சனிக்கிழமை நோன்பு நோற்கத் தடையா?

கேள்வி :

சனிக்கிழமை நஃபில்  நோன்பு நோற்பது ஹராம் என்பதாக திர்மிதி, இப்னு மாஜா, அபூ தாவூத் இன்னும் மற்ற ஹதீஸ் நூற்களிலும் உள்ள செய்தியை இமாம் அல்பானி அவர்கள் ஸஹீஹ் என்றும், ஹசன் என்றும் வகைப்படுத்தி உள்ளார். இது குறித்து நம் நிலைபாடு  என்ன ?

கோவை இம்ரான்.

பதில் : கடமையான நோன்பைத் தவிர வேறு எந்த நோன்பையும் சனிக்கிழமையில் நோற்பது கூடாது என்ற கருத்தில் திர்மிதி, அபூதாவூது, அஹ்மத், இப்னு ஹூசைமா, ஹாகிம், பைஹகி போன்ற பல நூற்களில் ஒரு செய்தி இடம் பெற்றுள்ளது. அந்தச் செய்தி இதுதான்:

سنن أبي داود ـ

2423 – حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ حَبِيبٍ ح وَحَدَّثَنَا يَزِيدُ بْنُ قُبَيْسٍ – مِنْ أَهْلِ جَبَلَةَ – حَدَّثَنَا الْوَلِيدُ جَمِيعًا عَنْ ثَوْرِ بْنِ يَزِيدَ عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ السُّلَمِىِّ عَنْ أُخْتِهِ – وَقَالَ يَزِيدُ الصَّمَّاءِ – أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- قَالَ « لاَ تَصُومُوا يَوْمَ السَّبْتِ إِلاَّ فِيمَا افْتُرِضَ عَلَيْكُمْ وَإِنْ لَمْ يَجِدْ أَحَدُكُمْ إِلاَّ لِحَاءَ عِنَبَةٍ أَوْ عُودَ شَجَرَةٍ فَلْيَمْضُغْهُ ». قَالَ أَبُو دَاوُدَ وَهَذَا حَدِيثٌ مَنْسُوخٌ.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு கடமையாக்கப்பட்டவற்றைத் தவிர (வேறு எந்த நோன்பையும்) சனிக்கிழமையில் நோற்காதீர்கள். உங்களில் ஒருவர் (சனிக்கிழமை அன்று உண்பதற்காக) திராட்சையின் காம்பு அல்லது மரத்தின் குச்சியைத் தவிர வேறு எதையும் பெற்றுக் கொள்ளவில்லை என்றாலும் அதையாவது மென்று கொள்ளட்டும்.

அறிவிப்பவர் : அஸ்ஸம்மாவு பின்த் புஸ்ர் (ரலி)

நூல் : அபூதாவூத் (2423)

இந்தச் செய்தியினை அல்பானி போன்ற அறிஞர்கள் ஸஹீஹ் என்று கூறினாலும் இது ஏற்றுக் கொள்வதற்கு தகுதியான செய்தி அல்ல.

இது அறிவிப்பாளர் தொடர் குளறுபடியுடன் அறிவிக்கப்பட்ட ஒரு செய்தியாகும்.

இதன் கருத்து இதை விட வலிமையான பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கு நேரடியாக முரண்படும் வகையில் அமைந்துள்ளது.

முதலில் இந்த ஹதீஸ் குறித்து ஹதீஸ் கலை அறிஞர்களின் கருத்தைப் பார்ப்போம். ஆதாரப்பூவமான ஹதீஸுக்கு எப்படி முரண்படுகிறது என்பதை அடுத்து பார்ப்போம்.

