கூட்டுக் குர்பானியின் சட்டங்கள்!

ஹஜ் பெருநாள் தினத்தில் ஆட்டைக் குர்பானி கொடுப்பவர் தனிப்பட்ட முறையில் கொடுக்கலாம்.

மாடுகளைக் குர்பானி கொடுப்பதாக இருந்தால் ஒரு மாட்டில் ஏழு நபர்கள் வீதம் கூட்டு சேர்ந்து குர்பானி கொடுக்கலாம்.

ஆட்டைக் குர்பானி கொடுக்க பொருள் வசதி இருந்தாலும் வசதி இல்லாவிட்டாலும் மாட்டில் ஒரு பங்கு சேரலாம். மாட்டில் ஏழில் ஒரு பங்கும் ஒரு ஆடும் சமமானவை தான். ஒன்றை விட மற்றொன்று சிறந்ததல்ல.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகம், மாடு ஆகியவற்றில் கூட்டு சேர்ந்து குர்பானி கொடுக்கலாம் என்று அனுமதியளித்துள்ளனர்.

صحيح مسلم

350 – (1318) حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا مَالِكٌ، ح وحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، – وَاللَّفْظُ لَهُ – قَالَ: قَرَأْتُ عَلَى مَالِكٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: «نَحَرْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الْحُدَيْبِيَةِ الْبَدَنَةَ عَنْ سَبْعَةٍ، وَالْبَقَرَةَ عَنْ سَبْعَةٍ»

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது,

“நாங்கள் ஹுதைபியா ஆண்டில் ஏழு பேருக்காக ஓர் ஒட்டகத்தையும், ஏழு பேருக்காக ஒரு மாட்டையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அறுத்துப் பலியிட்டோம்.”

நூல் : முஸ்லிம் : 2537.

ஏழு பேருக்கு ஒரு மாடு என்பதை இரு விதமாக நாம் புரிந்து கொள்ள முடியும்.

இந்த மாடு இந்த ஏழு பேருக்கானது; அந்த மாடு அந்த ஏழு பேருக்கானது தெளிவுபடுத்துதல் ஒரு வகை.

எழுபது பேரிடம் பங்கு சேர்த்து பத்து மாடுகளை வாங்குதல் ஒரு வகை.

முதல் வகையில் பங்கு சேர்ந்தவருக்கு தனது மாடு இது என்று தெரியும். அல்லது இன்ன எடையில் இன்ன விலையில் உள்ளது என்று தெரியும்.

இரண்டாவது கருத்துப்படி குறிப்பாக தனது மாடு எது என்று தெரியாது. இந்த பத்து மாட்டில் ஏதோ ஒரு மாடு என்று தான் தெரியும். இவர் சார்பில் கொடுக்கப்படும் மாட்டின் எடை எவ்வளவு விலை எவ்வளவு என்ற எந்த விபரமும் அவருக்குத் தெரியாது.

முதல் வகையில் பங்கு சேர்வதற்குத் தான் மார்க்கத்தில் அனுமதி உள்ளது. இரண்டாவது வகையில் தெளிவின்மை உள்ளதால் அதற்கு அனுமதி இல்லை.

صحيح مسلم

353 – (1318) وحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ، قَالَ: «اشْتَرَكْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْحَجِّ وَالْعُمْرَةِ كُلُّ سَبْعَةٍ فِي بَدَنَةٍ» فَقَالَ رَجُلٌ لِجَابِرٍ: أَيُشْتَرَكُ فِي الْبَدَنَةِ مَا يُشْتَرَكُ فِي الْجَزُورِ؟ قَالَ: ” مَا هِيَ إِلَّا مِنَ الْبُدْنِ، وَحَضَرَ جَابِرٌ الْحُدَيْبِيَةَ، قَالَ: نَحَرْنَا يَوْمَئِذٍ سَبْعِينَ بَدَنَةً اشْتَرَكْنَا كُلُّ سَبْعَةٍ فِي بَدَنَةٍ “

“நாங்கள் ஹுதைபியா நாளில் எழுபது ஒட்டகங்களை அறுத்துப் பலியிட்டோம். ஒவ்வொரு ஏழு நபர்கள் ஒரு ஒட்டகத்தில் கூட்டு சேர்ந்து கொண்டோம் என்று ஜாபிர் (ரலி) கூறுகிறார்கள். ஜாபிர் அவர்கள் ஹுதைபியாவில் பங்கெடுத்தவராவார்.

