பால் விலை, பஸ்கட்டண உயர்வு சரியா?

கேள்வி: சென்ற சட்டமன்றத் தேர்தலில் AIADMK விலைவாசி உயர்வை முக்கிய காரணம் காட்டி ஓட்டு கேட்டது. இப்போதைய அரசு பால் மற்றும் பேருந்து கட்டணத்தை உயர்த்தி உள்ளது, இதன் பின்னணி என்ன?

– அஹ்மத் ஷமீம், கூத்தாநல்லூர்

தற்போது தமிழக அரசின் பஸ் கட்டணம் மற்றும் பால் விலை ஏற்றம் பற்றி தாங்கள் அறிந்ததே! இதைப் பற்றி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கருத்து என்ன? மக்கள் நலனுக்காக போராடும் நீங்கள் ஏன் இதற்காகப் போராடக் கூடாது?

– நா.ரஹ்மத்துல்லாஹ், மணலி

விலைவாசி உயர்வை மக்கள் சுமக்க வேண்டும் என்று காரணம் கூறி ஜெயலலிதா அதிரடியான விலை உயர்வை அறிவித்துள்ளார். அதை அவர் நியாயப்படுத்தி இருப்பதை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது.

நான் மக்கள் மீது சுமத்தாமல் வேறு யார் மீது சுமத்த முடியும் என்று வாதமும் செய்துள்ளார்.

இப்படி வாதம் செய்வதற்கு ஒரு முதல்வர் தேவையா? நஷ்டம் வரும்போது விலையை உயர்த்தும் செயலை ஒரு டாட்டா, ஒரு அம்பானி செய்து விடுவாரே?

நஷ்டம் வருகிறது என்றால் மக்களைப் பாதிக்காத வகையில் எப்படி நிர்வாகம் நடத்துவது என்பதற்குத் தான் ஒரு முதல்வர் தேவைப்படுகிறார். எனவே ஜெயலலிதா விலையைக் கண்டமேனிக்கு உயர்த்திவிட்டு அதை நியாயப்படுத்துவது மக்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும்.

ஆவின் நிறுவனமும், போக்குவரத்துக் கழகங்களும் நஷ்டத்தில் இயங்குகின்றன என்றால் அதற்கான காரணத்தைக் கண்டுபிடித்து சரி செய்வதை விடுத்து மக்களைப் பற்றி கவலைப்படாத அதிகாரிகளின் பேச்சைக் கேட்டு, தானும் ஏமாந்து நாட்டு மக்களையும் ஜெயலலிதா ஏமாற்ற முயன்றுள்ளார்.

போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இயங்குகிறது என்பதால் பஸ் கட்டண உயர்வு என்கிறார். கட்டண உயர்வினால் போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இருந்து விடுபடும் என்று ஜெயலலிதா நினைத்தால் அவரை விட ஏமாளி யாரும் இருக்க முடியாது.

இப்போது உயர்த்தப்பட்டதை விட இன்னும் ஒரு மடங்கு கட்டணத்தை அதிகரித்தால் கூட போக்குவரத்துக் கழகத்தை லாபத்தில் நடத்த முடியாது.

கொள்ளை அடிக்கும் அதிகாரிகளும், திமிர் பிடித்த அரசு ஊழியர்களின் போக்கும், பராமரிப்பில்லாத சேவையும் தான் நஷ்டத்துக்குக் காரணம். ஓட்டை உடைசல்களாகவும், மழை பெய்தால் ஒழுகக் கூடியதாகவும், கிழிந்த சீட்டுகளைக் கொண்டதாகவும் எப்போது வேண்டுமானாலும் படுத்து(?) விடும் என்ற நிலையிலும் தான் அரசு பேருந்துகள் உள்ளன. இதனால் தான் 60 பயணிகள் ஏற வேண்டிய பேருந்துகளில் 20 பயணிகள் மட்டுமே பயணிக்கும் நிலை உள்ளது. இதுவே நஷ்டத்துக்கு முக்கிய காரணம்.

அரசு பேருந்தில் 200 ரூபாய் கட்டணம் இருந்தாலும், அதே தொலைவுக்கு தனியார் பேருந்துகள் 300 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றன. இருந்த போதிலும் பயணிகள் கூட்டம் தனியார் பேருந்துகளில் நிரம்பி வழிகின்றது. காசுக்கு கணக்கு பார்க்கும் மிகச் சிலர் தவிர மற்றவர்கள் தூய்மைக்காகவும், பாதுகாப்பான பயணத்துக்காகவும் தனியார் பேருந்துகளில் அதிகக் கட்டணம் கொடுத்துப் பயணிக்கின்றனர்.

தனியாரை விட அரசு போக்கு வரத்துக் கழகத்துக்கு டீசல் நான்கு ரூபாய் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. அப்படி இருந்தும் நஷ்டம் ஏற்பட இவர்கள் நிர்வாகம் செய்யும் லட்சனம்தான் காரணம்.

