தவறான மொழிபெயர்ப்பினால் வழிகெட்டால் யார் குற்றவாளி?

சாதாரணமானவர்களால் குர்ஆன் ஹதீசை எப்படி விளங்கிக் கொள்ள முடியும்? மொழிபெயர்ப்புகளைத் தானே நம்ப வேண்டியுள்ளது? என்று உங்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதிலில் மொழிபெயர்ப்பில் சில தவறுகள் ஏற்படுவது சகஜம் தான் என்றும், நாம் அறியாத வகையில் தவறுகள் நேர்ந்திருந்தால் அல்லாஹ் மன்னிப்பான் என்றும் கூறியிருந்தீர்கள்.

தமிழ் மொழி மட்டுமே அறிந்த நான் மொழிபெயர்ப்பில் தவறு இருக்குமேயானால் நான் எவ்வாறு இஸ்லாத்திற்கு மாற முடியும்? உதாரணத்திற்கு பழைய மொழி பெயர்ப்புகளில் பூமி தட்டை என்ற பொருள்படும் விதமே மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதைப் படிக்கும் நான் இஸ்லாம் பொய் சொல்கிறது என்ற முடிவுக்கே வருவேன். மேலும் இஸ்லாத்தில் இணையும் முடிவை மாற்றவும் நேரிடும். என்னுடைய இந்த முடிவிற்கு பொறுப்பாளி மொழிபெயர்ப்பாளர் தான். இப்பொழுது மரணத்திற்குப் பிறகு என்னுடைய நிலை என்ன? நான் சொர்க்கவாசியா? நரகவாசியா?

அஸ்கர்

பதில் :

உங்களின் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன்னால் நாம் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டியுள்ளது.

மொழி பெயர்ப்பில் தவறு வரும் என்பது குறித்து இப்படி கேள்வி கேட்பதில் இருந்து தப்பிக்க நாங்கள் என்ன என்ன செய்ய வேண்டும்? எதையுமே மொழி பெயர்க்காமல் இருப்பது தான் இதற்கான தீர்வு என்று நீங்கள் சொல்வீர்களா? அப்படி சொல்வீர்கள் என்றால் தான் இந்தக் கேள்வியைக் கேட்க முடியும்.

பாஸ்போர்ட் பெறுவது எப்படி என்ற நூலை ஒருவர் தமிழில் மொழி பெயர்க்கும் போது சில விதிகளை தவறாக மொழிபெயர்த்து விட்டார். அந்த நூலில் சொன்ன தவறான விதியின் படி நீங்கள் விண்ணப்பித்ததால் பாஸ்போர்ட் உங்களுக்கு மறுக்கப்பட்டு விட்டது. இப்போது பாஸ் போர்ட் அதிகாரியிடம் இதற்கு நான் காரணம் இல்லை; மொழிபெயர்த்தவன் தான் காரணம் என்று கூறி வாதிட்டால் பாஸ்போர்ட் தருவார்களா?

மொழி பெயர்ப்பு தவறு என்றாலும் பல வகையில் உறுதி செய்யாமல் விட்டது உங்கள் தவறு என்று கூறுவார்களா?

இதற்கு நீங்கள் அளிக்கும் பதிலில் உங்கள் கேள்விக்கான விடை அடங்கியுள்ளது.

துபைக்கு விசா வந்திருக்கும் போது அதை சவூதி விசா என்று ஒருவன் தவறாக மொழிபெயர்த்து உங்களிடம் சொல்லி விட்டான் என்றால் அதை நம்பிய நீங்கள் உங்கள் விசாவைப் பயன்படுத்தி துபை செல்ல முடியாது.

இதற்குக் காரணம் தவறாக மொழி பெயர்த்துச் சொன்னவன் என்றாலும் நீங்கள் சவூதிக்கு போக முடியாது. காரணம் மொழி பெயர்த்தவனிடம் தவறு உள்ளது போல் உங்களிடமும் தவறு உள்ளது. நீங்கள் விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரிக்கவில்லை என்பதால் அதன் விளைவை நீங்கள் சுமக்கிறீர்கள்.

தமிழாக்கத்தில் பூமி தட்டை என்று போடப்பட்டு இருந்தால் இறைவேதம் என்று சொல்கிறார்கள். ஆனால் இது தவறாக தெரிகிறதே என்று கருதி இன்னும் தெளிவைத் தேடும் பொறுப்பை நீங்கள் சரியாக நிறைவேற்றினால் அந்த மொழி பெயர்ப்பில் தவறு நேர்ந்துள்ளதை உங்களால் அறிந்து கொள்ள முடியும்.

உலக விஷயங்களில் எப்படி நடகிறீர்களோ அப்படியே மறுமை விஷயத்திலும் பொறுப்புடன் நடந்து கொண்டால் எல்லாம் சரியான முறையில் விளங்கும்.

இந்த ஆக்கத்தையும் பார்க்கவும்

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...