வானத்தில் ஈஸா நபிக்கு உணவு உண்டா?

மர்யமின் மகன் மஸீஹ் (என்னும் ஈஸா) தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவரது தாய் அதிக நம்பிக்கை கொண்டவர். அவ்விருவரும் உணவு உண்பவர்களாக இருந்தனர். நாம் அவர்களுக்குச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்துகிறோம் என்பதை கவனிப்பீராக! பின்னர் அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதையும் கவனிப்பீராக!

திருக்குர்ஆன் : 5:75

ஆயினும், ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்ற கருத்துடையோர் மேற்கண்ட வசனத்தை தமது கருத்துக்குச் சான்றாக முன் வைக்கின்றனர். “அவர்கள் இருவரும் உணவு உண்பவர்களாக இருந்தனர்” என்ற சொற்றொடரை ஆதாரமாகக் கொண்டு ஈஸா நபி மரணித்து விட்டார் எனக் கூறுகின்றனர்.

ஈஸா நபி உயிரோடு இருந்தால் அவர் உணவு உட்கொள்ள வேண்டும். வானத்தில் உணவுப் பொருட்கள் பயிரிடப்படுகின்றனவா? அங்கே எப்படி உணவு உட்கொள்ள முடியும்?

என்றெல்லாம் அற்புதமான (?) கேள்விகளைக் கேட்டு ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்று நிறுவ முயல்கின்றனர். ஈஸா நபி இப்பூமியில் இல்லாததால் அவர் உணவு உட்கொள்ள வில்லையாதலால் அவர் மரணித்து விட்டார் என்பது உறுதி என்பது இவர்களின் வாதம்.

பொதுவாக நபிமார்கள் உணவு உட்கொள்பவர்களாகவே இருந்தனர் எனக் கூறும் 21:8, 25:20 ஆகிய வசனங்களையும் தமது கருத்துக்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

இது அறியாமை நிறைந்த வாதம் என்றாலும் இதை ஒரு வலுவான ஆதாரமாக மாற்றுக் கருத்துடையவர்கள் சித்தரிக்கிறார்கள்.

ஈஸா நபி உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா? என்பது தான் அடிப்படையான பிரச்சனை. அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பது நிரூபணமாகிவிட்டால், அதிலிருந்தே அவர்கள் உணவு உண்கிறார்கள் என்றோ அல்லது உணவு உண்ணாமல் வேறு வகையில் உயிருடன் உள்ளனர் என்றோ முடிவு செய்தாக வேண்டும்.

உயிருடன் இருக்கிறார்கள் என்பதிலிருந்து உணவு உட்கொள்கிறார்கள் என்று விளங்குவதற்கு பதிலாக ஈஸா நபி உணவு உண்பது தமக்குத் தெரியவில்லை என்பதிலிருந்து அவர் மரணித்து விட்டார் என்று தலைகீழாக விளங்கிக் கொள்கின்றனர்.

உணவு என்பது அரிசியும், பருப்பும் மட்டும் அல்ல. அல்லாஹ் நாடினால் வாய் வழியாக இல்லாமல் தனது வல்லமையால் உணவளிக்க இயலும் என்பதற்கு திருக்குர்ஆனில் பல சான்றுகள் உள்ளன.

கஹ்ப் அத்தியாயத்தில் நன்மக்கள் சிலரை பல வருடங்கள் தூங்க வைத்ததாக அல்லாஹ் கூறுகிறான். (18:11)

அவர்கள் ஒரு பக்கமாகவே படுத்துக்கிடந்தால் உடலைப் பாதிக்கும் என்பதற்காக வலப்புறமும், இடப்புறமும் புரட்டிப் போடுவதாக 18:18 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

பல வருடங்கள் உண்ணாமல் ஒருவர் தூங்க முடியுமா? நிச்சயமாக முடியாது. ஒரே பக்கமாகப் படுத்துக் கிடப்பதே முடியாது என்பதால் அவர்களைப் புரட்டிப் போடும் இறைவன் உணவு வழங்கவே இல்லை. இறைவன் மறைமுகமாக ஏதோ ஒரு வகையில் அவர்களுக்கு உணவளித்திருக்க வேண்டும்; அல்லது உணவு உட்கொள்ளாமலேயே உயிர் வாழ்வதற்குரிய ஏற்பாட்டைச் செய்திருக்க வேண்டும். அவர்கள் உணவு உட்கொள்ளாததிலிருந்து அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று கருதுவது அறியாமையாகும்.

இது போல் ஒரு நல்லடியாரை அல்லாஹ் நூறு வருடங்கள் மரணிக்கச் செய்ததாக குர்ஆன் கூறுகிறது.

