விவாதிக்க மறுப்பவர்களைப் பற்றி

நீங்கள் பல விஷயங்கள் குறித்து விவாத அழைப்பு விடுக்கிறீர்கள். சிலர் அந்த அழைப்பை ஏற்று விவாதிக்க முன்வருகின்றனர். சிலர் அதை ஏற்க மறுத்து சில காரணங்களைக் கூறுகின்றனர். அந்தக் காரணங்கள் ஏற்புடையவையா?

பதில்:

(ஜெயமோகன் என்பவர் எழுதிய மறுப்பை ஒரு சகோதரர் சுட்டிக் காட்டி விளக்கம் கேட்ட அடிப்படையில் இது எழுதப்படுகிறது)

விவாதம் செய்ய மறுப்பவர்கள் தங்கள் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள எதையாவது எழுதத் தான் செய்வார்கள். அவர்கள் விவாதிக்கத் தயாராக இல்லை என்றும் விவாதிக்கும் அளவுக்கு அந்த விஷயத்தில் அவர்களிடம் உண்மை இல்லை என்றும் நாம் புரிந்து கொண்டு அத்துடன் அதை விட்டு விடுகிறோம். நேரடியாக தங்களிடம் உண்மை இல்லை என்று அவர்களால் ஒப்புக் கொள்ள முடியாது.

அவர்கள் என்ன தான் காரணம் கூறினாலும் அதில் அவர்கள் உண்மையாளர்கள் அல்ல என்பதை நீங்கள் எளிதாகக் கண்டு பிடித்து விடலாம்.

நமது விவாத அழைப்பை ஏற்க மறுப்பதற்கு இவர்கள் சொல்லும் காரணம் உண்மை என்றால் அவர்கள் அதன்படி எல்லா நேரங்களிலும் நடந்து கொள்ள வேண்டும்.

ஆனால் அவர்கள் நமது அழைப்பை மறுப்பதற்கு முன்னால் பல விவாதங்களில் பங்கெடுத்துள்ளனர். தொலைக்காட்சியில் முகம் காட்டுவதற்காக நேரடி விவாதங்கள் பலவற்றைச் சந்தித்தவர்களாக இருக்கிறார்கள். அல்லது செய்தித் தாள்களில் பெயர் வர வேண்டுமென்பதற்காக பல விஷயங்களில் வாதங்களை எடுத்து வைத்து எதிரிகளின் வாதங்களை மறுத்துப் பேசியவர்களாக உள்ளனர்.

இதில் இருந்து அவர்கள் சொல்லும் காரணம் உண்மை இல்லை என்று அறிந்து கொள்ளலாம். கீழ்க்கண்ட காரணத்தையும் சொல்கிறார்கள்.

ஏனென்றால் அவற்றின் அடிப்படை என்பது நம்பிக்கை. அதாவது முதலில் இருப்பது உறுதியான மாற்ற முடியாத நம்பிக்கை. நபி மீது, அவர் முன்வைத்த அல்லாஹ் மீது ,அவரில் வெளிப்பட்ட குர்ஆன் மீது உறுதியான முழுமுற்றான நம்பிக்கையில் இருந்தே இஸ்லாம் உருவாகிறது. அவற்றைப் பற்றிய அவநம்பிக்கையை, மறுப்பை இஸ்லாம் மத நிந்தனைக் குற்றமாக மட்டுமே நினைக்கிறது. இந்நிலையில் எதைப் பற்றி விவாதிப்பது?

இப்படி காரணம் சொல்கிறார்கள்

மதத்தில் பிடிமானம் இருப்பதால் விவாதிப்பதால் பயன் இல்லை என்று இவர்கள் சொல்லும் காரணமும் கேலிக்குரியதாக உள்ளது. மதத்தில் நமக்குப் பிடிமானம் உள்ளது போல் அதற்கு எதிரான கருத்தில் அவர்களுக்குப் பிடிமானம் உள்ளது.

