யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து

முஸ்லிம்களின் கோபத்தைக் கொப்பளித்து எரிமலையாய் வெடித்த திநகர் பொதுக்கூட்டம்!

அந்த உரையைக் காண இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை காண்க

கடந்த சில வாரங்களுக்கு முன் மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தாமாக முன்வந்து சரணடைந்த யாகூப் மேமன் அவர்களை தூக்கிலிட்டு படுகொலை செய்தது மத்திய அரசு. முஸ்லிம்கள் மட்டுமே இந்த நாட்டில் தூக்குக்கு உரியவர்களாக பழிவாங்கப் படுபவர்களாக வஞ்சிக்கப்படும் சமுதாயமாக ஆக்கப்பட்டுள்ள நிலையில் அதைக் கண்டித்து இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை என்ற தலைப்பில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தென் சென்னை மாவட்டம் நடத்தியது.

7 மணிக்கு துவங்குவதாக அறிவிப்புச் செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்திற்கு மக்கள் 6 மணி முதலே குழுமத் துவங்கி விட்டனர்.

பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள், இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

யாகூப் மேமனை அநியாயமான முறையில் தூக்கிலிட்டுக் கொன்றதை கண்டிக்கும் முகமாக இந்தப் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்கள் எவ்வாறெல்லாம் நடத்தப்படுகின்றார்கள் என்பதையும், மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த நாட்டில் மதச்சார்பின்மை என்பது மருந்துக்குக் கூட இல்லை என்பதையும் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் கூறி சகோதரர் பீஜே அவர்கள் விளக்கியது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

உரையின் துவக்கமாக மதச்சார்பற்ற நாட்டை ஆளக்கூடிய ஆட்சியாளர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை முன்னாள் அமெரிக்க அதிபர் கென்னடி கூறிய செய்திகளை மேற்கோள்காட்டி பீஜே பேசினார்.

அதாவது கிறித்தவ மதத்திலுள்ள ரோமன் கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த கென்னடி அவர்கள் தான் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றவுடன் ஒரு பிரகடனத்தைச் செய்தார். ரோமன் கத்தோலிக்கப் பிரிவினரின் தலைமையிடமாக உள்ள வாடிகனுக்குச் சென்று தான் ஒவ்வொரு முறையும் அங்குள்ள மதத் தலைவரான போப் ஆண்டவரிடத்தில் ஆசி வாங்கி வருவதை வழக்கமாக வைத்திருப்பதாகவும், ஆனால் தற்போது நான் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ளதால் இங்குள்ள அனைத்து பிரிவு மக்களுக்கும் நான் அதிபராக ஆகியுள்ளதால் இனிமேல் போப் ஆண்டவரிடத்தில் ஆசி வாங்கச் செல்ல மாட்டேன் என்று அறிவிப்புச் செய்தார். மதச் சார்பற்ற நாட்டில் ஆட்சியாளர்களாக இருப்பவர்கள் இப்படி ஒரு சார்பற்றவர்களாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் மதச்சார்பற்ற இந்தியா என்று சொல்லப்படும் நம் நாட்டில் நடக்கும் அநியாயங்களைப் பட்டியலிட்டார்.

மதச்சார்பற்ற நாட்டில் அரசு அலுவலகங்களில் கடவுள் சிலைகளையும், கோவில்களையும் வைத்து வழிபாடு நடத்துவது மதச்சார்பின்ன்மையா?

தமிழக அரசின் சின்னமாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் சின்னத்தை வைத்திருப்பது மதச்சார்பின்ன்மையா?

பொங்கல் இனாம் கொடுக்கும் அரசாங்கம், ரமலான் பரிசு வழங்காமல் பாரபட்சம் காட்டுவது சரியா?

பெருநாள் அன்று மின்சாரத்தைத் தடை செய்து முஸ்லிம்களுக்கு வேதனையை பரிசாக கொடுப்பது தான் மதச்சார்பற்ற அரசா?

பள்ளிவாசல் கட்ட இந்து முன்னணியினர் ஆட்சேபனை செய்தால் தடை போடுவது தான் மதச்சார்பற்ற அரசின் லட்சணமா?

