தமிழ்நாடு முஸ்லிம் முன்னேறக் கழகம் சுனாமி மற்றும் பித்ரா நிதியில் மோசடி செய்ததாக தமிநாடு தவ்ஹீத் ஜமாஅத் குற்றம் சாட்டியது. குற்றச்சாட்டுக்குப் பின் பொது விசாரணைக்கு ஒப்புக் கொண்ட தமுமுக பின்னர் பின்வாங்கி ஒரு மணடபத்தில் தனது இயக்கத்தினருக்கு மட்டும் கணக்கு காட்டும் நாடகம், நடத்திய்தாக ததஜ குற்றம் சாட்டியது.

அந்தக் ஆக்கத்தைத் தான் கீழே காண்கிறீர்கள்.

தமுமுகவாவது எதோ ஆடிட்டர் மூலம் கணக்கு காட்டி தங்கள் இயக்கத்தினரை நம்ப வைத்தார்கள். ஆனால் ததஜ அதைக் கூட செய்ய வக்கில்லாமல் கணக்கு கேட்டால் ஓட்டம் பிடிக்கிறது.

2005 ஆம் ஆண்டு உணர்வு இதழில் எழுதியதைக் கீழே தந்துள்ளோம். இதைப் படித்தால் தமுமுகவை விட ததஜவினர் உழல் பெருச்சாளிகளாக உள்ளதை அறிந்து கொள்ளலாம்.

நடுவர்கள் அழைப்பை ஏற்காது தமுமுக ஓட்டம்

ஃபித்ரா நிதியை 2004, 2005 ஆகிய இரண்டு ஆண்டுகள் திரட்டிய தமுமுகவினர் தாங்கள் எவ்வளவு திரட்டினோம் என்ற விபரங்களை இன்றுவரை வெளியிடவில்லை.

சுனாமி நிவாரண நிதியையும் தமுமுகவினர் திரட்டினார்கள். எவ்வளவு திரட்டினோம் என்பதை விலாவாரியாக வெளியிட்ட தமுமுகவினர் அந்த நிதியை என்ன செய்தோம் என்பதை இன்றுவரை வெளியிடவில்லை.

இந்த நிலையில் அனைத்துக் கணக்குகளையும் முறையாகப் பராமரித்து வரும் டி.என்.டிஜே மீது சுனாமி நிதி பற்றி பினாமி பிரசுரம் வெளியிட்டு அவதூறு பரப்பினார்கள்.

அதன்பிறகு தான் தவ்ஹீத் ஜமாஅத்தும், தமுமுகவும் நடுவர்களின் பொது விசாரணைக்கு முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தோம்.

தமுமுகவினர் சுனாமி நிதியை திரட்டும் போது தங்கள் பத்திரிகையில் பின்வருமாறு மக்களுக்கு அறிவிப்புச் செய்தனர்.

இந்த அறிவிப்பில் இரண்டு விஷயங்களை தமுமுகவினர் குறிப்பிட்டனர்.

50 குடும்பங்களுக்கு 75 இலட்சம் செலவில் வீடு கட்டித் தருவோம் என்பது முதலாவது செய்தி.

சமுதாயத்துக்கு அளித்த வாக்குறுதியின்படி 50 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்திருந்தால் அந்தக் கணக்கை மிக எளிதாகக் காட்டி விடலாம்.

ஐம்பது ரூபாய்க்கு நோட்புக் கொடுத்ததையெல்லாம் கால்பக்கச் செய்தியாக விளம்பரப்படுத்திக் கொள்ளும் தமுமுகவினர் 75 லட்சம் ரூபாய்க்கு வீடுகள் கட்டிக் கொடுத்திருந்தால் அந்த வீடுகள் பெற்றவர்களின் விபரங்களையும், வீடுகளின் பயன்களையும் வெளியிட்டு தங்கள் நேர்மையை நிரூபித்திருக்க முடியும்.

“”நீங்கள் அனுப்பும் நிதி பற்றிய விபரங்களும் அது செலவு செய்யப்பட்டது குறித்த விபரமும்” தொடர்ந்து மக்கள் உரிமையில் பிரசுரமாகும் என்பது அவர்கள் தெரிவித்த இரண்டாவது செய்தி.