259. அல்லது ஒரு கிராமத்தைக் கடந்து சென்றவரைப் பற்றி (நீர் அறிவீரா?) அந்த ஊர் அடியோடு வீழ்ந்து கிடந்தது. “இவ்வூர் அழிந்த பிறகு அல்லாஹ் எவ்வாறு இதை உயிராக்குவான்?” என்று அவர் நினைத்தார். உடனே அவரை அல்லாஹ் நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்தான். பின்னர் அவரை உயிர்ப்பித்து “எவ்வளவு நாளைக் கழித்திருப்பீர்?” என்று கேட்டான். “ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிதளவு நேரம் கழித்திருப்பேன்” என்று அவர் கூறினார். “அவ்வாறில்லை! நூறு ஆண்டுகளைக் கழித்து விட்டீர்! உமது உணவும், பானமும் கெட்டுப் போகாமல் இருப்பதைக் காண்பீராக!406 (செத்துவிட்ட) உமது கழுதையையும் கவனிப்பீராக! மக்களுக்கு உம்மை எடுத்துக் காட்டாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம். கழுதையின்) எலும்புகளை எவ்வாறு திரட்டுகிறோம் என்பதையும், அதற்கு எவ்வாறு மாமிசத்தை அணிவிக்கிறோம் என்பதையும் கவனிப்பீராக!” என்று அவன் கூறினான். அவருக்குத் தெளிவு பிறந்தபோது “அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்பதை அறிகிறேன்” எனக் கூறினார்.79

திருக்க்குர் ஆன் 2:259

இந்த நல்லடியாரை உறக்க நிலையில் இறைவன் வைத்தான் என்று ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்ற கருத்துடையோர் விளக்கம் கூறுகின்றனர்.

நூறு வருடங்கள் எதையுமே உண்ணாமல், பருகாமல் அந்த நல்லடியாரை உயிர் வாழச் செய்த இறைவன் ஈஸா நபியை வாழச் செய்வான் என்பதில் மட்டும் சந்தேகம் கொள்கின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவு பகல் 24 மணி நேரமும் தொடர்ந்து பல நாட்கள் நோன்பு நோற்றனர். மற்றவர்களுக்கு அதைத் தடை செய்தனர். “என் இறைவன் புறத்திலிருந்து எனக்கு உணவளிக்கப்படுகிறது” என்று விளக்கமும் கூறினார்கள்.

(புகாரி 1961, 1962, 1963, 1964)

இந்த உணவு வாய்வழியாக அளிக்கப்படும் உணவு என்றால் நோன்பு முறிந்துவிடும். எனவே, இறைவன் வேறு விதமாக வழங்கும் ஆற்றல் என்பதே இதன் கருத்தாகும்.

அல்லாஹ் ஒருவரை உயிர் வாழச் செய்ய நினைத்தால் அவன் அதற்கான ஏற்பாட்டைச் செய்வான் என்பது ஆச்சரியப்படக்கூடிய ஒன்றல்ல.

பூமியில் மட்டும் தான் உண்பதற்குரிய உணவுகள் உள்ளன என நினைப்பதும் அறியாமையின் வெளிப்பாடுதான்.

“இறைவா! வானிலிருந்து எங்களுக்கு உணவுத் தட்டை அனுப்பு என்று ஈஸா நபி பிரார்த்தனை செய்தார்கள். அதை ஏற்று அல்லாஹ் அதை வழங்கினான் என்பதை 5:114 வசனத்திலிருந்து அறியலாம்.

“வானத்தில் உணவெல்லாம் கிடையாது. பூமியிலேயே தயார் செய்து கொள்ளுங்கள்” என்று அல்லாஹ் கூறவில்லை. மாறாக வானத்திலிருந்து உணவை இறக்கி வைத்தான். மன் ஸல்வா என்னும் பதார்த்தங்களை மூஸா நபியின் சமுதாயத்திற்கு இறக்கி வைத்ததாக 20:80, 7:160, 2:57 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

இதன் பிறகும் வானத்தில் உணவு கிடைக்குமா என்று கேட்பது அறியாமையில்லாமல் வேறு என்ன?

51:22, 34:24, 16:73 ஆகிய வசனங்களில் வானங்களிலும் உணவு உள்ளன என்பது தெள்ளத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

எனவே, ஈஸா நபி உயிருடன் உள்ளனர் என்பதற்கு மறுக்க முடியாத சான்றுகள் பல உள்ளதாலும், இறைவனைப் பொருத்த வரை உணவு என்பது ஒரு பிரச்சனையே அல்ல என்பதாலும் இவர்களின் இந்த வாதமும் அடிபட்டுப் போகின்றது.

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...