புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தலாக் குறித்து ஒளிபரப்பாக இருந்த நிகழ்ச்சி அறிவிக்கப்பட்ட நேரத்தில் ஒளிபரப்பாகவில்லை. இதற்கு முஸ்லிம் இயக்கங்களின் மிரட்டலே காரணம் என்று சிலர் சொல்கிறார்கள். விஜய் டிவியில் பர்தா குறித்த நிகழ்ச்சியை தவ்ஹீத் ஜமாஅத் தடுத்ததால் இதிலும் தவ்ஹீத் ஜமாஅத்தைத் தொடர்பு படுத்தி சிலர் பேசுகின்றனர். இது உண்மையா?

மசூது, கடையநல்லூர்.

நம்மைப் பொருத்தவரை எதை எதிர்ப்பதாக இருந்தாலும் அதை நேருக்கு நேராகத் தான் செய்வோம். கொல்லைப்புறமாக எதையும் செய்யமாட்டோம். வெளிப்படையாக அறிவித்து விட்டுத் தான் எந்த எதிர்ப்பையும் பதிவு செய்வோம்.

விஸ்வரூபம் திரைப்படத்தை நாம் எதிர்த்தோம். வெளிப்படையாக அறிவித்து விட்டுத் தான் எதிர்த்தோம்.

மனுஷபுத்திரன் என்ற அறிவிலி ஆதாரமில்லாமல் உளறிய போதும் நேருக்கு நேராகத்தான் அவரை எதிர்த்தோம்.

கருணாநிதி அந்தப் பொய்யை வாந்தி எடுத்த போதும் அவரையும் நேருக்கு நேராகத் தான் எதிர்த்தோம்.

படித்தும் படிக்காத பதர் சயீத் உளறிய போதும் அதையும் நேருக்கு நேராகத் தான் எதிர்த்தோம்.

இவர்கள் இஸ்லாத்துக்கு எதிராக உளறிக்கொட்டிய போது எங்களுடன் விவாதம் செய்து உங்கள் கருத்தை நிரூபிக்கத் தயாரா என்று நேரடியாக அவர்களுக்கே கடிதம் எழுதினோம்.

விளம்பரத்துக்காக எதையாவது எழுதும் அறிவுஜீவிகள் எனும் விஷக்கிருமிகள் ஓட்டம் பிடித்தார்களே தவிர தாங்கள் சொன்னதை நிரூபிக்கத் தயாராக இல்லை.

மனுசபுத்திரன், கருனாநிதி, நக்கீரன், பதர்சயீத் உள்ளிட்ட யாரும் இஸ்லாத்துக்கு எதிராக எடுத்து வைத்த வாதங்களை நிரூபிக்கத் திராணியற்றவர்களாகவும், கோழைகளாகவும், இஸ்லாம் பற்றி அறிவீனர்களாகவும் தான் உள்ளனர் என்பது இதன் மூலம் நிரூபணமானது.

தலாக் குறித்து இப்போதும் யாராவது தவறான வாதங்களை வைத்தால் அதைத் தவறு என்று நிரூபிக்கும் திராணியும், துணிவும், தெளிவும் நமக்கு இருக்கும் போது கொல்லைப்புறமாக மிரட்டல் விடும் அவசியம் இல்லை.

தலாக் குறித்த ஒரு நிகழ்ச்சி புதிய தலைமுறையில் ஒளிபரப்ப உள்ளதாக புதிய தலைமுறை நிர்வாகம் பொதுச் செயலாளரைத் தொடர்பு கொண்டு பீஜே அவர்களின் கருத்தையும் நாங்கள் அறிய வேண்டும் என்று கேட்டனர்.

என்னிடம் பொதுச் செயலாளர் சொன்ன போது நானும் அதை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கும் நமக்கும் வசதியான புதன்கிழமை காலை பத்து மணிக்கு பேட்டி எடுப்பதாக முடிவு செய்யப்பட்டது.

குறித்த நாளில் நான் புதிய தலைமுறை படக்குழுவினரை எதிர்பார்த்து காத்து இருந்தேன். ஆனால் அவர்கள் வரவில்லை. திடீரென்று இன்னொரு நிகழ்ச்சிக்கு செய்தியாளர்கள் சென்று விட்டதாக நமக்குச் சொல்லப்பட்டது.

புதிய தலைமுறையில் செய்தியாளர்களுக்கும், படக்குழுவினருக்கும் பஞ்சம் இல்லை. நானறிந்த வரையில் குறித்த நேரத்தை அவர்கள் மீற மாட்டார்கள் என்பதால் வேறு ஏதோ காரணத்தால் நம்மைத் தவிர்க்கப் பார்க்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

இதன் பின்னர் ஏன் நிறுத்தினார்கள் என்று நமக்குத் தெரியவில்லை.

முக்கிய இயக்கத்தின் சார்பில் மிரட்டினார்களா?

மொட்டை மிரட்டல் வந்ததா?

நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது இதை ஒளிபரப்பினால் நீதிமன்ற அவமதிப்பாகி விடுமோ என்று கருதி இதை நிறுத்தினார்களா?

