் தண்ணீரை விடாதே என்கிறான். தமிழகத்தில் உள்ள காங்கிரஸ்காரன் தண்ணீரைத் திறந்துவிடு என்கிறான். பா.ஜ.க. கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட அனைத்து தேசியக் கட்சிகளின் நிலையும் இதுதான். இத்தகைய மக்களையும் இத்தகைய முதுகெலும்பு இல்லாத ஆட்சியையும் இத்தகைய இரட்டை வேடம் போடும் கட்சிகளையும் கொண்ட நாட்டில் நதிகளை எப்படி இணைக்க முடியும்?

உத்தரப்பிரதேசத்தில் தண்ணீர் செல்லும் பாதையை ஆழப்படுத்தும் வரை அந்த மாநில மக்கள் மவுனமாக இருப்பார்கள். அடுத்த மாநிலத்திற்குள் நதியைக் கொண்டு செல்லும் வேலையை ஆரம்பித்தவுடன் எல்லா கட்சிகளும் மக்களைத் தூண்டிவிட்டு போராட்டம் நடத்துவார்கள்.

தப்பித்தவறி கங்கையைக் கொண்டு வந்து காவிரியில் இணைத்து விட்டாலும், வெள்ளம் ஏற்பட்டால் மட்டுமே கங்கை நீர் காவிரியில் கலக்கும். இல்லாவிட்டால் அணைகள் கட்டி தங்களுடைய மாநிலத்திற்குத் தான் பயன்படுத்தப்படும் என்று வடக்கு-தெற்கு வெறி ஊட்டப்படும். மொழி வெறியும் மாநில வெறியும் ஊட்டப்படும். செலவு செய்த பல கோடிகளும் பாழாய்ப் போய்விடும். எனவே இது நடைமுறையில் சாத்தியமாகாது. சாத்தியமானாலும் அதனால் பயன் ஏற்படாது. மாறாக வெள்ள அபாய காலங்களில் தமிழகம் வடிகாலாகவே பயன்படும். அதனால் இங்கே பேரிழப்புகள் ஏற்படும் என்பதுதான் உண்மை நிலை.

நடிகர்கள் ஒரு கோடி கொடுப்பதாகச் சொல்கிறீர்கள். ரஜினிகாந்த் என்ற நடிகரைப் பற்றித்தான் நீங்கள் கேட்கிறீர்கள். கர்நாடகம் தண்ணீர் விட மறுத்த போது நடிகர்கள் தங்களது இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக நெய்வேலியில் போராட்டம் நடத்தினார்கள். நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட திரைத் துறையினர் பலர் திரளாக அதில் கலந்து கொண்டனர். ஆனால் கர்நாடகாவைச் சேர்ந்த ரஜினிகாந்த் மட்டும் அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. கர்நாடகாவைக் கண்டிக்கவில்லை. அவர் கன்னடர் என்பது மட்டும் காரணமில்லை. தமிழர்களிடம் சம்பாதித்து கர்நாடகாவில் வாங்கிக் குவித்துள்ள சொத்துக்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் அம்மாநிலத்தைக் கண்டிக்கவில்லை.

இதனால் மக்களிடம் ஏற்பட்ட வெறுப்பைச் சரி செய்வதற்காக தனியாக உண்ணாவிரத நாடகம் நடத்தி, நதிகளை இணைத்தால் ஒரு கோடி தருவதாகக் கூறி பிரச்சினையை திசை திருப்பினார். நதிகளை இணைக்க முடியாது என்று தெரிந்திருந்தும், தனது துரோகத்தை மறைக்க அவர் அடித்த ஸ்டண்டுதான் அது.

