நபிமார்களிடம் எடுத்த உறுதிமொழி என்ன?

(ஒற்றுமை மாதம் இருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட திருக்குர்ஆன் வசனங்களுக்கு பீஜே எழுதிய விளக்கம்)

81. “உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும்67 நான் தந்த பின் உங்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் தூதர் உங்களிடம் வந்தால் அவரை நம்புவீர்களா? அவருக்கு உதவுவீர்களா?” என்று நபிமார்களிடம் அல்லாஹ் உறுதிமொழி எடுத்து95 “இதை ஒப்புக் கொண்டீர்களா? எனது பலமான உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டீர்களா?” என்று கேட்டபோது, “ஒப்புக் கொண்டோம்” என்று அவர்கள் கூறினர். “நீங்களே இதற்குச் சாட்சியாக இருங்கள்! உங்களுடன் நானும் சாட்சியாக இருக்கிறேன்” என்று அவன் கூறினான்.

திருக்குர்ஆன் 3:81

இவ்வசனத்திற்கு பல ஆண்டுகளாக அறிஞர்களில் பலர் தவறான விளக்கம் அளித்து வருகின்றனர். அவர்களின் தவறான விளக்கத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ரஷாத் கலீஃபா என்பவன் தன்னை ஒரு ரஸுல் (இறைத் தூதர்) என்று அறிவித்துக் கொண்டான். இவ்வசனம் உண்மையில் கூறுவது என்ன என்பதை மார்க்க அறிஞர்களில் பலரும் கவனிக்கவில்லை. ரஷாத் என்பவனும் விளங்கிடவில்லை.

நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதிக் காலத்தில் வரவுள்ளனர். அவ்வாறு அவர்கள் வரும் போது அனைவரும்  அவர்களை ஏற்று உதவ வேண்டும் என்பது தான் இங்கே கூறப்படும் உடன்படிக்கை என்பது பெரும்பாலான அறிஞர்களின் விளக்கம்.

இவர்களது தவறான விளக்கத்தைத் தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட ரஷாத் கலீஃபா என்பவன் தன்னை ஒரு ரஸுல் என்று எவ்வாறு பிரகடனம் செய்தான் என்று முதலில் பார்ப்போம்.

7, 8. நபிமார்களிடம் (குறிப்பாக) உம்மிடமும், நூஹ், இப்ராஹீம், மூஸா, மர்யமின் மகன் ஈஸா ஆகியோரிடமும் அவர்களது உறுதிமொழியை95 நாம் எடுத்ததை நினைவூட்டுவீராக! உண்மையாளர்களை அவர்களது உண்மை பற்றி விசாரிப்பதற்காக அவர்களிடம் கடுமையான உடன்படிக்கையை எடுத்தோம். (தன்னை) மறுப்போருக்கு அவன் துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளான்.26

திருக்குர்ஆன் 33:7

இவ்வசனத்தில் நபிமார்களிடம் எடுக்கப்பட்ட உடன்படிக்கையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அடக்கம் என்பது தெரிய வருகிறது. ஏனெனில், உம்மிடமும் என்று இங்கே தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்பட அனைத்து நபிமார்களிடமும் எடுக்கப்பட்டதே இவ்வுடன்படிக்கை. இனி மேல் வரக்கூடிய தூதரை ஏற்க வேண்டும் என்று நபிகள் நாயகத்திடமும் உடன்படிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் நபிகள் நாயகத்துக்குப் பிறகு ஒரு தூதர் வரவிருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது. அந்தத் தூதர் நானாவேன் என்று ரஷாத் கலீஃபா என்பவன் வாதிட்டான்.

பெரும்பாலான அறிஞர்களின் விளக்கமும், அந்த விளக்கத்தின் அடிப்படையில் இவன் எழுப்பிய வாதமும் இரண்டுமே முற்றிலும் தவறானதாகும்.

மேற்கண்ட வசனம் எதிர்காலத்தில் வரவிருக்கிற ஒரு தூதர் பற்றிய முன்னறிவிப்பாகும் என்பது தான் இருவரின் வாதத்துக்கும் அடிப்படை.