இப்போது கட்டணத்தை உயர்த்தி விட்டார்கள். மூளையற்ற அதிகாரிகளின் கணக்குப்படி ஏட்டில்தான் அதிக லாபம் கிடைக்கும். ஆனால் ஏற்கனவே 20 பேர் பயணித்தது போய் இனி அது பத்து பேராகக் குறைந்து மேலும் நஷ்டத்தைத்தான் அதிகரிக்கும்.

பெருநகரங்களில் டவுன் பஸ்களை இயக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி இல்லாத காரணத்தாலேயே அரசுப் பேருந்துகள் நிரம்பி வழிகின்றன. அதுவும் இனிமேல் சென்னையில் குறைந்து விடும். அனைவரும் மின்சார ரயிலில் பயணம் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

தொலைதூரம் செல்பவர்களில் காசுக்கு கணக்கு பார்ப்பவர்கள் ரயில் பயணத்தைத் தேர்வு செய்ய ஆரம்பித்து விட்டார்கள். காசைப் பற்றி கவலைப்படாதவர்கள் வழக்கம்போல் தனியார் பஸ்களில் தான் பயணம் செய்வார்கள். இனி பயணிகளே இல்லாத வெறும் பஸ்களைத் தான் அரசாங்கம் இயக்க வேண்டும். இது ஏற்கனவே இருந்த நஷ்டத்தை மேலும் அதிகமாக்குமே தவிர போக்குவரத்துக் கழகத்தை தூக்கி நிறுத்தாது.

அடுத்து பால் வளத்துறையும் இப்படித்தான். ஊழல் பெருச்சாளிகளாலேயே நஷ்டம் ஏற்படுகிறது. வாங்கிய விலையை விட அதிக விலைக்கே பால் விற்கப்பட்டு வருகின்றது. இதில் லாபம்தான் ஏற்பட வேண்டும். ஆனாலும் தொடர்ந்து நஷ்டம் ஏற்படுகிறது என்றால் அதற்குக் காரணம் சில திருட்டு அதிகாரிகளே!

மின்சாரம் மட்டுமே உற்பத்தி விலையை விடக் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் மட்டும் நஷ்டம் ஏற்படலாம். ஆனாலும் மக்களுக்கு மிகவும் அத்தியாவசியம் என்பதால் அரசாங்கம் அந்த நஷ்டத்தைச் சுமந்து கொள்கிறது. மேலும் மின் கட்டணத்தை அதிகரித்தால் மற்ற பொருள்களின் விலை உயர்ந்து விடும் என்பதால் அரசாங்கம் அதைச் சுமக்கத்தான் வேண்டும். இது காலாகாலம் கடைப்பிடிக்கப்படும் நடைமுறையாகும்.

ஆனாலும் இந்த நஷ்டம் கூட பாதியளவு தான் மக்களுக்கு வழங்கும் சலுகையால் ஏற்படுகிறது. இன்னொரு பாதி அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற தன்மையால் ஏற்படுவதாகும்.

சென்னையில் பகல் பன்னிரெண்டு மணிக்குப் பார்த்தால் தெரு விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும். ஏனெனில் குறித்த நேரத்தில் போட்டு குறித்த நேரத்தில் அணைப்பதில்லை. அதுபோல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து பெரிய பெரிய நிறுவனங்கள் பத்தாயிரம் யூனிட்டைச் செலவிட்டு ஆயிரம் யூனிட்டுக்கு பணம் செலுத்துவதும் தொடர்ந்து நடக்கிறது. அது மட்டுமில்லாமல் ஆளும் கட்சியினர் நடத்தும் விழாக்களுக்கும் மாநாடுகளுக்கும் கொக்கி போட்டு பல்லாயிரம் யூனிட்டுகள் திருடப்படுகின்றன.

இப்படிப்பட்ட ஊதாரித்தனத்தைக் குறைத்தால் விலை ஏற்றாமலே பாதி நஷ்டத்தைக் குறைக்க முடியும். மற்றொரு பாதி நஷ்டத்தை அரசாங்கம் சுமக்கத்தான் வேண்டும். வேறு வகையில் அதற்கான நிதிகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

வர்த்தக நோக்கத்தில் நடப்பதற்கு ஒரு அரசாங்கம் தேவையில்லை வியாபாரிகள் போதும். அரசாங்கம் இலவச மருத்துவமனை நடத்துகிறது. இதை நடத்த கஷ்டமாக உள்ளதால் இனிமேல் கட்டணம் வசூலிப்போம் என்று சொல்லலாமா?

காவல் துறையினருக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை, இனி மேல் புகார் கொடுக்க இவ்வளவு கட்டணம், எப்.ஐ.ஆர் போட இவ்வளவு கட்டணம் என்று கேட்க முடியுமா?

மக்களாகிய நீங்கள்தான் சுமக்க வேண்டும் என்று திமிர் வாதம் பேசமுடியுமா? மக்கள் ஏன் சுமக்க வேண்டும்? மக்கள் தான் சுமக்க வேண்டும் என்றால் ஆட்சி எதற்காக?

உணர்வு 16:13

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...