ஒரு பேச்சுக்கு நதிநீர் இணைப்பு வேலை ஆரம்பமானாலும், அவர் ஒரு கோடி கொடுக்க மாட்டார். கொடுத்த வாக்குறுதியை மீறும் நடிகர்களில் ரஜினி முதலிடத்தில் இருக்கிறார். தனது மகளின் திருமணத்திற்கு ஏழை ரசிகர்கள் வரவேண்டாம் என்று அறிவித்து, தனக்குச் சமமான பிரமுகர்களை மட்டும் அழைத்து நடத்தினார். இதனால் ரசிகர்கள் கொந்தளித்துப் போனார்கள். இந்த அயோக்கியனுக்காகவா உழைத்தோம் என்று நொந்து போனார்கள்.

எனது ரசிகர்கள் மனம் குளிரும் வகையில் அவர்களை அழைத்து பெரிய விருந்து ஒன்று வைப்பேன் என்று அப்போது ரஜினி அறிவித்தார். அந்தக் கல்யாணம் முடிந்து பேரன் பேத்திகளும் எடுத்தாகி விட்டது. ஆனால் ரசிகர்களுக்கு இன்னும் சோறு போடவில்லை. ஒரு கோடி ரூபாய் அறிவிப்புக்கும் இந்த கதிதான் ஏற்படும்.

மேலும், பலகோடி ரூபாய் செலவாகும் இந்தத் திட்டத்திற்கு நூறு கோடி தருவதாக சொல்லியிருந்தால் கூட அது அவரது வசதிக்குக் குறைவுதான். நாம் தேனீருக்குச் செலவு செய்யும் பத்துரூபாய் எப்படியோ, அதுபோல் ரஜினிக்கு ஒரு கோடி ரூபாய் என்பது அற்பத்திலும் அற்பமாகும். பிரச்சினையின் தீவிரத்தை மறக்கடிக்க வைப்பதற்காக இப்படி அறிவித்து நாடகமாடி அதில் வெற்றி கண்டுள்ளார். இதைப் பெரிதாக எடுத்துக் கொண்டு அலட்டிக் கொள்ள வேண்டாம்.

உணர்வு 16:50

08.08.2012. 15:33 PM

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...

நாமே தீர்மானிக்கலாமா?

நாமே தீர்மானிக்கலாமா? பிறை சம்பந்தமான ஆதாரங்களில் நாமே தீர்மானிக்கலாம் என்ற கருத்திலமைந்த ஹதீஸும் முக்கியமான ஆதாரமாக அமைந்துள்ளது. அந்த ஹதீஸ் இது தான். سنن الترمذي 697 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: ...

அரஃபா நோன்பு

அரஃபா நோன்பு சவூதி அரசாங்கம் எப்போது தலைப் பிறை என்று அறிவிக்கிறதோ அது தான் உலகத்துக்கே தலைப் பிறை என்ற கருத்துடையோர் அரஃபா நோன்பை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். ஹஜ்ஜுப் பெருநாளைக்கு முந்திய நாள் அரஃபா ...

கிரகணத் தொழுகை

கிரகணத் தொழுகை தலைப்பிறை பற்றி முடிவு செய்வதற்கான ஆதாரங்களில் சூரிய சந்திர கிரகணங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. صحيح البخاري 1042 – حَدَّثَنَا أَصْبَغُ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرٌو، ...

நீட்டப்படும் மாதங்கள் 

நீட்டப்படும் மாதங்கள் பிறையைக் கண்களால் பார்த்துத் தான் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்பதை மற்றொரு ஹதீசும் கூறுகிறது. அந்த ஹதீஸ் இது தான். صحيح مسلم 2582 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ ...

மேக மூட்டத்தின் போது…

மேக மூட்டத்தின் போது… பிறை பார்த்தல் குறித்த அடிப்படையான ஆதாரங்களாக சில ஹதீஸ்கள் உள்ளன. அந்த ஹதீஸ்கள் ஏறத்தாழ ஒரே மாதிரியான கருத்தில் அமைந்தவை என்றாலும் சின்னச் சின்ன வேறுபாடுகள் அவற்றுக்கிடையே உள்ளதால் அவற்றை ...