யாரைத்தான் நம்புவது?

நாம் நம்பிய பலர் பண மோசடியில் ஈடுபட்டு அல்லது துரோகம் செய்து விட்டு நீக்கப்படுகின்றனர். இப்படியே போனால் யாரைத்தான் நம்புவது?

சாதிக் அலி (அஜ்மான் மண்டலச் செயலாளர்) கடையநல்லூர்

குறிப்பு : இந்தk கேள்வி எனது ஊரைச் சார்ந்தவர்கள் சில நண்பர்கள் என்னிடத்தில் கேள்வி கேட்டார்கள் ,நான் பதில் கொடுத்தும் திருப்தி அடையவில்லை; எனவே இந்த சந்தர்ப்பத்தில் உங்கள் மூலம் பதில் கொடுத்தால் இன்ஷா அல்லா சிறப்பாக இருக்கும் என எண்ணுகிறேன்

பதில் : உங்கள் குழப்பத்துக்குக் காரணம் தவ்ஹீதின் அடிப்படையை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளாதது தான். தவ்ஹீதின் அடிப்படை என்ன? மனிதன் எப்போதும் மனிதன் தான். அவனிடம் இறைத்தன்மை ஒருக்காலும் ஏற்படாது என்பதுதான் அந்த அடிப்படை.

நாம் ஒரு மனிதனை நல்லவன் என்று நம்புகிறோம். இதன் பொருள் என்ன? வெளிப்படையாகப் பார்க்கும் போது அவன் நல்லவன் என்று நமக்குத் தெரிகிறது. அவன் கெட்டவனாகவும் இருக்கலாம். ஆனாலும் வெளிப்படையாகத் தெரிந்ததை வைத்தே முடிவு செய்யும்படி தான் நாம் படைக்கப்பட்டுள்ளோம். இது தான் தஹீதின் அடிப்படை.

இந்த அடிப்படையில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் உங்களுக்கு எந்தக் குழப்பமும் வராது.

தவ்ஹீத் ஜமாஅத் ஒருவரை நல்லவர் என்று நம்பி பொறுப்பை ஒப்படைக்கிறது என்றால் அந்த முடிவு தவறாகவே ஆகக் கூடாது என்று நீங்கள் நம்பினால் தவ்ஹீத் ஜமாஅத் தலைமைக்கு இறைத் தன்மை உள்ளது என்று நீங்கள் கருதுவதாகத் தான் பொருள்.

நாம் நல்லவர்கள் என்று கருதும் யாரும் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்று நம்புவது தான் தவ்ஹீத்.

கொள்கையில் உறுதியானவர்கள் என்று நாம் கருதும் தலைவைர்களில் இப்போதும் நல்லவர்கள் போல் நடிப்பவர்கள் இருக்கலாம். ஆனால் அது ஆதாரத்துடன் வெளியே தெரியாத வரை வெளிப்படையானதைத் தான் நாம் நம்ப வேண்டும்.

வெளிப்படையாக தெரிவதன் அடிப்படையில் நீங்கள் செய்த தர்மத்தை ஒருவர் மோசடி செய்தாலும் அதனால் உங்களின் மறுமை நன்மைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அதற்கான கூலி அல்லாஹ்விடம் கிடைத்து விடும்,

நீங்கள் ஆசைப்படுவது போல் எதிலும் சேராமல் தனித்து நின்று தான தர்மங்கள் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் நிதியை வாங்கியவர்கள் அதில் மோசடி செய்ய மாட்டார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா? ஜமாஅத் மூலம் ஒருவரை நல்லவர் என்று நம்பி செயல்படும் போது அதனால் ஏற்படும் பாதிப்பை விட நீங்கள் தனியாக உங்கள் தான தர்மங்களைச் செய்யும் போது அதிக அளவில் ஏமாறும் நிலைதான் ஏற்படும். ஒரு குழுவால் ஒருவன் கண்காணிக்கப்படுவதும் தனி நபரால் கண்காணிப்பதும் ஒரு போதும் சமமாகாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்ட சமுதாயமே தமக்குள் பிளவுபட்டார்கள். தமக்கிடையே போரும் செய்தார்கள். இதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சரியாக வழி நடத்தவில்லை என்று கூறுவீர்களா?

