தாயின் காலடியில் சொர்க்கம் என்று ஹதீஸ் உள்ளதா?

இந்தக் கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன. அவற்றில் பலவீனமான ஹதீஸ்களும் உள்ளன. ஏற்கத்தக்க ஹதீஸ்களும் உள்ளன.

3053 أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْحَكَمِ الْوَرَّاقُ قَالَ حَدَّثَنَا حَجَّاجٌ عَنْ ابْنِ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ طَلْحَةَ وَهُوَ ابْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِيهِ طَلْحَةَ عَنْ مُعَاوِيَةَ بْنِ جَاهِمَةَ السَّلَمِيِّ أَنَّ جَاهِمَةَ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَدْتُ أَنْ أَغْزُوَ وَقَدْ جِئْتُ أَسْتَشِيرُكَ فَقَالَ هَلْ لَكَ مِنْ أُمٍّ قَالَ نَعَمْ قَالَ فَالْزَمْهَا فَإِنَّ الْجَنَّةَ تَحْتَ رِجْلَيْهَا رواه النسائي

ஜாஹிமா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே நான் போர் செய்ய நாடுகிறேன். இது தொடர்பாக உங்களிடம் ஆலோசிக்க வந்துள்ளேன் என்று கூறினார்கள். உமக்கு தாய் இருக்கிறார்களா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் ஆம் என்றார். அவ்ரை பற்றிக் கொள் ஏனெனில் சொர்க்கம் அவரது பாதங்களுக்குக் கீழ் உள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : முஆவியா பின் ஜாஹிமா

நூல் : நஸாயீ

ஹாகிமிலும் இது இடம் பெற்றுள்ளது.

المستدرك على الصحيحين للحاكم

2502 – أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مُحَمَّدٍ الْفَقِيهُ، بِالرِّيِّ، ثنا مُحَمَّدُ بْنُ الْفَرَجِ الْأَزْرَقُ، ثنا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ قَالَ: قَالَ ابْنُ جُرَيْجٍ: أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ طَلْحَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ مُعَاوِيَةَ بْنِ جَاهِمَةَ، أَنَّ جَاهِمَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنِّي أَرَدْتُ أَنْ أَغْزُوَ فَجِئْتُ أَسْتَشِيرُكَ. قَالَ: «أَلَكَ وَالِدَةٌ؟» قَالَ: نَعَمْ، قَالَ: «اذْهَبْ فَالْزَمْهَا، فَإِنَّ الْجَنَّةَ عِنْدَ رِجْلَيْهَا» هَذَا حَدِيثٌ صَحِيحُ الْإِسْنَادِ وَلَمْ يُخَرِّجَاهُ “

التعليق – من تلخيص الذهبي صحيح

ஆரம்பத்தில் இந்த ஹதீஸையும் கீழ்க்கண்ட காரணத்தால் பலவீனமான ஹதீஸ் என்று எழுதி இருந்தோம்.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மானின் மகன் முஹம்மத் பின் தல்ஹா என்பவர் இடம்பெற்றுள்ளார்.

இந்த முஹம்மத் பின் தல்ஹா என்பவரை யாரும் நம்பகமானவர் என்று கூறவில்லை. இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் நம்பகமானவர் என்ற தமது நூலில் பதிவுசெய்துள்ளார்கள். ஒருவரை யாரும் குறை கூறவில்லையானால் அவரை நம்பகமானவர் பட்டியலில் சேர்ப்பது இப்னு ஹிப்பானின் வழக்கமாகும். எனவே இமாம் இப்னு ஹிப்பான் மட்டும் ஒருவரை நம்பகமானவர் என்று கூறினால் அதை ஹதீஸ் கலை அறிஞர்கள் ஏற்க மாட்டார்கள். எனவே இந்த முஹம்மத் பின் தல்ஹா என்பவர் யாரென அறியப்படாதவர் என்ற நிலையில் பலவீனமானவராகிறார்.

இப்படி நாம் எழுதி இருந்தோம்.

ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் தாயின் காலடியில் சொர்க்கம் என்ற ஹதீஸை வைத்து அரசியல்வாதிகள் ஒரு தேர்தல் பிரச்சாரம் செய்தார்கள். இவர்கள் மதிக்கும் அரசியல் தலைவி அனைவருக்கும் தாயாக இருப்பதால் அவர் காலடியில் சொர்க்கம் என்று கூறி தேர்தல் பரப்புரை செய்தார்கள்.

இது அப்போது முஸ்லிம்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய போது இப்படி ஒரு ஹதீஸ் உண்டா என்ற சர்ச்சை கிள்ம்பியது.