நூல் : முஸ்லிம் : 2540

ஒவ்வொரு ஏழு பேர் சேர்ந்து ஒரு ஒட்டகத்தில் பங்கு சேர்ந்து குர்பானி கொடுத்தார்கள் என்ற வாசகம் கவனிக்கத்தக்கது.

அதாவது 70 ஒட்டகங்களில் 490 பேரைக் கூட்டாகத் திரட்டி குர்பானி கொடுக்கவில்லை.

ஒவ்வொரு ஏழு பேர் தாமாகக் கூட்டு சேர்ந்து ஒரு ஒட்டகம் கொடுத்தார்கள் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.

குர்பானி கொடுக்கும் ஏழு பேர் தாமாகக் கூட்டு சேர்ந்து ஒரு மாட்டை வாங்கலாம்.

மக்களின் சிரமத்தைக் குறைப்பதற்காக ஜமாஅத்துகளோ, இயக்கங்களோ பங்கு சேர்த்து அவர்களுக்காக மாடுகளை வாங்கலாம்.

ஆனால் ஒவ்வொரு பங்கு சேர்ந்தவர்களுக்காகவும் வாங்கப்பட்ட மாடு இது என்று தெளிவுபடுத்த வேண்டும்.

மேற்கண்ட ஹதீஸில் இருந்து இதை நாம் அறியலாம்.

ஆனால் இன்று நடைமுறை அவ்வாறு இல்லை.

70 நபர்களிடம் பங்கு வாங்கி பத்து மாடுகள் வாங்குகிறார்கள். அந்தப் பத்து மாடுகளில் ஒரு பங்குதாரரின் மாடு எது என சொல்லப்படுவதில்லை. தான் குர்பானி கொடுக்கும் மாடு எது என குர்பானி கொடுப்பவருக்கே தெரிவதில்லை.

பத்து மாடுகளில் சில மாடுகள் 20 ஆயிரம், சில மாடுகள் 30 ஆயிரம், சில மாடுகள் நாற்பதாயிரம் என்ற இருக்கலாம். 20 ஆயிரம் ரூபாய்க்கான பங்கு இவ்வளவு, முப்பதாயிரம் ரூபாய்க்கான மாட்டின் பங்கு இவ்வளவு, நாற்பதாயிரம் ரூபாய் மாட்டின் பங்கு இவ்வளவு என்று தெளிவுபடுத்தி பங்குகள் வாங்க வேண்டும். பங்கு வாங்கும் போது அப்படி தெளிவுபடுத்த முடியாவிட்டாலும் முன்பணம் என்ற வகையில் பங்கை வாங்கிக் கொள்ளலாம்.

வாங்கி முடித்த பின் உங்கள் பங்கில் வாங்கிய மாடு இத்தனை கிலோ, அதன் விலை இவ்வளவு, மீதி இவ்வளவு உள்ளது. அல்லது மீதி இவ்வளவு நீங்கள் தர வேண்டும் என்று தெளிவுபடுத்த வேண்டும்.

இதைத் தான் ஒவ்வொரு ஏழு பேருக்கு ஒரு மாடு என்ற ஹதீஸ் மூலம் அறிய முடிகிறது.

மார்க்கத்தில் எல்லாவிதமான கொடுக்கல் வாங்கலும் தெளிவுபடுத்துவது அவசியம்.

صحيح البخاري

2239 – حَدَّثَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ عُلَيَّةَ، أَخْبَرَنَا ابْنُ أَبِي نَجِيحٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَثِيرٍ، عَنْ أَبِي المِنْهَالِ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المَدِينَةَ، وَالنَّاسُ يُسْلِفُونَ فِي الثَّمَرِ العَامَ وَالعَامَيْنِ، أَوْ قَالَ: عَامَيْنِ أَوْ ثَلاَثَةً، شَكَّ إِسْمَاعِيلُ، فَقَالَ: «مَنْ سَلَّفَ فِي تَمْرٍ، فَلْيُسْلِفْ فِي كَيْلٍ مَعْلُومٍ، وَوَزْنٍ مَعْلُومٍ»، حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ، عَنْ ابْنِ أَبِي نَجِيحٍ، بِهَذَا: «فِي كَيْلٍ مَعْلُومٍ، وَوَزْنٍ مَعْلُومٍ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது, மக்கள் ஒரு வருடம், இரண்டு வருடங்களில் (பொருளைப்) பெற்றுக் கொள்வதாக, பேரீச்சம் பழத்திற்காக முன்பணம் கொடுத்து வந்தனர். இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், பேரீச்சம் பழத்திற்காக ஒருவர் முன்பணம் கொடுத்தால் என்ன எடை என்பதையும், என்ன அளவு என்பதையும் குறிப்பிட்டு முன்பணம் கொடுக்கட்டும்! என்று கூறினார்கள்.

