உள்ளாட்சியில் ம.ம.க மகத்தான வெற்றியா?

த.மு.மு.கவின் அரசியல் பிரிவான ம.ம.க 60 இடங்களில் வெற்றி பெற்றதாகவும் 90 இடங்களில் வெற்றி பெற்றதாகவும் பெருமையடித்துக் கொள்கிறார்களே இது உண்மையா?

– அமீர் சுல்தான், ஏழுகிணறு சென்னை.

நீங்கள் சொல்வது போல் பெருமை அடித்தார்கள் என்றால் கட்டாயம் அவர்களை மனநல மருத்துவர்களிடம் தான் காட்ட வேண்டும். கனவுலகில் வாழ்வதும் ஒரு.வகை மனநோய் தான்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது இவர்கள் கொடுத்த பில்டப்பை நம்பி ஏமாந்த ஊடகங்கள் வெற்றி வாய்ப்பு பற்றி எழுதும் போதும், பேசும் போதும் ம.ம.கவையும் அதிமுக வெற்றிக்கு காரணமாகக் குறிப்பிட்டனர். ஊடகங்களின் அறியாமையை நினைத்து சமுதாயம் கேலிச் சிரிப்பு சிரித்தது.

ஆனால் உள்ளாட்சித் தேர்தல் முடிவு குறித்து ஒவ்வொரு கட்சியும் வாங்கிய வாக்கு சதிவிகிதத்தைக் குறிப்பிடும் பத்திரிகைகள் அந்தப் பட்டியலில் ம.ம.க என்ற பெயரையே குறிப்பிடக் காணோம்.

அதிமுக, திமுக, காங்கிரஸ், தேமுதிக, மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தை, பாஜக, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு எவ்வளவு சதவிகிதம் வாக்குகள் கிடைத்தன என்று பட்டியல் போட்டு ஊடகங்கள் விளக்கியுள்ளன. தேர்தல் ஆணையம் அளித்த தகவலின் அடிப்படையில் இந்த புள்ளிவிபரத்தை ஊடகங்கள் வெளியிட்டன. இந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளது. இக்கட்சி 0.70 சதம் ஓட்டுக்கள் வாங்கியதாக பட்டியல் வெளியிட்டுள்ளனர். அதாவது ஒவ்வொரு 400 வாக்குகளில் 3 வாக்குகளை இக்கட்சி வாங்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 400க்கு மூன்று என்ற அற்பமான வாக்குகளைக் கூட ம.ம.க வாங்காததால் தான் பட்டியலில் கூட மமகவைச் சொல்ல முடியவில்லை. இது தான் ம.ம.க வெற்றியின் லட்சணம்.

இவர்கள் கூறுவது போல் 60 அல்லது 90 இடங்களில் வெற்றி பெற்றது உண்மை என்றே வைத்துக் கொள்வோம். நூறு இடங்களில் 60 இடங்களை வென்றார்களா? அல்லது ஆயிரம் இடங்களில் 60 இடங்களை வென்றார்களா? அல்லது பத்தாயிரம் இடங்களில் 60 இடங்களைப் பிடித்தார்களா? நிச்சயமாக இல்லை.

தேர்தல் நடந்த மொத்த இடங்கள் ஒரு லட்சத்தி முப்பத்தி இரண்டாயிரத்தி நானூற்றி அறுபத்தி ஏழு இடங்களாகும். 1,32,467 இடங்களில் 60 இடம் என்பது என்ன கணக்கு?

நூறு இடங்களில் ஒன்று என்ற கணக்கில் இவர்கள் வெல்லவில்லை.

200 இடங்களில் ஒன்று என்ற கணக்கிலும் வெல்லவில்லை.

முன்னூறு இடங்களில் ஒன்று என்ற கணக்கிலும் இவர்கள் வெற்றி பெறவில்லை.

நானூறு இடங்களுக்கு ஒரு இடம் என்ற கணக்கிலும் இவர்கள் வெல்லவில்லை.

ஐநூறு இடங்களுக்கு ஒன்று என்ற கணக்கிலும் வெல்லவில்லை.

