திருடனின் கைவெட்டுவதை அல்லாஹ் தெளிவுபடுத்தவில்லையா?

கேள்வி

திருடனின் கையை வெட்ட வேண்டும் என்று திருக்குர்ஆன் 5:38 வசனம் கூறுகிறது.

கை என்பது விரலில் இருந்து தோள் புஜம் வரையிலா?

விரலில் இருந்து முழங்கை வரையிலா?

விரலில் இருந்து மணிக்கட்டு வரையிலா

என்பதற்கு குர்ஆனிலோ, ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலோ தெளிவுபடுத்தப்படவில்ல. சஹாபாக்களின் நடைமுறையை ஏற்காவிட்டால் இதற்குத் தெளிவு கிடைக்காது. சஹாபாக்கள் திருடனின் மனிக்கட்டு வரை வெட்டியதை ஆதாரமாகக் கொண்டு தான் இவ்வாறு முடிவு செய்கிறோம் என்று சிலர் வாதம் செய்கின்றார்கள். இந்த வாதம் சரியா?

அபூ அனூத், இலங்கை

பதில்

திருடனின் கைகளை எந்த அளவுக்கு வெட்ட வேண்டும் என்பதற்கு விளக்கம் அளிப்பதற்கு முன்னால் இப்படி கேள்வி கேட்டவர்களின் அறியாமையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சஹாபாக்கள் விளக்கம் இல்லாமல் 5:38 வசனத்தைப் புரிந்து கொள்ள முடியாது என்று இவர்கள் வாதிடுவதன் மூலம் சஹாபாக்களுக்கு மதிப்பு சேர்ப்பதாக நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் இதன் மூலம் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் இழிவுபடுத்துகின்றனர். திருடனின் கையை வெட்ட வேண்டும் என்று சொன்ன அல்லாஹ் அதைத் தெளிவுபடுத்தாமல் குறைபடக் கூறி குழப்பத்தில் ஆழ்த்தி விட்டான் என்று இவர்கள் சொல்லாமல் சொல்கின்றனர்.

இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 5:3

என்று அல்லாஹ் கூறுகிறான்.

இவர்களோ அல்லாஹ் மார்க்கத்தை முழுமைப்படுத்தவில்லை மற்றவர்கள் வந்து தான் அதை முழுமைப்படுத்தும் வகையில் குறைவுடைய மார்க்கத்தையே தந்துள்ளான் என்று சித்தரிக்கின்றனர்.

நன்கறிந்த (இறை)வனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

திருக்குர்ஆன் 35:14

என்று அல்லாஹ் கூறுகிறான்.

இவர்களோ அல்லாஹ்வுக்கு அவ்வளவாக விளக்கத் தெரியவில்லை; சஹாபாக்கள் தான் அல்லாஹ்வை விட நன்றாக விளக்கக் கூடியவர்கள் என்று சொல்லாமல் சொல்கின்றனர்.

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.

திருக்குர்ஆன் 16:44

என்று அல்லாஹ் கூறுகிறான்.

விளக்குவதற்காக யாரை அல்லாஹ் அனுப்பினானோ அந்தத் தூதர் சில விஷயங்களை விளக்காமல் சென்று விட்டார் என்று இவர்கள் நினைக்கின்றனர். அல்லது தூதருக்கு விளக்கத் தெரியவில்லை என்கின்றனர்.

அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்ல வேண்டியதை முழுமையாகச் சொல்லி விட்டனர்; மற்றவர்கள் வந்து அதில் எதையும் சேர்க்கும் அளவுக்கு பலவீனமாக இந்த மார்க்கத்தை அல்லாஹ் தரவில்லை என்பதை நம்புபவன் தான் முஸ்லிமாவான் என்பதை முதலில் இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு விஷயத்தைச் சொல்லாமல் சஹாபாக்கள் அதைச் சொல்லி இருந்தால் அது அல்லாஹ் சொன்னதாக ஆகாது. அவர்களின் கருத்தாகத் தான் ஆகும். அதை ஏற்க வேண்டும் என்று ஆகவே ஆகாது. அதற்கு மார்க்க அந்தஸ்து எதுவும் வந்து விடாது. நாம் சிந்தித்துப் பார்த்து அந்த வசனத்தில் இருந்து எதை விளங்குகிறோமோ அதைத் தான் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வும் அப்படித்தான் நமக்கு சொல்கிறான்.

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.

திருக்குர்ஆன் 16:44

அல்லாஹ் அருளிய வேதத்தை அவனது தூதர் வழியாகக் கிடைக்கும் விளக்கத்தின் மூலம் அறிந்து கொள்ள வேண்டும். அப்படி இல்லாத விஷயங்களில் நாம் சிந்தித்துப் பார்த்துத் தான் விளங்க வேண்டும் என்று மேற்கண்ட வசனம் சொல்கிறது. சிந்தித்து விளங்கும் விஷயங்களும் குர்ஆனில் உள்ளடங்கியது தான் என்பது இந்த வசனத்தில் இருந்து தெரிகிறது.

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒன்றைக் குறிப்பாகச் சொல்லாமல் பொதுவாகச் சொன்னால் அதில் சிந்தனையைச் செலுத்தி காரண காரியங்களுடன் ஆய்வு செய்து இதைத் தான் இவ்வசனம் சொல்கிறது என்று ஆய்ந்து அறிவது தான் நம் மீது உள்ள கடமை.