யாராக இருந்தாலும் அவர்கள் மனிதர்களுக்கு அளிக்கப்பட்ட ஆற்றலுக்கு உட்பட்டுத் தான் யாரைப் பற்றியும் முடிவு செய்ய முடியும். அந்த முடிவு சரியாகவும் இருக்கலாம்; தவறாகவும் இருக்கலாம். தவறாகக் கணித்தது பின்னர் தெரிய வந்தால் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து நம்முடைய பலவீனத்தை ஒப்புக் கொண்டு பழகுங்கள், எந்தச் சோர்வும் ஏற்படாது.

உணர்வு 15:46

முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறலாமா

ஸலாம் முஸ்லிம்களுக்கு மட்டுமா? முஸ்லிம்களுக்கு மட்டுமே ஸலாம் கூற வேண்டும் என்று பெரும்பாலான முஸ்லிம்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக முஸ்லிமல்லாத மக்களைச் சந்திக்கும் போது ஸலாம் கூறத் தயங்கி வணக்கம், வந்தனம், நமஸ்காரம் போன்ற ...

ஒட்டு முடி வைக்கலாமா

ஒட்டு முடி வைக்கலாமா பதில் : ஒட்டுமுடி வைத்துக் கொள்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். 5205حَدَّثَنَا خَلَّادُ بْنُ يَحْيَى حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ نَافِعٍ عَنْ الْحَسَنِ هُوَ ...

முதல் இருப்பில் ஸலவாத் ஓத வேண்டுமா

முதல் இருப்பில் ஸலவாத் ஓத வேண்டுமா முதல் இருப்பில் அத்தஹிய்யாத் என்று துவங்கும் துஆவை ஓத வேண்டும். அத்தஹிய்யாத் துஆ صحيح البخاري 1202 - التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ ...

குர்ஆன் ஓதத் தெரியாதவர் எப்படி தொழுவது?

குர்ஆனில் எதுவும் மனனம் இல்லாதவர்கள் எப்படி தொழுவது? தொழுகையை துவக்கும் போது ஆரம்பமாக ஓதும் துஆக்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளனர். அதன் பின்னர் அல்ஹம்து அத்தியாயமும் தெரிந்த அத்தியாயங்களும் ஓதவேண்டும் ...

அரைக்கை சட்டை டீஷர்ட் பணியன் அணிந்து தொழலாமா

அரைக்கை சட்டை டீஷர்ட் பணியன் அணிந்து தொழலாமா நம் தமிழகத்து மவ்லவிமார்களில் பலரும் அரைக்கைச் சட்டை அணியக்கூடாது என்கின்றனர். இன்னும் சிலர் பொதுவாக அரைக்கைச் சட்டை அணியலாம் என்றாலும்,தொழுகையின் போது முழங்கை வரை மறைக்க ...

ஜனாஸா தொழுகைச் சட்டங்கள்

ஜனாஸா தொழுகை சட்டங்கள் இணை கற்பிக்காதவர்களுக்கே ஜனாஸா தொழுகை ஜனாஸா தொழுகை என்பதில் தொழுகை என்ற சொல் உள்ளடங்கி இருந்தாலும் இதில் ருகூவு, ஸஜ்தா மற்றும் இருப்புக்கள் கிடையாது. நின்ற நிலையில் இறைவனைப் போற்றிப் ...

துல்ஹஜ் மாதம் முதல் ஒன்பது நாட்கள் நோன்பு நோற்பது சுன்னத்தா?

