இஸ்லாத்தின் பார்வையில் சகுனம்

வீட்டில் குளவி கூடு கட்டினால் குழந்தை பிறக்குமா?

இப்படி ஒரு நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவுகிறது.

இதனால் இது நடக்கும் என்று நம்புவதாக இருந்தால் இரண்டுக்கும் சம்மந்தம் இருக்க வேண்டும்.

வானம் இருட்டிக் கொண்டு வரும் போது, கருமேகம் சூழும் போது மழை வரலாம் என்று முடிவு செய்தால் அதில் அறிவு உள்ளது.

கார் ஹாரன் சப்தத்தைக் கேட்டு பின்னால் ஒரு கார் வருகிறது என்று முடிவு செய்தால் அதில் அர்த்தம் உள்ளது.

இப்படி இல்லாமல் இது நடந்தால் அது நடக்கும் என்று கூறுவது மடமையாகும். மூட நம்பிக்கையாகும்

காகம் கத்தினால் விருந்தினர் வருவார்கள் என்று நம்புவதாக இருந்தால் இதை எதனடிப்படையில் யார் கண்டு பிடித்தார்கள்? எந்த அடிப்படையில் ஆராய்ச்சி செய்தார்கள் என்று சொல்ல முடியுமா? எவனோ உளறிக் கொட்ட அதை நம்பிவிட்டார்கள்.

இஸ்லாம் மார்க்க நம்பிக்கைப்படி எதிர்காலத்தில் நடக்கவுள்ள எந்த ஒன்றையும் அறியும் ஆற்றலை எந்த மனிதனுக்கும் அல்லாஹ் வழங்கவில்லை. எந்த படைப்புக்கும் அல்லாஹ் வழங்கவில்லை.

இது நடந்தால் அது நடக்கும் என்பது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த மறைவான ஞானமாகும்.

மனிதருக்கும் மனிதனல்லாத படைப்புகளுக்கும் இந்த ஞானம் உள்ளதாக நம்புவது அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் கொடிய பாவமாகும்.

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அவன் அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அதை அவன் அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை.

திருக்குர்ஆன் 6:59

“வானங்களிலும், பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்” என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 27:65

யுகமுடிவு நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.

திருக்குர்ஆன் 31:34

சகுனங்கள் யாவும் மறைவானவற்றுக்குச் சொந்தம் கொண்டாடும் வகையில் உள்ளன. அதை நம்புவது மேற்கண்ட வசனங்களுக்கு எதிரானதாகும்.

குளவிகளுக்கு இந்த ஞானம் உண்டா? ஒவ்வொரு மனிதனின் எதிர்காலத்தை அறிந்து இந்த மனிதனுக்கு குழந்தை பிறக்கப் போகிறது என்று குளவியால் எப்படி அறிய முடியும்?

குளவிகள் இதற்காகத் தான் கூடு கட்டுகிறது என்ற ஞானம் மனிதனுக்கு எதில் இருந்து கிடைத்தது?

மனிதனல்லாத சில உயிரினங்கள் பூகம்பம் போன்ற பேரிடர்களை அது ஏற்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால் அறிந்து கொள்ளும் என்பதற்கு அறிவியல் ரீதியாக சான்று உண்டு. பூகம்பம் ஏற்படும் முன்பு இலேசாக ஏற்படும் அதிர்வுகளை சில உயிரினங்களால் உணர முடியும்.

ஆனால் இந்த வீட்டில் உள்ள இந்தத் தம்பதிக்கு குழந்தை பிறக்க உள்ளது என்பது குளவிக்கு எப்படித் தெரியும்? குளவிக்கு அல்லாஹ்வுடய ஞானம் உள்ளதாகத் தான் இதற்கு அர்த்தம்.

அந்தக் குளவி இதற்காகத் தான் கூடு கட்டுகிறது என்ற ஞானம் மனிதனுக்கு எதில் இருந்து கிடைத்தது.

எனவே எல்லா விதமான சகுனங்களும் இஸ்லாமின் அடிப்படயைத் தகர்த்து  அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் குற்றம் என்பதையும் அது நிரந்தர நரகத்தில் சேர்க்கும் என்பதையும் உணர்ந்து இது போன்ற மூட நம்பிக்கையை விட்டொழிக்க வேண்டும்.

நபிமார்கள், வானவர்கள், ஜின்கள் உள்ளிட்ட எந்தப் படைப்புக்கும் மறைவான ஞானம் இல்லை என்று திருக்குர்ஆன் சொல்லிக் காட்டுகிறது.

