யாரைத்தான் நம்புவது?

நாம் நம்பிய பலர் பண மோசடியில் ஈடுபட்டு அல்லது துரோகம் செய்து விட்டு நீக்கப்படுகின்றனர். இப்படியே போனால் யாரைத்தான் நம்புவது?

சாதிக் அலி (அஜ்மான் மண்டலச் செயலாளர்) கடையநல்லூர்

குறிப்பு : இந்தk கேள்வி எனது ஊரைச் சார்ந்தவர்கள் சில நண்பர்கள் என்னிடத்தில் கேள்வி கேட்டார்கள் ,நான் பதில் கொடுத்தும் திருப்தி அடையவில்லை; எனவே இந்த சந்தர்ப்பத்தில் உங்கள் மூலம் பதில் கொடுத்தால் இன்ஷா அல்லா சிறப்பாக இருக்கும் என எண்ணுகிறேன்

பதில் : உங்கள் குழப்பத்துக்குக் காரணம் தவ்ஹீதின் அடிப்படையை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளாதது தான். தவ்ஹீதின் அடிப்படை என்ன? மனிதன் எப்போதும் மனிதன் தான். அவனிடம் இறைத்தன்மை ஒருக்காலும் ஏற்படாது என்பதுதான் அந்த அடிப்படை.

நாம் ஒரு மனிதனை நல்லவன் என்று நம்புகிறோம். இதன் பொருள் என்ன? வெளிப்படையாகப் பார்க்கும் போது அவன் நல்லவன் என்று நமக்குத் தெரிகிறது. அவன் கெட்டவனாகவும் இருக்கலாம். ஆனாலும் வெளிப்படையாகத் தெரிந்ததை வைத்தே முடிவு செய்யும்படி தான் நாம் படைக்கப்பட்டுள்ளோம். இது தான் தஹீதின் அடிப்படை.

இந்த அடிப்படையில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் உங்களுக்கு எந்தக் குழப்பமும் வராது.

தவ்ஹீத் ஜமாஅத் ஒருவரை நல்லவர் என்று நம்பி பொறுப்பை ஒப்படைக்கிறது என்றால் அந்த முடிவு தவறாகவே ஆகக் கூடாது என்று நீங்கள் நம்பினால் தவ்ஹீத் ஜமாஅத் தலைமைக்கு இறைத் தன்மை உள்ளது என்று நீங்கள் கருதுவதாகத் தான் பொருள்.

நாம் நல்லவர்கள் என்று கருதும் யாரும் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்று நம்புவது தான் தவ்ஹீத்.

கொள்கையில் உறுதியானவர்கள் என்று நாம் கருதும் தலைவைர்களில் இப்போதும் நல்லவர்கள் போல் நடிப்பவர்கள் இருக்கலாம். ஆனால் அது ஆதாரத்துடன் வெளியே தெரியாத வரை வெளிப்படையானதைத் தான் நாம் நம்ப வேண்டும்.

வெளிப்படையாக தெரிவதன் அடிப்படையில் நீங்கள் செய்த தர்மத்தை ஒருவர் மோசடி செய்தாலும் அதனால் உங்களின் மறுமை நன்மைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அதற்கான கூலி அல்லாஹ்விடம் கிடைத்து விடும்,

நீங்கள் ஆசைப்படுவது போல் எதிலும் சேராமல் தனித்து நின்று தான தர்மங்கள் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் நிதியை வாங்கியவர்கள் அதில் மோசடி செய்ய மாட்டார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா? ஜமாஅத் மூலம் ஒருவரை நல்லவர் என்று நம்பி செயல்படும் போது அதனால் ஏற்படும் பாதிப்பை விட நீங்கள் தனியாக உங்கள் தான தர்மங்களைச் செய்யும் போது அதிக அளவில் ஏமாறும் நிலைதான் ஏற்படும். ஒரு குழுவால் ஒருவன் கண்காணிக்கப்படுவதும் தனி நபரால் கண்காணிப்பதும் ஒரு போதும் சமமாகாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்ட சமுதாயமே தமக்குள் பிளவுபட்டார்கள். தமக்கிடையே போரும் செய்தார்கள். இதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சரியாக வழி நடத்தவில்லை என்று கூறுவீர்களா?

யாராக இருந்தாலும் அவர்கள் மனிதர்களுக்கு அளிக்கப்பட்ட ஆற்றலுக்கு உட்பட்டுத் தான் யாரைப் பற்றியும் முடிவு செய்ய முடியும். அந்த முடிவு சரியாகவும் இருக்கலாம்; தவறாகவும் இருக்கலாம். தவறாகக் கணித்தது பின்னர் தெரிய வந்தால் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து நம்முடைய பலவீனத்தை ஒப்புக் கொண்டு பழகுங்கள், எந்தச் சோர்வும் ஏற்படாது.

உணர்வு 15:46

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...