துல்ஹஜ் மாதம் முதல் ஒன்பது நாட்கள் நோன்பு நோற்பது சுன்னத்தா?
துல்ஹஜ் மாதம் 1 முதல் 9 வரை சிலர் நோன்பு வைக்கிறார்கள், அப்படி வைக்கலாமா? அல்லது 9 அரபாத் நாள் மட்டும் வைக்க வேண்டுமா?
பதில்
இந்தக் கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவற்றில் குழப்பங்கள் உள்ளதால் இது சரியான ஹதீஸ் அல்ல என்று ஸைலயீ, முன்திர் உள்ளிட்ட ஹதீஸ் கலை அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
مسند أحمد
22334 – حَدَّثَنَا سُرَيْجٌ، وَعَفَّانُ قَالَا: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، حَدَّثَنَا الْحُرُّ بْنُ الصَّيَّاحِ قَالَ: سُرَيْجٌ، عَنِ الْحُرِّ، عَنْ هُنَيْدَةَ بْنِ خَالِدٍ، عَنِ امْرَأَتِهِ، عَنْ بَعْضِ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ: ” كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ تِسْعَ ذِي الْحِجَّةِ، وَيَوْمَ عَاشُورَاءَ، وَثَلَاثَةَ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ ” قَالَ عَفَّانُ: أَوَّلَ اثْنَيْنِ مِنَ الشَّهْرِ وَخَمِيسَيْنِ
سنن أبي داود
2437 – حدَّثنا مُسَدَّدٌ، حدَّثنا أبو عَوانة، عن الحرِّ بنِ الصَّيَّاح، عن هُنيدَة ابنِ خالد، عن امرأتِه عن بعضِ أزواج النبيِّ -صلَّى الله عليه وسلم- قالت: كان رسولُ الله -صلَّى الله عليه وسلم- يَصُوُم تسعَ ذي الحجة، ويَوْمَ عاشوراء، وثلاثةَ أيامٍ من كُلِّ شهرٍ: أولَ اثنين من الشهر، والخميسَ والخَميسَ (2) (3).
துல்ஹஜ் மாதம் ஒன்பது நாட்களும் ஆஷூரா நாளிலும், ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்களும், மாதத்தின் முதல் இரு நாட்களும், இரண்டு வியாழன்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பவர்களாக இருந்தனர்.
நூல்கள் அஹ்மது அபூதாவூத்
இதை நபியின் ஒரு மனைவி கூறியதாக என் மனைவி சொன்னார் என்று ஹுனைதா என்பார் இதை அறிவிக்கிறார்.
-
ஹுனைதாவின் மனைவியின் பெயர் எது குறித்தோ அவரது நம்பகத் தன்மை குறித்தோ எந்த விபரமும் இல்லை. இதன் காரணமாக இது பலவீனமாகின்றது.
-
அத்துடன் ஹுனைதா என்பார் அறிவிப்பாளர் குறித்து பலவாறாக முரண்பட்டு அறிவிக்கிறார்.
- மனைவி சொன்னதாக ஒரு முறை கூறும் அவர் மற்றொரு சந்தர்ப்பத்தில் என் தாய் சொன்னார் என்று அறிவிக்கிறார்.
- மற்றொரு சந்தர்ப்பத்தில் நபியின் மனைவியிடம் தானே கேட்டதாகக் கூறுகிறார்.
- நபியின் மனைவி உம்மு சலமா என்று ஒரு சந்தர்ப்பத்தில் கூறுகிறார்.
-
நபியின் மனைவி ஹஃப்ஸா என்று மற்றொரு சந்தர்ப்பத்தில் கூறுகிறார்.
இப்படி மாற்றி மாற்றி அறிவிக்கப்படும் ஹதீஸ் முள்தரப் (மாற்றி மாற்றி அறிவிக்கப்பட்டது) என்று கூறப்படுகிறது. இது பலவீனமான ஹதீஸின் ஒரு வகையாகும்.
(அல்பானி அவர்கள் இதை சரியான ஹதீஸ் என்று குறிப்பிட்டுள்ளது தவறானதாகும்.)
இந்த ஹதீஸை இவர் எத்தனை விதமாக முரண்பட்டு அறிவித்துள்ளார் என்பதைக் கீழே தந்துள்ளோம்.
