வஞ்சிக்கப்படும் முஸ்லிம் சமுதாயம்!

மராட்டிய மாநிலம், புனே நகரில் உள்ள ஜெர்மன் பேக்கரியில் 2010-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி பயங்கர குண்டு வெடித்தது. இந்தக் குண்டு வெடிப்பில் சிக்கி 5 வெளிநாட்டவர்கள் உட்பட 17 பேர் இறந்தனர். 64 பேர் படுகாயமடைந்தனர். இந்தக் குண்டுவெடிப்பு சம்பந்தமாக அதே ஆண்டு செப்டம்பர் மாதம் புனே பேருந்து நிலையத்தில் வைத்து மிர்சா ஹிமாயத் பெய்க் என்பவரை போலீசார் கைது செய்தனர். இது தவிர அபு ஜிண்டால் என்பவரையும் இந்தக் குண்டு வெடிப்பு வழக்கில் சேர்த்தனர்.

ஜெர்மன் பேக்கரியில் குண்டு வெடித்தபோது அபு ஜிண்டால் வெளியில் இல்லை. மாறாக மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்தார். இப்படி சிறைக்குள் இருந்தவரைத் தான் ஜெர்மன் பேக்கரியில் குண்டு வைத்த வழக்கில் போலீசார் சேர்த்தனர்.

ஒருவர் சிறைக்குள் இருந்துகொண்டு, வெளியில் வந்து ஜெர்மன் பேக்கரியில் குண்டு வைத்தார் எனில் இந்தக் குற்றச்சாட்டு முழுக்க முழுக்க பொய்யாக இருக்க வேண்டும். அல்லது சிறை அதிகாரிகள் இவரை சட்டவிரோதமான முறையில் வெளியில் அனுப்பி குண்டுகளை வெடிக்கச் செய்தார்கள் என்று சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லும் போது அபு ஜிண்டாலுடன் சேர்த்து, சிறை அதிகாரிகளையும் ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு வழக்கில் சேர்க்க வேண்டும். இதில் எதையுமே செய்யவில்லை.

இதில் இன்னொரு கூத்தும் நடந்துள்ளது. அபு ஜிண்டாலை ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பில் போலீசார் சேர்த்தார்களே தவிர இந்த வழக்கில் இவரை போலீசார் கைது செய்யவே இல்லை. கைது செய்து, போலீஸ் கஸ்டடியில் எடுத்து இவரை விசாரிக்கவும் இல்லை. இவர் மீதான வழக்கை நடத்தவும் இல்லை. இவருக்கு நீதிமன்றம் எந்தத் தண்டனையும் வழங்கவில்லை. ஆனால் ஹிமாயத் பெய்க்குக்கு மட்டும் புனே அமர்வு நீதிமன்றம் 18.04.2013 அன்று தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த பெய்க்கின் வழக்கறிஞர் அப்துர் ரஹ்மான் ஜெர்மன் பேக்கரியில் குண்டு வெடித்தபோது பெய்க் புனேவிலேயே இல்லை. மாறாக அவர் ஔரங்காபாத்தில் இருந்தார். ஔரங்காபாத்தில் இருந்துகொண்டு ஒருவர் ரிமோட் கண்ட்ரோல் மூலம் புனேயில் எப்படி வெடிகுண்டு வெடிக்கச் செய்ய முடியும்? இதை நீதிபதி கவனிக்கத் தவறி விட்டார். எனவே நாங்கள் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று தெரிவித்தார்.

இந்த நாட்டில் குண்டு வெடிப்பு வழக்கில் ஒருவரை தூக்கில் போடுவதற்கு அவர் குற்றம் செய்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அவர் முஸ்லிமாக இருந்தால் போதும். இந்த குறைந்தபட்ச தகுதிக்காகவே அவர் தூக்கில் போடப்படுவார் என்பது கடந்த கால வரலாறு.

பாராளுமன்றத் தாக்குதலில் பேராசிரியர் ஜிலானி, அப்சல் குரு ஆகியோருக்கு நேரடியான எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்த இருவருக்கும் செசன்ஸ் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து, உயர் நீதிமன்றம் அதை உறுதி செய்து, உச்சநீதிமன்ற மேல் முறையீட்டில் பேராசிரியர் ஜிலானி குற்றவாளி அல்ல என்று நிரூபிக்கப்பட்டு அப்சல் குரு மட்டும் தூக்கில் போடப்பட்டார்.

அப்சல் குருவும் கூட பாராளுமன்றத் தாக்குதலில் நேரடியாகச் சம்பந்தப்பட்டு துப்பாக்கியை தூக்கிக் கொண்டு பாராளுமன்ற வளாகத்திற்குள் அத்துமீறி புகுந்து சுட்டார் என்பதற்காக அவர் தூக்கிலிடப்படவில்லை. ஆதாரங்களும், சாட்சிகளும், ஆவணங்களும் உள்ளன என்பதற்காகவும் அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படவில்லை.  அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது என்று சொல்லியும் இவருக்கு நீதிபதிகள் தூக்குத் தண்டனை விதிக்கவில்லை.