அறுநூறு இடங்களுக்கு ஒன்று என்ற கணக்கிலும் இவர்கள் வெல்லவில்லை.

மாறாக ஆயிரத்துக்கு ஒரு இடம் என்ற கணக்கிலும் மமக வெல்லவில்லை.

மாறாக இரண்டாயிரம் இடங்களுக்கு ஒரு இடம் என்பது தான் இவர்கள் வெற்றி பெற்ற சதவிகிதக் கணக்கு.

234 சட்டமன்றத் தொகுதிகளில் இரண்டு இடங்களில் இவர்கள் வெற்றி பெற்றனர். சுமார் நூற்றுக்கு ஒன்று என்ற கணக்கு வருகின்றது. இந்தக் கணக்குப்படி 1,32,467 இடங்களில் 1,324 இடங்களை வென்றால் தான் சட்ட சபையில் பெற்ற அற்ப வெற்றிக்கு ஈடாகும். 1,324 இடங்களுக்கு பதிலாக 60 இடம் என்பது எவ்வளவு கேவலமான தோல்வி! இதைக் கூட வெற்றி என்று தம்பட்டம் அடிக்க ரொம்ப துணிச்சல் வேண்டும்.

சரி அப்படியே வெற்றி பெற்ற இடங்கள் மாநகராட்சி அல்லது நகராட்சி உறுப்பினர் என்றால் அதில் அதிக ஓட்டுக்களையாவது பெற்றிருப்பார்கள் என்று கருதலாம். ஆனால் இவர்கள் அதிகம் வென்ற இடங்கள் கிராமப் பஞ்சாயத்துகளில் உள்ள சின்னச் சின்ன வார்டுகள் தான். அதாவது ஒரு வார்டில் சுமார் 100 முதல் 300 ஓட்டுகள் வரை இருக்கும். இதில் வெற்றி பெறுபவர் 60 அல்லது எழுபது ஓட்டுக்கள் வாங்கினாலே போதும். ஜெயித்து விடலாம். இவர்களே தம்பட்டம் அடித்த ஒரு வார்டு நீடூர் வார்டு; அதன் கணக்கைப் பாருங்கள்.

சபீர் (மமக) – 57

ரோஜா (எ) அப்துல் கபூர் (சுயே) – 47

இதில் முஸ்லிம்கள் நிறைந்து வாழும் நீடூரில் ஒரு தெருவில் 57 வாக்குகள் வாங்கி அதில் ஜெயித்து விட்டதாகக் கூறியுள்ளனர். முஸ்லிம்கள் நிறைந்த ஊர்களில் பஞ்சாயத்து தலைவர் பதவியில் ஜெயிக்கவில்லை. அவ்வூரில் அதிகமான வார்டுகளில் ஜெயிக்கவில்லை. ஒரு வார்டில் 57 வாக்குகள் வாங்கி ஜெயித்துள்ளனர்.

இவர்கள் தம்பட்டம் அடிக்கும் அளவுக்கு வெற்றி பெற்றார்கள் என்றால் மொத்த வாக்காளர்களில் இவர்களுக்கு வாக்களித்தவர்கள் மொத்தம் எவ்வளவு என்பதை பட்டியல் போட்டு விளக்கத் தயாரா?

மொத்தம் உள்ள நான்கு கோடி வாக்காளர்களில் இவர்களுக்கு வாக்களித்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று பட்டியல் போட்டு சட்டமன்றத் தேர்தலை விட தாங்கள் எவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளோம் என்று கூறத் தயாரா என்று கேளுங்கள்.

முஸ்லிம் லீக் வென்ற இடங்களில் கால்வாசி இடங்களில் கூட வெற்றி பெறாத இவர்கள் தம்பட்டம் அடிப்பதை அவர்களின் தொண்டர்களே சகித்துக் கொள்ள மாட்டார்கள்.

எஸ் டி பி ஐ இயக்கத்தினர், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து ஐம்பது இடங்களில் வெற்றி பெற்றதாகப் பெருமையடித்துக் கொள்கின்றனர். அவர்கள் அடித்துக் கொள்ளும் தம்பட்டத்திற்கும் இந்தப் பதில் பொருந்தும்.

உணர்வு 16:10

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...