நதிநீர் இணைப்பு சாத்தியமா?

நதிநீர் இணைப்பு சாத்தியமா? அப்படி இணைத்தால் அது மக்களுக்கு பயன்படுமா? ஏழைகளுக்கு ஒரு ரூபாய் கூட செலவு செய்யாத சினிமா கூத்தாடிகள் எல்லாம் நதிநீர் இணைப்பிற்கு ஒரு கோடி ரூபாய் தருவதாகச் சொல்கின்றார்களே! இதன் உண்மை நிலை என்ன?

– ஆரிஃப் ராஜா, மங்கலம்பேட்டை.

நதிநீர் இணைப்பு சாத்தியமா என்றால் கொள்கை அளவில் அது சாத்தியம் தான் என்றாலும், இந்தியாவில் அது சாத்தியப்படாது. பெரிய அளவில் பொருளதாராத்தைச் செலவிட்டு தண்ணீர் பாய்ந்து செல்லும் வழிகளை ஏற்படுத்தினால் நதிகள் இணைந்துவிடும். ஆனால் நமது நாட்டு மக்கள் மொழி உணர்வின் அடிப்படையிலும், மாநில உணர்வின் அடிப்படையிலும் வெறியூட்டப்பட்டு உள்ளதால், நமது நாட்டுக்கு இது சாத்தியமாகாது. மேலும் உலகில் உள்ள நாடுகளில் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடிக்க திராணியில்லாத நாடுகளில் நமது நாடு முதலிடம் பிடித்துள்ளதாலும், இது சாத்தியமாகாது.

கர்நாடகாவின் நதியை அன்றைய மன்னர்கள் இங்குள்ள காவிரியுடன் இணைத்தார்கள். அதுபோல் கேரளாவின் முல்லைப் பெரியாறு மற்றும் ஆந்திராவின் பாலாறு உள்ளிட்ட நதிகள் தமிழகத்துடன் அன்றைக்கு இணைக்கப்பட்டன. ஆனால் இன்று நிலைமை என்னவென்பதை தமிழக மக்கள் அனுபவித்து வருகிறார்கள். வெள்ளம் பெருக்கெடுத்து கர்நாடக மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்னும் போது தான் தண்ணீரைத் திறந்துவிட்டு தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள். மற்ற நேரங்களில் அணைக்கு மேல் அணை கட்டி தமக்கே சொந்தம் கொண்டாடுகின்றனர். முல்லைப் பெரியாறு, பாலாறு ஆகியவற்றின் கதையும் இப்படித்தான் உள்ளது.

உறுதிமிக்க சட்டத்தினை தாட்சண்யம் இல்லாமல் கடைப்பிடிக்கும் ஒரு ஆட்சி இருந்தால், இந்தப் பிரச்சினைக்கு எப்போதோ முடிவு கட்டப்பட்டிருக்கும். அத்தகைய திராணி ஆள்கின்ற எந்தக் கட்சிக்கும் இல்லை. கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ்காரன் தண்ணீரை விடாதே என்கிறான். தமிழகத்தில் உள்ள காங்கிரஸ்காரன் தண்ணீரைத் திறந்துவிடு என்கிறான். பா.ஜ.க. கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட அனைத்து தேசியக் கட்சிகளின் நிலையும் இதுதான். இத்தகைய மக்களையும் இத்தகைய முதுகெலும்பு இல்லாத ஆட்சியையும் இத்தகைய இரட்டை வேடம் போடும் கட்சிகளையும் கொண்ட நாட்டில் நதிகளை எப்படி இணைக்க முடியும்?

உத்தரப்பிரதேசத்தில் தண்ணீர் செல்லும் பாதையை ஆழப்படுத்தும் வரை அந்த மாநில மக்கள் மவுனமாக இருப்பார்கள். அடுத்த மாநிலத்திற்குள் நதியைக் கொண்டு செல்லும் வேலையை ஆரம்பித்தவுடன் எல்லா கட்சிகளும் மக்களைத் தூண்டிவிட்டு போராட்டம் நடத்துவார்கள்.

