தாலிபான்களை கண்டித்து போஸ்டர் அடித்தது சரியா?

கேள்வி – 1

பாகிஸ்தானில் பள்ளிக் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தியது தாலிபான்கள்தான் என்று மீடியாகள் சொன்னதை அப்படியே நம்பி தவ்ஹீத் ஜமாத்தும் தாலிபான்களைக் கண்டித்து அறிக்கையும், போஸ்டரும் அடித்து இருப்பது எந்த அடிப்படையில் என்று கேட்கிறார்கள்? அதைப் பற்றி உங்கள் பதில் என்ன?

செல்லதுரை, செங்கோட்டை

கேள்வி – 2

தாலிபானுக்குக் கண்டன அறிக்கை போஸ்டர் அடிக்கும் நேரத்தில், இது தாலிபான்கள்தான் செய்தார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் நம்மிடையே உள்ளது? கீஜிசி விமானத் தாக்குதலைக் கூட தாலிபான்கள் செய்திருக்க மாட்டார்கள் எனப் பிரச்சாரம் செய்த நமது ஜமாஅத் இந்த விசயத்தில் வெறும் தொலைக்காட்சி செய்திகளை மட்டும் வைத்து எப்படி நம்புகிறது?ஒருவேளை ஊடகங்கள் சொல்வது போல பாகிஸ்தான்தான் தாலிபான்களுக்கு ஆதரவு அளிக்கும் நாடு என வைத்துக் கொண்டால் தனக்கு ஆதரவு தரும் நாட்டிற்கெதிரான நாச வேலைகளில் ஈடுபடும் அவசியம் என்ன?

மன்சூர் அஹ்மத், மதுரை

பதில் :

பொதுவாக நம் சமுதாயத்தில் ஒரு நோய் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இஸ்லாத்தின் பெயரைக் கெடுக்கும் காரியங்கள் எது நடந்தாலும் எங்கே நடந்தாலும் இது யூதர்களின் சதி என்றும், அமெரிக்காவின் சதி என்றும் சொல்வது தான் அந்த நோய்.

இந்தச் சம்பவம் கூட யூதர்கள் செய்தது தான் என்று முகநூல்களில் மூடத்தனமாகப் பரப்பப்பட்டதை நாம் பார்த்தோம்.

எவ்வித ஆதாரமும் இல்லாமல் முஸ்லிம்கள் மீது பழி சுமத்தப்பட்டால் இதுபோல் சொல்வதில் நியாயம் உள்ளது.

உலக வர்த்தக மையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தாலிபான்கள் செய்தார்கள் என்பதற்கு இன்று வரை அமெரிக்கா எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. அதனால் இதை முஸ்லிம்கள் செய்தார்கள் என்று கூறுவதில் நாம் சந்தேகம் கொள்ளலாம்.

இந்தியாவில் நடந்த எத்தனையோ குண்டு வெடிப்புகள் முஸ்லிம்கள் மீது போடப்பட்டன. அதற்கு எந்த ஆதாரமும் இருக்கவில்லை. இதை முஸ்லிம்கள் செய்யவில்லை; இந்துத்துவா கும்பல்தான் செய்திருப்பார்கள் என்று நாம் சந்தேகப்படலாம்.

(நாம் சந்தேகப்பட்டது போலவே பல குண்டு வெடிப்புகளையும் சங்பரிவாரத்தின் உத்தரவுப்படி சுவாமி அசிமானந்தாவும், பெண் சாமியார் பிரக்யா சிங் உள்ளிட்ட இந்து பயங்கரவாதிகளும் தான் செய்தனர் என்பது பின்னர் நிரூபணமானது.)

கோவை குண்டு வெடிப்பைப் பற்றியும் முஸ்லிம்கள் செய்யவில்லை என்று சொல்ல முடியுமா? இதை முஸ்லிம்களில் சிலர் தான் செய்தனர் என்பது கோவையில் உள்ள ஒவ்வொரு முஸ்லிமுக்கும் தெரியும்.

கோவை குண்டு வெடிப்பு குறித்தும் இவ்வாறு நாம் கூறினால் ஒட்டு மொத்த சமுதாயமும் கூட்டுக் கள்ளன்கள் என்ற கருத்து தான் மக்கள் மத்தியில் பதிவாகும்.

இவ்வாறு செய்த முஸ்லிம்களை நாம் கடுமையாகக் கண்டித்தால் மட்டும்தான் இஸ்லாமும் இதை ஆதரிக்கவில்லை. முஸ்லிம்களும் ஆதரிக்கவில்லை என்ற உண்மையைப் பதிவு செய்ய முடியும்.

