அல்லாஹ்வின் பெயர் கூறாமல் அறுத்ததற்கும், பெயர் கூறி அறுத்ததற்கும் என்ன வித்தியாசம்?

பிராணிகளை அடித்து, கழுத்தை நெறித்து, தண்ணீரில் மூழ்க வைத்து சாகடித்து உண்பதை இஸ்லாம் தடை செய்கின்றது.

கூர்மையான கத்தியால் பிராணிகளின் கழுத்து நரம்பை வெட்டி இரத்தத்தை வெளியேற்ற வேண்டும். இவ்வாறு அறுக்கப்பட்டதை மட்டுமே உண்ண வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

இந்த முறை தான் சிறந்த முறை என்றாலும் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்தால் தான் உண்ண வேண்டும் என்ற சட்டம் எதற்காக? அல்லாஹ்வின் பெயர் கூறாமல் முஸ்லிமல்லாத நாங்கள் முறைப்படி அறுப்பதை நீங்கள் ஏன் உண்ண மறுக்கிறீர்கள் என்று நடு நிலையான மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இப்படி வேறுபடுத்துவதற்கு ஏற்கத் தக்க காரணம் ஏதும் உண்டா? என்றும் கேட்கின்றனர்.

அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்தாலும் பெயர் கூறாமல் அறுத்தாலும் மாமிசத்தைப் பொருத்த வரை இரண்டும் ஒரே தரமுடையது என்றாலும் அல்லாஹ்வின் பெயர் கூறித் தான் அறுக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுவதற்கு காரணங்கள் உள்ளன.‎

பொதுவாக எந்த உயிரினத்தையும் ‎யாரும் உருவாக்க ‎முடியாது. உலகமே ஒன்று ‎திரண்டாலும் ஒரு எறும்பைக் கூட ‎படைக்க முடியாது. அவ்வாறு ‎இருக்கும் போது அல்லாஹ் படைத்த ‎உயிரைக் கொல்வதற்கு மனிதனுக்கு ‎உரிமையில்லை.‎

ஆனால் எந்த அல்லாஹ் இந்த ‎உயிரினங்களைப் படைத்தானோ ‎அவனே அதை அறுத்து உண்ண நமக்கு ‎அனுமதி அளித்து விட்டால் அப்போது ‎நமக்கு எந்த உறுத்தலும் ஏற்படாது. ஒவ்வொரு உயிரினத்தை ‎அறுக்கும் போதும் அனுமதி பெற்றாக ‎வேண்டும்.‎

அந்த அனுமதி தான் பிஸ்மில்லாஹ் ‎என்று கூறுவதாகும். இதன் பொருள் ‎அல்லாஹ்வின் பெயரால் அறுக்கிறேன் ‎என்பதாகும்.‎

இதன் கருத்து என்னவென்றால் ‎இறைவா நீ படைத்த ஒரு உயிரைக் ‎கொன்று ஒழிக்க வேண்டும் ‎என்பதற்காக நான் இதை ‎அறுக்கவில்லை. நான் அந்த ‎அளவுக்குக் கொடூரமானவனல்லன். ‎இந்த உயிரைப் படைத்த நீயே இதை ‎எனக்கு அனுமதித்ததால் தான் இதை ‎அறுக்கிறேன். இல்லாவிட்டால் நான் ‎உயிரைக் கொல்பவன் அல்லன் என்பது ‎இதன் கருத்தாகும்.‎

இந்த உறுதிமொழி தான் அறுப்ப தற்கான அனுமதியாகும். ‎அல்லாஹ்வின் பெயரால் தான் இதை ‎அறுக்கிறேன் எனக் கூறாவிட்டால் ‎உயிரினங்களின் உண்மை ‎எஜமானனிடம் அனுமதி பெறாத ‎காரணத்தால் அதை அறுப்பதும், ‎உண்பதும் குற்றமாகி விடும்.‎

