அல்லாஹ்வின் பெயர் கூறாமல் அறுத்ததற்கும், பெயர் கூறி அறுத்ததற்கும் என்ன வித்தியாசம்?

பிராணிகளை அடித்து, கழுத்தை நெறித்து, தண்ணீரில் மூழ்க வைத்து சாகடித்து உண்பதை இஸ்லாம் தடை செய்கின்றது.

கூர்மையான கத்தியால் பிராணிகளின் கழுத்து நரம்பை வெட்டி இரத்தத்தை வெளியேற்ற வேண்டும். இவ்வாறு அறுக்கப்பட்டதை மட்டுமே உண்ண வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

இந்த முறை தான் சிறந்த முறை என்றாலும் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்தால் தான் உண்ண வேண்டும் என்ற சட்டம் எதற்காக? அல்லாஹ்வின் பெயர் கூறாமல் முஸ்லிமல்லாத நாங்கள் முறைப்படி அறுப்பதை நீங்கள் ஏன் உண்ண மறுக்கிறீர்கள் என்று நடு நிலையான மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இப்படி வேறுபடுத்துவதற்கு ஏற்கத் தக்க காரணம் ஏதும் உண்டா? என்றும் கேட்கின்றனர்.

அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்தாலும் பெயர் கூறாமல் அறுத்தாலும் மாமிசத்தைப் பொருத்த வரை இரண்டும் ஒரே தரமுடையது என்றாலும் அல்லாஹ்வின் பெயர் கூறித் தான் அறுக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுவதற்கு காரணங்கள் உள்ளன.‎

பொதுவாக எந்த உயிரினத்தையும் ‎யாரும் உருவாக்க ‎முடியாது. உலகமே ஒன்று ‎திரண்டாலும் ஒரு எறும்பைக் கூட ‎படைக்க முடியாது. அவ்வாறு ‎இருக்கும் போது அல்லாஹ் படைத்த ‎உயிரைக் கொல்வதற்கு மனிதனுக்கு ‎உரிமையில்லை.‎

ஆனால் எந்த அல்லாஹ் இந்த ‎உயிரினங்களைப் படைத்தானோ ‎அவனே அதை அறுத்து உண்ண நமக்கு ‎அனுமதி அளித்து விட்டால் அப்போது ‎நமக்கு எந்த உறுத்தலும் ஏற்படாது. ஒவ்வொரு உயிரினத்தை ‎அறுக்கும் போதும் அனுமதி பெற்றாக ‎வேண்டும்.‎

அந்த அனுமதி தான் பிஸ்மில்லாஹ் ‎என்று கூறுவதாகும். இதன் பொருள் ‎அல்லாஹ்வின் பெயரால் அறுக்கிறேன் ‎என்பதாகும்.‎

இதன் கருத்து என்னவென்றால் ‎இறைவா நீ படைத்த ஒரு உயிரைக் ‎கொன்று ஒழிக்க வேண்டும் ‎என்பதற்காக நான் இதை ‎அறுக்கவில்லை. நான் அந்த ‎அளவுக்குக் கொடூரமானவனல்லன். ‎இந்த உயிரைப் படைத்த நீயே இதை ‎எனக்கு அனுமதித்ததால் தான் இதை ‎அறுக்கிறேன். இல்லாவிட்டால் நான் ‎உயிரைக் கொல்பவன் அல்லன் என்பது ‎இதன் கருத்தாகும்.‎

இந்த உறுதிமொழி தான் அறுப்ப தற்கான அனுமதியாகும். ‎அல்லாஹ்வின் பெயரால் தான் இதை ‎அறுக்கிறேன் எனக் கூறாவிட்டால் ‎உயிரினங்களின் உண்மை ‎எஜமானனிடம் அனுமதி பெறாத ‎காரணத்தால் அதை அறுப்பதும், ‎உண்பதும் குற்றமாகி விடும்.‎

ஒருவனுக்குச் சொந்தமான ஆட்டை ‎நாம் திருடிச் சாப்பிட்டால் அது குற்றம் ‎என்பதை நாம் அறிவோம். அந்த ‎மனிதன் அந்த இறைச்சிக்குத் தான் ‎உரிமையாளன். உயிருக்கு ‎உரிமையாளனாகிய ‎அல்லாஹ்விடமும் அனுமதி பெற ‎வேண்டியது இதனால் அவசியமாகிறது.‎

கறுப்புப் பணத்துக்கும் வெள்ளைப் பணத்துக்கும் என்ன வித்தியாசம்? அதன் மதிப்பிலோ, அது அரசால் அச்சிடப்பட்ட பணம் என்பதிலோ இரண்டு பணத்துக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. இந்த வகையில் இரண்டுக்கும் வேறுபாடு இல்லாவிட்டாலும் அதில் நுணுக்கமான வேறுபாடு உள்ளது.