  • வானவருக்கு மறைவான ஞானம் இல்லை – 2:,30,31,32, 16:77
  • ஜின்களுக்கு மறைவான ஞானம் இல்லை – 34:14
  • நபிமார்களுக்கு மறைவான ஞானம் இல்லை – 5:109
  • ஆதம் நபிக்கு மறைவான ஞானம் இல்லை – 2:36, 7:20, 7:22, 7:27, 20:115, 20:120,121
  • நூஹ் நபிக்கு மறைவான ஞானம் இல்லை -. 11:31, 11:42, 11:46,47
  • இப்ராஹீம் நபிக்கு மறைவான ஞானம் இல்லை – 9:114, 11:69,70, 15:53, 15:54, 37:104, 51:26
  • ஈஸா நபிக்கு மறைவான ஞானம் இல்லை – 5:116, 5:117
  • லூத் நபிக்கு மறைவான ஞானம் இல்லை – 11:77, 11:81, 15:62
  • ஸுலைமான் நபிக்கு மறைவான ஞானம் இல்லை – 27:20, 27:22
  • யாகூப் நபிக்கு மறைவான ஞானம் இல்லை – 12:11-15, 12:66
  • தாவூத் நபிக்கு மறைவான ஞானம் இல்லை – 38:22-24
  • மூஸா நபிக்கு மறைவான ஞானம் இல்லை – 7:150, 20:67, 20:86, 28:15
  • நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை – 3:44, 4:164, 6:50, 6:58, 7:187, 7:188, 11:49, 12:102, 33:63, 42:17, 79:42,43

இவர்களுக்கு இல்லாத மறைவான ஞானம் நமக்கு எங்கிருந்து கிடைத்தது? குளவிக்கு எப்படிக் கிடைத்தது?

முஸ்லிமல்லாத  மக்கள் சகுன சாஸ்திரம் என்று எழுதி வைத்துள்ளது தான் முஸ்லிம்களிடம் இந்த அம்பிக்கை பரவுவதற்காக காரணம் ஆகும்.

எவை எல்லாம் சகுமனாக கருதப்படுகிறது என்ற விபரத்தைக் காணுங்கள்!

சுப சகுனமாகக் கருதப்படுபவை

  • கன்னிப்பெண் தண்ணீர் குடத்துடன் வருதல்.
  • பிணம் எதிரே வருதல்.
  • அழுக்குத் துணியோடு வண்ணான் வருதல்.
  • தாயும் பிள்ளையும் வருதல்.
  • கோயில் மணியடித்தல்.
  • சுமங்கலிகள் வருதல்.
  • கருடனைக் காண்பது.
  • திருவிழாவைக் காணல்.
  • எருக் கூடையைக் காணல்.
  • யானையைக் காண்பது.
  • நரி இடமிருந்து வலமாகச் செல்லல்.
  • பாம்புகளில் ஆணும், பெண்ணும் பிணைந்திருப்பதைக் காணல்.
  • கருடன் வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கம் செல்லல்.
  • காகம் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கம் செல்லல்.
  • கழுதை கத்துதல்.
  • பசு கன்றுக்குப் பால் கொடுத்தலைக் காணல்.
  • அணில் வீட்டிற்குள் வருதல்
  • மேலும் மலர், மஞ்சள், குடை, கிளி, மான், பழம், பசு, புலி, யானை, இரட்டை பிராமணர், பல்லாக்கு, வெண்ணெய், தயிர், மோர், மயில், இரட்டை விதவைப் பெண்கள், தேர், தாமரை மலர் போன்றவைகளைக் காணுதலும் நல்ல சகுனங்களாம்.
  • பசு, புலி, யானை, முயல், கோழி, நாரை, புள்ளிமான், கொக்கு ஆகியவை வலப்பக்கமாக வந்தால் நினைத்த காரியம் வெற்றியடையுமாம்.
  • எருமை, ஆடு, பன்றி, கரடி, நாய், குரங்கு, கீரிப்பிள்ளை ஆகியன இடப்பக்கமாக வந்தால் நல்ல சகுனங்களாம்.

அப சகுனமாக கருதப்படுபவை

  • பூனை குறுக்கே போதலும் எதிர்ப்படுதலும்.
  • ஒற்றைப் பிராமணனைக் காணல்.
  • விதவையைக் காணல்.

எண்ணெய்ப் பானை எதிர்ப்படல்.

விறகுடன் வருபவரைக்காணல்.

மண்வெட்டியுடன் எதிர்ப்படல்.

தும்மல் ஒலி கேட்டல்.

ஆந்தை அலறல்.

கருடன் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக செல்லல்.

காகம் வலமிருந்து இடமாகச் செல்லல்.

நாய் குறுக்கே செல்லுதல்.

போர் வீரனைக் காணுதல்.

நாய் ஊளையிடுவதைக் கேட்டல்.

அம்பட்டனைக் காணல்.

வெளுத்த துணிகளுடன் வண்ணான் வருதலைக் காணல்.

பாய் விற்பவரைக் காணல்.

அரப்பு விற்பவரைக் காணல்

விலக்குமாறு விற்பவரைக் காணல்.

முக்காடிட்டவரைக் காணல்.

தலைமுடியை விரித்துப் போட்டுள்ள பெண்ணைக் காணல்.

பயணத்தை மேற்கொள்ளும் போது கோடாரி, சுத்தி, கடப்பாரை, வீட்டிற்கு தூரமான மங்கை, பாம்பு, குரங்கு, ஆடு, கழுதை, நெருப்பு, நோயாளி, விறகுச் சுமை, ஏணி முதலியவற்றைக் காண்பது கெட்ட சகுனங்களாம்.

பல்லி விழும் சகுனம், பறவை சகுனம், உடும்பு சகுனம் என்று இவற்றில் ஏராளமான உட்பிரிவுகளை வைத்துள்ளனர்.

இது போன்ற சகுனங்களை நம்பி அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் மாபாதகத்தில் இருந்து விடுபடுவோமாக.

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...