பெண்கள் சிறுவயதில் ஓடிப்போக காரணம் என்ன?

உண்மையச் சொன்ன உயர்நீதிமன்றம்!

நாட்டில் நடக்கக்கூடிய கற்பழிப்புகள், பாலியல் சில்மிஷங்கள், ஆபாசச் சேட்டைகள் ஆகிய அனைத்திற்கும் சினிமா கூத்தாடிகளும், சினிமாவும், மெகா சீரியல்களும் தான் காரணம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த உண்மையை கடந்த வாரம் டெல்லி உயர்நீதி மன்றமும் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது.

இதோ அந்தத் தீர்ப்பு :

பதினான்கு வயது பள்ளி சிறுமியைக் கடத்திச் சென்ற இளைஞனுக்கு, அபராதம் மட்டும் விதித்த டில்லி கோர்ட், சிறுமி மீது தான் தவறு உள்ளது; இளைஞனிடம் தவறு எதுவும் இல்லை’ என, உத்தரவிட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பகவதி பிரசாத் என்ற இளைஞர், டில்லி பள்ளி ஒன்றில், டிரைவராக வேலை பார்த்தார். அவர் ஓட்டிச் சென்ற பஸ்சில், மாணவிகள் பலரும் பயணம் செய்தனர். அவர்களில், 14 வயது சிறுமி ஒருவர், டிரைவர், பகவதி பிரசாத்தை ஒரு தலையாக காதலித்தார்.

அதை பின் டிரைவர் பிரசாத், 2010, ஜூலை, 13ல், அந்த சிறுமியைக் கடத்தி, ராஜஸ்தான் சென்றார். அங்கு திருமணம் செய்து கொள்ள, அவர்கள் நினைத்திருந்த நேரத்தில், ஜூலை 20ம் தேதி, மெகந்திபுர் பாலாஜி என்ற இடத்தில், அந்த ஜோடியைப் பிடித்து போலீசார், டில்லி கொண்டு வந்தனர். சிறுமியைக் கடத்திச் சென்றதாக, பகவதி பிரசாத் மீது வழக்கு தொடரப்பட்டது. அதன் பேரில் அவர், சிறையில் அடைக்கப்பட்டார். இதை எதிர்த்து, டில்லி, கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில், பகவதி பிரசாத் மேல் முறையீடு செய்தார்.

இந்த வழக்கு, நீதிபதி, வீரேந்தர் பட் முன்னிலையில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. தீர்ப்பு வழங்கிய நீதிபதி பட், சிறுமியை கடத்திச் சென்ற பகவதி பிரசாத்தைத் தண்டித்தார். எனினும், அபராதம் மட்டும் விதித்து, விடுதலை செய்து உத்தரவிட்டார். அவர் தன் தீர்ப்பில் கூறியிருந்ததாவது:

பகவதி பிரசாத் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் வேண்டுமென்றே சுமத்தப்படுவதாக, கோர்ட் கருதுகிறது. அந்த இளைஞரை, அந்த சிறுமி தான், திருமணம் செய்ய தொந்தரவு செய்துள்ளார். அவளின் வயதைக் கருத்தில் கொண்டு, அந்தக் கோரிக்கையை, பகவதி பிரசாத் நிராகரித்திருக்க வேண்டும். அதை செய்யத் தவறியதுதான், அவர் மீதான குற்றம்.

முதலில் அவருடன் சென்ற சிறுமி, வழக்கு விசாரணையின் போது, தன்னை வலுக்கட்டாயமாக ராஜஸ்தானுக்கு கூட்டிச் சென்றார், மிரட்டினார் என, பகவதி பிரசாத் மீது புகார் கூறுவதில் உண்மையில்லை. ஏனெனில், அந்த சிறுமி தான், அவரைத் தொந்தரவு செய்துள்ளாள் என்பது வழக்கு விசாரணையில் தெரிய வருகிறது.

இது போன்று ஏராளமான வழக்குகள், கோர்ட்டுகளுக்கு வருகின்றன. வீடுகளில், பெண் குழந்தைகளை, முறையாக, சிலர் வளர்ப்பதில்லை. வீடுகளின் வரவேற்பறையிலேயே, டிவி’ பெட்டிகளில், இது போன்ற, இழுத்துச் செல்லப்படும் காட்சிகள், நாள் முழுக்க, பல சேனல்களில் காட்டப்படுகின்றன.

காதலுக்கு கண் இல்லை. காதல், மதம், ஜாதி, வயது என, எதையும் பார்ப்பதில்லை என, பாலிவுட் படங்களில் காட்சிகள் காட்டப்படுகின்றன. அந்த காட்சிகளால் ஈர்க்கப்படும் சிறுமிகள், காதல் என்றும், காதல் திருமணம் என்றும், கனவில் மிதந்து, காதலர்களுடனும், ஆண் நண்பர்களுடன் ஓடிவிடுகின்றனர். பிறகு, அந்த ஆண் நண்பர்களை வழக்குகளில் சிக்க வைத்து விடுகின்றனர்.சில வீடுகளில், சிறுமிகளை, எக்கேடு கெட்டு போனாலும் பரவாயில்லை’ என, பெற்றோர் விட்டு விடுகின்றனர்.

இது போல, ஏராளமான வழக்குகளை நாங்கள் சந்திக்கிறோம்.எனவே, பகவதி பிரசாத் செய்த ஒரே குற்றம், 14 வயது சிறுமியை அழைத்து சென்றது தான். அதற்காக அவர், இதற்கு முன் அனுபவித்த சிறைத் தண்டனையே போதுமானது. இருந்தாலும், அவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறேன்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

முஸ்லிம் பெண்கள் பருவமடைந்தால் 15 வயதில் விரும்பியவரை மணக்கலாம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பையும் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியான ரவீந்திர பட் அவர்கள்தான் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மெகா சீரியல்களையும், சினிமாக்களையும் தங்களது பிள்ளை குட்டிகளுடன் குடும்ப சகிதம் அமர்ந்து கண்டு களிக்கும் பெற்றோர்கள் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகாவது திருந்த வேண்டும்.

இல்லாவிட்டால் அவர்களும் இது போன்று பிள்ளைகளை இழந்துவிட்டு நிற்க வேண்டிய நிலைதான் வரும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...