ஒருவனுக்குச் சொந்தமான ஆட்டை ‎நாம் திருடிச் சாப்பிட்டால் அது குற்றம் ‎என்பதை நாம் அறிவோம். அந்த ‎மனிதன் அந்த இறைச்சிக்குத் தான் ‎உரிமையாளன். உயிருக்கு ‎உரிமையாளனாகிய ‎அல்லாஹ்விடமும் அனுமதி பெற ‎வேண்டியது இதனால் அவசியமாகிறது.‎

கறுப்புப் பணத்துக்கும் வெள்ளைப் பணத்துக்கும் என்ன வித்தியாசம்? அதன் மதிப்பிலோ, அது அரசால் அச்சிடப்பட்ட பணம் என்பதிலோ இரண்டு பணத்துக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. இந்த வகையில் இரண்டுக்கும் வேறுபாடு இல்லாவிட்டாலும் அதில் நுணுக்கமான வேறுபாடு உள்ளது.

அந்தப் பணத்துக்காக அரசாங்கம் விதித்துள்ள வரியைச் செலுத்தி விட்டு அந்தப் பணத்தை நாம் வைத்து இருந்தால் அது வெள்ளைப் பணம். வரி விலக்கு அளிக்கப்பட்ட அளவுக்கு பணம் வைத்திருந்து அதற்காக வரி செலுத்தாவிட்டாலும் அது வெள்ளைப் பணம் தான். ஏனெனில் அரசின் அங்கீகாரத்துடன் இது பயன்படுத்தப்படுகிறது.

அந்தப் பணத்துக்காக அரசாங்கம் விதித்திருக்கும் வரியைச் செலுத்தாமல் அந்தப் பணத்தை நாம் வைத்திருந்தால் அது கறுப்புப்பணமாக ஆகி விடுகின்றது.

இரண்டு பணத்துக்கும் புறத்தோற்றத்தில் மதிப்பில் எந்த வேறுபாடும் இல்லை என்றாலும் அரசின் அங்கீகாரம் பெறாத பணத்தை சட்ட விரோதமான பணம் என்று அரசாங்கம் சொல்கிறது.

இந்த வித்தியாசம் தான் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்ட பிராணிகளுக்கும் அல்லாஹ்வின் பெயர் கூறப்படாமல் அறுக்கப்பட்ட பிராணிகளுக்கும் உள்ளது.

அல்லாஹ்வின் பெயரைக் கூறித்தான் அறுக்க வேண்டும் அந்தப் பிராணிகளைப் படைத்த இறைவனின் கட்டளையை ஏற்று அவ்வாறு அறுத்தால் அது உரியவனிடம் அனுமதி பெற்று அறுக்கப்பட்டதாக ஆகின்றது.

அல்லாஹ்வின் பெயர் கூறி அறுப்பதற்கும் பெயர் கூறாமல் அறுப்பதற்கும் இன்னொரு வேறுபாடு உள்ளது. அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கும் போது வன்முறைச் சிந்தனை வராமல் அது தடுத்து விடுகிறது.

பொதுவாக கத்தியை எடுத்து ‎இரத்தத்தைப் பார்த்துப் பழகியவன் ‎யாரையும் மிரட்டி உருட்டி காரியம் ‎சாதிப்பவனாக, ரவுடியாக தலைஎடுத்து ‎விடுகிறான். அன்றாடம் ஆடுகளை ‎அறுக்கும் ஒரு முஸ்லிம் இப்படி ‎கத்தியைக் காட்டி மிரட்டும் ரவுடியாக ‎அலைவதில்லை. ‎

இதற்குக் காரணம் அல்லாஹ்வின் பெயரால் அறுக்கிறேன் என்று ஒவ்வொரு அறுப்பின் போதும் பயன்படுத்தும் பிஸ்மில்லாஹ் ‎தான். ‎