அற்பமான ஊதியத்துக்காக பாலை மணலில் வெந்து சாம்பலாகும் நம் சகோதரர்கள் சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பபைக் கண்டு கலங்கிப் வாரி வாரி வழங்கினார்கள்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த நிதியை முறையாக சேர்ப்பார்கள், அவர்களின் தேவையக்ள பூர்த்தியாகும், அந்த மக்களின் துயரில் பங்கு கொண்டதற்காக மறுமையில் இறைவனிடம் கூலி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அந்த மக்கள் வாரி வழங்கினார்கள்.

வரவுகளை மட்டும் விலாவாரியாக வெளியிட்டவர்கள், பல இதழ்களில் பக்கம் பக்கமாக பட்டியல் போட்டவர்கள் ஐம்பது வரிகளில் 50 வீடுகள் கட்டிக் கொடுத்த விபரங்களை வெளியிடுவதற்கு என்ன தடை?

நிதியளித்தவர்கள் பல முறை வலியுறுத்திய பிறகும் இன்று வரை சுனாமி நிதி எவ்வாறு செலவிடப்பட்டது என்பதை வெளியிட மறுக்கும் மர்மம் என்ன? இதற்காகத் தான் பொது விசாரணை கோரினோம்.

ஆனால், நடுவர்களை இவர்கள் மதிக்கவில்லை. தங்கள் நேர்மையை நிரூபிக்க தங்களுக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

மடியில் கனம் இல்லாவிட்டால் வழியில் பயம் ஏன்?

விசாரணைக்கு முன்பே இவர்களின் நேர்மையின்மையை அம்பலப்படுத்தும் நடுவர்களின் கடிதத்தைப் பாருங்கள். (கட்டத்தில் உள்ளது)

நடுவர் குழுவின் விசாரணையை ஏற்றுக் கொண்டு அதிகாரபூர்வமாக கடிதம் கொடுத்ததையும், தமுமுக முன்னவரவில்ல என்பதையும் நடுவர்கள் தெளிவுபடுத்தி விட்டனர்.

இதற்கு பிறகு பேசாமல் மௌனம் சாதிருத்திருந்ôல் கூட , இனிமேல் முளறையாகக் கணக்கை வெளியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பாவது மிஞ்சியிருக்கும்.

ஆனால், இவர்கள் நடத்திய கோமாளிக் கூத்துக்களால் இவர்கள் மேலும் அசிங்கப்பட்டுவிட்டார்கள்.

இவர்களே பிடித்த மண்டபத்தில் தங்கள் இயக்கத்தினரைக் கூட்டி வீதியெங்கும் கொடிகளைத் தோரணம் கட்டி கணக்கு காட்டும் நாடகத்தை அரங்கேற்றினார்கள்.

கணக்கை பொது விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பதுதான் முக்கிய பிரச்சனை.

இதைச் செய்யாமல் தங்கள் கட்சியினரை அழைத்து வைத்து மொட்டைத் தாத்தன் குட்டையில் விழுந்தான் என்பது போல் வாசித்து விட்டு விபரங்களை நமது அலுவலகத்தில் வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று அற்புதமான (?) முறையில் கணக்கு காட்டிவிட்டார்கள்.

முக்கியமான மார்க்கக் கடமையின் பெயரால், நிதி திரட்டி (ஃபித்ரா) அந்தத் தொகை எவ்வளவு? எந்த வகையில் வந்தது? என்ற விபரங்களை வெளியிடாதவர்கள் மற்ற நிதியாதாரங்கள் விஷயத்தில் எப்படி நடப்பார்கள் என்பதை சமுதாயமே புரிந்து கொள்ளட்டும்.

சுனாமியின் பாதிப்பைக் கண்டு கல்நெஞ்சம் படைத்தவர்களும் வாரி வழங்கியிருக்க… அந்த நிதியைப் பற்றியே வாய் திறக்க மறுக்கிறார்கள் என்றால் கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாது ஓட்டம் எடுக்கிறார்கள் எனு;றால் இவர்களை எப்படி நம்பலாம் என்பதை சமுதாயம் புரிந்து கொள்ளட்டும்.

(உணர்வு, உரிûம் 10 : குரல் 15, டிசம்பர் 16 – 22, 2005, பக்கம் : 13)

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...