உள்ளாட்சியில் ம.ம.க மகத்தான வெற்றியா?

த.மு.மு.கவின் அரசியல் பிரிவான ம.ம.க 60 இடங்களில் வெற்றி பெற்றதாகவும் 90 இடங்களில் வெற்றி பெற்றதாகவும் பெருமையடித்துக் கொள்கிறார்களே இது உண்மையா?

– அமீர் சுல்தான், ஏழுகிணறு சென்னை.

நீங்கள் சொல்வது போல் பெருமை அடித்தார்கள் என்றால் கட்டாயம் அவர்களை மனநல மருத்துவர்களிடம் தான் காட்ட வேண்டும். கனவுலகில் வாழ்வதும் ஒரு.வகை மனநோய் தான்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது இவர்கள் கொடுத்த பில்டப்பை நம்பி ஏமாந்த ஊடகங்கள் வெற்றி வாய்ப்பு பற்றி எழுதும் போதும், பேசும் போதும் ம.ம.கவையும் அதிமுக வெற்றிக்கு காரணமாகக் குறிப்பிட்டனர். ஊடகங்களின் அறியாமையை நினைத்து சமுதாயம் கேலிச் சிரிப்பு சிரித்தது.

ஆனால் உள்ளாட்சித் தேர்தல் முடிவு குறித்து ஒவ்வொரு கட்சியும் வாங்கிய வாக்கு சதிவிகிதத்தைக் குறிப்பிடும் பத்திரிகைகள் அந்தப் பட்டியலில் ம.ம.க என்ற பெயரையே குறிப்பிடக் காணோம்.

அதிமுக, திமுக, காங்கிரஸ், தேமுதிக, மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தை, பாஜக, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு எவ்வளவு சதவிகிதம் வாக்குகள் கிடைத்தன என்று பட்டியல் போட்டு ஊடகங்கள் விளக்கியுள்ளன. தேர்தல் ஆணையம் அளித்த தகவலின் அடிப்படையில் இந்த புள்ளிவிபரத்தை ஊடகங்கள் வெளியிட்டன. இந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளது. இக்கட்சி 0.70 சதம் ஓட்டுக்கள் வாங்கியதாக பட்டியல் வெளியிட்டுள்ளனர். அதாவது ஒவ்வொரு 400 வாக்குகளில் 3 வாக்குகளை இக்கட்சி வாங்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 400க்கு மூன்று என்ற அற்பமான வாக்குகளைக் கூட ம.ம.க வாங்காததால் தான் பட்டியலில் கூட மமகவைச் சொல்ல முடியவில்லை. இது தான் ம.ம.க வெற்றியின் லட்சணம்.

இவர்கள் கூறுவது போல் 60 அல்லது 90 இடங்களில் வெற்றி பெற்றது உண்மை என்றே வைத்துக் கொள்வோம். நூறு இடங்களில் 60 இடங்களை வென்றார்களா? அல்லது ஆயிரம் இடங்களில் 60 இடங்களை வென்றார்களா? அல்லது பத்தாயிரம் இடங்களில் 60 இடங்களைப் பிடித்தார்களா? நிச்சயமாக இல்லை.

தேர்தல் நடந்த மொத்த இடங்கள் ஒரு லட்சத்தி முப்பத்தி இரண்டாயிரத்தி நானூற்றி அறுபத்தி ஏழு இடங்களாகும். 1,32,467 இடங்களில் 60 இடம் என்பது என்ன கணக்கு?

நூறு இடங்களில் ஒன்று என்ற கணக்கில் இவர்கள் வெல்லவில்லை.

200 இடங்களில் ஒன்று என்ற கணக்கிலும் வெல்லவில்லை.

முன்னூறு இடங்களில் ஒன்று என்ற கணக்கிலும் இவர்கள் வெற்றி பெறவில்லை.

நானூறு இடங்களுக்கு ஒரு இடம் என்ற கணக்கிலும் இவர்கள் வெல்லவில்லை.

ஐநூறு இடங்களுக்கு ஒன்று என்ற கணக்கிலும் வெல்லவில்லை.