அந்த நேரத்தில் நாம் எழுதியதைப் பதிவிடலாம் என்பதற்காக அதை மறு ஆய்வு செய்த போது மேலே நாம் சொன்ன காரணம் தவறானது என்பதும் மேற்கண்ட ஹதீஸ் ஆதாரப்பூரவமாக அமைந்துள்ளதும் தெரிய வந்தது. அதன் காரணமாக அந்த ஆக்கத்தை நமது இணைய தளத்தில் இருந்து நீக்கி விட்டோம்.

அப்போதே இது குறித்து விளக்கம் அளிக்க நினைத்து காலப்போக்கில் அதை மறந்து விட்டோம்.

இப்போது இது பற்றி சுட்டிக்காட்டப்பட்டதால் இது சரியான ஹதீஸ் தான் என்பதைத் தெளிவுபடுத்துகிறோம்.

இந்த ஹதீஸில் முன்னர் நாம் குறிப்பிட்டவாறு முஹம்மத் பின் தல்ஹா பின் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் என்பார் இடம் பெற்றுள்ளது உண்மை. இப்னு ஹிப்பான் மட்டுமே இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளதால் இவர் யார் என அறியப்படாதவர் என்று நாம் குறிப்பிட்டது தவறாகும்.

இவர் அறியப்பட்டவராக இருந்தார் என்பதே சரியான கருத்தாகும்.

மேலே நாம் பதிவிட்டுள்ள ஹதீஸில் ஹாகிம் அவர்கள் இந்த ஹதீஸின் அடியில் இது ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் தொடர் கொண்டது என்கிறார். இதன் அறிவிப்பாளர்கள் அனைவரும் ஹாகிம் கருத்துப்படி நம்பகமானவர்கள் என்றால் அறிவிப்பாளர்க்ளில் ஒருவரான முஹம்மத் பின் தல்ஹாவும் நம்பகமானவர் ஆகிறார்.

ஹாகிம் நூலை திறனாய்வு செய்த தஹபி அவர்கள் இது சரியான ஹதீஸ் என்று கூறியுள்ளார்.அதாவது அனைத்து அறிவிப்பாளர்களும் நம்பமகானவர்கள் என்பது இதன் கருத்தாகும்.

இப்னு ஹஜர் அவர்கள் இவர் உண்மையாளர் என்று கூறியுள்ளார்.

رتبته عند ابن حجر :  صدوق

எனவே இவர் அறியப்படாதவர் என்ற வாதம் சரியில்லை.

ஒருவர் அறியப்படாதவர் என்று சொல்வதாக இருந்தால் இரண்டு அம்சங்கள் கவனிக்கப்பட வேண்டும்.

அவரை நம்பகமானவர் என்று ஒருவரும் கூறாமல் இருக்க வேண்டும்.

மேலும் அவர் வழியாக ஒரே ஒருவர் மட்டுமே அறிவித்திருக்க வேண்டும்.

இப்படி இருந்தால் தான் அறியப்படாதவர் என்று ஒருவரைப் பற்றிக் கூற வேண்டும்.

முஹம்மத் பின் தல்ஹா அவர்கள் விஷயத்தில் இந்த இரு குறைகளும் இல்லை.

புகாரி அவர்கள் தமது தாரீகுல் கபீர் நூலில் கூறுகிறார்கள்:

