தாய்ப்பாலை நிறுத்துப்பார்த்து முடிவு செய்யும் நவீன விஞ்ஞானம்

சமீபகாலமாக பின்வரும் செய்தி முகநூலில் அதிகம் உலா வருகிறது. இச்செய்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பே முக நூலில் பரவி ஓய்ந்து போனது. தற்போது அதை யாரோ பரப்ப மீண்டும் வேகமாகப் பரவிவருகிறது.

அந்தச் செய்தி இதுதான்.

அல்குர்ஆனின் தீர்ப்பு

ஃப்ரான்ஸ் நாட்டு மருத்துவமனையில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுக்கு குழந்தை பிறந்தது. ஒன்று ஆண், மற்றொன்று பெண். செவிலியரின் தவறினால் குழந்தைகள் மாறிவிட்டன. ஆண் குழந்தை தன்னுடையது என்று இரண்டு பெண்களும் வாதிட்டார்கள்.

அங்கு பணிபுரியும் முஸ்லிம் மருத்துவரிடம் சக மருத்துவர்கள், எல்லாவற்றிருக்கும் குர்ஆனில் தீர்வு இருக்கிறது என்று சொல்வாயே? இதற்கு குர்ஆன் சொல்லும் தீர்வு என்ன? என்று கிண்டலாகக் கேட்டனர்.

அந்த முஸ்லிம் மருத்துவர் எகிப்தில் உள்ள அல்அஜ்ஹர் பல்கலைக்கழக மார்க்க அறிஞர்களிடம் வினவினார். அதற்கு அவர்கள், அந்நிஸா அத்தியாயத்தில் இதற்கான விடை இருக்கிறது ஆராய்ந்து பாருங்கள் என்று சொன்னார்கள்.

மருத்துவர் ஆராய்ந்து பார்த்த போது, உங்கள் மக்களில் ஓர் ஆணிற்கு இரண்டு பெண்களுக்கு கிடைக்கும் பங்கு போன்றது கிடைக்கும்

அல்குர்ஆன்4:11

எனும் அல்லாஹ்வின் வாக்கிற்கு ஏற்ப இரண்டு பெண்களின் தாய்ப்பாலின் மாதிரியை எடுத்து ஆராய்ச்சி செய்தார்.

ஒரு தாயின் பாலின் எடையும் கொழுப்பு சக்தியும் மற்றைய தாய்ப் பாலின் எடையை விட இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதைக் கண்டுபிடித்தார். அதனடிப்படையில் எந்தத் தாயின் பாலிலுள்ள கொழுப்பு சக்தி அதிகம் உள்ளதோ ஆண் குழந்தை அந்தத் தாயிற்கு உரியது என்று முடிவெடுத்தார். அண்மைக் கால ஆராய்ச்சிகளும் இதை உறுதிபடுத்துகின்றன.

இந்த தகவலின் விஞ்ஞானக் கருத்தை நீங்கள் உறுதிப்படுத்த விரும்பினால் சர்வதேச இணையத்ததளமான www.Wikipedia.org இல் “ஆண், பெண் குழந்தைகளின் தாய்ப்பாலுக்கு இடையிலான வித்தியாசம்” எனும் கருத்தைத் தேடி உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

“இறுதிநாள் வரை மக்களுக்கு தேவையான அனைத்துப் பிரச்சனைகளுக்கும் குர்ஆனில் தீர்விருக்கிறது. ஆனால் அதை ஆராய்ந்தறியும் அறிஞர்கள் தாம் தேவை” இது தான் அந்தச் செய்தி.

இஸ்லாத்துக்கு சிறப்பு சேர்க்க வேண்டும் என்ற இயல்பின் காரணமாக இதை முஸ்லிம்கள் பரப்பி வருகின்றனர். திருக்குர்ஆனில் பல அறிவியல் கருத்துக்கள் முன்னரே சொல்லப்பட்டுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அத்துடன் பொய்யான செய்திகளைக் கலக்கும் போது மெய்யான செய்திகள் மீதும் சந்தேகம் ஏற்பட்டு விடும். இதைக் கவனத்தில் கொண்டு ஆய்வு செய்து உண்மை தானா என்பதை உறுதி செய்த பின்பே எதையும் பரப்ப வேண்டும்.

பொய்களை ஆதாரமாக ஆக்கக் கூடாது என்பதை மேலும் அறிய அத்தாட்சிகளை மறுக்கலாமா என்ற ஆக்கத்தைப் பார்க்கவும்.

மேற்கண்ட செய்தியில் இஸ்லாம் கூறும் விஞ்ஞானக் கருத்துடன் ஒரு கதையும் கூறப்பட்டுள்ளது. விஞ்ஞானக் கருத்து பற்றி விளக்குவதற்கு முன் இதில் சொல்லப்பட்ட கதையை ஆராய்வோம்.

ஃப்ரான்ஸ் நாட்டு மருத்துவமனையில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுக்கு குழந்தை பிறந்தது என்று இந்தக் கதை ஆரம்பிக்கிறது.

முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சம்பவம் உண்மையாக இருந்தால் இப்படி பொத்தாம் பொதுவாக சொல்லப்படாது. அப்படிச் சொல்லப்பட்டால் அது பொய்யாகவே இருக்கும்.

பிரான்ஸ் நாட்டில் எந்த ஊரில் இது நடந்தது? அந்த மருத்துவமனையின் பெயர் என்ன? மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் யார்? அந்த முஸ்லிம் டாக்டர் யார்? அந்த தம்பதிகள் யார்? இது எந்த ஆண்டு நடந்தது? இந்த அபூர்வமான செய்தி எந்த ஊடகத்தில் முதன் முதலில் வந்தது? உள்ளிட்ட எந்த விபரமும் இதில் இல்லை. ஒரு ஊரில் ஒரு ராஜா என்ற பாட்டி கதை போல் உள்ள இதை எப்படி அறிவுடைய மக்கள் பரப்பலாமா? மேற்கண்ட கேள்விகளுக்கு விடை காணாமல் இதைப் பரப்புவது பொய்யைப் பரப்பியதாகவே ஆகும்.