மாறாக கூட்டு மனசாட்சி என்ற ஒன்று இருக்கிறது. அப்சல்குரு தாக்குதல் நடத்தினார் என்று நிரூபிக்கப்படவில்லையாயினும், கூட்டு மனசாட்சி அடிப்படையில் தூக்குத் தண்டனை விதிக்கிறோம் என்று சொல்லித் தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை விதித்தனர். அவரும் தூக்கில் போடப்பட்டார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை அடிப்படையாக வைத்து உயர் நீதிமன்றங்களும், உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற தீர்ப்புகளை அடிப்படையாக வைத்து செசன்ஸ் நீதிமன்றம் உள்ளிட்ட நாட்டில் உள்ள எல்லா கீழ் நீதிமன்றங்களும் தீர்ப்பு வழங்கலாம்.

அதனால் ஹிமாயத் பெய்க் குற்றம் செய்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதை அரசுத் தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கவும் வேண்டியதில்லை. மாறாக கூட்டு மனசாட்சி அடிப்படையில் ஆதாரங்கள், சாட்சிகள், ஆவணங்கள் இல்லாமலும் பெய்க்கிற்கு தூக்குத் தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.

இப்படி கூட்டு மனசாட்சி அடிப்படையில் எந்த நாட்டிலும் எவருக்கும் தூக்குத் தண்டனை வழங்கப்படுவதில்லை. இந்தியாவில் மட்டும்தான், அதுவும் முஸ்லிம்களுக்கு மட்டும் தான் இந்த வகையில் தூக்குத் தண்டனை விதிக்கப்படும். இதை எதிர்த்து முஸ்லிம்கள் எதுவும் பேசி விடக்கூடாது. அவ்வளவுதான்.

2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரோடா பாட்டியா என்ற இடத்தில் 97 அப்பாவி முஸ்லிம்களை மோடியின் அமைச்சரவையில் இருந்த பெண் மந்திரி மாயா கோட்னானி, பஜ்ரங்தள் தலைவர் பாபு பஜ்ரங்கி தலைமையிலான கும்பல் கொடூரமாகக் கொன்று குவித்தது. இவர்கள் குற்றவாளிகள் என்று நீதிமன்றத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது. அப்போது நீதிபதி என்ன செய்திருக்க வேண்டும்?

97 அப்பாவி முஸ்லிம்களைக் கொன்ற இவர்கள் அனைவருக்கும் தூக்குத் தண்டனை விதித்திருக்க வேண்டும். அப்படி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதா? இல்லவே இல்லை. ஒருவருக்குக் கூட தூக்குத் தண்டனை விதிக்கப்படவில்லை.

மாறாக அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஏனெனில் கொலையாளிகள் அனைவரும் காவிக் கட்சிக்காரர்கள். கொல்லப்பட்ட 97 பேரும் அப்பாவி முஸ்லிம்கள். முஸ்லிம்களின் உயிருக்கு இந்த நாட்டில் அவ்வளவுதான் மதிப்பு. இதை முஸ்லிம்கள் புரிந்து கொண்டு குற்றம் நிரூபிக்கப்பட்ட மாயா சோட்னானிக்கு ஏன் தூக்குத் தண்டனை விதிக்கவில்லை? ஔரங்காபாத்தில் இருந்த ஹிமாயத் பெய்க்குக்கு ஏன் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது என்று கேள்வி கேட்கக்கூடாது. அப்படி கேள்வி கேட்டால் அது தேசத் துரோகமாகிவிடும். நீதிமன்ற அவமதிப்பும் ஆகிவிடும்.

அதே குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையின் போது குல்பர்க் சொஸைட்டியில் வைத்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.இஹ்ஸான் ஜாப்ரி உள்ளிட்ட 69 பேர் சங்பரிவார பயங்கரவாதிகளால் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த கொலைக் குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதே தவிர ஒருவருக்குக் கூட தூக்குத் தண்டனை விதிக்கப்படவில்லை. 17 பேர் மரணத்திற்கு காரணம் என சொல்லப்படும் ஹிமாயத்திற்கு ஏன் தூக்குத் தண்டனை?

69 முஸ்லிம்களைக் கொன்று குவித்த காவி பயங்கரவாதிகளுக்கு ஏன் ஆயுள் தண்டனை? இவ்வாறு முஸ்லிம்கள் இந்த நாட்டில் நியாயம் பேசிவிடக் கூடாது. பேசினால் தீவிராவதிகள், பயங்கரவாதிகள் என்று அவர்களுக்குப் பட்டம் சூட்டப்படும்.