பாகிஸ்தானில் உள்ள தாலிபான்களை பாகிஸ்தான் அரசு ஆதரிக்கவில்லை. மாறாக பாகிஸ்தான் எல்லைப் புறத்தில் செயல்பட்டு வரும் தாலிபான்களுக்கு எதிராகப் பல மாதங்களாக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. விமான தாக்குதல் நடத்தி தாலிபான் தலைவர்களைக் கொன்று வருகிறது என்பதை நாம் அன்றாடம் கண்டு வருகிறோம். அவ்வாறு கொல்லப்படும் போது பொதுமக்களும் சிறுவர்களும் கொல்லப்படுகிறார்கள் என்பதையும் அறியலாம்.

இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தினரின் பிள்ளைகள் கல்வி கற்பதற்காக அரசால் நடத்தப்பட்டு வரும் பள்ளிக் கூடத்தில் படிக்கும் பருமவமடையாத சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.

தாக்குதல் நடந்தவுடன் பாகிஸ்தான் ராணுவம் எங்கள் மீது தாக்குதல் நடத்தி, எங்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொன்றதால் அந்த வலியை உணர வைக்க நாங்கள் தான் நடத்தினோம் என்று தஹ்ரீகே தாலிபான் அறிவிக்கிறது.

அதுமட்டுமின்றி, தாக்குதல் நடத்திய ஆறுபேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் யூதர்களோ, கிறித்தவர்களோ, இந்துக்களோ அல்ல. ஆறு பேறும் முஸ்லிம்கள்.

ஆறுபேரும் முஸ்லிம்கள் என்பதும், ஆயுதப் பயிற்சி பெற்றவர்கள் என்பதும் தெளிவாகத் தெரியும் போது இதை தாலிபான்கள் செய்யவில்லை என்றால் பாகிஸ்தான் தப்லீக் ஜமாஅத் செய்ததா? பொது மக்கள் செய்தார்களா?

இவர்களைத் தவிர வேறு எவரும் இதைச் செய்திருக்க முடியாது என்ற நிலையிலும் தாலிபான்கள் செய்யவில்லை என்று முட்டுக் கொடுத்தால் முஸ்லிம்கள் செய்யவில்லை என்று ஆகாது.

தாலிபான்களைக் காப்பாற்றுவதாக எண்ணிக் கொண்டு தாலிபான் அல்லாத முஸ்லிம்கள் செய்தார்கள் என்ற கருத்தைச் சொல்லாமல் இவர்கள் சொல்கிறார்கள்.

தாலிபான்களாக இல்லாத சாதாரண முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் தான் என்ற கருத்து பரவுவதில் இவர்கள் சந்தோசப்படுகிறார்கள்.

இடையில் சிலர் புகுந்து கொண்டு ஆப்கான் தாலிபான்கள் வேறு! பாகிஸ்தான் தாலிபான்கள் வேறு என்று கூறி தங்கள் மேதாவிலாசத்தைக் காட்டிக் கொள்கிறார்கள். தாலிபான்கள் இரு வகையினராக உள்ளனர் என்ற தங்கள் புலமையைக் காட்டுவதுதான் இவர்களின் நோக்கமாக இருக்க முடியும்.

ஒரு கொடூரச் சம்பவம் நடக்கிறது. இதனால் இஸ்லாம் குறித்து தவறான கருத்து மிக வேகமாகப் பரவுகிறது. இந்த நேரத்தில் அதை நீக்குவது மட்டுமே ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும்.

இந்த நேரத்தில் இதை ஆப்கான் தாலிபான்கள் செய்யவில்லை; பாகிஸ்தான் தாலிபான்கள்தான் செய்தார்கள் என்று சுவரொட்டி ஒட்டினால் அதைக் கண்டனமாக மக்கள் கருத மாட்டார்கள். அயோக்கியத் தனமாகவே கருதுவார்கள். ஒரு கொடூர சம்பவம் நடக்கும் நேரத்தில்கூட கண்டிப்பது போன்ற தோற்றத்தில் தாலிபான்களை முஸ்லிம்கள் ஆதரிக்கிறார்கள் என்று தான் கருதுவார்கள்.

கொந்தளிப்பான நேரத்தில் தனது புலமையை வெளிப்படுத்துபவன் உண்மையில் முட்டாளாகத்தான் கருதப்படுவான்.

