ஒரு பெண்ணின் தாய் மாமா அக்குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்கு பொறுப்பேற்று இருக்கும் போது அவரே அப்பெண்னின் திருமணத்துக்கும் வலியாக பொறுப்பாளராக ஆகமுடியுமா?

பதில்

ஒரு பெண்ணுடைய திருமணத்தின் பொறுப்பாளர் விஷயமாக அப்பெண்ணே முதல் உரிமை படைத்தவர் ஆவார். அவர் பொறுப்பாளர் விஷயமாக முடிவு எடுக்காவிட்டால் தந்தை வழியில் உள்ள ஆண்கள் பொறுப்பாளராக ஆவார்கள்.

அந்தப் பெண் நம்பகமான வேறு யாரையாவது பொறுப்பாளராக நியமித்துக் கொண்டால் அதற்கான உரிமை அவளுக்கு உண்டு. தாய் வழி உறவினரையோ நம்பகமான பெரியவர்களையோ அப்பெண் நியமித்தால் அவர்கள் பொறுப்பாளராக ஆக முடியும்.

இது குறித்த விபரங்களைக் காண்போம்.

صحيح البخاري

6970 – حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تُنْكَحُ الأَيِّمُ حَتَّى تُسْتَأْمَرَ، وَلاَ تُنْكَحُ البِكْرُ حَتَّى تُسْتَأْذَنَ» قَالُوا: كَيْفَ إِذْنُهَا؟ قَالَ: «أَنْ تَسْكُتَ»

6970 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், கன்னி கழிந்த பெண்ணிடம் (வெளிப்படையான) உத்தரவு பெறாத வரை அவளுக்கு மண முடித்து வைக்கலாகாது. கன்னிப் பெண்ணிடம் அனுமதி கோரப்படாத வரை அவளுக்கு மணமுடித்து வைக்கலாகாது என்று கூறினார்கள். மக்கள், எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்துகொள்வது)? என்று கேட்டனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவள் மௌனமாயிருப்பதே (அதற்கு அடையாள மாகும்) என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி 6970

صحيح البخاري

6971 – حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ ذَكْوَانَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «البِكْرُ تُسْتَأْذَنُ» قُلْتُ: إِنَّ البِكْرَ تَسْتَحْيِي؟ قَالَ: «إِذْنُهَا صُمَاتُهَا

6971 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(திருமண விஷயத்தில்) கன்னிப் பெண்ணிடம் அனுமதி கோரவேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான், கன்னிப் பெண் (வெளிப்படையாகத் தன் சம்மதத்தைத் தெரிவிக்க) வெட்கப்படுவாளே? என்று கேட்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவளது மௌனமே அவளுடைய அனுமதி என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி 6971

பொறுப்பாளர் எனும் தகுதி நிபந்தனைக்கு உடபட்டது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதில் விளக்குகிறார்கள். தாம் விரும்பும் ஆணுக்கு தனது பொறுப்பில் உள்ள பெண்னைத் திருமணம் செய்து கொடுக்கும் அளவுக்கு பொறுப்பாளருக்கு அதிகாரம் இல்லை. பெண்ணிடம் சம்மதம் கேட்டு அவர் சம்மதித்தால் மட்டுமே பொறுப்பாளர் திருமணம் செய்து கொடுக்க முடியும்.

கணவன் யார்? மஹர் என்ன என்பது உள்ளிட்ட அனைத்திலும் பெண்ணின் சம்மதம் அவசியமாகும். பெண்ணின் விருப்பத்தின் படி செயல்படும் ஊழியர் நிலையில் தான் பொறுப்பாளரின் அதிகாரம் உள்ளது. தன் விருப்பப்படி செயல்படும் அதிகாரம் திருமண விஷயத்தில் இல்லை என்பது இதில் இருந்து தெரிகிறது.

பெண்ணின் விருப்பபடி திருமணம் செய்து கொடுக்க பொறுப்பாளர் மறுப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. அப்படி மறுத்தால் ஒரு பெண் திருமணம் செய்யாமலே இருக்க வேண்டும் என்று அறிவுடைய மக்கள் முடிவு செய்ய மாட்டார்கள். பொறுப்பாளர் அல்லாத ஒருவரை பொறுப்பாளராக ஆக்கி அவர் திருமணம் செய்ய வேண்டுமே தவிர பொறுப்பாளர் ஒப்புக் கொள்ளவில்லை என்பதால் திருமணம் எனும் நபிவழியைப் புறக்கணிக்க முடியாது.

