காதுகளில் அடித்தோம் என்பதன் பொருள்?

கேள்வி

உங்கள் திருக்குர்ஆன் மொழியாக்கத்தில் சூரா கஹஃபில் 11 வது வசனத்தை எனவே அக்குகையில் பல வருடங்கள் அவர்களை உறங்கச் செய்தோம் என்று மொழியாக்கம் செய்துள்ளீர்கள். இதே நேரம் ஜான் ட்ரஸ்ட் தர்ஜமாவில் ஆகவே நாம் அவர்களை எண்ணப்பட்ட பல ஆண்டுகள் வரை அக்குகையில் (தூங்குமாறு) அவர்களுடைய காதுகளின் மீது (திரையிட்டுத்) தடையேற்படுத்தினோம் என்று மொழியாக்கம் செய்துள்ளார்கள். எது சரி?

உங்கள் மொழியாக்கத்தில்

فَضَرَبْنَا عَلَى آذَانِهِمْ

என்ற அரபி வாசகத்திற்கான மொழியாக்கம் இல்லை. فِي الْكَهْفِ سِنِينَ عَدَدًا என்ற வாசகத்திற்கு மாத்திரம் தான் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இது தவறுதலாக விடுபட்டதா? அல்லது வேறு விளக்கங்களுக்காக விட்டீர்களா? என்பதைத் தெளிவுபடுத்துமாறு அன்பாய் வேண்டுகிறேன்.

ரஸ்மின், இலங்கை

எல்லா மொழிகளிலும் நேரடிப் பொருள் அல்லாமல் வேறு பொருளில் சில சொற்கள் பயன்படுத்தப்படும். மொழி பெயர்க்கும் போது எல்லா இடங்களிலும் அப்படியே மொழி பெயர்த்தால் சரியான கருத்து கிடைக்காது. எந்த இடத்தில் அப்படியே மொழி பெயர்த்தால் சரியான கருத்து கிடைக்குமோ அந்த இடத்தில் மட்டும் தான் அப்படியே அர்த்தம் செய்ய வேண்டும். அப்படி இல்லாத இடங்களில் அதன் கருத்து என்னவோ அதைத்தான் குறிப்பிட வேண்டும்.

உதாரணமாக வள்ளல் தன்மையைக் குறிக்க கை நீளமானவன்

الاطول يدا

என்று சொல்வார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர்.

باب حدثنا موسى بن إسماعيل حدثنا أبو عوانة عن فراس عن الشعبي عن مسروق عن عائشة رضي الله عنها أن بعض أزواج النبي صلى الله عليه وسلم قلن للنبي صلى الله عليه وسلم أينا أسرع بك لحوقا قال أطولكن يدا فأخذوا قصبة يذرعونها فكانت سودة أطولهن يدا فعلمنا بعد أنما كانت طول يدها الصدقة وكانت أسرعنا لحوقا به وكانت تحب الصدقة

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், ‘உங்களின் மரணத்திற்குப் பின் எங்களில் யார் முதலில் வந்து உங்களைச் சேர்வார்?’ எனக் கேட்டதற்கு, ‘உங்களுள் கை நீளமானவரே!’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர்கள் ஒரு குச்சியை எடுத்துத் தங்களின் கைகளை அளந்து பார்த்த போது ஸவ்தா (ரலி)வின் கைகளே மிகவும் நீளமானவையாக இருந்தன. (ஸைனப் (ரலி) இறந்த) பிறகு தான் கை நீளமானவர் என்பது, அதிகம் தர்மம் செய்பவரைக் குறிக்கிறது என்பதை அறிந்தோம். (ஸைனப்) அவ்வாறு அதிகம் தர்மம் செய்பவராக இருந்ததால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முதலில் அடைந்தார். மேலும் அவர் தர்மம் செய்வதை (மிகவும்) விரும்பக் கூடியவராகவும் இருந்தார்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல்  : புகாரி 1420

கை நீளமானவர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னது நேரடிப் பொருளில் அல்ல என்பதை இதிலிருந்து நாம் அறியலாம்.

இதற்கு வள்ளல் என்று தான் மொழி பெயர்க்க வேண்டும். கை நீளமானவன் என்று மொழி பெயர்த்தால் தவறான அர்த்தமாகி விடும்.

ஏனெனில் இச்சொல் தமிழ் மொழியில் திருடனைக் குறிப்பதற்கே பயன்படுத்தப்படும்.

அவன் ஒரு சிங்கம் என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம்.

