உங்களை யூதக்கைக்கூலி என்று உங்கள் எதிரிகள் சொல்கிறார்களே அது ஏன்?

அப்துல்லாஹ், வத்தலக்குண்டு

பதில் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலம் முதல் இன்றைய தேதி வரை யூதர்கள் முஸ்லிம்களை எதிரிகளாகக் கருதி செயல்பட்டு வருகின்றனர். தாங்கள் உயர்ந்த இனம் என்று யூதர்கள் கொண்டிருந்த இறுமாப்பை இஸ்லாம் ஒழித்துக் கட்டியது போல் வேறு எந்த இஸங்களும் ஒழித்துக் கட்டியதில்லை.

பிறப்பால் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று யூதர்கள் கட்டிவைத்த கோட்டை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் தகர்த்து எறியப்பட்டதால் இஸ்லாத்தை ஒழிக்க வேண்டும் என்ற வெறி அவர்கள் இரத்தத்தில் ஊறிப் போனது.

வலிமையால் இஸ்லாத்தை வெல்ல முடியாததால் நரித்தனம் செய்து இஸ்லாத்தை வீழ்த்த நினைத்தனர். கேடுகெட்ட கொள்கைகளை இஸ்லாமியக் கொள்கை என்ற சாயம் பூசி முஸ்லிம்களிடம் தினித்தனர். இதனால் இஸ்லாமும் மற்ற மதங்களைப் போல் மூட நம்பிக்கை நிறைந்த மார்க்கம் என்ற கருத்தை விதைக்க நினைத்தனர். ஆனால் அதிலும் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை.

இந்த வரலாறை அனைத்து முஸ்லிம்களும் அறிந்து வைத்திருப்பதால் சீர்திருத்தம் செய்பவர்களுக்கு யூதக்கைக்கூலி என்ற முத்திரை குத்தினால் அதன் மூலம் சத்தியப் பிரச்சாரத்தை முடக்கிவிடலாம் என்று கருதி இவ்வாறு விமர்சிக்கின்றனர். நாம் எடுத்துக் காட்டும் எந்த ஆதாரத்துக்கும் பதில் இல்லாததால் யூதக் கைக்கூலி என்ற ஒரு பதிலில் தப்பித்துக் கொள்ளப் பார்க்கின்றனர்.

இந்தச் சமுதாயத்தில் அவ்வப்போது யூதக் கைக்கூலிகள் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் யூதக்கைக்கூலி என்று ஒருவரை அல்லது ஒரு இயக்கத்தைச் சொல்வதாக இருந்தால் அதற்கான காரண காரியத்தை விளக்க வேண்டும்.

யூதர்களின் கொள்கைக்கு நாம் வக்காலத்து வாங்குகிறோம் என்பதற்காக இப்படி சொல்கிறார்களா? அல்லது யூதர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு நாம் பிரச்சரம் செய்கிறோம் என்பதற்காக இப்படி சொல்கிறார்களா என்பதை அவர்கள் தெளிவுபடுத்துவதில்லை.

ஆனால் நம்மை இப்படி விமர்சிப்பவர்கள் தான் யூதக் கைக்கூலிகள் என்று நாம் ஆதாரத்துடன் சொல்ல முடியும்.

யூதர்கள் உசைரைக் கடவுளின் மகன் என்று சொன்னார்கள். அதாவது உசைர் என்பார் கர்த்தரின் மகன் என்ற தரத்தில் உள்ளவர் என்பது அவர்களின் கொள்கை.

அப்துல் காதிர் ஜீலானி என்பவர் அல்லாஹ்வின் அர்ஷுக்கு அருகில் தொட்டிலில் துங்கிக் கொண்டு இருப்பதாகக் கதை எழுதி வைத்துக் கொண்டு சுன்னத் ஜமாஅத்தினர் பலர் அதை நம்புகின்றனர்.