மேலும் இந்தத் தாக்குதலில் ஆப்கான் தாலிபான்களுக்குச் சம்மந்தமில்லை என்றாலும் அவர்களுக்கு முட்டுக் கொடுக்கும் அவசியம் நமக்கு இல்லை. இவர்களும் இஸ்லாத்தின் எதிரிகள் தான். ஏனெனில் ஆப்கான் தாலிபான்களும் ஆப்கானில் அப்பாவிகளையும் பொது மக்களையும் கொன்று குவித்து வருகின்றனர். இஸ்லாத்தின் வரம்புகளை மீறி இஸ்லாத்தின் பெயரைக் கெடுக்கும் இந்தக் கும்பலைக் காப்பாற்றும் அவசியம் என்ன வந்தது?

இந்த நோய் எந்த அளவுக்கு முற்றிப் போயுள்ளது என்றால் ஊரறிய உலகறிய அன்னிய நாட்டு தனி நபரைப் பிடித்து கை கால்களைக் கட்டி கத்தியால் கழுத்தை அறுக்கும் கொடூரக் காட்சிகளை வீடியோவில் பதிவு செய்து ஐஎஸ் என்ற இஸ்லாத்தின் எதிரிகள் வெளியிடுகிறார்கள்.

இதைப் பார்க்கும் முஸ்லிம்கள் இந்த அயோக்கியர்களைக் கடுமையாக கண்டிக்க வேண்டும். இதை விடுத்து பலர் மவுனம் காக்கின்றனர். சிலர் நியாயப்படுத்துகின்றனர். மற்றும் சிலர் ஐஎஸ் செய்யவில்லை என்று முட்டுக் கொடுக்கின்றனர்.

இது ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் களங்கத்தை ஏற்படுத்தும்.

சம்மந்தப்பட்டவர்கள் நாங்கள் செய்யவில்லை என்று மறுக்காத போதும் இப்படிச் சொல்பவர்கள் தாலிபான்களை விட பயங்கரவாதிகள் என்பதுதான் நமது கருத்து.

test 1b

dfdsf dsfd Read in OnlinePJ.in ...

test 6 னகனம் df

test 6 test 6 test 6 Read in OnlinePJ.in ...

test 7

test 7 test 7 test 7 Read in OnlinePJ.in ...

test 8b

test 8b test 8b test 8b Read in OnlinePJ.in ...

test 8c

test 8c test 8c test 8cRead in OnlinePJ.in ...

test 4

test 4 44 4 Read in OnlinePJ.in ...

test 5

test 5 5 5 Read in OnlinePJ.in ...

மழைத் தொழுகை – 3 delete

நாட்டில் பஞ்சம், வறட்சி ஏற்படும் போது அவற்றை நீக்குவதற்காக, மழை வேண்டி வல்ல அல்லாஹ்விடம் தொழுது பிரார்த்தனை செய்ய வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மழை வேண்டி இரண்டு ரக்அத்கள் தொழுவித்துள்ளார்கள். மழைத் ...

Yes

நாட்டில் பஞ்சம், வறட்சி ஏற்படும் போது அவற்றை நீக்குவதற்காக, மழை வேண்டி வல்ல அல்லாஹ்விடம் தொழுது பிரார்த்தனை செய்ய வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மழை வேண்டி இரண்டு ரக்அத்கள் தொழுவித்துள்ளார்கள். மழைத் ...

இஸ்திகாரா தொழுகை – 2 delete

நமக்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டு, எதைச் செய்வது என்று சிக்கல் ஏற்பட்டால் நமக்கு நன்மையானதைத் தேர்வு செய்ய நாடி இரண்டு ரக்அத் தொழுவதற்கு இஸ்திகாரா தொழுகை என்று சொல்லப்படும். இரண்டு ரக்அத்கள் தொழுத பின் ...

மழைத் தொழுகை – 2

நாட்டில் பஞ்சம், வறட்சி ஏற்படும் போது அவற்றை நீக்குவதற்காக, மழை வேண்டி வல்ல அல்லாஹ்விடம் தொழுது பிரார்த்தனை செய்ய வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மழை வேண்டி இரண்டு ரக்அத்கள் தொழுவித்துள்ளார்கள். மழைத் ...

பிரயாணத்தில் வித்ரு தொழுகையின் அவசியம்: ஒரு மார்க்க விளக்கம்

இஸ்லாமிய மார்க்கம் பயணத்தில் இருப்பவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது. அந்த வகையில், நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டாகச் சுருக்கித் தொழுவதற்கும் (கஸர்), இரு நேரத் தொழுகைகளை இணைத்துத் தொழுவதற்கும் (ஜம்வு) அனுமதி உண்டு. இத்தகைய ...

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...