التاريخ الكبير للبخاري بحواشي محمود خليل

357- مُحَمد بْن طَلحَة بْن عَبد اللهِِ بْن عَبد الرَّحمَن بْن أَبي بَكر، القُرَشِيُّ.قَالَ لِي إِسحاق: حدَّثنا أَبو عَامِرٍ، وشَبابَة، قَالَا: حدَّثنا عَبد الرَّحمَن بْنُ أَبي بَكر، عَنْ مُحَمد بْن طَلحَة بْن عَبد اللهِِ بْن عَبد الرَّحمَن بْنِ أَبي بَكر، عَنْ أَبيه طَلحَة، أَنَّ أَبَا بَكر الصِّدِّيق قَالَ لعُفَير: مَا سَمِعتَ النَّبيَّ صَلى اللَّهُ عَلَيه وسَلم فِي الوُدِّ؟ قَالَ: سَمِعتُ النَّبيَّ صَلى اللَّهُ عَلَيه وسَلم يقولُ: الوُدُّ والعَداوَةُ تُتَوارَثُ. وَقَالَ لَنَا بِشر بْنُ مُحَمد: عَنِ ابْنِ المُبارك، عَنْ مُحَمد بْنِ عَبد الرَّحمَن بْنِ فُلان بْنِ طَلحَة، عَنْ أَبي بَكر بْنِ حَزم، عَنْ رجلٍ مِن أصحابِ النَّبيِّ صَلى اللَّهُ عَلَيه وسَلم، عَنِ النَّبيِّ صَلى اللَّهُ عَلَيه وسَلم … ، مِثلَهُ. وقَالَ ابْنُ جُرَيج: أَخبرني مُحَمد بْنُ طَلحَة بْنِ عَبد اللهِ، عَنْ أَبيه، عَنْ مُعاوية بْنِ جاهِمَة؛ فِي الْجِهَادِ. وَقَالَ لَنَا أَبو عَاصِمٍ: عَنِ ابْنِ جُرَيج، عَنْ مُحَمد بْنِ طَلحَة، عَنْ أَبيه، عَنْ مُعاوية: أَتَيتُ النَّبيَّ صَلى اللَّهُ عَلَيه وسَلم، فَقال: أَلَكَ أُمٌّ؟ فَفَيها فَجاهِد.وَقَالَ لِي يُوسُف بْنُ بُهلُول: حدَّثنا عَبدَة، عَنِ ابْنِ إِسحاق، عَنِ الزُّهرِيِّ، عَنْ ابن طَلحَة ابن عُبَيد اللهِ، عَنْ مُعاوية السُّلَمِيِّ … بِهَذَا. حدَّثني الحَسَن بْنُ أَحْمَدَ، قَالَ: حدَّثنا ابْنُ سَلَمة، عَنْ مُحَمد بْنِ إِسحاق، عَنْ مُحَمد بْنِ طَلحَة بْنِ عَبد الرَّحمَن بْنِ أَبي بَكر، عَنْ مُعاوية بْنِ جاهِمَة السُّلَمِيِّ: أَتَيتُ النَّبيَّ صَلى اللَّهُ عَلَيه وسَلم.. بِهَذَا. حدَّثني سَعِيد بْنُ يَحيى، قَالَ: حدَّثنا أَبي، قَالَ: حدَّثنا ابن جُرَيج، قال: أَخبرني مُحَمد ابن طَلحَة بْنِ رُكانة، عَنْ أَبيه، عَنْ مُعاوية بْنِ جاهِمَة: أَتَيتُ النَّبيَّ صَلى اللَّهُ عَلَيه وسَلم …وقَالَ عليٌّ: سَمِعتُ سُفيان: كَانَ مُحَمد بْن طَلحَة بْن عَبد اللهِِ بْن عَبد الرَّحمَن بْن أَبي بَكر على مَكَّة، استعملَهُ عَبد الْعَزِيزِ بْن عُمَر بْن عَبد الْعَزِيزِ، فكَانَ يدعو ابْن شُبرمَة، وابْن أَبي نَجِيح يستشيرهما. قَالَ أَبو عَبد اللهِ: أحسبه صاحب عُمَر بْن عَبد العزيز.

இவர் அபூபக்ர் (ரலி) அவர்களின் கொள்ளுப்பேரனாவார். உமர் பின் அப்துல் அஸீஸ் அவர்களின் ஆட்சியில் இவரை மக்காவின் ஆளுனராக நியமித்து இருந்தார்கள். இவர் வ்ழியாக அப்துர்ரஹ்மான் பின் அபீ பக்ர், இப்னுல் முபாரக் இப்னு ஜுரைஜ், ஸுஹ்ரி, முஹம்மத் பின் இஸ்ஹாக் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

புகாரியின் தாரீகுல் கபீர்

இவரிடமிருந்து பிரபலமான ஐவர் அறிவித்துள்னர் என்றால் ஐவரும் இவரை அறிந்துள்ளார்கள் என்று ஆகிறது. இவர் உமர் பின் அப்துல் அஸீஸ் அவர்களின் தோழராகவும் மக்காவின் ஆளுனராகவும் இருந்துள்ளதால் யாரென அறியப்படாதவர் என்ற விமர்சனம் இவருக்கு அறவே பொருந்தாது.

இது தவிர அறியப்படாதவர்கள் வழியாக எதையும் அறிவிக்காத வடிகட்டுவதில் கடும் போக்குடைய நஸாயி அவர்கள் இந்த ஹதீஸைப் பதிவு செய்துள்ளதும் இவர் அறியப்படாதவர் அல்ல என்பதை உறுதி செய்கிறது.

எனவே இந்த ஹதீஸ் பலவீனமானது அல்ல. ஏற்கத்தக்க தரமுடைய ஹதீஸ் என்பதில் ஐயமில்லை.

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...