உம்மு ஸலமா கூறியதை தானே கேட்டதாக அறிவிக்கும் ஹதீஸ்
سنن أبي داود
2452 – حدَّثنا زهيرُ بنُ حربٍ، حدَّثنا محمدُ بنُ فضيلٍ، حدَّثنا الحسنُ بنُ عُبيدِ الله، عن هُنيْدة الخُزاعيِّ عن أُمِّهِ، قالت: دخلتُ على أُمِّ سلمةَ فسألتُها عن الصِّيامِ، فقالت: كان رسولُ الله -صلَّى الله عليه وسلم- يأمرُني أن أصومَ ثلاثةَ أيامٍ من كل شهرٍ، أوَّلَها الاثنينِ، والخميسَ، والخَميسَ (2).
நபியின் மனைவி கூறியதாக அறிவிக்கும் ஹதீஸ்
سنن النسائي
2414 – أَخْبَرَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ قَالَ حَدَّثَنَا خَلَفُ بْنُ تَمِيمٍ عَنْ زُهَيْرٍ عَنْ الْحُرِّ بْنِ الصَّيَّاحِ قَالَ سَمِعْتُ هُنَيْدَةَ الْخُزَاعِيَّ قَالَ دَخَلْتُ عَلَى أُمِّ الْمُؤْمِنِينَ سَمِعْتُهَا تَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ مِنْ كُلِّ شَهْرٍ ثَلَاثَةَ أَيَّامٍ أَوَّلَ اثْنَيْنِ مِنْ الشَّهْرِ ثُمَّ الْخَمِيسَ ثُمَّ الْخَمِيسَ الَّذِي يَلِيهِ
நபியின் மனைவி ஹப்ஸா கூறியதாக அறிவிக்கும் ஹதீஸ்
سنن النسائي
2415 – أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي النَّضْرِ قَالَ حَدَّثَنِي أَبُو النَّضْرِ قَالَ حَدَّثَنَا أَبُو إِسْحَقَ الْأَشْجَعِيُّ كُوفِيٌّ عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ الْمُلَائِيِّ عَنْ الْحُرِّ بْنِ الصَّيَّاحِ عَنْ هُنَيْدَةَ بْنِ خَالِدٍ الْخُزَاعِيِّ عَنْ حَفْصَةَ قَالَتْ أَرْبَعٌ لَمْ يَكُنْ يَدَعُهُنَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صِيَامَ عَاشُورَاءَ وَالْعَشْرَ وَثَلَاثَةَ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ وَرَكْعَتَيْنِ قَبْلَ الْغَدَاةِ
உம்மு ஸலமாவிடம் என் தாய் கேட்டார் என்று அறிவிக்கும் ஹதீஸ்
سنن النسائي
2418 – أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الْجَوْهَرِيُّ قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ عَنْ الْحَسَنِ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ هُنَيْدَةَ الْخُزَاعِيِّ عَنْ أُمِّهِ عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُ بِصِيَامِ ثَلَاثَةِ أَيَّامٍ أَوَّلِ خَمِيسٍ وَالِاثْنَيْنِ وَالِاثْنَيْنِ
இந்த ஹதீஸில் மற்றொரு பலவீனமும் உள்ளது.
இதன் அறிவிப்பாளர் தொடரில் அபூ இஸ்ஹாக் அல்அஷ்ஜயீ என்பவர் இடம் பெறுகின்றார். இவர் நம்பகமானவர் என்று எந்த அறிஞரும் நற்சான்று அளிக்கவில்லை. இவருடைய நம்பகத் தன்மை நிரூபிக்கப்படாத காரணத்தால் இது பலவீனமான செய்தியாகும்.
இந்தச் செய்தி இப்னு ஹிப்பான், முஸ்னத் அஹ்மத், தப்ரானீ ஆகிய நூற்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
صحيح مسلم
9 – (1176) حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ وَإِسْحَاقُ – قَالَ إِسْحَاقُ: أَخْبَرَنَا، وَقَالَ الْآخَرَانِ: – حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا، قَالَتْ: «مَا رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَائِمًا فِي الْعَشْرِ قَطُّ»
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போதும் துல்ஹஜ் பத்து நாட்கள் நோன்பு நோற்று நான் பார்த்ததில்லை என்று ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள்.