. وَلَقَدْ أَنْكَرَ الزُّهْرِيُّ حَدِيثَ الصَّمَّاءِ فِي كَرَاهَةِ صَوْمِ يَوْمِ السَّبْتِ , وَلَمْ يَعُدَّهُ مِنْ حَدِيثِ أَهْلِ الْعِلْمِ , بَعْدَ مَعْرِفَتِهِ بِهِ  (شرح معاني الآثار (2/ 81)

சனிக்கிழமை நோன்பு நோற்பதற்குத் தடை என வந்துள்ள ”அஸ்ஸம்மா பின்த் புஸ்ர்” உடைய அறிவிப்பை இமாம் ஸுஹ்ரி அவர்கள் மறுத்துள்ளார்கள். இதன் தரத்தை அறிந்த பிறகு இதை ஹதீஸாக எந்த அறிஞரும் கருதமாட்டார் எனவும் அவர் கூறியுள்ளார்.

நூல் : ஷரஹ் மஆனில் ஆஸார்.

شرح معاني الآثار)

3318 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدِ بْنِ هِشَامٍ الرُّعَيْنِيُّ , قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ , قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ , قَالَ: سُئِلَ الزُّهْرِيُّ عَنْ صَوْمِ يَوْمِ السَّبْتِ , فَقَالَ: «لَا بَأْسَ بِهِ» , فَقِيلَ لَهُ: فَقَدْ رُوِيَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي كَرَاهَتِهِ , فَقَالَ: «ذَاكَ حَدِيثٌ حِمْصِيٌّ» فَلَمْ يَعُدَّهُ الزُّهْرِيُّ حَدِيثًا يُقَالُ بِهِ , وَضَعَّفَهُ.

சனிக்கிழமை நோன்பு நோற்பது கூடுமா? என்று ஸுஹ்ரி அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் ”அதனால் ஒன்றுமில்லை. (நோற்கலாம்) என பதிலளித்தார்கள். அன்று நோன்பு நோற்பது தடை செய்யப்பட்டுள்ளதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளதே என அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர் ”அது ஹி்ம்ஸ் வாசியுடைய (சுயச்) செய்தி தான் எனப் பதிலளித்தார். ஸுஹ்ரி அவர்கள் அதனை அறிவிப்பதற்கு தகுதியான ஹதீஸாக கருதவில்லை. அவர் அதனை பலவீனமாக்கியுள்ளார். நூல் : ஷரஹ் மஆனில் ஆஸார். (பாகம் 2 பக்கம் : 81)

الفروع ـ (5/ 105(

قَالَ الْأَثْرَمُ . قَالَ أَبُو عَبْدِ اللَّهِ : قَدْ جَاءَ فِيهِ حَدِيثُ الصَّمَّاءِ ، وَكَانَ يَحْيَى بْنُ سَعِيدٍ يَتَّقِيهِ وَأَبَى أَنْ يُحَدِّثَنِي بِهِ

(சனிக்கிழமை நோன்பு நோற்பது கூடாது) என்பது தொடர்பாக ”அஸ்ஸம்மாவு பின்த் புஸ்ர்” உடைய ஹதீஸ் வந்துள்ளது. யஹ்யா பின் ஸயீத் அவர்கள் இந்த ஹதீஸைத் தவிர்த்து விடுவார். அந்த செய்தியை எனக்கு அறிவிப்பதற்கு மறுத்து விட்டார் என இமாம் அஹ்மத் கூறியதாக அஸ்ரம் கூறுகின்றார்.

நூல் : அல்ஃபுரூஃ (பாகம் 5 பக்கம் 105)

سنن البيهقي الكبرى)

 8279 – وأخبرنا أبو علي الروذباري أنبأ محمد بن بكر ثنا أبو داود ثنا محمد بن الصباح بن سفيان ثنا الوليد عن الأوزاعي قال ما زلت له كاتما ثم رأيته انتشر يعني حديث بن بسر هذا في صوم يوم السبت

سنن أبي داود )

2426 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ بْنِ سُفْيَانَ حَدَّثَنَا الْوَلِيدُ عَنِ الأَوْزَاعِىِّ قَالَ مَا زِلْتُ لَهُ كَاتِمًا حَتَّى رَأَيْتُهُ انْتَشَرَ. يَعْنِى حَدِيثَ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ هَذَا فِى صَوْمِ يَوْمِ السَّبْتِ. قَالَ أَبُو دَاوُدَ قَالَ مَالِكٌ هَذَا كَذِبٌ.

