பெண்களின் கால்களில் முத்தமிட்ட போப்

பெண்களை தேவாலயப் பணிகளில் ஈடுபடுத்த புதிய யுக்தி(?)

கடந்த மார்ச் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள கிறித்தவர்கள் இயேசு சிலுவையில் அறையப்பட்ட தினமான புனித வெள்ளிக்கு முந்தைய தினமான புனித வியாழன் தினத்தை அனுசரித்தார்கள். ஏசு சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய தினம் நடைபெற்றதாகச் சொல்லப்படும் விருந்து நிகழ்ச்சியில் தனது 12 சீடர்களின் கால்களைக் கழுவி ஏசு முத்தமிட்ட நிகழ்ச்சியை நினைவு கூரும் புனித வியாழன் வழிபாடு வாடிகன் நகரத்தில் மார்ச் 28 ஆம் தேதி நடைபெற்றது.

வழக்கமாக வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் பாதிரியார்களின் கால்களை கழுவி ஆண்டுதோறும் போப் முத்தமிடுவார். ஆனால், இந்த முறை புதிதாகப் பொறுப்பேற்றுள்ள போப் பிரான்சிஸ் இது வரையிலான மரபுகளை மாற்றினார்.

பெண்களின் கால்களை முத்தமிட்டு புதிய புரட்சி(?):

இதற்கு முன்பு போப்பாக இருந்தவர்களெல்லாம் ஆண்களுடைய கால்களில் தான் முத்தமிட்டனர். ஆனால் புதிய போப்போ இரண்டு பெண்களது கால்களை முத்தமிட்டு சரித்திர சாதனை புரிந்துள்ளார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

பெரிய வியாழன் என்று சொல்லப்படக்கூடிய தினமான மார்ச் 28ஆம் தேதி ரோம் நகரில் உள்ள சிறைச்சாலையில் இருந்த 14 வயது முதல் 21 வயதுள்ள இளம் குற்றவாளிகளுக்கும், அங்கிருந்த 2 இளம்பெண்களுக்கும் அவர்களது பாதங்களை கழுவி போப் முத்தமிட்டார்.

இதற்கு முன்னர் இருந்த எந்த போப்பும் பெண்களது பாதங்களைக் கழுவி முத்தமிட்டதில்லை. முதல் முறையாக சர்ச் மரபுகளுக்கு மாறாக போப் பிரான்சிஸ் செய்தது சரியா தவறா என்று விவாதம் தற்போது எழுந்துள்ளது.

கேள்விக்குரிய ஒரு முன்னுதாரணத்தை போப் ஏற்படுத்தி இருக்கிறார் என்று போப் செய்த செயலை எதிர்ப்பவர்கள் கருத்துக் கூறியுள்ளனர்.

ஆனால், சர்ச் நடவடிக்கைகளில் பெண்களையும் இடம்பெறச் செய்ய போப்பின் இந்த முத்த நடவடிக்கை உதவும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

முத்தம் கொடுத்துவிட்டு ஆற்றிய உரை:

பெண்களது காலில் முத்தம் கொடுத்துவிட்டு போப் பேசியதாவது :

உங்கள் பாதங்களைக் கழுவியதன் அர்த்தம், நான் உங்களுக்காக சேவை செய்யவே இருக்கிறேன் என்பதை உணர்த்தத்தான். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யுங்கள்.

இயேசு இதைத்தான் நமக்கு கற்றுத் தந்தார். அதைத்தான் நான் செய்கிறேன். ஒரு போதகராக, ஒரு பிஷப்பாக மனப்பூர்வமாக நான் இதை செய்கிறேன். இதற்கு விளக்கம் தேவையில்லை. சேவை செய்ய வேண்டியது என் கடமை என்று தனது செயலுக்கு விளக்கமளித்துள்ளார்.

அதாவது பெண்களுக்கு யாராவது சேவை செய்ய விரும்பினால் அவர்களது கால்களைக் கழுவி முத்தமிட வேண்டும் என்பதுதான் புதிய போப்பின் புதிய அறிவுரை.

போப் மீது குற்றச்சாட்டு :

இயேசு தனது ஆண் சீடர்களின் கால்களைத் தான் கழுவினாரே தவிர, பெண்களுடைய கால்களைக் கழுவி பெண்களுக்கு முத்தம் கொடுக்கவில்லை. இயேசுவுடைய வழிகாட்டுதலை மீறி போப் பெண்களது காலில் முத்தம் கொடுத்துள்ளார். இது தவறான அணுகுமுறை என்று கிறித்தவர்களில் ஒரு தரப்பினர் பகிரங்க குற்றச்சாட்டுக்களைக் கூறி வருகின்றனர்.

ஆனால் இவர்களது குற்றச்சாட்டுகளுக்கு அசராத போப் அவர்களோ, பெண்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற சேவை மனப்பான்மையை வெளிப்படுத்தத்தான் பெண்களது கால்களையும் கழுவி அவர்களுக்கு முத்தம் கொடுத்தேன் என்ற கருத்துப்பட விளக்கமளித்துள்ளார்.

பெண்களுக்கு போப் ஆண்டவர் முத்தம் கொடுத்தது தவறு என்று இவரை எதிர்க்கக்கூடியவர்கள் வைக்கக்கூடிய மற்றொரு வாதம் ரொம்ப நகைச்சுவையானதும், அதே நேரத்தில் வெட்கித் தலைகுனிய வேண்டியதுமாக உள்ளது.