திருடினால் கையை வெட்ட வேண்டும் என்று அல்லாஹ் சொல்கிறான். எது வரை வெட்ட வேண்டும் என்று அல்லாஹ் சொல்லவில்லை. இதற்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அளித்த விளக்கம் குறித்து பலவீனமான ஹதீஸ் இருந்தாலும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவும் இல்லை.

கை என்பது இந்த இடத்தில் எதை குறிக்கிறது என்று நாம் தான் சிந்திக்க வேண்டும்.

கை என்பது விரலில் இருந்து தோள் புஜம் வரை உள்ள பகுதியைக் குறிக்கும் என்பது உண்மை தான்.

ஆனால் எல்லா மொழிகளிலும், மனிதர்களின் பேச்சுக்களிலும் பொதுவாக கை என்று சொன்னால் மனிக்கட்டு வரை உள்ள பகுதியைக் குறிக்கவே நாம் பயன்படுத்துகிறோம். வேறு அர்த்தம் தரும் வகையில் வாசக அமைப்பு இருந்தால் தவிர மற்ற சந்தர்ப்பங்களில் மனிக்கட்டு வரை உள்ள பகுதியைத் தான் கை எனக் கூறுகிறோம்.

கையால் பிடி, கையால் எடு, கை கழுவு, கையால் முஸாபஹா செய் என்றெல்லாம் சொன்னால் முழுக்கை என்று நாம் புரிந்து கொள்வதில்லை. மனிக்கட்டு வரை உள்ள பகுதி என்றே புரிந்து கொள்கிறோம்.

ஊசி போட கையை நீட்டு என்று மருத்துவர் கூறினால் ஊசி எங்கே போடுவார்கள் என்பது நமக்குத் தெரிந்துள்ளதால் முழுக்கையை நீட்டுகிறோம்.

கையைக் கட்டிக் கொள் என்று கூறினால் கட்டிக் கொள் என்ற வார்த்தை இணைந்துள்ளதன் காரணமாக முழங்கை வரை கட்டிக் கொள்கிறோம்.

இப்படியெல்லாம் சொல்லாமல் வெறும் கை என்று சொன்னால் மனிக்கட்டு வரை உள்ள பகுதியைக் குறிப்பதற்குத் தான் நாம் பயன்படுத்துகிறோம். மனிதர்களின் பேச்சு வழக்கில் தான் குர்ஆன் அருளப்பட்டது. எனவே இவ்வசனம் தெளிவாகவே உள்ளது.

கையைக் கழுவிவிட்டுச் சாப்பிடு என்று கூறினால் தோள் புஜம் வரை கழுவ வேண்டும் என்று யாரும் புரிந்து கொள்ள மாட்டோம். மனிக்கட்டு வரை என்று சொல்லா விட்டாலும் வேறு அர்த்தம் கொள்ளும் வகையில் வாசக அமைப்பு இல்லாததால் இதன் அர்த்தமே மனிக்கட்டு வரை என்பது தான்.

இதை அல்லாஹ்வும் தனது திருமறையில் தெளிவுபடுத்துகிறான்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.

திருக்குர்ஆன் 5:6

இவ்வசனத்தில் கைகள் என்று இரு இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒன்று உளூ செய்வது பற்றியும் மற்றொன்று தயம்மம் செய்வது பற்றியும் பேசுகிறது.

உளூ செய்வதைப் பற்றி பேசும் போது மூட்டுக்கள் முழங்கைகள்- வரை கழுவுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

ஆனால் தயம்மும் செய்வதைப் பற்றி பேசும் போது எந்த அளவும் கூறாமல் கைகள் என்று அல்லாஹ் சொல்கிறான்.

இதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செயல் முறை விளக்கம் அளிக்கும் போது தரையில் உள்ளங்கையால் அடித்து முகத்தில் தடவிக் கொண்டார்கள். பின்னர் மனிக்கட்டு வரை கைகளில் தடவிக் கொண்டார்கள்.

பார்க்க : புகாரி 342, 343, 339, 338

தயம்மும் செய்யும் போது முழங்கை வரை அவர்கள் தடவவில்லை. பொதுவாக கை என்று கூறப்பட்டதால் மனிக்கட்டு வரை என்று செயல் விளக்கம் தந்துள்ளனர்.

கையை வெட்டுங்கள் என்று பொதுவாக அல்லாஹ் சொல்கிறான். மனிக்கட்டையும் தாண்டிய பகுதி என்று புரிந்து கொள்ள எந்த வாசகமும் இத்துடன் சேர்த்து சொல்லப்படவில்லை. எனவே மனிக்கட்டு வரை என்று தான் இதை அறிவுடைய அனைவரும் புரிந்து கொள்வார்கள். எனவே அல்லாஹ் தெளிவாகவே சொல்லி இருக்கிறான். யாரையும் சார்ந்து விளங்கும் நிலையில் வைக்கவில்லை.

இப்படி விளங்குவது அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் பெருமை சேர்க்குமா? இவர்கள் செய்யும் வாதம் பெருமை சேர்க்குமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...