சனிக்கிழமை நோன்பு தொடர்பாக இப்னு புஸ்ர் (ரலி) அவரகள் வழியாக அறிவிக்கப்படும் செய்தி குறித்து இமாம் அவ்சாயீ கூறுகிறார் : ”இந்தச் செய்தி (மக்களிடம்) பரவிவிட்டது என்று நான் கருதும் வரை இதனை (அறிவிக்காமல்) தொடர்ந்து மறைப்பவனாகவே இருந்தேன். இது பொய்யான செய்தி என்று மாலிக் இமாம் கூறியதாக அபூதாவூத் கூறுகிறார்.

நூல் : ஸுனனுல் பைஹகி அல்குப்ரா (பாகம் 4 பக்கம் 302) அபூதாவூத் (2426)

مختصر سنن أبي داود للمنذري)

وروي هذا الحديث من حديث عبد اللَّه بن بسر عن رسول اللَّه -صلى اللَّه عليه وسلم-، ومن حديث الصماء عن عائشة زوج النبي -صلى اللَّه عليه وسلم- عن النبي -صلى اللَّه عليه وسلم-، وقال النسائي: هذه أحاديث مضطربة.

”இவை குளறுபடியான ஹதீஸ்களாகும்” என இமாம் நஸாயீ கூறியுள்ளார். முஹ்தஸர் சுனன் அபீ தாவூத் லில்முன்திரி (பாகம் 2 பக்கம் 118)

இமாம் இப்னு ஹஜர் அவர்களும் இது குளறுபடியான செய்தி என விமர்சித்துள்ளார்.

بلوغ المرام من أدلة الأحكام (ص: 255(

692- وَعَنِ اَلصَّمَّاءِ بِنْتِ بُسْرٍ رَضِيَ اَللَّهُ عَنْهَا أَنَّ رَسُولَ اَللَّهِ – صلى الله عليه وسلم – قَالَ: – لَا تَصُومُوا يَوْمَ اَلسَّبْتِ, إِلَّا فِيمَا اِفْتُرِضَ عَلَيْكُمْ, فَإِنْ لَمْ يَجِدْ أَحَدُكُمْ إِلَّا لِحَاءَ عِنَبٍ, أَوْ عُودَ شَجَرَةٍ فَلْيَمْضُغْهَا – رَوَاهُ اَلْخَمْسَةُ, وَرِجَالُهُ ثِقَاتٌ, إِلَّا أَنَّهُ مُضْطَرِبٌ .

وَقَدْ أَنْكَرَهُ مَالِكٌ وَقَالَ أَبُو دَاوُدَ: هُوَ مَنْسُوخٌ

இமாம் இப்னு ஹஜர் அவர்கள் தம்முடைய ”புலூகுல் மராம்” என்ற நூலில் இந்த ஹதீஸைப் பதிவு செய்துவிட்டு பின்வருமாறு கூறுகிறார்கள். இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்றாலும் இது குளறுபடியான செய்தியாகும். இதனை  மாலிக் மறுத்துள்ளார்.  அபூதாவூத் இது ”மன்ஸுஹ்” (சட்டம் மாற்றப்பட்ட செய்தி) எனக் கூறியுள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நூல்  : புலூகுல் மராம்.

இதுவரை நாம் பார்த்தை விமர்சனங்களின் அடிப்படையில் ”சனிக்கிழமை நோன்பு நோற்கக்கூடாது” என்ற வரும் செய்தி பலவீனமானது என்பது தெளிவாகிறது. எனவே அல்பானி போன்றவர்கள் இதனை ஸஹீஹ் என்று கூறுவதை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை.

அறிஞர்கள் இதை மறுக்க காரணம் என்ன? இதை விட பலமான ஹதீஸ்களுக்கு முரணாக அமைந்துள்ளதே காரணமாகும்.

மேற்கண்ட செய்தி கடமையான நோன்பைத் தவிர வேறு எந்த நோன்பையும் சனிக்கிழமை நோற்பது கூடாது என்று குறிப்பிடுகிறது.