இது அல்லாத இன்னும் பல கேள்விகளும் இதில் எழும்.

பிரான்ஸ் நாடு தனக்கென சட்டத்தை வகுத்துக் கொண்டு செயல்படும் நாடு. அந்த நாட்டில் இது போல் ஒரு பிரச்சனை வந்தால் அந்த நாட்டுச் சட்டப்படி தான் தீர்ப்பு அளிக்கும். எகிப்தில் பத்வா கேட்டு முடிவு செய்யப்படாது என்ற அடிப்படை அறிவுக்கு முரணாக உள்ளது.

டி என் ஏ டெஸ்ட் மூலம் தான் பிரான்ஸ் நாட்டில் இதற்கு தீர்ப்பு அளிக்கப்படும். தாய்ப்பாலின் எடையை வைத்து அல்ல.

எகிப்து பல்கலைக் கழகம் ஒரு பத்வா கொடுத்தால் அதற்கான ஆதாரம் வேண்டும்? யார் பெயரில் பத்வா கேட்கப்பட்டது? எந்தத் தேதியில் பத்வா கேட்கப்பட்டது? அந்த பத்வா எண் எது? அந்த ஃபத்வாவின் காப்பி எங்கே? என்றெல்லாம் சிந்தித்தால் இதைப் பரப்புவார்களா?

எகிப்தின் மேற்படி பல்கலைக்கழகத்தில் தாய்ப்பால் எடையை வைத்து யாருடைய குழந்தை என்று தீர்மானிக்கலாம் என்று எந்த பத்வாவும் எந்தக் காலத்திலும் கொடுக்கப்படவில்லை. எகிப்து உள்ளிட்ட எந்த இஸ்லாமிய நாட்டிலும் தாய்ப்பாலின் எடையை வைத்து பெற்றோரை முடிவு செய்யும் சட்டம் இல்லை.

ஆக ஒரு அடிப்படையும் இல்லாமல் எவனோ கற்பனை செய்து பரப்பிய இச்செய்தி இறக்கை கட்டி பறக்கிறது என்பது தெளிவாக தெரிகின்றது.

அடுத்து அந்த வசனத்தில் இந்தக் கருத்து உள்ளதா? சாதாரணமாகப் பார்த்தாலே அப்படி இல்லை என்பது பளிச்சென்று தெரியும். சொத்துரிமை சம்மந்தமாக இவ்வசனம் பேசுகிறது. ஒருவனது பிள்ளைகளில் பெண்ணுக்கு ஒன்று ஆணுக்கு இரண்டு எனப் பங்கிட வேண்டும் என்பது தான் இதில் சொல்லப்பட்டுள்ளது. தாய்ப்பாலின் எடையைப் பற்றி இவ்வசனம் பேசவே இல்லை. நேரடியாகவும் பேசவில்லை. மறைமுகமாகவும் பேசவில்லை.

விஞ்ஞானத்தில் இப்படி கண்டுபிடிக்கப்பட்டதாக பரப்புவோர் விக்கி பீடியாவில் உள்ளது என்று சேர்த்துக் கூறுகின்றனர். ஆனால் விக்கி பீடியா விஞ்ஞானத் தளம் இல்லை. அதன் உறுப்பினரான யாரும் எதையும் எழுதக் கூடிய தளம். மேலும் இதில் கூட இப்படி எழுதப்படவில்லை. தாய்ப்பால் என்று அடித்து தேடினால் இதில் கூறப்பட்ட விஷயம் காணப்படவில்லை.

தாயின் போஷாக்கின் அடிப்படையில் தான் தாய்ப்பாலின் எடை அமைந்திருக்கும். இது தான் உண்மை.

இரட்டைக் குழந்தை பெற்றால் ஒரு மார்பில் எடை அதிகமான பாலும் மறு மார்பில் எடை குறைவான பாலும் சுரக்கும் என்று சொல்வார்கள் போலும்.

ஒரு வாதத்துக்காக விஞ்ஞானத்தில் அப்படி இருந்தாலும் அதை இந்த வசனம் கூறவில்லை என்பதே உண்மையாகும். இது திருக்குர்ஆனுடன் விளையாடும் நிலையாகும்.

பிள்ளைகளின் சொத்து தொடர்பாகத் தான் ஆணுக்கு இரண்டு பெண்ணுக்கு ஒன்று என்று இவ்வசனம் கூறுகிறது. மரணித்த ஒருவருக்கு பிள்ளைகளும் தாய் தந்தையும் இருந்தால் தாய் த்ந்தை இருவருக்கும் தலா ஆறில் ஒன்று என்று சமமான சொப்த்துரிமையஏ உள்ளது. இதில் ஆண் பெண் என்ற பேதம் இல்லை.

ஆணாகிய தந்தைக்கும் பெண்ணாகிய தாய்க்கும் சமமாக ஆறில் ஒரு பாகம் என்று உள்ளதால் ஆண் பெண் தாய்ப்பாலின் எடை சமமாக இருக்கும் என்று ஏன் ஆராயமல் விட்டார்கள்?

அது போல் தான் அல்லாஹ்வின் வசனம் தவறான கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற ஆதாரமற்ற வதந்திகளை இஸ்லாத்தின் பெயரல் பரப்பும் போக்கை கைவிடுவோமாக!

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...