தேமுதிக சரிவுக்கு என்ன காரணம்?

உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சி அமோக வெற்றி பெறுவதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. தனித்து நின்று 10 முதல் 12 சதவிகித ஓட்டுக்கள் வாங்கிய தேமுதிக தற்போது கம்யூனிஸ்டுகளுடன் கூட்டணி வைத்தும் அடையாளம் தெரியாத அளவுக்கு தோற்கடிக்கப்பட்டது ஏன்? அந்தக் கட்சிக்கு என்று இருந்த ஓட்டுக்கள் என்னவானது?

– எஸ். அப்துல் பாசித், வாணியம்பாடி

பதில் :

எந்தக் கட்சியாக இருந்தாலும் அக்கட்சிகள் வாங்கும் ஓட்டுக்கள் அனைத்தும் அந்தக் கட்சியின் வாக்குகள் அல்ல.

தமிழகத்தில் பெரிய கட்சிகளாக அறியப்படும் திமுக, அதிமுகவை எடுத்துக் கொண்டால் கூட அந்தக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நூற்றுக்கு ஐந்து என்ற கணக்கில் கூட இருக்க மாட்டார்கள்.

உங்கள் தெருவில் உள்ள நூறு பேரை அல்லது உங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள நூறு பேரை ஆய்வு செய்யுங்கள். அவர்களில் ஐந்து பேருக்கும் குறைவாகத் தான் திமுகவினர் இருப்பார்கள். அதிமுகவினரும் இந்தக் கணக்கில் தான் இருப்பார்கள். மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நூற்றுக்கு ஒருவர் கூட இருக்க மாட்டார்கள் என்பதை நீங்களே அறியலாம்.

இப்படி அனைத்துக் கட்சிகளுக்கும் சேர்த்து ஒரு ஐந்து சதவிகிதம் இருப்பார்கள். மீதி 85 சதவிகிதம் மக்களுக்கு எந்தக் கட்சி சார்பும் கிடையாது.

சூழ்நிலைக்கு ஏற்ப மாறி மாறி இவர்கள் முடிவு எடுப்பார்கள். இந்த உண்மையைப் புரிந்து கொண்டால் திமுக, அதிமுக எப்படி மாறி மாறி ஆட்சியைப் பிடிக்கிறது என்பதையும் அறிந்து கொள்ளலாம். நீங்கள் கேட்ட கேள்விக்கான விடையையும் அறிந்து கொள்ளலாம்.

தேமுதிகவுக்கு உள்ள உண்மையான வாக்குகள் நூற்றுக்கு ஒன்று என்ற கணக்கில் தான் இருக்கும். ஆனால் திமுக மீதும், அதிமுக மீதும் அதிருப்தி அடைந்த மக்கள் கணிசமாக உள்ளனர். அவர்கள் இன்னொரு நல்ல கட்சியை எதிர்பார்த்தார்கள். அந்த இடைவெளியை நிரப்புவதாக சொல்லிக் கொண்டு விஜயகாந்த வந்தார். மக்களுடன் கூட்டணி என்றார். எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை என்றார். திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் சம நிலையில் வைத்து விமர்சனம் செய்தார். இரண்டு திராவிட கட்சிகள் மீதும் அதிருப்தியில் இருந்த மக்களுக்கு தங்கள் அதிருப்தியைக் காட்ட இது வாய்ப்பாக இருந்தது.

இரண்டும் வேண்டாம் என்ற கருத்தில் இருந்த சிலர் விஜயகாந்தை நம்பினார்கள். ஆனால் எப்போது அவர் அதிமுகவுடன் கூட்டு சேர்ந்தாரோ அப்போதே அவர் தனித்தன்மையை இழந்து விட்டார். நானும் பத்தோடு பதினொன்று தான் எனக் காட்டி விட்டார்.

இரண்டில் ஒன்றைத் தான் தேர்வு செய்ய வேண்டும் என்பதைத் தவிர வழியில்லை என்ற முடிவுக்கு விஜயகாந்தை நம்பியவர்களும் வந்து விட்டனர். தனித் தன்மைக்காக ஆதரவுத் தளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்கள் தொடர்ந்து அதைக் காப்பாற்றாவிட்டால் இந்தக் கதி தான் ஏற்படும்.

திமுகவுக்கும், அதிமுகவுக்கும் மாற்றாக இவரைப் போல் வந்தவர் தான் வைகோ. அவர் மூன்றாவது சக்தியாக உருவெடுக்க நல்ல வாய்ப்பு இருந்தது. ஒரு தேர்தல் தோல்வியுடன் துவண்டு போய் திமுகவுடன் கூட்டு வைத்தார், பின்னர் அதிமுகவுடனும் கூட்டு வைத்தார். இரண்டு கழகங்களுமே வேண்டாம் என்ற கருத்து உள்ளவர்களின் ஆதரவை அவரும் இழந்தார்.

அதிமுக இப்போது அமோக வெற்றி பெற்றாலும் அவர்களின் வாக்கு ஐந்து சதம் தான். ஒழுங்காக ஆட்சி நடத்தாவிட்டால் இந்த நிலை தலைகீழாக மாறிவிடும்.

உணர்வு 16:9

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...