அதே குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையின் போது தர்வாஜா என்ற இடத்திலும் அப்பாவி முஸ்லிம்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள். இந்த பச்சைப் படுகொலைகளுக்காகவும் சங் பரிவார பயங்கரவாதிகள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார்கள். அந்த தண்டனை ஆயுள் தண்டனையாக இருந்ததே தவிர ஒருவருக்குக் கூட தூக்குத் தண்டனை விதிக்கப்படவில்லை. இதைத் தெரிந்து முஸ்லிம்கள் கேள்வி கேட்டு, ஹிமாயத் பெய்க்குக்கு பரிந்து பேசிவிடக் கூடாது. பேசினால் தீவிரவாதி, பயங்கரவாதி பட்டத்தைத்தான் சுமக்க வேண்டி வரும்.

மாலேகான் குண்டு வெடிப்பு, மர்ம கோவா குண்டு வெடிப்பு, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு, ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு, அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு, நான்டெட் குண்டு வெடிப்பு ஆகிய இடங்களில் குண்டுவெடிப்புகளைச் செய்து நூற்றுக் கணக்கான அப்பாவி முஸ்லிம்களை நாடு முழுவதும் திட்டமிட்டுக் கொன்று குவித்த பெண் சாமியார் பிரக்யா சிங், ஆண் சாமியார் அசிமானந்த், கர்னல் புரோஹித் ஆகியோர் மீதான வழக்கு விசாரணை பல்லாண்டுகள் ஆன பிறகும் நடக்கவில்லை. இன்னும் அவர்கள் விசாரணைக் கைதிகளாகவே உள்ளனர்.

ஆனால் ஹிமாயத் பெய்க் மீதான வழக்கு 2 ஆண்டுகளுக்குள் விசாரிக்கப்பட்டு, தூக்குத் தண்டனையும் விதிக்கப்பட்டது. முஸ்லிம் மீதான வழக்கு மட்டும் ஏன் இவ்வளவு சீக்கிரம் விசாரிக்கப்படுகிறது? காவி பயங்கரவாதிகள் மீதான வழக்குகள் மட்டும் ஏன் விசாரிக்கப்படாமல் கிடப்பில் போடப்படுகின்றன என்று கேள்வி கேட்க இரண்டாம் தர குடி மக்களான முஸ்லிம்களுக்கு உரிமையில்லை என்பதை முஸ்லிம்கள் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

ஹிமாயத் பெய்க்கிற்கு மாவட்ட அமர்வு நீதிமன்றம்தான் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. இதற்கு மேல் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவை இந்த தூக்குத் தண்டனையை உறுதி செய்து, ஜனாதிபதியும் கருணை மனுவை நிராகரித்தால் தான் அவர் தூக்கில் போடப்படுவார் என எதிர்பார்க்கக் கூடாது. ஆள்வோர் நினைத்தால் நாளையே கூட பெய்க்கை தூக்கில் போட்டு விடுவார்கள். இதற்கும் முன் உதாரணங்கள் உள்ளன. ஆம். அஜ்மல் கசாப், அப்சல் குரு ஆகியோரின் கருணை மனுக்களை ஜனாதிபதி நிராகரித்தவுடன் இவ்விருவரும் கமுக்கமாக தூக்கில் போடப்பட்டார்கள்.

காலிஸ்தான் தீவிரவாதி தேவேந்தர் சிங் புல்லாரின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்து விட்டார். அதற்காக புல்லாரை ஆட்சியாளர்கள் தூக்கில் போடவில்லை. கருணை மனு நிராகரிக்கப்பட்ட புல்லார் உச்ச நீதிமன்றத்தில் தண்டனையை குறைக்க மனு செய்ய ஆள்வோரால் அனுமதிக்கப்பட்டார். அந்த மனுவையும் உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது.

அதற்குப் பிறகும் புல்லார் தூக்கில் போடப்படவில்லை. புல்லாருக்காக வளைந்த சட்டம் அஜ்மல் கசாபுக்கும், அப்சல் குருவுக்கும் ஏன் வளையவில்லை? என்று கேட்கக் கூடாது. ஏனெனில் அவர்கள் முஸ்லிம்கள். புல்லார் முஸ்லிம் அல்லாதவர்; இதை முஸ்லிம்கள் புரிந்து அடக்கமாக நடந்து கொள்ள வேண்டும்.

ராஜிவ் காந்தி கொலையாளிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன், சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பனின் கூட்டாளிகளான மாதையன், சைமன், பிலவேந்திரன், ஞானப்பிரகாசம், உள்ளிட்ட 16 தூக்குத் தண்டனை கைதிகளின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்து நீண்ட வருடங்களாகி விட்டது.