இந்த இடத்தில் சிங்கம் என்பது வீரனைக் குறிக்கும். அரபு மொழியில் மட்டும் இது வீரனைக் குறித்து தமிழ் மொழியில் அப்படி குறிக்காவிட்டால் வீரன் என்று தான் இங்கே மொழி பெயர்க்க வேண்டும்.

ஆனால் சிங்கம் என்ற சொல்லை வீரனுக்கும் பயன்படுத்துவது தமிழ் மொழியிலும் உள்ளது. அரபி மொழியிலும் உள்ளது. எனவே அவன் ஒரு சிங்கள் என்றே நாம் மொழி பெயர்க்கலாம். தமிழ் கூறும் மக்கள் வீரன் என்று சரியாக புரிந்து கொள்வார்கள். கை நீளமானவன் என்பது அரபியில் வள்ளல் என்ற கருத்தில் பயன்படுத்துகிறார்கள். தமிழ் கூறும் மக்கள் திருடன் என்ற கருத்தில் பயன்படுத்துகிறார்கள். இது போன்ற இடங்களில் கை நீளமானவன் என்று மொழி பெயர்த்தால் வள்ளல் என்று விளங்காமல் திருடன் என்று தான் விளங்குவார்கள். எனவே கை நீளமானவன் என்று பொருள் கொள்ளாமல் வள்ளல் என்று தான் மொழி பெயர்க்க வேண்டும்.  மக்கள் சரியாகப் புரிந்து கொள்வது தான் முக்கியம்.

இது போல் தான் காதுகளில் அடித்தல் என்பது அரபு மொழியில் தூக்கத்தைக் குறிக்க பயன்படுத்துவார்கள். ஆனால் தமிழ் மொழியில் காதுகளில் அடித்தல் என்பதை தூக்கத்தைக் குறிக்க பயன்படுத்தும் வழக்கம் இல்லை.

இந்த நிலையில் காதுகளில் அடித்தோம் என்று நாம் இச்சொல்லுக்கு மொழி பெயர்த்தால் காதுகளில் அல்லாஹ் அடித்தான் என்று தான் தமிழர்கள் புரிந்து கொள்வார்கள். அரபியர்கள் தூங்கச் செய்தோம் என்று புரிந்து கொள்வார்கள்.

எனவே தான் காதுகளில் அடித்தோம் என்பதை எந்த அர்த்தத்தில் அரபுகள் பயன்படுத்துகிறார்களோ அந்த அர்த்தத்தையே நாம் செய்துள்ளோம்.

இதற்கு ஆதாரமாக பிரபலமான மூன்று தப்சீர்களை எடுத்துக் காட்டியுள்ளேன்.

تفسير الطبري

: فضربنا على آذانهم بالنوم في الكهف : أي ألقينا عليهم النوم،

تفسير ابن كثير

فَضَرَبْنَا عَلَى آذَانِهِمْ فِي الْكَهْفِ سِنِينَ عَدَدًا  أي ألقينا عليهم النوم حين دخلوا إلى الكهف، فناموا سنين كثيرة

تفسير القرطبي

عِبَارَةٌ عَنْ إِلْقَاءِ اللَّهِ تَعَالَى النَّوْمَ عَلَيْهِمْ. وَهَذِهِ مِنْ فَصِيحَاتِ الْقُرْآنِ الَّتِي أَقَرَّتِ الْعَرَبُ بِالْقُصُورِ عَنِ الْإِتْيَانِ بِمِثْلِهِ

குர்துபீ, இப்னு கஸீர், தபரி ஆகிய மூன்று தப்ஸீர்களிலும் இதன் கருத்து தூங்கச் செய்தோம் என்பது தான் என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் மற்றவர்கள் நேரடி அர்த்தம் செய்யப் போய் அவர்களுக்கே திருப்தி இல்லாமல் பிராக்கெட்டில் தூங்குமாறு என்று போட்டுள்ளனர்.

மேலும் மற்ற மொழிபெயர்ப்பாளர்கள் ஆதானிஹிம் என்பதற்கு காதுகள் என்று நேரடி அர்த்தம் செய்து விட்டு லரப்னா என்பதற்கு அடித்தோம் என்று பொருள் செய்யாமல் தடை ஏற்படுத்தினோம் என்று மறைமுகமான அர்த்தத்தைத் தான் செய்துள்ளனர். அதாவது அவர்களும் பாதிக்கு நேரடி அர்த்தம் செய்து மீதிக்கு வேறு அர்த்தம் செய்துள்ளனர்.

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...