இஸ்லாத்தின் பார்வையில் சகுனம்

வீட்டில் குளவி கூடு கட்டினால் குழந்தை பிறக்குமா?

இப்படி ஒரு நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவுகிறது.

இதனால் இது நடக்கும் என்று நம்புவதாக இருந்தால் இரண்டுக்கும் சம்மந்தம் இருக்க வேண்டும்.

வானம் இருட்டிக் கொண்டு வரும் போது, கருமேகம் சூழும் போது மழை வரலாம் என்று முடிவு செய்தால் அதில் அறிவு உள்ளது.

கார் ஹாரன் சப்தத்தைக் கேட்டு பின்னால் ஒரு கார் வருகிறது என்று முடிவு செய்தால் அதில் அர்த்தம் உள்ளது.

இப்படி இல்லாமல் இது நடந்தால் அது நடக்கும் என்று கூறுவது மடமையாகும். மூட நம்பிக்கையாகும்

காகம் கத்தினால் விருந்தினர் வருவார்கள் என்று நம்புவதாக இருந்தால் இதை எதனடிப்படையில் யார் கண்டு பிடித்தார்கள்? எந்த அடிப்படையில் ஆராய்ச்சி செய்தார்கள் என்று சொல்ல முடியுமா? எவனோ உளறிக் கொட்ட அதை நம்பிவிட்டார்கள்.

இஸ்லாம் மார்க்க நம்பிக்கைப்படி எதிர்காலத்தில் நடக்கவுள்ள எந்த ஒன்றையும் அறியும் ஆற்றலை எந்த மனிதனுக்கும் அல்லாஹ் வழங்கவில்லை. எந்த படைப்புக்கும் அல்லாஹ் வழங்கவில்லை.

இது நடந்தால் அது நடக்கும் என்பது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த மறைவான ஞானமாகும்.

மனிதருக்கும் மனிதனல்லாத படைப்புகளுக்கும் இந்த ஞானம் உள்ளதாக நம்புவது அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் கொடிய பாவமாகும்.

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அவன் அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அதை அவன் அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை.

திருக்குர்ஆன் 6:59

“வானங்களிலும், பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்” என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 27:65

யுகமுடிவு நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.

திருக்குர்ஆன் 31:34

சகுனங்கள் யாவும் மறைவானவற்றுக்குச் சொந்தம் கொண்டாடும் வகையில் உள்ளன. அதை நம்புவது மேற்கண்ட வசனங்களுக்கு எதிரானதாகும்.

குளவிகளுக்கு இந்த ஞானம் உண்டா? ஒவ்வொரு மனிதனின் எதிர்காலத்தை அறிந்து இந்த மனிதனுக்கு குழந்தை பிறக்கப் போகிறது என்று குளவியால் எப்படி அறிய முடியும்?

குளவிகள் இதற்காகத் தான் கூடு கட்டுகிறது என்ற ஞானம் மனிதனுக்கு எதில் இருந்து கிடைத்தது?

மனிதனல்லாத சில உயிரினங்கள் பூகம்பம் போன்ற பேரிடர்களை அது ஏற்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால் அறிந்து கொள்ளும் என்பதற்கு அறிவியல் ரீதியாக சான்று உண்டு. பூகம்பம் ஏற்படும் முன்பு இலேசாக ஏற்படும் அதிர்வுகளை சில உயிரினங்களால் உணர முடியும்.

ஆனால் இந்த வீட்டில் உள்ள இந்தத் தம்பதிக்கு குழந்தை பிறக்க உள்ளது என்பது குளவிக்கு எப்படித் தெரியும்? குளவிக்கு அல்லாஹ்வுடய ஞானம் உள்ளதாகத் தான் இதற்கு அர்த்தம்.

அந்தக் குளவி இதற்காகத் தான் கூடு கட்டுகிறது என்ற ஞானம் மனிதனுக்கு எதில் இருந்து கிடைத்தது.

எனவே எல்லா விதமான சகுனங்களும் இஸ்லாமின் அடிப்படயைத் தகர்த்து  அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் குற்றம் என்பதையும் அது நிரந்தர நரகத்தில் சேர்க்கும் என்பதையும் உணர்ந்து இது போன்ற மூட நம்பிக்கையை விட்டொழிக்க வேண்டும்.

நபிமார்கள், வானவர்கள், ஜின்கள் உள்ளிட்ட எந்தப் படைப்புக்கும் மறைவான ஞானம் இல்லை என்று திருக்குர்ஆன் சொல்லிக் காட்டுகிறது.