இது தான் யூதக் கொள்கை. இவர்கள் தான் யூதக்கைக்கூலி என்று சொல்ல முடியும்.

யூதர்கள் தங்களின் நபிமார்களின் அடக்கத்தலங்களை தர்காவாக ஆக்கிக் கொண்டார்கள் என்பதற்காக அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மரணத்தறுவாயில் கண்டித்தார்கள்.

செத்துப் போனவர்களுக்கு ஊர்கள் தோறும் தர்கா கட்டி அந்த யூதர்கள் வழியில் யூதக் கொள்கைக்கு உயிர் கொடுக்கும் சுன்னத் ஜமாஅத்தினர் தான் யூதக் கைக்கூலிகள். தர்காவைத் தகர்க்க வெண்டும் எனக் கூறி நாம் யூதக் கொள்கைக்கு எதிராகப் பிரச்சாரம் செய்கிறோம்.

பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை. மொழியால் உயர்வு தாழ்வு இல்லை என்பது நபி வழி.

ஆனால் யூதர்கள் தங்களை உயர்ந்த இனம் என்று நினைத்துக் கொண்டார்கள். சுன்னத் ஜமாஅத்தினர் அரபி பேசுபவன் சிறந்தவன் என்றும் குறிப்பிட்ட வம்சத்தில் பிறந்தவன் சிறந்தவன் என்றும் மத்ஹபு நூல்களில் எழுதி வைத்து யூதக் கொளகையை இஸ்லாத்தில் தினித்தார்கள். இவர்கள் தான் யூதக் கைக்கூலிகள்.

எழுத்துக்களுக்கு நம்பர் கொடுத்து மந்திர வேலை பார்ப்பது யூதர்களின் வழிமுறை. அதை அப்படியே பின்பற்றி அப்ஜத் கணக்கு என்று போட்டு அதே போல் மக்களை ஏமாற்றிவரும் கூட்டம் தான் யூதக் கைக்கூலிகள்.

இன்று நாம் எதிர்த்து பிரச்சாரம் செய்யும் கொள்கைகளில் அதிகமானவை யூதர்களைப் பார்த்து காப்பி அடிக்கப்பட்டவையாகும். யூதக் கொள்கையை முஸ்லிம் சமுதாயத்தில் இருந்து ஒழித்துக்கட்டுபவர்கள் ஒருக்காலும் யூதக்கைக்கூலிகளாக இருக்க முடியாது.

மேலும் யூதர்களின் இஸ்ரேல் அரசுக்கு நரசிம்மராவ் அரசு அங்கீகாரம் அளித்த போதும் இன்னபிற சந்தர்ப்பங்களிலும் நாம் அதை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்தியுள்ளோம்.

ஆனால் நம்மை யூதக் கைக்கூலி எனச் சொல்லும் கூட்டத்தினராகிய மத்ஹப்வாதிகள் எகிப்தில் என்ன செய்தார்கள்? இஸ்ரேலுடன் காதல் கொண்டு உறவை வளர்த்தனர். சரணாகதி அடைந்தனர்.

இஸ்ரேலுக்கும், நமக்கும் நிலப் பிரச்சனை தான் உள்ளது; கொள்கைப் பிரச்சனை இல்லை என்று சொன்ன கிறுக்கனை எல்லாம் இன்றும் மார்க்க் அறிஞராக ஒரு கூட்டம் போற்றிக் கொண்டு அவனது நூல்களை மொழி பெயர்த்து வெளியிட்டுக் கொண்டுள்ளது. இவர்கள் தான் யூதக் கைக்கூலிகள்

நாம் யூதக் கொள்கையை ஒழித்துக் கட்ட சபதம் ஏற்ற கூட்டத்தினராவோம். நம்மை யூதக்கைக்கூலி என்று சொல்லக் கூடியவர்கள் அதற்கான காரணத்தைச் சொல்லட்டும்.

உணர்வு 16:31

28.03.2012. 12:06 PM

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...