அறுநூறு இடங்களுக்கு ஒன்று என்ற கணக்கிலும் இவர்கள் வெல்லவில்லை.

மாறாக ஆயிரத்துக்கு ஒரு இடம் என்ற கணக்கிலும் மமக வெல்லவில்லை.

மாறாக இரண்டாயிரம் இடங்களுக்கு ஒரு இடம் என்பது தான் இவர்கள் வெற்றி பெற்ற சதவிகிதக் கணக்கு.

234 சட்டமன்றத் தொகுதிகளில் இரண்டு இடங்களில் இவர்கள் வெற்றி பெற்றனர். சுமார் நூற்றுக்கு ஒன்று என்ற கணக்கு வருகின்றது. இந்தக் கணக்குப்படி 1,32,467 இடங்களில் 1,324 இடங்களை வென்றால் தான் சட்ட சபையில் பெற்ற அற்ப வெற்றிக்கு ஈடாகும். 1,324 இடங்களுக்கு பதிலாக 60 இடம் என்பது எவ்வளவு கேவலமான தோல்வி! இதைக் கூட வெற்றி என்று தம்பட்டம் அடிக்க ரொம்ப துணிச்சல் வேண்டும்.

சரி அப்படியே வெற்றி பெற்ற இடங்கள் மாநகராட்சி அல்லது நகராட்சி உறுப்பினர் என்றால் அதில் அதிக ஓட்டுக்களையாவது பெற்றிருப்பார்கள் என்று கருதலாம். ஆனால் இவர்கள் அதிகம் வென்ற இடங்கள் கிராமப் பஞ்சாயத்துகளில் உள்ள சின்னச் சின்ன வார்டுகள் தான். அதாவது ஒரு வார்டில் சுமார் 100 முதல் 300 ஓட்டுகள் வரை இருக்கும். இதில் வெற்றி பெறுபவர் 60 அல்லது எழுபது ஓட்டுக்கள் வாங்கினாலே போதும். ஜெயித்து விடலாம். இவர்களே தம்பட்டம் அடித்த ஒரு வார்டு நீடூர் வார்டு; அதன் கணக்கைப் பாருங்கள்.

சபீர் (மமக) – 57

ரோஜா (எ) அப்துல் கபூர் (சுயே) – 47

இதில் முஸ்லிம்கள் நிறைந்து வாழும் நீடூரில் ஒரு தெருவில் 57 வாக்குகள் வாங்கி அதில் ஜெயித்து விட்டதாகக் கூறியுள்ளனர். முஸ்லிம்கள் நிறைந்த ஊர்களில் பஞ்சாயத்து தலைவர் பதவியில் ஜெயிக்கவில்லை. அவ்வூரில் அதிகமான வார்டுகளில் ஜெயிக்கவில்லை. ஒரு வார்டில் 57 வாக்குகள் வாங்கி ஜெயித்துள்ளனர்.

இவர்கள் தம்பட்டம் அடிக்கும் அளவுக்கு வெற்றி பெற்றார்கள் என்றால் மொத்த வாக்காளர்களில் இவர்களுக்கு வாக்களித்தவர்கள் மொத்தம் எவ்வளவு என்பதை பட்டியல் போட்டு விளக்கத் தயாரா?

மொத்தம் உள்ள நான்கு கோடி வாக்காளர்களில் இவர்களுக்கு வாக்களித்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று பட்டியல் போட்டு சட்டமன்றத் தேர்தலை விட தாங்கள் எவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளோம் என்று கூறத் தயாரா என்று கேளுங்கள்.

முஸ்லிம் லீக் வென்ற இடங்களில் கால்வாசி இடங்களில் கூட வெற்றி பெறாத இவர்கள் தம்பட்டம் அடிப்பதை அவர்களின் தொண்டர்களே சகித்துக் கொள்ள மாட்டார்கள்.

எஸ் டி பி ஐ இயக்கத்தினர், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து ஐம்பது இடங்களில் வெற்றி பெற்றதாகப் பெருமையடித்துக் கொள்கின்றனர். அவர்கள் அடித்துக் கொள்ளும் தம்பட்டத்திற்கும் இந்தப் பதில் பொருந்தும்.

உணர்வு 16:10

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...