  • வானவருக்கு மறைவான ஞானம் இல்லை – 2:,30,31,32, 16:77
  • ஜின்களுக்கு மறைவான ஞானம் இல்லை – 34:14
  • நபிமார்களுக்கு மறைவான ஞானம் இல்லை – 5:109
  • ஆதம் நபிக்கு மறைவான ஞானம் இல்லை – 2:36, 7:20, 7:22, 7:27, 20:115, 20:120,121
  • நூஹ் நபிக்கு மறைவான ஞானம் இல்லை -. 11:31, 11:42, 11:46,47
  • இப்ராஹீம் நபிக்கு மறைவான ஞானம் இல்லை – 9:114, 11:69,70, 15:53, 15:54, 37:104, 51:26
  • ஈஸா நபிக்கு மறைவான ஞானம் இல்லை – 5:116, 5:117
  • லூத் நபிக்கு மறைவான ஞானம் இல்லை – 11:77, 11:81, 15:62
  • ஸுலைமான் நபிக்கு மறைவான ஞானம் இல்லை – 27:20, 27:22
  • யாகூப் நபிக்கு மறைவான ஞானம் இல்லை – 12:11-15, 12:66
  • தாவூத் நபிக்கு மறைவான ஞானம் இல்லை – 38:22-24
  • மூஸா நபிக்கு மறைவான ஞானம் இல்லை – 7:150, 20:67, 20:86, 28:15
  • நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை – 3:44, 4:164, 6:50, 6:58, 7:187, 7:188, 11:49, 12:102, 33:63, 42:17, 79:42,43

இவர்களுக்கு இல்லாத மறைவான ஞானம் நமக்கு எங்கிருந்து கிடைத்தது? குளவிக்கு எப்படிக் கிடைத்தது?

முஸ்லிமல்லாத  மக்கள் சகுன சாஸ்திரம் என்று எழுதி வைத்துள்ளது தான் முஸ்லிம்களிடம் இந்த அம்பிக்கை பரவுவதற்காக காரணம் ஆகும்.

எவை எல்லாம் சகுமனாக கருதப்படுகிறது என்ற விபரத்தைக் காணுங்கள்!

சுப சகுனமாகக் கருதப்படுபவை

  • கன்னிப்பெண் தண்ணீர் குடத்துடன் வருதல்.
  • பிணம் எதிரே வருதல்.
  • அழுக்குத் துணியோடு வண்ணான் வருதல்.
  • தாயும் பிள்ளையும் வருதல்.
  • கோயில் மணியடித்தல்.
  • சுமங்கலிகள் வருதல்.
  • கருடனைக் காண்பது.
  • திருவிழாவைக் காணல்.
  • எருக் கூடையைக் காணல்.
  • யானையைக் காண்பது.
  • நரி இடமிருந்து வலமாகச் செல்லல்.
  • பாம்புகளில் ஆணும், பெண்ணும் பிணைந்திருப்பதைக் காணல்.
  • கருடன் வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கம் செல்லல்.
  • காகம் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கம் செல்லல்.
  • கழுதை கத்துதல்.
  • பசு கன்றுக்குப் பால் கொடுத்தலைக் காணல்.
  • அணில் வீட்டிற்குள் வருதல்
  • மேலும் மலர், மஞ்சள், குடை, கிளி, மான், பழம், பசு, புலி, யானை, இரட்டை பிராமணர், பல்லாக்கு, வெண்ணெய், தயிர், மோர், மயில், இரட்டை விதவைப் பெண்கள், தேர், தாமரை மலர் போன்றவைகளைக் காணுதலும் நல்ல சகுனங்களாம்.
  • பசு, புலி, யானை, முயல், கோழி, நாரை, புள்ளிமான், கொக்கு ஆகியவை வலப்பக்கமாக வந்தால் நினைத்த காரியம் வெற்றியடையுமாம்.
  • எருமை, ஆடு, பன்றி, கரடி, நாய், குரங்கு, கீரிப்பிள்ளை ஆகியன இடப்பக்கமாக வந்தால் நல்ல சகுனங்களாம்.

அப சகுனமாக கருதப்படுபவை

  • பூனை குறுக்கே போதலும் எதிர்ப்படுதலும்.
  • ஒற்றைப் பிராமணனைக் காணல்.
  • விதவையைக் காணல்.

எண்ணெய்ப் பானை எதிர்ப்படல்.

விறகுடன் வருபவரைக்காணல்.

மண்வெட்டியுடன் எதிர்ப்படல்.

தும்மல் ஒலி கேட்டல்.

ஆந்தை அலறல்.

கருடன் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக செல்லல்.

காகம் வலமிருந்து இடமாகச் செல்லல்.

நாய் குறுக்கே செல்லுதல்.

போர் வீரனைக் காணுதல்.

நாய் ஊளையிடுவதைக் கேட்டல்.

அம்பட்டனைக் காணல்.

வெளுத்த துணிகளுடன் வண்ணான் வருதலைக் காணல்.

பாய் விற்பவரைக் காணல்.

அரப்பு விற்பவரைக் காணல்

விலக்குமாறு விற்பவரைக் காணல்.

முக்காடிட்டவரைக் காணல்.

தலைமுடியை விரித்துப் போட்டுள்ள பெண்ணைக் காணல்.

பயணத்தை மேற்கொள்ளும் போது கோடாரி, சுத்தி, கடப்பாரை, வீட்டிற்கு தூரமான மங்கை, பாம்பு, குரங்கு, ஆடு, கழுதை, நெருப்பு, நோயாளி, விறகுச் சுமை, ஏணி முதலியவற்றைக் காண்பது கெட்ட சகுனங்களாம்.

பல்லி விழும் சகுனம், பறவை சகுனம், உடும்பு சகுனம் என்று இவற்றில் ஏராளமான உட்பிரிவுகளை வைத்துள்ளனர்.

இது போன்ற சகுனங்களை நம்பி அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் மாபாதகத்தில் இருந்து விடுபடுவோமாக.

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...