صحيح البخاري

2310 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: جَاءَتِ امْرَأَةٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي قَدْ وَهَبْتُ لَكَ مِنْ نَفْسِي، فَقَالَ رَجُلٌ: زَوِّجْنِيهَا، قَالَ: «قَدْ زَوَّجْنَاكَهَا بِمَا مَعَكَ مِنَ القُرْآنِ»

2310 ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! என்னை அன்பளிப்பாகத் தந்துவிட்டேன்! என்றார். அங்கிருந்த ஒரு மனிதர் இவரை எனக்கு மணமுடித்துத் தாருங்கள்! என்று கேட்டார். உம்மிடமிருக்கும் குர்ஆன் பற்றிய ஞானத்தின் காரணமாக உமக்கு இவரை மணமுடித்துத் தந்தோம்! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 2310

صحيح البخاري

5120 – حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مَرْحُومُ بْنُ عَبْدِ العَزِيزِ بْنِ مِهْرَانَ، قَالَ: سَمِعْتُ ثَابِتًا البُنَانِيَّ، قَالَ: كُنْتُ عِنْدَ أَنَسٍ وَعِنْدَهُ ابْنَةٌ لَهُ، قَالَ أَنَسٌ: جَاءَتِ امْرَأَةٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَعْرِضُ عَلَيْهِ نَفْسَهَا، قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، أَلَكَ بِي حَاجَةٌ؟ ” فَقَالَتْ بِنْتُ أَنَسٍ: مَا أَقَلَّ حَيَاءَهَا، وَا سَوْأَتَاهْ وَا سَوْأَتَاهْ، قَالَ: «هِيَ خَيْرٌ مِنْكِ، رَغِبَتْ فِي النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَرَضَتْ عَلَيْهِ نَفْسَهَا»

5120 ஸாபித் அல் புனானி அவர்கள் கூறியதாவது:

நான் அனஸ் (ரலி) அவர்கள் அருகில் இருந்தேன். அன்னாருடன் அவர்களுடைய புதல்வியார் ஒருவரும் இருந்தார். (அப்போது) அனஸ் (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தன்னை மணந்து கொள்ளுமாறு கோரியபடி ஒரு பெண் வந்து, அல்லாஹ்வின் தூதரே! (மணமுடித்துக் கொள்ள) நான் தங்களுக்கு அவசியமா? எனக் கேட்டார் என்று கூறினார்கள். அப்போது அனஸ் (ரலி) அவர்களுடைய புதல்வி, என்ன வெட்கங்கெட்டத் தனம்! என்ன அசிங்கம்! என்ன அசிங்கம்!! என்று சொன்னார்.அனஸ் (ரலி) அவர்கள், அந்தப் பெண்மணி உன்னை விடச் சிறந்தவர்; அந்தப் பெண் நபியவர்களை (மணந்துகொள்ள) ஆசைப்பட்டார். ஆகவே, தன்னை மணந்து கொள்ளுமாறு கோரினார் என்று கூறினார்கள்.

நூல் : புகாரி 5120

ஒரு பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தன்னை ஒப்படைப்பதாகச் சொல்கிறார். அதாவது நீங்கள் என்னை மணந்து கொள்ளுங்கள் அல்லது யாருக்காவது மணமுடித்துக் கொடுங்கள் என்பது இதன் கருத்தாகும். அதாவது வலி எனும் பொறுப்பை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள் என்ற கருத்தும் இதனுள் அடங்கியுள்ளது.

பொறுப்பாளரை மாற்றும் அதிகாரம் பெண்ணுக்கு இல்லை என்றால் உன் பொறுப்பாளரை அழைத்து வா என்றோ பொறுப்பாளர் எங்கே என்றோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டிருப்பார்கள்.