முன்னறிவிப்பில் கூறப்படுபவர் யார் என்பதில் தான் இவர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.

ஆனால் இவ்வசனத்தை கவனமாகப் பார்க்கும் போது இது யாரைப் பற்றியும் முன்னறிவிப்புச் செய்யவில்லையென்பதே உண்மையாகும்.

இவ்வசனம் என்ன சொல்கிறது என்பதை இவ்வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வாசகங்களை வைத்துத் தான் புரிந்து கொள்ள வேண்டும். வாசக அமைப்புக்கு எதிரான கருத்தை இதற்கு விளக்கமாகக் கூறக் கூடாது. அவ்வாறு யார் கூறினாலும் அது முற்றிலும் தவறானதாகும்.

இவ்வசனம் என்ன சொல்கிறது என்பதை இவ்வசனத்திலிருந்தே அறிவது தான் சரியானதாகும்.

நபிமார்களிடம் இறைவன் உறுதிமொழி எடுத்திருக்கிறான். இதில் எல்லா நபிமார்களும் அடங்குவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அடங்க மாட்டார்கள் என்று கருதுவதற்கு இவ்வசனம் இடம் தரவில்லை. நபிகள் நாயகத்திடமும் உறுதிமொழி எடுக்கப்பட்டதை 33:7 வசனம் தெளிவாகவும் அறிவித்து விடுகிறது.

எனவே, நபிகள் நாயகம் (ஸல்) உட்பட எல்லா நபிமார்களிடமும் எடுக்கப்பட்ட உடன்படிக்கையையே இவ்வசனம் கூறுகிறது. நபிகள் நாயகத்தை விட்டுவிட்டு மற்ற நபிமார்களிடம் உடன்படிக்கை எடுத்ததாகக் கூறுவது இவ்வசனத்தில் இல்லாத கருத்தும் இவ்வசனத்திற்கு முரணான கருத்துமாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வருகையைப் பற்றி ஏனைய நபிமார்களிடம் தான் உடன்படிக்கை எடுக்கப்பட்டது என்று பெரும்பாலான அறிஞர்கள் இதை விளங்கியதால் இதை நபிகள் நாயகம் (ஸல்) பற்றிய முன்னறிவிப்பு என்று கூறினார்கள்.

இவர்கள் இவ்வாறு முன்னறிவிப்பு என்று தவறாகக் கூறியதைத் தான் ரஷாத் கலிஃபா என்பவன் தனக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டான். இது முன்னறிவிப்பு தான் ஆனால் அது நபிகள் நாயகத்தைக் குறித்த முன்னறிவிப்பு இல்லை. மாறாக, என்னைக் குறித்த முன்னறிவிப்பாகும் என்று வாதிட்டான்.

உம்மிடமும் என்று 33:7 வசனத்தில் கூறப்பட்டுள்ளதால், இந்த முன்னறிவிப்பு நபிகள் நாயகம் (ஸல்) பற்றியதாக இருக்க முடியாது என்றான்.

அதாவது இவ்வசனம் ஒரு முன்னறிவிப்பு என்பதில் இவனும் பெரும்பாலான அறிஞர்களும் ஒன்றுபடுகிறார்கள். யாரைப் பற்றிய முன்னறிவிப்பு என்பதில் தான் இருவருக்கும் கருத்து வேறுபாடு உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) உட்பட அனைத்து நபிமார்களிடமும் உறுதிமொழி எடுக்கப்பட்டது என்பது உண்மை தான். ஆனால் இதில் எந்த முன்னறிவிப்பும் இல்லை. எனவே, எடுக்கப்பட்ட உடன்படிக்கை என்ன என்பதை அவ்வசனத்திலிருந்தே நாம் ஆராய்வோம்.

உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் நான் தந்த பின் இன்னொரு தூதர் உங்களிடம் வந்தால் அவரை ஏற்று உதவ வேண்டும் என்பது தான் உடன்படிக்கை.