அஜ்மல் கசாபையும், அப்சல் குருவையும் போல கருணை மனு நிராகரிக்கப்பட்ட இவர்கள் ஏன் தூக்கில் போடப்படவில்லை? என்று எந்த முஸ்லிமும் கேள்வி கேட்கக் கூடாது. ஏனெனில் முஸ்லிம் சமுதாயம் அடிமைச் சமுதாயம். இப்படி அடிமைச் சமுதாயமாக இருப்பதற்காகத் தான் ஆங்கிலேயரிடம் இருந்து போராடி விடுதலை பெற்று, இன்றைய ஆள்வோருக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து அடக்கமுடன்(?) நடந்துகொள்ள வேண்டும்.

பாபரி மஸ்ஜித் – முஸ்லிம்களுக்குத் தான் சொந்தமானது என்று உலகுக்கே தெரியும்! ஆனால் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் பாபரி மஸ்ஜிதை 3 பங்காகப் பிரித்து அதில் ஒரு பங்கு முஸ்லிம்களுக்கு உரியது. மீதி இரண்டு பங்கு முஸ்லிம் அல்லாதவர்களுக்கு உரியது என்று அளித்த வினோதத் தீர்ப்பை இன்றுவரை முஸ்லிம்களால் மாற்ற முடிந்ததா?

25 கோடி முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட பாபரிமஸ்ஜித் பிரச்சினையிலேயே இப்படித்தான் தீர்ப்பு இருக்கும் என்று அறிந்த பிறகு, பெய்க் சட்டப்படி தண்டிக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பது அறியாமை ஆகும்.

ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்திற்கே நீதி கிடைக்கவில்லை எனும் போது தனிப்பட்ட பெய்க்கிற்கு எப்படி நீதி கிடைக்கும்? என முஸ்லிம் சமுதாயம் புரிந்து அடங்கி நடந்து கொள்ள வேண்டும்.

பாபரி மஸ்ஜித் இடிப்பில் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, சாத்வி ரிதம்பரா, உமாபாரதி, வினய் கத்தியார், அசோக் சிங்கால், தொகாடியா ஆகியோருக்கு இருந்த பங்கு அகில உலக பிரசித்தம். பாபர் மஸ்ஜித் வழக்கில் இவர்களுக்கு எதிரான ஆதாரம் இருந்த அளவுக்கு இந்தியாவில் நடந்த எந்த வழக்குக்கும் ஆதாரம் இருக்கவில்லை.

அதற்காக இவர்கள் தண்டிக்கப்பட்டு விட்டார்களா? இல்லையே! இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் பெய்க்கிற்காக முஸ்லிம்கள் உரிமைக் குரல் எழுப்பி தேசத்தின் அமைதியை கெடுக்கக் கூடாது. இந்த நாடு மதசார்பற்ற நாடு. ஆனால் இங்கு சட்டம் ஆட்சி செய்யவில்லை. மனு நீதிதான் ஆள்கிறது. ஆள்வோரின் மற்றும் அதிகார வர்க்கத்தின் உள்ளத்தில் இந்த மனுநீதிதான் மண்டிப்போய் கிடக்கிறது.

இந்நிலை மாறாதவரை முஸ்லிம்களுக்கு எதிரான அநியாயங்கள் நடக்கத்தான் செய்யும். இந்த அவலநிலை மாறி, சட்டத்தின் முன் முஸ்லிம்களும் சமமாக நடத்தப்பட வேண்டுமெனில் முஸ்லிம் மக்கள் திரண்டெழுந்து வீதிகளில் இறங்கிப் போராட வேண்டும்.

உள்ளாட்சி, சட்டமன்ற, பாராளுமன்றங்களில் உள்ள முஸ்லிம் பிரதிநிதிகள் இந்த அநியாயங்களுக்கு எதிராக உரத்து உரிமை முழக்கமிடவேண்டும். உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்றக் கதவுகளை பொது நலன் வழக்குப்போட்டு ஓங்கித் தட்ட வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் இவற்றில் இட ஒதுக்கீடு பெற்று, ஆளும் இடத்திற்கு முஸ்லிம்கள் வரவேண்டும்.

(முஹம்மதே!) உம்மை இப்பூமியிலிருந்து கிளப்பி வெளியேற்றிட அவர்கள் முயன்றனர். அப்போது உமக்குப் பின்னர் அவர்கள் குறைவாகவே தங்கியிருப்பார்கள். (முஹம்மதே!) உமக்கு முன் நாம் அனுப்பிய தூதர்கள் விஷயத்தில் (இதுவே நமது) வழி முறையாகும். நமது வழி முறையில் எந்த மாற்றத்தையும் காண மாட்டீர்!

அல்குர் ஆன் 17:76, 77

24.04.2013. 11:55 AM

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...