துல்ஹஜ் மாதம் முதல் ஒன்பது நாட்கள் நோன்பு நோற்பது சுன்னத்தா? துல்ஹஜ் மாதம் 1 முதல் 9 வரை சிலர் நோன்பு வைக்கிறார்கள், அப்படி வைக்கலாமா? அல்லது 9 அரபாத் நாள் மட்டும் வைக்க ...

கலீஃபாக்கள் யார்? அவர்களைப் பின்பற்ற வேண்டுமா?

நேர்வழி பெற்ற கலீபாக்களின் வழியைப் பின்பற்ற வேண்டுமா? நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்பவர்கள் பின்வரும் நபிமொழியை ஆதாரமாகக் குறிப்பிடுகிறார்கள். 2600حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ حَدَّثَنَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ عَنْ بَحِيرِ ...

521.அல்லாஹ்வுடைய நான்கு பண்புகளின் விளக்கம்

521.அல்லாஹ்வுடைய நான்கு பண்புகளின் விளக்கம் இவ்வசனத்தில் 67:3 அல்லாஹ் தனது நான்கு பண்புகளைக் குறிப்பிடுகிறான். 1, அவ்வல் (முதலானவன்) 2, ஆகிர் (முடிவானவன்) 3, ளாஹிர் (மேலானவன்) 4, பாதின் (அடித்தளமானவன்) இந்த நான்கு ...

521.அல்லாஹ்வுடைய நான்கு பண்புகளின் விளக்கம்

521.அல்லாஹ்வுடைய நான்கு பண்புகளின் விளக்கம் இவ்வசனத்தில் 67:3 அல்லாஹ் தனது நான்கு பண்புகளைக் குறிப்பிடுகிறான். 1, அவ்வல் (முதலானவன்) 2, ஆகிர் (முடிவானவன்) 3, ளாஹிர் (மேலானவன்) 4, பாதின் (அடித்தளமானவன்) இந்த நான்கு ...

பெண்கள் பிராணிகளை அறுக்கலாமா

பெண்கள் பிராணிகளை அறுக்கலாமா? பெண்கள் அறுப்பதற்கு எவ்விதத் தடையும் ஹதீஸ்களில் இல்லை. மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஒரு பெண் அறுத்ததை அங்கீகரித்துள்ளார்கள். صحيح البخاري 5504 - حَدَّثَنَا صَدَقَةُ، أَخْبَرَنَا ...

மர்ஹூம் என்ற சொல்லுக்கு மரணித்தவர் என்று பொருள் உண்டா?

மர்ஹூம் என்ற சொல்லுக்கு மரணித்தவர் என்று பொருள் உண்டா? இக்பால், முத்துப்பேட்டை பதில் மர்ஹூம் என்ற சொல்லுக்கு மரணித்தவர் என்ற பொருள் அகராதியில் இல்லை. ரஹ்மத் رَحْمَة என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்த சொல் ...

விரலசைத்தல் பற்றிய ஹதீஸ் ஷாத் எனும் வகையில் அடங்குமா

ஸாயிதா பற்றிய விமர்சனம் ஆஸிம் வழியாக அறிவிக்கும் அறிவிப்பாளர் ஸாயிதா ஆவார். இவரது நம்பகத் தன்மையில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆயினும் இவரைத் தொடர்பு படுத்தி வேறு ஒரு விமர்சனத்தை சிலர் செய்து ...

கணக்கர் மற்றும் ஆடிட்டர் பணி செய்யலாமா? கட்டுரை

கணக்கர் மற்றும் ஆடிட்டர் பணி செய்யலாமா? இவ்விரு பணிகளிலும் கணக்கு எழுதும் போது நிறுவனங்கள் தொடர்பான வட்டி விபரத்தையும் சேர்த்து கணக்கு பார்க்க வேண்டும். இது வட்டியை எழுதியதாக ஆகும் என்று கருதி இந்தப் ...

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...