பிடிமானம் உள்ளதால் தான் அவர்கள் ஒரு கருத்திலும் நாம் ஒரு கருத்திலும் இருக்கிறோம்.

ஆனால் இப்படிச் சொல்பவர்கள் ஊடகங்கள் மூலம் இஸ்லாத்தை விமர்சிப்பதற்கு இது ஏன் பொருந்தாமல் போனது? ஊடகங்கள் மூலம் எழுதும் போது மட்டும் முஸ்லிம்களின் பிடிமானம் இல்லாமல் போய்விடுமா?

இந்த வாதத்தில் இவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் இஸ்லாம் குறித்து எதையும் எப்போதும் எழுதாமல் இருந்திருக்க வேண்டும்.

யார் இவர்களின் வாதங்களுக்குப் பதில் சொல்லத் தயாராக இருக்கிறார்களோ அந்தக் களத்துக்கு வந்து சொல்ல மாட்டார்களாம். பதில் சொல்ல யாரும் இல்லாத களத்தில் அல்லது பதில் சொன்னாலும் அதை வெளியிட மாட்டோம் என்று முடிவு செய்துள்ள களத்தில் மட்டும் தமது கருத்தை விவாதிப்பார்களாம்!

இவர்கள் சொன்ன காரணம் இதற்கு மட்டும் இது பொருந்தாதா?

அடுத்து அவர்கள் இன்னொரு விஷயத்தையும் சொல்லி இருக்கிறார்கள்.

ஆக, அந்த விவாதங்கள் எல்லாம் வெறும் மேடை நாடகங்கள் மட்டுமே. நானே ஜெய்னுலாப்தீன் அவர்களின் இரு நிகழ்ச்சிகளில் பார்வையாளராகப் பங்கெடுத்திருக்கிறேன். கேட்கப்படும் வினாக்கள் முன்னரே எழுதிக் கொடுக்கப்படுகின்றன. அந்த வினாக்களில் தேவையானவற்றை ஜெய்னுலாபிதீன் தேர்வு செய்கிறார். அதற்கு வழக்கமான விடைகளைச் சொல்கிறார். இதே நிகழ்ச்சியை இப்படியே சாது செல்லப்பா போன்ற பெந்தேகொஸ்தே பிரச்சாரகர்களும் செய்கிறார்கள்.

இதில் கடுகளவும் உண்மை இல்லை. அவர் என்னுடைய நிகழ்ச்சிக்கு வந்ததாகச் சொல்வது பொய்யாக இருக்க வேண்டும். அல்லது வேண்டுமென்றே அவர் பொய்யாகச் சொல்லி இருக்க வேண்டும்.

நான் பங்கேற்கும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற நிகழ்ச்சியிலோ, வேறு கேள்வி பதில் நிகழ்ச்சிகளிலோ இவர் கூறுவது போல் கேள்விகளை முன்னரே எழுதிக் கொடுத்து கேட்கச் செய்யும் ஒரு நிகழ்ச்சி கூட நாம் நடத்தியதில்லை.

நிகழ்ச்சி ஆரம்பித்ததும் ஒரு முன்னுரையை நான் நிகழ்த்தி விட்டு ஒரு அறிவிப்பும் செய்வேன்.

இந்த நிகழ்ச்சி முன்னரே கேள்வியும், கேள்வி கேட்பவர்களும் தயார் செய்யப்பட்டு நடக்கும் நிகழ்ச்சி அல்ல. யார் கேள்வி கேட்க விரும்புகிறீர்களோ அவர்களுக்கு இனிமேல் தான் உங்கள் முன்னிலையில் தான் டோக்கன் கொடுக்கப்படும். யார் டோக்கன் வாங்கப் போகிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. அவர்கள் என்ன கேள்வி கேட்பார்கள் என்பதும் எனக்குத் தெரியாது. இஸ்லாம் குறித்து எந்தக் கேள்வி கேட்டாலும் அதற்குப் பதில் இருக்கிறது என்ற தன்னம்பிக்கை காரணமாகவே உங்களின் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல நாம் தயாராக இருக்கிறோம் என்றும் இப்போது கேள்வி கேட்பவர்கள் கைகளை உயர்த்தினால் டோக்கன் தரப்படும் என்றும் அறிவித்து விட்டு டோக்கன் கொடுப்போம்.