தப்பித்தவறி கங்கையைக் கொண்டு வந்து காவிரியில் இணைத்து விட்டாலும், வெள்ளம் ஏற்பட்டால் மட்டுமே கங்கை நீர் காவிரியில் கலக்கும். இல்லாவிட்டால் அணைகள் கட்டி தங்களுடைய மாநிலத்திற்குத் தான் பயன்படுத்தப்படும் என்று வடக்கு-தெற்கு வெறி ஊட்டப்படும். மொழி வெறியும் மாநில வெறியும் ஊட்டப்படும். செலவு செய்த பல கோடிகளும் பாழாய்ப் போய்விடும். எனவே இது நடைமுறையில் சாத்தியமாகாது. சாத்தியமானாலும் அதனால் பயன் ஏற்படாது. மாறாக வெள்ள அபாய காலங்களில் தமிழகம் வடிகாலாகவே பயன்படும். அதனால் இங்கே பேரிழப்புகள் ஏற்படும் என்பதுதான் உண்மை நிலை.

நடிகர்கள் ஒரு கோடி கொடுப்பதாகச் சொல்கிறீர்கள். ரஜினிகாந்த் என்ற நடிகரைப் பற்றித்தான் நீங்கள் கேட்கிறீர்கள். கர்நாடகம் தண்ணீர் விட மறுத்த போது நடிகர்கள் தங்களது இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக நெய்வேலியில் போராட்டம் நடத்தினார்கள். நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட திரைத் துறையினர் பலர் திரளாக அதில் கலந்து கொண்டனர். ஆனால் கர்நாடகாவைச் சேர்ந்த ரஜினிகாந்த் மட்டும் அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. கர்நாடகாவைக் கண்டிக்கவில்லை. அவர் கன்னடர் என்பது மட்டும் காரணமில்லை. தமிழர்களிடம் சம்பாதித்து கர்நாடகாவில் வாங்கிக் குவித்துள்ள சொத்துக்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் அம்மாநிலத்தைக் கண்டிக்கவில்லை.

இதனால் மக்களிடம் ஏற்பட்ட வெறுப்பைச் சரி செய்வதற்காக தனியாக உண்ணாவிரத நாடகம் நடத்தி, நதிகளை இணைத்தால் ஒரு கோடி தருவதாகக் கூறி பிரச்சினையை திசை திருப்பினார். நதிகளை இணைக்க முடியாது என்று தெரிந்திருந்தும், தனது துரோகத்தை மறைக்க அவர் அடித்த ஸ்டண்டுதான் அது.

ஒரு பேச்சுக்கு நதிநீர் இணைப்பு வேலை ஆரம்பமானாலும், அவர் ஒரு கோடி கொடுக்க மாட்டார். கொடுத்த வாக்குறுதியை மீறும் நடிகர்களில் ரஜினி முதலிடத்தில் இருக்கிறார். தனது மகளின் திருமணத்திற்கு ஏழை ரசிகர்கள் வரவேண்டாம் என்று அறிவித்து, தனக்குச் சமமான பிரமுகர்களை மட்டும் அழைத்து நடத்தினார். இதனால் ரசிகர்கள் கொந்தளித்துப் போனார்கள். இந்த அயோக்கியனுக்காகவா உழைத்தோம் என்று நொந்து போனார்கள்.

எனது ரசிகர்கள் மனம் குளிரும் வகையில் அவர்களை அழைத்து பெரிய விருந்து ஒன்று வைப்பேன் என்று அப்போது ரஜினி அறிவித்தார். அந்தக் கல்யாணம் முடிந்து பேரன் பேத்திகளும் எடுத்தாகி விட்டது. ஆனால் ரசிகர்களுக்கு இன்னும் சோறு போடவில்லை. ஒரு கோடி ரூபாய் அறிவிப்புக்கும் இந்த கதிதான் ஏற்படும்.

மேலும், பலகோடி ரூபாய் செலவாகும் இந்தத் திட்டத்திற்கு நூறு கோடி தருவதாக சொல்லியிருந்தால் கூட அது அவரது வசதிக்குக் குறைவுதான். நாம் தேனீருக்குச் செலவு செய்யும் பத்துரூபாய் எப்படியோ, அதுபோல் ரஜினிக்கு ஒரு கோடி ரூபாய் என்பது அற்பத்திலும் அற்பமாகும். பிரச்சினையின் தீவிரத்தை மறக்கடிக்க வைப்பதற்காக இப்படி அறிவித்து நாடகமாடி அதில் வெற்றி கண்டுள்ளார். இதைப் பெரிதாக எடுத்துக் கொண்டு அலட்டிக் கொள்ள வேண்டாம்.

உணர்வு 16:50

08.08.2012. 15:33 PM

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...