அந்தப் பணத்துக்காக அரசாங்கம் விதித்துள்ள வரியைச் செலுத்தி விட்டு அந்தப் பணத்தை நாம் வைத்து இருந்தால் அது வெள்ளைப் பணம். வரி விலக்கு அளிக்கப்பட்ட அளவுக்கு பணம் வைத்திருந்து அதற்காக வரி செலுத்தாவிட்டாலும் அது வெள்ளைப் பணம் தான். ஏனெனில் அரசின் அங்கீகாரத்துடன் இது பயன்படுத்தப்படுகிறது.

அந்தப் பணத்துக்காக அரசாங்கம் விதித்திருக்கும் வரியைச் செலுத்தாமல் அந்தப் பணத்தை நாம் வைத்திருந்தால் அது கறுப்புப்பணமாக ஆகி விடுகின்றது.

இரண்டு பணத்துக்கும் புறத்தோற்றத்தில் மதிப்பில் எந்த வேறுபாடும் இல்லை என்றாலும் அரசின் அங்கீகாரம் பெறாத பணத்தை சட்ட விரோதமான பணம் என்று அரசாங்கம் சொல்கிறது.

இந்த வித்தியாசம் தான் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்ட பிராணிகளுக்கும் அல்லாஹ்வின் பெயர் கூறப்படாமல் அறுக்கப்பட்ட பிராணிகளுக்கும் உள்ளது.

அல்லாஹ்வின் பெயரைக் கூறித்தான் அறுக்க வேண்டும் அந்தப் பிராணிகளைப் படைத்த இறைவனின் கட்டளையை ஏற்று அவ்வாறு அறுத்தால் அது உரியவனிடம் அனுமதி பெற்று அறுக்கப்பட்டதாக ஆகின்றது.

அல்லாஹ்வின் பெயர் கூறி அறுப்பதற்கும் பெயர் கூறாமல் அறுப்பதற்கும் இன்னொரு வேறுபாடு உள்ளது. அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கும் போது வன்முறைச் சிந்தனை வராமல் அது தடுத்து விடுகிறது.

பொதுவாக கத்தியை எடுத்து ‎இரத்தத்தைப் பார்த்துப் பழகியவன் ‎யாரையும் மிரட்டி உருட்டி காரியம் ‎சாதிப்பவனாக, ரவுடியாக தலைஎடுத்து ‎விடுகிறான். அன்றாடம் ஆடுகளை ‎அறுக்கும் ஒரு முஸ்லிம் இப்படி ‎கத்தியைக் காட்டி மிரட்டும் ரவுடியாக ‎அலைவதில்லை. ‎

இதற்குக் காரணம் அல்லாஹ்வின் பெயரால் அறுக்கிறேன் என்று ஒவ்வொரு அறுப்பின் போதும் பயன்படுத்தும் பிஸ்மில்லாஹ் ‎தான். ‎

அல்லாஹ்வின் அனுமதி ‎இருப்பதால் தான் நான் ஆட்டை ‎அறுக்கிறேன் என்று தினமும் ‎சொல்லியும், நினைத்தும் வருவதால் ‎மனிதனை அறுக்க அல்லாஹ் ‎அனுமதிக்கவில்லை என்ற கருத்து ‎அவன் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து ‎விடுகிறது.‎

இதனால் இன்னொரு நன்மையும் ஏற்படுகிறது. பிராணிகளில் மனிதர்கள் விரும்பி உண்பவையும் உள்ளன. மனிதர்கள் விரும்பாத பிராணிகளும் உள்ளன. சிலர் விரும்பி, சிலர் விரும்பாத பிராணிகளும் உள்ளன.

ஒருவர் விரும்பாத பிராணியை அவருக்கு நாம் வழங்கினால் அது மிகப்பெரிய மோசடியாகும். காகத்தை அறுத்து அதை கோழி எனச் சொல்லி விற்பதையும், நாயை அறுத்து ஆட்டு இறைச்சி என விற்பதையும் நாம் பார்க்கிறோம்.

பணம் சம்பாதிப்பதற்காக மனிதர்கள் மாமிசத்தின் பெயரால் ஏமாற்றப்படுகின்றனர்.

அல்லாஹ்வின் அனுமதி பெற்று அவன் பெயரால் அறுக்கிறேன் என்று கூறி அறுக்கும் முஸ்லிம் ஆட்டை அறுத்து மாட்டிறைச்சி என்று சொல்ல மாட்டான். உண்ணக் கூடாது என்று தடுக்கப்பட்ட நாய், பன்றி காகம் ஆகியவற்றை அவன் அறுக்க மாட்டான்.

பிஸ்மில்லாஹ் கூறி அறுப்பதால் இந்த நன்மையும் கிடைக்கிறது.

இது போன்ற காரணங்களால் தான் ‎பிஸ்மில்லாஹ் சொல்லி அறுக்க ‎வேண்டும் என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது. இது நாம் சிந்திக்கும்போது ‎தெரிய வரும் காரணங்களாகும். இது ‎அல்லாத இன்னும் பல காரணங்களும் ‎இருக்கலாம்.‎

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...