இராமாயணத்தை உண்மை சம்பவம் போல் ஒளிபரப்பிவிட்டு, திப்பு சுல்தானின் வீர வரலாற்றை ஒளிபரப்பும் போது இது கற்பனைக் கதை என்று மத்திய அரசின் தூர்தர்சன் தொலைக்காட்சி அறிவித்ததே

இதுதான் மதச்சார்பற்ற தன்மையா?

இந்தியாவிலுள்ள அனைத்து அரசு அதிகாரிகள் வாங்கும் சம்பளத்திலும், உண்ணும் உணவிலும் 20 சதவீதம் முஸ்லிம்களின் வரிப்பணம் இருக்கிறது.

அந்த நன்றி உணர்வு எந்த அதிகாரிக்காவது இருக்கிறதா ?

நீதி தேவதை கண்ணைக் கட்டியிருப்பது போல காட்டிவிட்டு முஸ்லிம் என்றால் மட்டும் மத துவேஷத்தோடு தீர்ப்பளிப்பது தான் மதச்சார்பற்ற தன்மையா?

தாடி வைப்பது தாலிபானிசம்;

தாடி வைக்க அனுமதி கேட்பது பாகிஸ்தானிசம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்களே! அப்படியானால் தாடி வைத்திருக்கும் மோடிக்கு அதைச் சிரைத்து விடுவீர்களா? என்று பல கேள்விகளை எழுப்பினார்.

குர்பானி கொடுக்கத் தடை போட்டு மத துவேஷத்தைத் தங்களது தீர்ப்பில் காட்டியது, பகவத் கீதையை மேற்கோள் காட்டி தீர்ப்பளித்தது என்று சராமாரியாக தீர்ப்பு என்ற பெயரில் செய்யப்பட்ட கட்டப் பஞ்சாயத்துக்களை பீஜே விலாசினார்.

சட்டத்தை மதிக்காமல் வழங்கப்படும் இத்தகைய தீர்ப்புக்கள் எங்களது கால் செருப்புக்குச் சமானம் என்று தெரிவித்தார்.

குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சங்பரிவாரக் கும்பல்களில் ஒருவருக்காவது தூக்குத் தண்டனை கொடுத்தீர்களா?

97  பேரைக் கொன்று குவித்த பாபு பஜ்ரங்கிக்கு தூக்கு வழங்காதது ஏன்?

சரணடைந்த யாகூப் மேமனை தூக்கிவலிட்டு மதவெறியை நிலை நாட்டியது

சப்ரஜித் சிங் என்ற அயோக்கியன் பாகிஸ்தானில் குண்டு வைத்த வழக்கில் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டு இருந்த நிலையில் அவனை அங்குள்ளவர்கள் அடித்தே கொன்று சாகடித்தனர்.

அவனுக்கு 1கோடி உதவித்தொகை, அந்த தீவிரவாதிக்கு தேசியக் கொடி போர்த்தி ராணுவ மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க அடக்கம், என்று கவனித்தது ஏன்?

தீவிரவாதி சப்ரஜித் சிங்க்

தேசியக்கொடி போர்த்தி கொண்டு செல்லப்படும் தேசத்துரோகியின் உடல்

துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்ட தேசத்துரோகி

இதுதான் தேசப்பற்றா? தேசப்பற்றை வெளிக்காட்டும் லட்சணமா?

அப்சல் குருவை அநியாயமாக தூக்கிலிட்டுக் கொலை செய்தது ஏன்?

உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பினார்.

இந்த அநியாயத்திற்கெல்லாம் படைத்த இறைவனிடம் முறையிடுங்கள்

அவன் நமக்கு தீர்ப்பு வழங்குவான்

இந்த அநியாயக்காரர்களுக்கு இங்கும் மறுமையில் அல்லாஹ் இழிவை வழங்குவான் என்று ஆக்ரோசமான முறையில் பேசி முடித்தார்.

முஸ்லிம்களின் கோபத்தை கொபளிப்பதாகவும், ரணமாக வேதனைப்பட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்களின் உள்ளத்திற்கு ஆறுதலாகவும், இஸ்லாமியர்களிடத்தில் ஏற்பட்டுள்ள எழுச்சியைப் பறைசாற்றும் விதமாகவும் இந்தப் பொதுக்கூட்டம் ஒரு மாநாட்டைப் போல மக்கள் திரளால் நிரம்பி வழிந்தது.

அல்ஹம்துலில்லாஹ்

அந்த உரையைக் காண இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை காண்க

16.08.2015. 9:38 AM

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...