அல்லாஹ்வின் அனுமதி ‎இருப்பதால் தான் நான் ஆட்டை ‎அறுக்கிறேன் என்று தினமும் ‎சொல்லியும், நினைத்தும் வருவதால் ‎மனிதனை அறுக்க அல்லாஹ் ‎அனுமதிக்கவில்லை என்ற கருத்து ‎அவன் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து ‎விடுகிறது.‎

இதனால் இன்னொரு நன்மையும் ஏற்படுகிறது. பிராணிகளில் மனிதர்கள் விரும்பி உண்பவையும் உள்ளன. மனிதர்கள் விரும்பாத பிராணிகளும் உள்ளன. சிலர் விரும்பி, சிலர் விரும்பாத பிராணிகளும் உள்ளன.

ஒருவர் விரும்பாத பிராணியை அவருக்கு நாம் வழங்கினால் அது மிகப்பெரிய மோசடியாகும். காகத்தை அறுத்து அதை கோழி எனச் சொல்லி விற்பதையும், நாயை அறுத்து ஆட்டு இறைச்சி என விற்பதையும் நாம் பார்க்கிறோம்.

பணம் சம்பாதிப்பதற்காக மனிதர்கள் மாமிசத்தின் பெயரால் ஏமாற்றப்படுகின்றனர்.

அல்லாஹ்வின் அனுமதி பெற்று அவன் பெயரால் அறுக்கிறேன் என்று கூறி அறுக்கும் முஸ்லிம் ஆட்டை அறுத்து மாட்டிறைச்சி என்று சொல்ல மாட்டான். உண்ணக் கூடாது என்று தடுக்கப்பட்ட நாய், பன்றி காகம் ஆகியவற்றை அவன் அறுக்க மாட்டான்.

பிஸ்மில்லாஹ் கூறி அறுப்பதால் இந்த நன்மையும் கிடைக்கிறது.

இது போன்ற காரணங்களால் தான் ‎பிஸ்மில்லாஹ் சொல்லி அறுக்க ‎வேண்டும் என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது. இது நாம் சிந்திக்கும்போது ‎தெரிய வரும் காரணங்களாகும். இது ‎அல்லாத இன்னும் பல காரணங்களும் ‎இருக்கலாம்.‎

அரைக்கை சட்டை டீஷர்ட் பணியன் அணிந்து தொழலாமா

அரைக்கை சட்டை டீஷர்ட் பணியன் அணிந்து தொழலாமா நம் தமிழகத்து மவ்லவிமார்களில் பலரும் அரைக்கைச் சட்டை அணியக்கூடாது என்கின்றனர். இன்னும் சிலர் பொதுவாக அரைக்கைச் சட்டை அணியலாம் என்றாலும்,தொழுகையின் போது முழங்கை வரை மறைக்க ...

அரைக்கை சட்டை டீஷர்ட் பணியன் அணிந்து தொழலாமா

அரைக்கை சட்டை டீஷர்ட் பணியன் அணிந்து தொழலாமா நம் தமிழகத்து மவ்லவிமார்களில் பலரும் அரைக்கைச் சட்டை அணியக்கூடாது என்கின்றனர். இன்னும் சிலர் பொதுவாக அரைக்கைச் சட்டை அணியலாம் என்றாலும்,தொழுகையின் போது முழங்கை வரை மறைக்க ...

ஜனாஸா தொழுகைச் சட்டங்கள்

ஜனாஸா தொழுகை சட்டங்கள் இணை கற்பிக்காதவர்களுக்கே ஜனாஸா தொழுகை ஜனாஸா தொழுகை என்பதில் தொழுகை என்ற சொல் உள்ளடங்கி இருந்தாலும் இதில் ருகூவு, ஸஜ்தா மற்றும் இருப்புக்கள் கிடையாது. நின்ற நிலையில் இறைவனைப் போற்றிப் ...

துல்ஹஜ் மாதம் முதல் ஒன்பது நாட்கள் நோன்பு நோற்பது சுன்னத்தா?