விசித்திர விளக்கம் :

போப் ஆண்டவர் பெண்களுக்கு முத்தம் கொடுத்தது இயேசுவுடைய வழிகாட்டுதலில் இல்லாத செயல். எனவே போப் ஆண்டவர் பெண்களுக்கு முத்தம் கொடுத்தது தவறு. போப் ஆண்டவருக்கு பெண்கள் முத்தம் கொடுத்தால் அது தவறில்லை.

மேற்கண்ட விளக்கத்தைக் கூறி அனைவரையும் திகைக்க வைத்துள்ளனர். காரணம் என்னவென்றால் ஏசுவுக்கு ஒரு பெண் தைலம் பூசிவிட்டு ஏசுவுடைய பாதங்களை முத்தமிட்டுள்ளார். அதை ஏசுவுடைய சீடர்கள் கண்டித்தபோது, முத்தம் கொடுத்த பெண்ணை கண்டித்த சீடர்களை ஏசு கண்டித்துள்ளார்.

நீங்கள் எப்போதாவது இது போன்று எனக்கு முத்தம் கொடுத்துள்ளீர்களா? இல்லையே! இந்தப் பெண் எனக்கு முத்தம் கொடுப்பதை நீங்கள் ஏன் தடுக்கின்றீர்கள்? இப்படி அவள் எனக்கு தைலத்தைப் பூசிவிட்டு, முத்தம் கொடுத்த காரணத்தால் அவளது பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டு விட்டன என்று இயேசு கூறியுள்ளார்.

(பார்க்க : லூக்கா அதிகாரம் 7:27 முதல் 48 வரை, யோவான் அதிகாரம் 12:3முதல் 8 வரை)

அதாவது பெண்கள் பாதிரியார்களுக்கு தைலம் பூசி, அவர்களது பாதங்களில் முத்தம் கொடுத்தால் அவர்களது பாவங்கள் மன்னிக்கப்படும் என்பது ஏசுவின் வழிகாட்டுதல். அதைவிடுத்துவிட்டு பாதிரியாராக இருக்கக்கூடியவர் பெண்களுக்கு முத்தம் கொடுப்பது எவ்விதத்தில் நியாயம் என்பது தான் போப் ஆண்டவரை எதிர்ப்பவர்கள் வைக்கும் ஆழமான(?) கேள்வி.

பெண் அதிபருக்கு முத்தம் கொடுத்த போப்:

அது மட்டுமல்லாமல் புதிய போப் ஆண்டவராக பிரான்சிஸ் அவர்கள் பதவியேற்றவுடன் அர்ஜெண்டினாவின் பெண் அதிபர் கிரிஸ்டினா பெர்னான்டிஸ் கடந்த மார்ச் 18 ஆம் தேதி போப் ஆண்டவரை நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறினார். அப்போது போப் ஆண்டவர் பெண் ஜனாதிபதிக்கு பல பரிசுகளை வழங்கினார். அத்தோடு பெண் ஜனாதிபதியைக் கட்டித்தழுவி முத்தத்தையும் பரிசாக வழங்கினார் போப்.

பின்னர் வெளியே வந்த பெண் ஜனாதிபதியோ, போப் எனக்கு முத்தம் கொடுத்தார். இதுவரை இப்படி நான் எந்த போப்பிடமும் முத்தம் பெறவில்லை என்று பெருமையாக பத்திரிக்கையாளர்களிடத்தில் தெரிவித்தார். இதுவும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தீமையோடு நீங்கள் எதிர்த்து நிற்க வேண்டாம் என்று இயேசு சொன்ன உதாரணத்தைக் கூறி நான் எந்தத் தீமையையும் எதிர்க்க மாட்டேன்; தீமைகளுக்கு கண்டனம் தெரிவிக்க மாட்டேன் என்று போப் ஆண்டவர் உரை நிகழ்த்தியதன் அர்த்தம் இதுதானா என்று பலருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

நீங்கள் செய்யக்கூடிய அநியாயங்களைத் தட்டிக் கேட்கமாட்டேன்; அது போல நான் செய்யக்கூடிய இது போன்ற சேட்டைகளை நீங்களும் கண்டுகொள்ளக் கூடாது; கண்டிக்கக் கூடாது; கண்டனம் தெரிவிக்கக் கூடாது என்பதைத் தான் புதிய போப் சூசகமாகச் சொல்லியுள்ளாரோ என்று அனைவரும் சந்தேகப்படுகின்றனர்.

அதே நேரத்தில் போப் ஆண்டவரிடத்தில் மற்றுமொரு கேள்வியையும் நாம் கேட்க விரும்புகின்றோம். தீமைகளுக்கு கண்டனம் தெரிவிக்கக் கூடாது என்று சொல்லும் தாங்கள் தீமைகளைச் செய்தவரை சிறையில் தள்ளி அழகு பார்க்கலாமா?

தீமைகளைக் கண்டிக்கக் கூடாது என்றால் அந்த தீமைகளைச் செய்தவர்களை சிறையிலும் அடைக்கக் கூடாதல்லவா? அவர்களது கால்களைக் கழுவி அவற்றை முத்தமிடுவது அவர்களுக்குச் செய்யும் சேவையா? அல்லது திருடர்களை விடுதலை செய்து சிறைக் கொட்டடிகளை ஒழித்துக் கட்டுவது அவர்களுக்கு உதவுவதா என்பதை போப் முதலில் விளக்க வேண்டும்.

ஆகமொத்தத்தில் போப் செய்யும் அத்தனை செயல்களும் பைபிளுக்கும், இயேசுவின் போதனைகளுக்கும் மாற்றமாக உள்ளதோடு மட்டுமல்லாமல் பல பிரச்சனைகளுக்கு வழிவகுப்பதாகவும் அமைந்துள்ளது.

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...