சபையில் இருந்த ஒருவர் தனக்கு அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து தரும்படி கேட்ட போது நான் திருமணம் செய்து தர முடியாது; பெண்ணின் பொறுப்பாளர் தான் திருமணம் செய்து வைக்க முடியும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி இருப்பார்கள். அப்படி எதுவும் கேட்காமல் பெண் சார்பில் கேட்கும் மஹரை தாமே முடிவு செய்து அப்பெண்ணை அவருக்கு மனமுடித்துக் கொடுக்கிறார்கள்.

பொறுப்பாளர் சரியில்லை என்று ஒரு பெண் கருதினால் தாய் வழி உறவுகளையோ அல்லது சமுதாயப் பிரமுகரையோ பொறுப்பாளராக இருக்குமாறு கேட்டுக் கொள்ளலாம். அப்படி கேட்கப்பட்டவர் பொறுப்பாளராக ஆகிக் கொள்ளலாம் என்பது இதில் இருந்து தெரிகிறது.

பொறுப்பாளராக இருப்பவர் பெண் விரும்பாத ஒருவருக்கு கட்டாயப்படுத்தி அவரைத் திருமணம் செய்து வைத்து விடக் கூடும். அப்படி நடந்தால் அதன் நிலை என்ன என்பது பின்வரும் ஹதீஸில் இருந்து தெரிகிறது.

صحيح البخاري

6969 – حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ القَاسِمِ: أَنَّ امْرَأَةً مِنْ وَلَدِ جَعْفَرٍ، تَخَوَّفَتْ أَنْ يُزَوِّجَهَا وَلِيُّهَا وَهِيَ كَارِهَةٌ، فَأَرْسَلَتْ إِلَى شَيْخَيْنِ مِنَ الأَنْصَارِ: عَبْدِ الرَّحْمَنِ وَمُجَمِّعٍ ابْنَيْ جَارِيَةَ، قَالاَ: فَلاَ تَخْشَيْنَ، فَإِنَّ خَنْسَاءَ بِنْتَ خِذَامٍ «أَنْكَحَهَا أَبُوهَا وَهِيَ كَارِهَةٌ، فَرَدَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَلِكَ» قَالَ سُفْيَانُ: وَأَمَّا عَبْدُ الرَّحْمَنِ، فَسَمِعْتُهُ يَقُولُ: عَنْ أَبِيهِ: «إِنَّ خَنْسَاءَ»

6969 காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் அவர்கள் கூறியதாவது:

ஜஅஃபர் அவர்களுடைய மக்களில் ஒரு பெண்மணி, தன்னைத் தன் காப்பாளர் தனக்குப் பிடிக்காத ஒருவருக்கு மணமுடித்து வைக்கப்போகிறார் என அஞ்சினார். ஆகவே, அப்பெண்மணி ஜாரியா என்பவரின் (புதல்வர் யஸீதுடைய) புதல்வர்களான அப்துர் ரஹ்மான் , முஜம்மிஉ ஆகிய இரு அன்சாரிப் பெரியவர்களிடம் ஆளனுப்பி வைத்தார். அவர்கள் இருவரும், (பெண்களே!) அஞ்சாதீர்கள். ஏனெனில், கிதாம் என்பவரின் புதல்வியான கன்ஸாவை அவருடைய தந்தை அவருக்குப் பிடிக்காத ஒருவருக்கு மண முடித்துவைத்தார். (இது குறித்து அப் பெண்மணி முறையிட்ட போது) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அத்திருமணத்தை ரத்துச்செய்தார்கள் என்று கூறியனுப்பினார்கள்.

நூல் : புகாரி 6969

பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக செய்து வைத்த திருமணத்தை ரத்து செய்து பொறுப்பாளருக்கு தனி அதிகாரம் இல்லை என்று தெளிவுபடுத்துகிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அப்பெண் பொறுப்பை ஒப்படைத்தது சமுதாயத் தலைவர் என்ற முறையில் தான் இதற்கு சிலர் விளக்கம் கொடுத்தாலும் அந்தத் தலைவர் பெண்ணின் பொறுப்பாளருக்கு அப்பொறுப்பை வழங்கலாம் என்பதும் அதில் அடங்கி விடும்.

பெண்களின் உரிமை சம்மந்தப்பட்ட விஷயத்தில் தனது பொறுப்பாளராக யார் இருக்க வேண்டும் என்பது பற்றியும் அவளே முடியும் செய்ய உரிமை உள்ளது என்பதே சரியாகும்.

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...