புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தலாக் குறித்து ஒளிபரப்பாக இருந்த நிகழ்ச்சி அறிவிக்கப்பட்ட நேரத்தில் ஒளிபரப்பாகவில்லை. இதற்கு முஸ்லிம் இயக்கங்களின் மிரட்டலே காரணம் என்று சிலர் சொல்கிறார்கள். விஜய் டிவியில் பர்தா குறித்த நிகழ்ச்சியை தவ்ஹீத் ஜமாஅத் தடுத்ததால் இதிலும் தவ்ஹீத் ஜமாஅத்தைத் தொடர்பு படுத்தி சிலர் பேசுகின்றனர். இது உண்மையா?

மசூது, கடையநல்லூர்.

நம்மைப் பொருத்தவரை எதை எதிர்ப்பதாக இருந்தாலும் அதை நேருக்கு நேராகத் தான் செய்வோம். கொல்லைப்புறமாக எதையும் செய்யமாட்டோம். வெளிப்படையாக அறிவித்து விட்டுத் தான் எந்த எதிர்ப்பையும் பதிவு செய்வோம்.

விஸ்வரூபம் திரைப்படத்தை நாம் எதிர்த்தோம். வெளிப்படையாக அறிவித்து விட்டுத் தான் எதிர்த்தோம்.

மனுஷபுத்திரன் என்ற அறிவிலி ஆதாரமில்லாமல் உளறிய போதும் நேருக்கு நேராகத்தான் அவரை எதிர்த்தோம்.

கருணாநிதி அந்தப் பொய்யை வாந்தி எடுத்த போதும் அவரையும் நேருக்கு நேராகத் தான் எதிர்த்தோம்.

படித்தும் படிக்காத பதர் சயீத் உளறிய போதும் அதையும் நேருக்கு நேராகத் தான் எதிர்த்தோம்.

இவர்கள் இஸ்லாத்துக்கு எதிராக உளறிக்கொட்டிய போது எங்களுடன் விவாதம் செய்து உங்கள் கருத்தை நிரூபிக்கத் தயாரா என்று நேரடியாக அவர்களுக்கே கடிதம் எழுதினோம்.

விளம்பரத்துக்காக எதையாவது எழுதும் அறிவுஜீவிகள் எனும் விஷக்கிருமிகள் ஓட்டம் பிடித்தார்களே தவிர தாங்கள் சொன்னதை நிரூபிக்கத் தயாராக இல்லை.

மனுசபுத்திரன், கருனாநிதி, நக்கீரன், பதர்சயீத் உள்ளிட்ட யாரும் இஸ்லாத்துக்கு எதிராக எடுத்து வைத்த வாதங்களை நிரூபிக்கத் திராணியற்றவர்களாகவும், கோழைகளாகவும், இஸ்லாம் பற்றி அறிவீனர்களாகவும் தான் உள்ளனர் என்பது இதன் மூலம் நிரூபணமானது.

தலாக் குறித்து இப்போதும் யாராவது தவறான வாதங்களை வைத்தால் அதைத் தவறு என்று நிரூபிக்கும் திராணியும், துணிவும், தெளிவும் நமக்கு இருக்கும் போது கொல்லைப்புறமாக மிரட்டல் விடும் அவசியம் இல்லை.

தலாக் குறித்த ஒரு நிகழ்ச்சி புதிய தலைமுறையில் ஒளிபரப்ப உள்ளதாக புதிய தலைமுறை நிர்வாகம் பொதுச் செயலாளரைத் தொடர்பு கொண்டு பீஜே அவர்களின் கருத்தையும் நாங்கள் அறிய வேண்டும் என்று கேட்டனர்.

என்னிடம் பொதுச் செயலாளர் சொன்ன போது நானும் அதை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கும் நமக்கும் வசதியான புதன்கிழமை காலை பத்து மணிக்கு பேட்டி எடுப்பதாக முடிவு செய்யப்பட்டது.

குறித்த நாளில் நான் புதிய தலைமுறை படக்குழுவினரை எதிர்பார்த்து காத்து இருந்தேன். ஆனால் அவர்கள் வரவில்லை. திடீரென்று இன்னொரு நிகழ்ச்சிக்கு செய்தியாளர்கள் சென்று விட்டதாக நமக்குச் சொல்லப்பட்டது.

புதிய தலைமுறையில் செய்தியாளர்களுக்கும், படக்குழுவினருக்கும் பஞ்சம் இல்லை. நானறிந்த வரையில் குறித்த நேரத்தை அவர்கள் மீற மாட்டார்கள் என்பதால் வேறு ஏதோ காரணத்தால் நம்மைத் தவிர்க்கப் பார்க்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

இதன் பின்னர் ஏன் நிறுத்தினார்கள் என்று நமக்குத் தெரியவில்லை.

முக்கிய இயக்கத்தின் சார்பில் மிரட்டினார்களா?

மொட்டை மிரட்டல் வந்ததா?

நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது இதை ஒளிபரப்பினால் நீதிமன்ற அவமதிப்பாகி விடுமோ என்று கருதி இதை நிறுத்தினார்களா?