அல்லது அவர்களாகவே ஏதோ காரணத்துக்காக நிறுத்தினார்களா?

என்று தெரியவில்லை.

அதைப் புதிய தலைமுறை சொன்னால் தான் நமக்குத் தெரியும். அப்படியில்லாமல் ஊகமாக எதையும் நாம் சொல்ல முடியாது.

ஆனால் புதிய தலைமுறை தொலைக்காட்சி இப்படி எந்தக் குற்றச்சாட்டையும் சொல்லாதபோது அதில் முகம் காட்டியவர்கள் தங்கள் முகம் தெரியாமல் போய்விட்டதே என்பதற்காக மக்களை உசுப்பி விடுகிறார்கள்.

பர்தா பற்றி விஜய் டிவியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியை நாம் தடுத்து நிறுத்தியது உண்மை தான். இது உலகத்துக்கே தெரிந்த உண்மை தான். இதில் எந்த ஒளிவுமறைவும் இல்லை.

மறைமுகமாக விஜய் டிவிக்கு நாம் எந்த மிரட்டலும் விடவில்லை. நமது லட்டர் பேடில் விஜய் டிவிக்குக் கடிதம் எழுதி இந்த நிகழ்ச்சி கிறுக்குத்தனமானது. வாதங்கள் அடிப்படையில் அமையவில்லை. பர்தா அணிந்த பெண்ணை நடிக்க வைத்து முடிவில் பர்தாவைக் கழற்றி வீசிச் செல்வது போல் தயாரிக்கப்பட்டுள்ள நாடகமாக இது உள்ளது.

பர்தா? சரியா இல்லையா என்பதைப் பற்றி கோபிநாத்தோ வேறு யாருமோ முஸ்லிம் அறிஞர்களுடன் விவாதிக்கட்டும். அதை நாம் வரவேற்போம்.

ஒரு பெண்ணை நடிக்க வைத்து பர்தாவைக் கழற்றச் சொல்லி காட்டுவது என்றால் இது அறிவுப்பூர்வமானது அல்ல. கண்டிப்பாக அதைத் தயாரித்தவரின் விஷமத்தனம் தான் காரணம் என்பதைத் தகுந்த காரணங்களுடன் விஜய் டிவி நிர்வாகத்துக்கு விளக்கினோம்.

ஒளிந்து கொண்டு மிரட்டல் எதுவும் விடவில்லை.

உதாரணமாக நிர்வாணமாக மனிதன் நடமாடலாமா என்று ஒரு நிகழ்ச்சியை அந்த தொலைக்காட்சி ஏற்பாடு செய்கிறது என்று வைத்துக் கொள்வோம். (விஜய் டிவி அப்படி ஒரு நிகழ்ச்சி தயாரித்தாலும் ஆச்சர்யம் இல்லை.) அதில் நிர்வாணம் தான் சரி என்று காட்டி அதில் கலந்து கொண்டு ஆடை அணிந்த மனுஷ(?) புத்திரன் என்பவரை எல்லா ஆடையையும் அவிழ்த்துப் போட்டு விட்டு ஓடுவது போல் காட்டினால் அது விவாதம் என்ற வகையில் சேருமா?

பர்தா பற்றிய நிகழ்ச்சி அது போல் இருந்ததால் தான் விஜய் டிவியின் அயோக்கியத்தனத்தை நேருக்கு நேராக எதிர்கொண்டோம்.

விஜய் டிவி நிர்வாகமும் அதைப் பார்த்து விட்டு அது விஷமத்தனமாக தயாரிக்கப்பட்டதை அறிந்து தயாரித்தவரையும் கண்டித்து அதை நிறுத்தியது.

எனவே நாம் எதைச் செய்தாலும் சொந்தப் பெயரில் நேருக்கு நேராகத் தான் செய்வோம். முதுகெலும்பில்லாமல் செயல்படமாட்டோம்.

புதிய தலைமுறையில் தலாக் என்ற நிகழ்ச்சி நிறுத்தப்பட்டற்கு நாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணம் இல்லை.

ஆனால் அந்த நிகழ்ச்சியில் முஸ்லிம்கள் சார்பில் பேசிய சிலர் வரும் ஆனால் வராது என்ற வகையில் பேசி இருமுகம் காட்டியுள்ளதாக ஊடக நண்பர்கள் சிலர் வருத்தப்பட்டு நம்மிடம் சொன்னார்கள்.

தலாக் என்பது தவறானது என்று அவர்கள் கருதினால் தவறு என்று சொல்ல வேண்டும். சரி என்று கருதினால் அதற்கேற்ப வாதிட வேண்டும்.

அப்படி இல்லாமல் முஸ்லிம்களையும் இஸ்லாத்தின் எதிரிகளையும் இரு சேர திருப்திப்படுத்தும் வகையில் பேசுவதைச் சிலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். எனவே ஊடக நண்பர்கள் சொன்னது நமக்கு ஆச்சர்யம் அளிக்கவில்லை.

அது ஒளிபரப்பப்பட்டால் தான் இது உண்மையா என்று தெரியும்.

30.06.2013. 10:31 AM

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...