இதிலிருந்து எந்த ஒரு சுன்னத்தான, அல்லது நபிலான நோன்பையும் சனிக்கிழமை நோற்பது கூடாது என்ற கருத்து வெளிப்படுகிறது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  சனிக்கிழமை நோற்கும் வகையில் பல சுன்னத்தான நோன்புகளை நமக்கு வழிகாட்டியுள்ளார்கள். நாமாக விரும்பி நஃபிலாக நோற்பதற்கும் அனுமதித்துள்ளார்கள்.  அவை மிகப் பலமான அறிவிப்பாளர்கள் வரிசையில் வந்துள்ளது.

حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ ، حَدَّثَنَا أَبِي ، حَدَّثَنَا الأَعْمَشُ ، حَدَّثَنَا أَبُو صَالِحٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ لاَ يَصُومَنَّ أَحَدُكُمْ يَوْمَ الْجُمُعَةِ إِلاَّ يَوْمًا قَبْلَهُ ، أَوْ بَعْدَه. (رواه البخاري)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவரும் வெள்ளிக் கிழமைக்கு முன் ஒரு நாளைச் சேர்க்காமல் அல்லது அதற்குப் பின் ஒரு நாளைச் சேர்க்காமல் நோன்பு நோற்க வேண்டாம்!

அறிவிப்பவர் :  அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 1985

حَدَّثَنَا مُسَدَّدٌ ، حَدَّثَنَا يَحْيَى ، عَنْ شُعْبَةَ (ح) وَحَدَّثَنِي مُحَمَّدٌ ، حَدَّثَنَا غُنْدَرٌ ، حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ قَتَادَةَ ، عَنْ أَبِي أَيُّوبَ ، عَنْ جُوَيْرِيَةَ بِنْتِ الْحَارِثِ ، رَضِيَ اللَّهُ عَنْهَا ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ عَلَيْهَا يَوْمَ الْجُمُعَةِ وَهْيَ صَائِمَةٌ فَقَالَ أَصُمْتِ أَمْسِ قَالَتْ لاَ قَالَ تُرِيدِينَ أَنْ تَصُومِي غَدًا قَالَت لاَ قَالَ فَأَفْطِرِي. وَقَالَ حَمَّادُ بْنُ الْجَعْدِ سَمِعَ قَتَادَةَ ، حَدَّثَنِي أَبُو أَيُّوبَ أَنَّ جُوَيْرِيَةَ حَدَّثَتْهُ فَأَمَرَهَا فَأَفْطَرَتْ. (رواه البخاري)

ஜுவைரியா (ரலி) அவர்கள் அறிவி்க்கிறார்கள் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நான் வெள்ளிக்கிழமை நோன்பு நோற்றிருந்த போது என்னிடம் வந்தார்கள். நேற்று நோன்பு நோற்றாயா? என்று கேட்டார்கள். நான் இல்லை! என்றேன். நாளை நோன்பு நோற்க விரும்புகிறாயா? என்று கேட்டார்கள். அதற்கும் இல்லை! என்றேன். (இதைக் கேட்ட) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்படியானால் நோன்பை முறித்துவிடு! என்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளைப்படி நான் நோன்பை முறித்து விட்டேன்! என்று ஜுவைரியா (ரலி) அவர்கள் கூறியதாக அபூஅய்யூப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி 1986

மேற்கண்ட ஹதீ்ஸ்களில் நாமாக விரும்பி நோற்கும் நஃபிலான நோன்பை வெள்ளிக் கிழமை மட்டும் நோற்கக் கூடாது. மாறாக வியாழன் மற்றும் வெள்ளியில் அல்லது வெள்ளி மற்றும் சனிக்கிழமையில் நோற்கலாம் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதி கொடுத்துள்ளார்கள். இந்த உறுதியான ஹதீஸ்களுக்கு நேர் முரணாக மேற்கண்ட செய்தி அமைந்துள்ளது.

பின்வரும் செய்திகளும் மேற்கண்ட செய்திக்கு முரணாக அமைந்துள்ளது.

حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَعَلِيُّ بْنُ حُجْرٍ جَمِيعًا عَنْ إِسْمَعِيلَ قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ أَخْبَرَنِي سَعْدُ بْنُ سَعِيدِ بْنِ قَيْسٍ عَنْ عُمَرَ بْنِ ثَابِتِ بْنِ الْحَارِثِ الْخَزْرَجِيِّ عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ سِتًّا مِنْ شَوَّالٍ كَانَ كَصِيَامِ الدَّهْرِ )رواه مسلم)

“யார் ரமலான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவராவார்” என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி)

நூல்கள்: முஸ்லிம் (2159) அபூதாவூத் 2078

ஷவ்வால் மாத ஆறு நோன்பு சுன்னத்தான நோன்பாகும். இதனை ஷவ்வால் மாதத்தில் ஏதேனும் ஒரு ஆறு நாட்களில் தொடர்ச்சியாகவோ, அல்லது தனித்தனியான நாட்களிலோ நோற்றுக் கொள்ளலாம். தொடர்ச்சியாக நோற்கும் போதும் அதில் சனிக்கிழமை வரும். அது போன்று தனித்தனியாக நோற்கும் போதும் சனிக்கிழமை வரும். எனவே மேற்கண்ட ஹதீஸும் சனிக்கிழமை நோன்பு நோற்கலாம் என்பதற்குரிய சான்றாகும்.

قَالَ كَيْفَ مَنْ يَصُومُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمًا قَالَ « ذَاكَ صَوْمُ دَاوُدَ عَلَيْهِ السَّلاَمُ.

உமர் (ரலி) அவர்கள், “ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் நோன்பை விட்டு விடுபவர் குறித்துத் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு, “அதுதான் தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

நூல் ; முஸ்லிம் (2151)

قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « ثَلاَثٌ مِنْ كُلِّ شَهْرٍ وَرَمَضَانُ إِلَى رَمَضَانَ فَهَذَا صِيَامُ الدَّهْرِ كُلِّهِ صِيَامُ يَوْمِ عَرَفَةَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِى قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِى بَعْدَهُ وَصِيَامُ يَوْمِ عَاشُورَاءَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِى قَبْلَهُ ».

“மாதந்தோறும் மூன்று நோன்பு நோற்பது, ஆண்டுதோறும் ரமளானில் நோன்பு நோற்பது ஆகியன காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும். துல்ஹஜ் ஒன்பதாவது நாள் (அரஃபா) அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன். முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்குப் பாவப்பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : உமர் (ரலி)

நூல் ; முஸ்லிம் (2151)

தாவூத் (அலை) அவர்கள் நோன்பு வைத்த பிரகாரம் ஒரு நாள் நோன்பு வைத்து ஒரு நாள் நோன்பை விடுவது, மாதம் மூன்று நோன்பு, ஆஷூரா நோன்பு, அரஃபா நோன்பு இவை அனைத்துமே சுன்னத்தான  நோன்புகளாகும்.

இவற்றை சனிக்கிழமையிலும் நோற்க வேண்டிய நிலை ஏற்படும். கடமையான நோன்பைத் தவிர வேறு எந்த நோன்பையும் சனிக்கிழமை நோற்பது கூடாது என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த சுன்னத்தான நோன்புகளை சனிக்கிழமை நோற்காதீர்கள் எனத் தெளிவாகக் கூறியிருப்பார்கள்.

அவ்வாறு கூறாததிலிருந்தே இந்த நோன்புகளை சனிக்கிழமை நோற்க வேண்டிய நிலை வந்தால் நோற்கலாம் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. கடமையான நோன்பைத் தவிர வேறு எந்த நோன்பையும் சனிக்கிழமை நோற்பது கூடாது என்று செய்தி மேலே நாம் எடுத்தக்காட்டிய ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கு முரணாக இருக்கின்ற காரணத்தினால் அது ஷாத் வகை செய்தியாகிறது. எனவே அது பலவீனமானதாகும்.

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...