ஆனால் அந்தச் சகோதரர் கூறுவது போல் கேள்விகளை செட்டிங் செய்து வேறு சிலர் பதில் சொல்கிறார்கள் என்பதை நான் அறிவேன். அந்த நிகழ்ச்சிக்கு அவர் சென்றிருக்கலாம். அது நாம் நடத்தும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற நிழ்ச்சி அல்ல.

இரண்டையும் போட்டு குழப்பிக் கொண்டதால் அவர் இப்படி எழுதிவிட்டாரோ என்னவோ தெரியவில்லை.

செட்டிங் என்பது தான் இவர்கள் விவாதிக்க மறுக்கக் காரணம் என்றால் அந்தக் காரணமும் நமக்குப் பொருந்தாது. செட்டிங் செய்து பதில் சொல்பவரை எதிர்கொள்வது எளிது. எதிர்பாராத அதிரடிக் கேள்விகளை என்னிடம் எழுப்ப இது வாய்பாக அமையும்.

ஈரானிலும் பாகிஸ்தானிலும் பலர் கொல்லப்பட்டுள்ளதாக இவர்கள் கூறுவதும் இதற்குச் சம்மந்தமில்லாதது. இது போன்ற பயங்கரவாதச் செயல்களை நாம் இவர்களை விட வலிமையாக எதிர்க்கிறோம். இதற்கும் இஸ்லாத்துக்கும் சம்மந்தம் இல்லை என தெளிவுபடுத்தி வருகிறோம்.

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...

நாமே தீர்மானிக்கலாமா?

நாமே தீர்மானிக்கலாமா? பிறை சம்பந்தமான ஆதாரங்களில் நாமே தீர்மானிக்கலாம் என்ற கருத்திலமைந்த ஹதீஸும் முக்கியமான ஆதாரமாக அமைந்துள்ளது. அந்த ஹதீஸ் இது தான். سنن الترمذي 697 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: ...

அரஃபா நோன்பு

அரஃபா நோன்பு சவூதி அரசாங்கம் எப்போது தலைப் பிறை என்று அறிவிக்கிறதோ அது தான் உலகத்துக்கே தலைப் பிறை என்ற கருத்துடையோர் அரஃபா நோன்பை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். ஹஜ்ஜுப் பெருநாளைக்கு முந்திய நாள் அரஃபா ...

கிரகணத் தொழுகை

கிரகணத் தொழுகை தலைப்பிறை பற்றி முடிவு செய்வதற்கான ஆதாரங்களில் சூரிய சந்திர கிரகணங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. صحيح البخاري 1042 – حَدَّثَنَا أَصْبَغُ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرٌو، ...

நீட்டப்படும் மாதங்கள் 

நீட்டப்படும் மாதங்கள் பிறையைக் கண்களால் பார்த்துத் தான் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்பதை மற்றொரு ஹதீசும் கூறுகிறது. அந்த ஹதீஸ் இது தான். صحيح مسلم 2582 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ ...

மேக மூட்டத்தின் போது…

மேக மூட்டத்தின் போது… பிறை பார்த்தல் குறித்த அடிப்படையான ஆதாரங்களாக சில ஹதீஸ்கள் உள்ளன. அந்த ஹதீஸ்கள் ஏறத்தாழ ஒரே மாதிரியான கருத்தில் அமைந்தவை என்றாலும் சின்னச் சின்ன வேறுபாடுகள் அவற்றுக்கிடையே உள்ளதால் அவற்றை ...