இந்தத் தேர்தல் முடிவில் இருந்து முஸ்லிம்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன? நமக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன?

சல்மான், கோவை

பதில்

காங்கிரஸ் மீது என்ன தான் கோபம் இருந்தாலும் மோடி நடத்திய பயங்கரவாதச் செயலை நடுநிலை இந்துக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்று நாம் நினைத்தோம்.

முஸ்லிம்கள் ஒழிய வேண்டும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் 30 சதவிகிதம் அளவுக்கு வாக்குகள் பெறுவார்கள் என்று நாம் நினைக்கவில்லை. குஜராத்தில் நடந்த கொடூரச் செயலைப் பார்த்து விட்டு, வயிற்றில் உள்ள குழந்தையைக் கூட ஈட்டியால் குத்தி கொலை செய்த கொடூரத்தைப் பார்த்து விட்டு, சிலிண்டர்களை வீடுகளில் வீசி கொளுத்திப் போட்ட கொடூரத்தைப் பார்த்து விட்டு இந்தக் கொடியவர்களை இந்துக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்று நாம் நினைத்தோம்.

முஸ்லிம்களை அழித்து ஒழிக்கும் கொள்கை உடையவர் என்று தெரிந்து இருந்தும் மோடியை இவர்களால் ஆதரிக்க முடிகிறது என்றால் முஸ்லிம்கள் அநியாயமாக அழிக்கப்பட்டதும் அழிக்கப்படலாம் என்பதும் அவர்களுக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.

முஸ்லிம்களுக்கு எவ்வளவு பெரிய கொடுமை செய்தாலும் அது ஒரு பிரச்சனை இல்லை என்ற மனநிலைக்கு இவ்வளவு மக்கள் வந்து விட்டார்கள் என்பது தான் இதில் இருந்து நமக்குத் தெரியவருகிறது.

நம் சமுதாயத்தில் உள்ள சில மூடர்கள் குண்டு வைத்தல் போன்ற காரியங்களில் இறங்குவதும் மற்றவர்கள் வைக்கும் குண்டுகள் முஸ்லிம்கள் மீது போடப்படுவதும் முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலைக்கு காரணமாக இருந்துள்ளது. ஊடகங்கள் இவ்வாறு சித்தரிப்பதில் வெற்றி பெற்றுள்ளார்கள்.

இதை மாற்ற நாம் முயல வேண்டும். ஒட்டு மொத்த முஸ்லிம்களும் இதை வெறுக்கிறார்கள் என்றாலும் அது உரிய முறையில் மக்களைச் சென்றடையவில்லை. முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகளாகவோ, தீவுரவாதிகளின் ஆதாரவாளர்களாகவோ இருக்கிறார்கள் என்ற கருத்து ஆழமாகப் பதிந்துள்ளது. தமிழகத்தை விட இந்தி பேசும் மாநிலங்களில் இது அதிகமாகப் பதிந்துள்ளது.

இதை மாற்றி அமைக்க நாம் பாடுபட வேண்டும். பாஜக ஆதரவு 30 சதவிகிதத்தைக் குறைக்கும் வகையில் நாம் திட்டங்கள் வகுத்தாக வேண்டும்.

இதன் துவக்கமாக குண்டு வெடிப்புக்கும், தீவிரவாதச் செயலுக்கும் முஸ்லிம்கள் ஆதரவாக இல்லை என்பதை உணர்த்தும் வகையில் கட்டுக்கடங்காத கூட்டத்தைத் திரட்டி கண்டனப் பேரணிகள் எல்லா ஊரிலும் நடத்த வேண்டும். முஸ்லிம்கள் இது போன்ற செயல்களை நஞ்சாக வெறுக்கிறார்கள் என்பதைக் காட்டும் வகையிலும் அனைத்து சமுதாய மக்களும் இதைக் கவனிக்கும் வகையிலும் நடத்தப்பட வேண்டும். இதற்கான திட்டம் அடுத்த வாரம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அறிவிக்கப்படவுள்ளது.

மேலும் தனி நபர் சந்திப்புகளை அதிகப்படுத்தி நாட்டில் நமக்கு என்ன நடக்கிறது என்பதையும் புரியவைக்க வேண்டும். இதற்காக கடுமையாக நாம் உழைக்க வேண்டும். முஸ்லிமல்லாத மக்கள் மனங்களில் உள்ள வெறுப்பை அகற்றுவது தான் உடனடியாகச் செய்ய வேண்டியதாகும்.

மோடி ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்று நாம் அஞ்சத் தேவை இல்லை. இந்தியாவில் சிறுபான்மையாக உள்ள மக்களிடம் தான் உலக நாடுகளின் அதிகாரம் உள்ளது. சிறுபான்மை மக்கள் நசுக்கப்படும் போது வல்லரசுகளான கிறித்தவ நாடுகளும், பொருளாதார வல்லரசுகளான இஸ்லாமிய நாடுகளும் வேடிக்கை பார்க்க மாட்டார்கள். ஐநா வரை பிரச்சனையாகும். அதைக் கவனத்தில் கொண்டு தான் ஆட்சி நடத்த முடியும் என்று நம்புகிறோம். எனவே அதிகமாக நாம் அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை.

பாடப்புத்தகங்களில் இந்து மதக் கருத்தைப் பரப்புதல், சிறுபான்மை கல்விக் கூடங்களின் சலுகைகளைப் பறித்தல், இட ஒதுக்கீட்டின் பயன் முஸ்லிம்களுக்குக் கிடைக்காமல் தடுத்தல், பசுமாடுகளை அறுக்கத் தடை செய்தல், கட்டாய மதமாற்றம் என்ற பெயரில் இடையூறு செய்தல் இது போல் சில்லறைத்தனமான வேலைகள் செய்ய ஓரளவு வாய்ப்பு உள்ளது. உலக அளவில் நல்ல பெயர் எடுப்பதற்காக அவ்வாறு செய்யாமல் இருக்கவும் வாய்ப்பு உள்ளது.

பாபர் மஸ்ஜிது சம்மந்தமாக வழக்கு போட்டவர்களை மிரட்டி அல்லது சரிக்கட்டி அது குறித்த வழக்கை வாபஸ் பெறச் செய்து .சட்டப்படியான தடை இல்லாமல் ஆக்கி அந்த இடத்தைக் கோவிலாக்க முயற்சிக்கலாம்.

வைப்பாட்டி தான் வைத்துக் கொள்ளலாமே தவிர இரண்டாம் திருமணம் கூடாது என்றும் நீதிமன்றங்கள் மூலமே விவாக ரத்து செய்ய வேண்டும் எனவும் சட்டங்கள் கொண்டு வர முயற்சிக்கலாம்.

இவை நடக்கும் போது இதை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை சமுதாயம் கவனத்தில் கொள்ளும். இதனால் ஏற்படும் விழிப்புணர்வு முஸ்லிம்களுக்கு நன்மையாக மாறும். எனவே நாம் இப்போது அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...