பெண்கள் சிறுவயதில் ஓடிப்போக காரணம் என்ன?

உண்மையச் சொன்ன உயர்நீதிமன்றம்!

நாட்டில் நடக்கக்கூடிய கற்பழிப்புகள், பாலியல் சில்மிஷங்கள், ஆபாசச் சேட்டைகள் ஆகிய அனைத்திற்கும் சினிமா கூத்தாடிகளும், சினிமாவும், மெகா சீரியல்களும் தான் காரணம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த உண்மையை கடந்த வாரம் டெல்லி உயர்நீதி மன்றமும் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது.

இதோ அந்தத் தீர்ப்பு :

பதினான்கு வயது பள்ளி சிறுமியைக் கடத்திச் சென்ற இளைஞனுக்கு, அபராதம் மட்டும் விதித்த டில்லி கோர்ட், சிறுமி மீது தான் தவறு உள்ளது; இளைஞனிடம் தவறு எதுவும் இல்லை’ என, உத்தரவிட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பகவதி பிரசாத் என்ற இளைஞர், டில்லி பள்ளி ஒன்றில், டிரைவராக வேலை பார்த்தார். அவர் ஓட்டிச் சென்ற பஸ்சில், மாணவிகள் பலரும் பயணம் செய்தனர். அவர்களில், 14 வயது சிறுமி ஒருவர், டிரைவர், பகவதி பிரசாத்தை ஒரு தலையாக காதலித்தார்.

அதை பின் டிரைவர் பிரசாத், 2010, ஜூலை, 13ல், அந்த சிறுமியைக் கடத்தி, ராஜஸ்தான் சென்றார். அங்கு திருமணம் செய்து கொள்ள, அவர்கள் நினைத்திருந்த நேரத்தில், ஜூலை 20ம் தேதி, மெகந்திபுர் பாலாஜி என்ற இடத்தில், அந்த ஜோடியைப் பிடித்து போலீசார், டில்லி கொண்டு வந்தனர். சிறுமியைக் கடத்திச் சென்றதாக, பகவதி பிரசாத் மீது வழக்கு தொடரப்பட்டது. அதன் பேரில் அவர், சிறையில் அடைக்கப்பட்டார். இதை எதிர்த்து, டில்லி, கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில், பகவதி பிரசாத் மேல் முறையீடு செய்தார்.

இந்த வழக்கு, நீதிபதி, வீரேந்தர் பட் முன்னிலையில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. தீர்ப்பு வழங்கிய நீதிபதி பட், சிறுமியை கடத்திச் சென்ற பகவதி பிரசாத்தைத் தண்டித்தார். எனினும், அபராதம் மட்டும் விதித்து, விடுதலை செய்து உத்தரவிட்டார். அவர் தன் தீர்ப்பில் கூறியிருந்ததாவது:

பகவதி பிரசாத் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் வேண்டுமென்றே சுமத்தப்படுவதாக, கோர்ட் கருதுகிறது. அந்த இளைஞரை, அந்த சிறுமி தான், திருமணம் செய்ய தொந்தரவு செய்துள்ளார். அவளின் வயதைக் கருத்தில் கொண்டு, அந்தக் கோரிக்கையை, பகவதி பிரசாத் நிராகரித்திருக்க வேண்டும். அதை செய்யத் தவறியதுதான், அவர் மீதான குற்றம்.

முதலில் அவருடன் சென்ற சிறுமி, வழக்கு விசாரணையின் போது, தன்னை வலுக்கட்டாயமாக ராஜஸ்தானுக்கு கூட்டிச் சென்றார், மிரட்டினார் என, பகவதி பிரசாத் மீது புகார் கூறுவதில் உண்மையில்லை. ஏனெனில், அந்த சிறுமி தான், அவரைத் தொந்தரவு செய்துள்ளாள் என்பது வழக்கு விசாரணையில் தெரிய வருகிறது.

இது போன்று ஏராளமான வழக்குகள், கோர்ட்டுகளுக்கு வருகின்றன. வீடுகளில், பெண் குழந்தைகளை, முறையாக, சிலர் வளர்ப்பதில்லை. வீடுகளின் வரவேற்பறையிலேயே, டிவி’ பெட்டிகளில், இது போன்ற, இழுத்துச் செல்லப்படும் காட்சிகள், நாள் முழுக்க, பல சேனல்களில் காட்டப்படுகின்றன.

காதலுக்கு கண் இல்லை. காதல், மதம், ஜாதி, வயது என, எதையும் பார்ப்பதில்லை என, பாலிவுட் படங்களில் காட்சிகள் காட்டப்படுகின்றன. அந்த காட்சிகளால் ஈர்க்கப்படும் சிறுமிகள், காதல் என்றும், காதல் திருமணம் என்றும், கனவில் மிதந்து, காதலர்களுடனும், ஆண் நண்பர்களுடன் ஓடிவிடுகின்றனர். பிறகு, அந்த ஆண் நண்பர்களை வழக்குகளில் சிக்க வைத்து விடுகின்றனர்.சில வீடுகளில், சிறுமிகளை, எக்கேடு கெட்டு போனாலும் பரவாயில்லை’ என, பெற்றோர் விட்டு விடுகின்றனர்.

இது போல, ஏராளமான வழக்குகளை நாங்கள் சந்திக்கிறோம்.எனவே, பகவதி பிரசாத் செய்த ஒரே குற்றம், 14 வயது சிறுமியை அழைத்து சென்றது தான். அதற்காக அவர், இதற்கு முன் அனுபவித்த சிறைத் தண்டனையே போதுமானது. இருந்தாலும், அவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறேன்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

முஸ்லிம் பெண்கள் பருவமடைந்தால் 15 வயதில் விரும்பியவரை மணக்கலாம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பையும் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியான ரவீந்திர பட் அவர்கள்தான் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மெகா சீரியல்களையும், சினிமாக்களையும் தங்களது பிள்ளை குட்டிகளுடன் குடும்ப சகிதம் அமர்ந்து கண்டு களிக்கும் பெற்றோர்கள் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகாவது திருந்த வேண்டும்.

இல்லாவிட்டால் அவர்களும் இது போன்று பிள்ளைகளை இழந்துவிட்டு நிற்க வேண்டிய நிலைதான் வரும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...