அல்லாஹ் ஒரு வார்த்தையைக் கூட தேவையில்லாமல் பயன்படுத்த மாட்டான். நபிமார்களிடம் உடன்படிக்கை எடுக்கும் போது “உங்களிடம் ஒரு தூதர் வந்தால்” என்று அல்லாஹ் கூறுகிறான். உங்களிடம் என்ற வார்த்தை முதலில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

ஒரு நபிக்குப் பின் இன்னொரு நபி வருவதை இவ்வாசகம் கூறவில்லை. ஒரு நபி வாழ்ந்து கொண்டிருக்கும் போது அவரிடம் இன்னொரு நபி வருவதையே இவ்வாசகம் குறிக்கிறது.

ஸும்ம ஜாஅகும் – பின்னர் உங்களிடம் வந்தால் என்று அல்லாஹ் கூறுவதைத் தான் மார்க்க அறிஞர்களில் பலர் கவனத்தில் கொள்ளத் தவறி விட்டனர்.

“உங்களை நான் நபியாக நியமனம் செய்து விட்டேன். இது உங்கள் தகுதியினாலோ, உழைப்பினாலோ கிடைத்தது அல்ல. மாறாக, நானாக உங்களுக்கு வழங்கியதாகும். நபியாக நியமனம் செய்யப்பட்டதால் இனி மேல் நமது தகுதிக்கு எந்தக் குறையும் ஏற்படாது என்று நினைக்காதீர்கள்! நீங்கள் நபியாக இருக்கும் போதே உங்களிடம் இன்னொரு தூதரை நான் அனுப்பினால் உடனே அவரை நீங்கள் ஏற்க வேண்டும். அவருக்கு உதவி செய்திட முன்வரவேண்டும். இந்த நிபந்தனையின் அடிப்படையிலேயே உங்களுக்கு அந்தத் தகுதி வழங்கப்படுகிறது” என்பது தான் இவ்வசனத்தின் கருத்தாகும். இதை இவ்வசனத்தின் வாசக அமைப்பே உறுதி செய்கிறது.

இது நபிகள் நாயகத்தைப்  பற்றிய முன்னறிவிப்பு என்று கருதினால் நபிமார்கள் தமது உடன்படிக்கையை நிறைவேற்றவில்லை என்று ஆகிவிடும். “அவரை நம்பி அவருக்கு உதவ வேண்டும்” என்பது தான் உடன்படிக்கையின் ஷரத்து. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வுலகிற்கு வந்த போது எந்த நபியும் உலகில் இருக்கவில்லை. நபிகள் நாயகத்துக்கு உதவவுமில்லை.

அது போல் ரஷாத் கலீஃபா என்பவனையோ வேறு யாரையோ இது குறிக்கிறது என்று வைத்துக் கொண்டால் அவனை நபிகள் நாயகம் (ஸல்) ஏற்று அவனுக்கு உதவியாக இருந்திருக்க வேண்டும். ரஷாத் கலீஃபாவுக்கு நபிகள் நாயகம் உதவவுமில்லை. அவன் மீது ஈமான் கொள்ளவுமில்லை. எனவே இவ்வசனம் யாரைப் பற்றிய முன்னறிவிப்பும் இல்லை.

மாறாக “நபித்துவம்’ என்பது மனிதனின் உழைப்புக்காகவோ திறமைக்காகவோ வழங்கப்படுவதல்ல. அல்லாஹ்வின் கருணையால் வழங்கப்படுவது. வேறொருவருக்கு அதை நான் வழங்கினால் அதற்கு கட்டுப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இதை வழங்குகிறேன் என்பது தான் உடன்படிக்கை.

1. உங்களிடம் அவர் வந்தால்.

2. அவரை நீங்கள் நம்ப வேண்டும்.

3. அவருக்கு நீங்கள் உதவ வேண்டும்.

ஆகிய வாசகங்கள் இதைத் தெளிவாகக் கூறுகின்றன.