அல்லது அவர்களாகவே ஏதோ காரணத்துக்காக நிறுத்தினார்களா?

என்று தெரியவில்லை.

அதைப் புதிய தலைமுறை சொன்னால் தான் நமக்குத் தெரியும். அப்படியில்லாமல் ஊகமாக எதையும் நாம் சொல்ல முடியாது.

ஆனால் புதிய தலைமுறை தொலைக்காட்சி இப்படி எந்தக் குற்றச்சாட்டையும் சொல்லாதபோது அதில் முகம் காட்டியவர்கள் தங்கள் முகம் தெரியாமல் போய்விட்டதே என்பதற்காக மக்களை உசுப்பி விடுகிறார்கள்.

பர்தா பற்றி விஜய் டிவியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியை நாம் தடுத்து நிறுத்தியது உண்மை தான். இது உலகத்துக்கே தெரிந்த உண்மை தான். இதில் எந்த ஒளிவுமறைவும் இல்லை.

மறைமுகமாக விஜய் டிவிக்கு நாம் எந்த மிரட்டலும் விடவில்லை. நமது லட்டர் பேடில் விஜய் டிவிக்குக் கடிதம் எழுதி இந்த நிகழ்ச்சி கிறுக்குத்தனமானது. வாதங்கள் அடிப்படையில் அமையவில்லை. பர்தா அணிந்த பெண்ணை நடிக்க வைத்து முடிவில் பர்தாவைக் கழற்றி வீசிச் செல்வது போல் தயாரிக்கப்பட்டுள்ள நாடகமாக இது உள்ளது.

பர்தா? சரியா இல்லையா என்பதைப் பற்றி கோபிநாத்தோ வேறு யாருமோ முஸ்லிம் அறிஞர்களுடன் விவாதிக்கட்டும். அதை நாம் வரவேற்போம்.

ஒரு பெண்ணை நடிக்க வைத்து பர்தாவைக் கழற்றச் சொல்லி காட்டுவது என்றால் இது அறிவுப்பூர்வமானது அல்ல. கண்டிப்பாக அதைத் தயாரித்தவரின் விஷமத்தனம் தான் காரணம் என்பதைத் தகுந்த காரணங்களுடன் விஜய் டிவி நிர்வாகத்துக்கு விளக்கினோம்.

ஒளிந்து கொண்டு மிரட்டல் எதுவும் விடவில்லை.

உதாரணமாக நிர்வாணமாக மனிதன் நடமாடலாமா என்று ஒரு நிகழ்ச்சியை அந்த தொலைக்காட்சி ஏற்பாடு செய்கிறது என்று வைத்துக் கொள்வோம். (விஜய் டிவி அப்படி ஒரு நிகழ்ச்சி தயாரித்தாலும் ஆச்சர்யம் இல்லை.) அதில் நிர்வாணம் தான் சரி என்று காட்டி அதில் கலந்து கொண்டு ஆடை அணிந்த மனுஷ(?) புத்திரன் என்பவரை எல்லா ஆடையையும் அவிழ்த்துப் போட்டு விட்டு ஓடுவது போல் காட்டினால் அது விவாதம் என்ற வகையில் சேருமா?

பர்தா பற்றிய நிகழ்ச்சி அது போல் இருந்ததால் தான் விஜய் டிவியின் அயோக்கியத்தனத்தை நேருக்கு நேராக எதிர்கொண்டோம்.

விஜய் டிவி நிர்வாகமும் அதைப் பார்த்து விட்டு அது விஷமத்தனமாக தயாரிக்கப்பட்டதை அறிந்து தயாரித்தவரையும் கண்டித்து அதை நிறுத்தியது.

எனவே நாம் எதைச் செய்தாலும் சொந்தப் பெயரில் நேருக்கு நேராகத் தான் செய்வோம். முதுகெலும்பில்லாமல் செயல்படமாட்டோம்.

புதிய தலைமுறையில் தலாக் என்ற நிகழ்ச்சி நிறுத்தப்பட்டற்கு நாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணம் இல்லை.

ஆனால் அந்த நிகழ்ச்சியில் முஸ்லிம்கள் சார்பில் பேசிய சிலர் வரும் ஆனால் வராது என்ற வகையில் பேசி இருமுகம் காட்டியுள்ளதாக ஊடக நண்பர்கள் சிலர் வருத்தப்பட்டு நம்மிடம் சொன்னார்கள்.

தலாக் என்பது தவறானது என்று அவர்கள் கருதினால் தவறு என்று சொல்ல வேண்டும். சரி என்று கருதினால் அதற்கேற்ப வாதிட வேண்டும்.

அப்படி இல்லாமல் முஸ்லிம்களையும் இஸ்லாத்தின் எதிரிகளையும் இரு சேர திருப்திப்படுத்தும் வகையில் பேசுவதைச் சிலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். எனவே ஊடக நண்பர்கள் சொன்னது நமக்கு ஆச்சர்யம் அளிக்கவில்லை.

அது ஒளிபரப்பப்பட்டால் தான் இது உண்மையா என்று தெரியும்.

30.06.2013. 10:31 AM

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...