நபித்துவ முத்திரை என்பது உண்மையா?

அல்ஜன்னத் இதழில் பீஜே ஆசிரியராக இருந்த போது 1996 ஜனவரியில் அளித்த பதில்

கேள்வி: நபிகள் நாயகம் (ஸல்) அவாகளின் இரு புஜங்களுக்கிடையே நபித்துவத்தின் முத்திரையை நான் பார்த்தேன். அது புறாமுட்டை போன்று இருந்தது என்று ஸாயிப் பின் யஸீது (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் புகாரியில் 190 வது ஹதீஸாக இடம் பெற்றுள்ளது. இது ஆதாரப்பூவமான ஹதீஸா? ஆம் எனில் அந்த முத்திரை நபிகள் நாயகம் (ஸல்) பிறக்கும் போதே இருந்ததா?

மு.யூசுப் ரஹ்மத்துல்லாஹ் சேட், மத்திய சிறை, திருச்சி

(கேள்வி கேட்டவர் நாகூர் கலவரத்தில் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தள்ளாத வயதில் கைத்தடி ஊன்றி நடக்கும் நிலையில் இருந்த அவரை கலவர வழக்கில் அப்போதைய அரசு கைது செய்தது. அவர் சிறையில் இருந்த போது இக்கேள்வியைக் கேட்டார்.)

நபிகள் நாயகம் (ஸல்) அவாகளின் தோள்புஜத்தில் புறா முட்டை போன்ற சதை இருந்தது என்பதற்கு ஏராளமான ஹதீஸ்கள் சான்றுகளாக உள்ளன.

باب حدثنا عبد الرحمن بن يونس قال حدثنا حاتم بن إسماعيل عن الجعد قال سمعت السائب بن يزيد يقول ذهبت بي خالتي إلى النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله إن ابن أختي وجع فمسح رأسي ودعا لي بالبركة ثم توضأ فشربت من وضوئه ثم قمت خلف ظهره فنظرت إلى خاتم النبوة بين كتفيه مثل زر الحجلة

190 சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் சிறிய தாயார் என்னை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று அல்லாஹ்வின் தூதரே! என் சகோதரி மகன் நோய் கண்டுள்ளான் என்று சொன்னார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (பரிவுடன்) எனது தலையை வருடிக் கொடுத்து எனது பரக்கத் வேண்டி பிரார்த்தித்தார்கள். பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். அவர்கள் உளூ செய்துவிட்டு மீதி வைத்த தண்ணீரில் சிறிதை நான் அருந்தினேன். பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய இரு புஜங்களுக்கிடையே இருந்த நபித்துவ முத்திரையை நான் பார்த்தேன். அது ஒரு புறா முட்டை போன்றிருந்தது.

நூல் : புகாரி 190

ஸல்மான் பார்ஸி அவர்கள் அந்த அடையாளத்தைப் பார்த்துவிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நபியென அறிந்து கொண்டதாக அஹ்மதில் சில ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன. முஹம்மத் (ஸல்) அவர்களின் தனிப்பட்ட அடையாளமாக முந்தைய வேதங்களில் இது குறிப்பிட்டிருக்க வேண்டும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து நாம் ஊகம் செய்யலாம்.

இந்த அடையாளத்தை நபித்துவ முத்திரை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக எந்த ஒரு ஹதீஸிலும் கூறப்படவில்லை. வருவோர் போவோரிடமெல்லாம் அந்த அடையாளத்தைக் காட்டி இந்த அடையாளம் இருப்பதால் நான் நபி என நபிகள் நாயகம் (ஸல்) வாதிட்டதாகவும் எந்த ஹதீஸும் இல்லை.

தம் வாழ்நாளில் முதுகுப் பகுதியைப் பெரும்பாலும் அவர்கள் மறைத்தே இருந்தனர். அது விலகக் கூடிய ஓரிரு சந்தர்ப்பங்களில் ஓரிரு நபித்தோழர்கள் அதைப் பார்த்துள்ளனர். நபி என்பதற்கே அது தான் அடையாளம் என்றால் அதைக் காட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபித்துவத்தை வாதிட்டிருப்பார்கள்.

ஒரு நபரைப் பற்றி அடையாளம் கூறும் போது அவரது கண், வாய், உயரம், நிறம், மச்சம் மற்றும் பல அடையாளங்களைக் கூறுவோம். அது போன்ற அடையாளமே இது.

வேறு யாரிடமும் இல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் மட்டும் அது காணப்பட்டதால் நபித்தோழர்களில் சிலர் அதை நபித்துவ முத்திரை என்று புரிந்து குறிப்பிட்டனர். இப்படித் தான் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நபி என்பதற்கான ஆதாரமாக இறைவன் இட்ட முத்திரை என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது. அவ்வாறு இருந்திருந்தால் அதை அனைத்து மக்களிடமும் நபிகள் நாயகம் (ஸல்) காட்டி தமது நுபுவ்வத்தை நிரூபித்திருப்பார்கள்.

அந்த சதைப் பகுதியில் முஹம்மது ரஸுலுல்லாஹ் என்று பதியப்பட்டிருக்கும் என்றெல்லாம் சிலர் கூறுவர் . இது ஆதாரமற்ற பொய்யாகும். எந்த ஹதீஸ் நூலிலும் இவ்வாறு கூறப்படவில்லை.

ஆயினும் அன்றைய நாளில் வேறு எவரிடமும் காணப்படாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் மாத்திரம் அது இருந்தது என்பதும் இறுதி நபிக்குரிய பல அடையாளங்களில் ஒன்றாக அதுவும் கூறப்பட்டிருந்தது என்பதும் ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

27.09.2010. 22:59 PM

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...