இது முஸ்லிம் நூலில் இடம் பெற்றுள்ளது.
அரஃபா எனும் ஒன்பதாம் நாள் நோன்பு மட்டுமே ஹஜ்ஜில் இருப்போர் தவிர மற்றவர்களுக்கு சுன்னத் ஆகும்.
பொதுவாக தடை செய்யப்பட்ட ஐந்து நாட்கள் தவிர மற்ற நாட்களில் நாம் உபரியாக நோன்பு நோற்கலாம். அந்த அடிப்படையில் ஒருவர் தாமாக விரும்பி இந்த ஒன்பது நாள் நோன்பு நோற்றால் உபரியான நோன்பின் நன்மையை அவர் பெற்றுக் கொள்வார்.
இந்த நாட்களில் நோன்பு நோற்பது நபிவழி என்பது போல் கருதினாலோ அப்படி வலியுறுத்தினாலோ அது பித்அத் ஆகும்.
இந்தக் குறிப்பிட்ட செய்தி பலவீனம் என்றாலும் துல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள் நல்லறம் செய்ய ஆர்வமூட்டும் ஆதாரப்பூர்வமான செய்தி உள்ளது.
صحيح البخاري
969 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، عَنْ مُسْلِمٍ البَطِينِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «مَا العَمَلُ فِي أَيَّامٍ أَفْضَلَ مِنْهَا فِي هَذِهِ؟» قَالُوا: وَلاَ الجِهَادُ؟ قَالَ: «وَلاَ الجِهَادُ، إِلَّا رَجُلٌ خَرَجَ يُخَاطِرُ بِنَفْسِهِ وَمَالِهِ، فَلَمْ يَرْجِعْ بِشَيْءٍ»
(துல்ஹஜ்) பத்து நாட்களில் நல்லறங்கள் செய்வது ஏனைய நாட்களில் அவற்றைச் செய்வதை விட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் (அறப்போர்) செய்வதை விடவுமா? என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்வதை விடவும் சிறந்தது தான்; ஆயினும் தனது உயிருடனும், தனது செல்வத்துடனும் புறப்பட்டுச் சென்று அவ்விரண்டில் எதையும் திரும்பக் கொண்டு வராத பேராளியைத் தவிர (அதாவது அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்தவரைத் தவிர) என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி 969
இந்தச் செய்தி பொதுவாக நோன்பு உட்பட அனைத்து நல்லறங்களையும் குறிக்கின்றது.
இந்த நாட்களில் தொழுகை, திக்ரு, தர்மம் செய்தல் போன்ற எந்த நல்லறங்களைச் செய்தாலும் அதற்கு தனிச்சிறப்பு உண்டு. எனவே இந்தப் பொதுவான ஆதாரத்தின் அடிப்படையில் இந்த நாட்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அது வரவேற்கத்தக்கது தான்.
இந்த ஒன்பது நாட்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்கவில்லை என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவதால் இவ்வாறு நோன்பு நோற்பது கூடாது என்று சொல்ல முடியாது.
ஒரு அமலுக்கு நபிகளாரின் சொல் ஆதாரமாக இருக்கும் போது அந்த வணக்கத்தை நபிகளார் செய்ததாக எந்தச் செய்தியும் இல்லை என்றால் நபிகளாரின் கட்டளை இருப்பதால் அந்த அமல் நபிவழியாகக் கருதப்படும்.
உதாரணமாக அரஃபா நாளில் நோன்பு நோற்பதற்கு நபிகளாரின் சொல்லில் ஆதாரம் உள்ளது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த நோன்பு நோற்றதாக எந்தச் செய்தியும் இல்லை. இது போல் தாஜ் துல் ஹஜ் நோன்பையும் எடுத்துக் கொள்ள வேண்டும்
இப்போது இந்த நோன்புக்கு நபியின் செயல் ஆதாரமாகக் கிடைக்காவிட்டாலும் சொல் கிடைத்திருப்பதால் இது மார்க்க அங்கீகாரம் பெறுகின்றது.
துல்ஹஜ் மாதம் ஒன்பது நாட்கள் நோன்பு நோற்பதையும் இதே அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும்.