நூல் : புகாரி 2239, 2240, 2241

முன் கூட்டியே பணம் வாங்கும் எந்த வியாபாரமாக இருந்தாலும் எடை எவ்வளவு, அளவு எவ்வளவு என்று தெளிவுபடுத்த வேண்டும் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.

இது குர்பானிக்கும் பொருந்தும்.

பொதுவாக எந்த வியாபாரத்தில் விற்பவரோ, வாங்குபவரோ ஏமாற்றப்படுகிறாரோ, அல்லது இருவரில் ஒருவர் ஏமாற்றப்படும் வாய்ப்பு உள்ளதோ அது போன்ற அனைத்து வியாபாரங்களும் தடுக்கப்பட்டவை என்பது தான் இஸ்லாமிய வணிகத்தின் அடிப்படையாகும். மேற்கண்ட ஹதீஸில் இருந்து இதனை நாம் அறிந்து கொள்ளலாம்.

ஒருவர் எந்த மாட்டில் குர்பானி கொடுக்கிறார் என்று தெரிவித்து மேலதிகமாக வாங்கிய பங்குகளைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.

ஒருவர் பத்து கிலோ எடையுள்ள ஆட்டைக் குர்பானி கொடுக்கிறார். இன்னொருவர் இருபது கிலோ எடையுள்ள ஆட்டைக் குர்பானி கொடுக்கிறார். இரண்டும் குர்பானி என்றாலும் அதிகம் செலவிட்டவருக்கு அதற்கேற்ப கூடுதல் நன்மை கிடைக்கும். இரண்டுக்கும் சமமான நன்மை கிடைக்காது.

அது போல் தான் கூட்டாகக் கொடுக்கும் போது நமது பங்கு இந்த தரத்தில் உள்ள மாட்டுக்கானது என்று நம்பி பங்கு தரும் போது அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும். ஒருவர் எந்த மாட்டில் பங்கு சேர்கிறார் என்று அவருக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

மாடுகளுக்கு 1,2,3 என வரிசை எண் போட்டு அல்லது வேறு ஏதேனும் அடையாளம் இட்டு அதன் எடையையும், விலையையும் குறிப்பிட்டு, குறிப்பிட்ட மாடு எந்த ஏழு நபர்களுக்கு உரியது என்று தெளிவாக்க வேண்டும்.

அதாவது இந்த எண் கொண்ட மாடு உங்களுக்கானது. அதன் எடை இவ்வளவு, அதன் விலை இவ்வளவு. உங்கள் வகையில் மீதம் இவ்வளவு உள்ளது. அல்லது நீங்கள் மேற்கொண்டு தர வேண்டியது இவ்வளவு உள்ளது என்று தெளிவாக்க வேண்டும். அதாவது பங்குதாரர் என்ன விலைக்குரிய  மாட்டில் பங்கு சேர்ந்துள்ளார் என்பதை அவருக்கு தெரிவிக்க வேண்டும்.

இல்லாவிட்டால் நம்பிக்கை துரோகம் செய்யும் நிலை ஏற்படும்.

70 பங்குகள் சேர்ந்தன; அதில் பத்து மாடுகள் வாங்கினோம் என்று குருட்டாம் போக்கில் கணக்கு காட்டாமல் ஒவ்வொரு மாட்டுக்கும் உரிய ஏழு பங்குதாரர்களுக்கு உரிய விபரங்களைத் தர வேண்டும்.

ஒவ்வொரு மாட்டிலும் பங்காளிகளாக எந்த ஏழு பேர் என்று பிரித்துக் காட்ட வேண்டும். ஜாபிர் (ரலி) ஹதீஸில் ஒவ்வொரு ஏழு நபர்கள் ஒரு மாட்டில் சேர்ந்து கொண்டோம் என்று தான் உள்ளது. 490 பேரும் கூட்டாக சேர்ந்து 70 ஒட்டகத்தை பலியிட்டோம் என்று சொல்லப்படவில்லை.

மாட்டின் விலையுடன் மாடு வாங்குவதில் இருந்து குர்பானி விநியோகம் செய்யும் வரை ஆகும் செலவுகளையும் பங்குதாரர் கணக்கில் சேர்க்கலாம்.

இஸ்லாம் காட்டும் இந்த நேர்மையான வழியில் குர்பானி கொடுத்தால் குர்பானி கொடுத்தவர்களுக்கு நன்மை கிடைப்பது போல் அதற்காக உதவியவர்களுக்கும் நன்மை கிடைக்கும்.

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...