துல்ஹஜ் மாதம் முதல் ஒன்பது நாட்கள் நோன்பு நோற்பது சுன்னத்தா? துல்ஹஜ் மாதம் 1 முதல் 9 வரை சிலர் நோன்பு வைக்கிறார்கள், அப்படி வைக்கலாமா? அல்லது 9 அரபாத் நாள் மட்டும் வைக்க ...

கலீஃபாக்கள் யார்? அவர்களைப் பின்பற்ற வேண்டுமா?

நேர்வழி பெற்ற கலீபாக்களின் வழியைப் பின்பற்ற வேண்டுமா? நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்பவர்கள் பின்வரும் நபிமொழியை ஆதாரமாகக் குறிப்பிடுகிறார்கள். 2600حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ حَدَّثَنَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ عَنْ بَحِيرِ ...

521.அல்லாஹ்வுடைய நான்கு பண்புகளின் விளக்கம்

521.அல்லாஹ்வுடைய நான்கு பண்புகளின் விளக்கம் இவ்வசனத்தில் 67:3 அல்லாஹ் தனது நான்கு பண்புகளைக் குறிப்பிடுகிறான். 1, அவ்வல் (முதலானவன்) 2, ஆகிர் (முடிவானவன்) 3, ளாஹிர் (மேலானவன்) 4, பாதின் (அடித்தளமானவன்) இந்த நான்கு ...

521.அல்லாஹ்வுடைய நான்கு பண்புகளின் விளக்கம்

521.அல்லாஹ்வுடைய நான்கு பண்புகளின் விளக்கம் இவ்வசனத்தில் 67:3 அல்லாஹ் தனது நான்கு பண்புகளைக் குறிப்பிடுகிறான். 1, அவ்வல் (முதலானவன்) 2, ஆகிர் (முடிவானவன்) 3, ளாஹிர் (மேலானவன்) 4, பாதின் (அடித்தளமானவன்) இந்த நான்கு ...

பெண்கள் பிராணிகளை அறுக்கலாமா

பெண்கள் பிராணிகளை அறுக்கலாமா? பெண்கள் அறுப்பதற்கு எவ்விதத் தடையும் ஹதீஸ்களில் இல்லை. மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஒரு பெண் அறுத்ததை அங்கீகரித்துள்ளார்கள். صحيح البخاري 5504 - حَدَّثَنَا صَدَقَةُ، أَخْبَرَنَا ...

மர்ஹூம் என்ற சொல்லுக்கு மரணித்தவர் என்று பொருள் உண்டா?

மர்ஹூம் என்ற சொல்லுக்கு மரணித்தவர் என்று பொருள் உண்டா? இக்பால், முத்துப்பேட்டை பதில் மர்ஹூம் என்ற சொல்லுக்கு மரணித்தவர் என்ற பொருள் அகராதியில் இல்லை. ரஹ்மத் رَحْمَة என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்த சொல் ...

விரலசைத்தல் பற்றிய ஹதீஸ் ஷாத் எனும் வகையில் அடங்குமா

ஸாயிதா பற்றிய விமர்சனம் ஆஸிம் வழியாக அறிவிக்கும் அறிவிப்பாளர் ஸாயிதா ஆவார். இவரது நம்பகத் தன்மையில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆயினும் இவரைத் தொடர்பு படுத்தி வேறு ஒரு விமர்சனத்தை சிலர் செய்து ...

கணக்கர் மற்றும் ஆடிட்டர் பணி செய்யலாமா? கட்டுரை

கணக்கர் மற்றும் ஆடிட்டர் பணி செய்யலாமா? இவ்விரு பணிகளிலும் கணக்கு எழுதும் போது நிறுவனங்கள் தொடர்பான வட்டி விபரத்தையும் சேர்த்து கணக்கு பார்க்க வேண்டும். இது வட்டியை எழுதியதாக ஆகும் என்று கருதி இந்தப் ...

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...