ஒரு நபியை இறைவன் அனுப்பிய பின் அவருக்கு பக்கபலமாக இருப்பதற்காக மேலும் சிலரை அல்லாஹ் அனுப்பியதை 36:14 வசனம் கூறுகிறது. அவ்வாறு அனுப்பப்பட்டவர்களை முதலில் அனுப்பப்பட்டவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

நமக்குக் கிடைத்த தகுதியை இன்னும் சிலருக்கு அல்லாஹ் பங்கு போட்டுக் கொடுத்து விட்டானே என்றெல்லாம் முதலில் அனுப்பப்பட்டவர்கள் உரிமைக் குரல் எழுப்பக்கூடாது என்று ஏற்கனவே இறைவன் கடுமையான உறுதிமொழி எடுத்த தன் காரணமாகவே 36 வது அத்தியாயத்தில் கூறப்பட்டவாறு ஒரு சமுதாயத்துக்கு ஒரு காலக்கட்டத்தில் பல நபிமார்கள்  அனுப்பப்பட்டனர்.

நபிகள் நாயகம் (ஸல்) வாழும் காலத்தில் துணைக்கு மேலும் சிலரை அல்லாஹ் நியமித்திருந்தால் அதை மனப்பூர்வமாக நபிகள் நாயகம் (ஸல்) ஏற்றுக் கொள்ள வேண்டும்.

யாருடைய விளக்கத்தையும் கவனத்தில் கொள்ளாமல் இவ்வசனத்தைச் சிந்தித்தால் இந்தக் கருத்துக்குத் தான் வர முடியும்.

எனவே, ரஷாத் கலீஃபா என்பவன் தன்னைத் தூதர் என்று கூறிக் கொண்டதற்கு இவ்வசனத்தில் எள்ளளவும் எள் முனையளவும் ஆதாரம் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) பற்றிய முன்னறிவிப்பு என்பதற்கும் இதில் ஆதாரம் ஏதுமில்லை.

இந்த இடத்தில் இவ்வசனத்திற்கு எதிராக முஸ்லிம்களில் பலரிடம் காணப்படும் தவறான நம்பிக்கையையும் சுட்டிக்காட்டும் கடமை நமக்கு இருக்கிறது.

ஹில்ரு நபி என்று ஒருவர் இருக்கிறார். அவர் ஹயாத் நபி. அவர் உலகில் – பூமியில் – இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது தான் அந்த நம்பிக்கை.

அந்த நம்பிக்கை தவறானது என்பதை இவ்வசனம் சந்தேகமற அறிவிக்கிறது.

ஹில்ரு நபி உயிருடன் இருக்கும் போது முஹம்மது நபியவர்கள் அல்லாஹ்வின் தூதராக அனுப்பப்படுகிறார்கள் என்றால் நபிமார்களிடம் எடுக்கப்பட்ட உறுதிமொழியின் படி அவர் என்ன செய்திருக்க வேண்டும்?

நபிகள் நாயகத்தைத் தேடி அவர் ஓடி வந்திருக்க வேண்டும்.

அவர்கள் கஷ்டப்பட்ட நேரத்தில் உதவிகள் புரிந்திருக்க வேண்டும்.

பத்ரு, உஹதுப் போர்களில் பங்கெடுத்திருக்க வேண்டும்.

அவ்வாறு ஏதும் நடக்கவில்லை. நடந்ததாக எந்தச் சான்றும் இல்லை. உயிருடன் அவர் இருந்திருந்தால் அவர் இந்த உடன்படிக்கையை நிறைவேற்றியிருக்க வேண்டும்.

இவ்வசனத்திலிருந்து ஹில்ரு நபி உயிருடன் இல்லை என்பதையும் கூடுதலாக அறிந்து கொள்ளலாம். அல்லது அவர் நபியில்லை என்று கூற வேண்டும். (ஈஸா நபியவர்கள் ஏன் உதவவில்லை என்று கேட்க முடியாது. அவர்கள் இம்மண்ணுலகில் இல்லை. மேலும் ஈஸா நபியவர்கள் உயிருடன் உள்ளனர் என்பதற்கு குர்ஆனில் ஏராளமான சான்றுகள் உள்ளன. அவற்றைப் பின்னர் நாம் விளக்கவுள்ளோம்.

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...